25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பைரவர் தோன்றிய வரலாறு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பைரவர் தோன்றிய வரலாறு

பைரவர் தோன்றிய வரலாறு சிறப்பானதாகும். தொடக்க காலத்தில் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவர் என்பதால், பிரம்மனுக்கு கர்வம் உண்டானது. அதோடு சிவனை விட நாம்தான் உயர்வானவர் என்று எண்ணினார். அனைவரும் தன்னை வணங்க வேண்டும். சிவனை விட தன்னை ஒரு படி மேலே நினைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் சிவன் செய்யும் ஒவ்வொரு நிகழ்விலும் தலையிட்டுக்கொண்டே வந்தார்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான், தனது நகத்தினைப் பெயர்த்து தரையில் போட்டார். அதில் இருந்து கால பைரவர் தோன்றினார். அவர் வேகமாகச் சென்று பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார். அதன் பிறகே பிரம்மன், நான்முகனாக மாறினார். தனது அகந்தை அழிந்து, சிவபெருமானின் பக்தரானார் என்று சிவ மகாபுராணம் சொல்கிறது. சக்தி பீடங்கள் தோறும் காலபைரவர் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறார். தகுராசூரன் என்பவன், பெண்களால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும்' என்ற வரத்தை பெற்றிருந்தான். அந்த ஆணவத்தால், மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான்.

இதையடுத்து பார்வதிதேவி, காளியாக வடிவம் எடுத்து அந்த தகுராசூரனை அழித்தாள். அதன் பிறகு அவளின் ஆக்ரோஷத்தில்தான் கால பைரவர் தோன்றினார் என்று சொல்பவர்களும் உண்டு. அன்னை அவருக்குப் பால் கொடுக்கும்போது, இருவரையும் சிவபெருமான் ஆட்கொண்டார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் சிறப்பாக போற்றப்படுகின்றன. இவரை 'அஷ்ட பைரவர்' மற்றும் 'சட்டநாதர்' என சிறப்புப்படுத்தி அழைக்கிறார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *