சந்தைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்தரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.இது குறித்து அதே பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உணவு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் பியும் டி.ஏ. அபேசுந்தர சுற்றுச்சூழல் நீதி மையத்திடம் தெரிவித்ததாவது“காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்த்து கழுவுவதால் பூச்சிக்கொல்லிகளை நீக்க முடியும் என தெரிவித்திருந்தார்.அத்துடன் காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், பள்ளி மாணவர்களுக்கான, ஒன்றிய அளவிலான கோடைகால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் வைத்து, நடைபெற உள்ளது.அதன்படி, 01.05.2024 அன்று ஓவியக் கலைகள் பயில்வோம் என்ற தலைப்பிலும், 02.05.2024 அன்று தனித்தமிழ் அறிவோம் என்ற தலைப்பிலும், 03.05.2024 அன்று விருதுநகர் மாவட்டம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும், 04.05.2024 போஸ்டர் தயாரித்தல் இணைய வழி பயிற்சியும், 06.05.2024 அன்று கதை சொல்லி என்ற தலைப்பிலும், 07.05.2024 அன்று புத்தகம் பேசுதல் என்ற தலைப்பிலும், 08.05.2024 அன்று நாட்டுப்புற கலைகள் பயிற்சியும், 09.05.2024 அன்று உணவே மருந்து என்ற தலைப்பிலும், 10.05.2024 அன்று உபயோகமற்ற பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரித்தல்(Art from Waste) என்ற தலைப்பிலும், 11.05.2024 அன்று மெகந்தி வரைதல் மற்றும் களிமண் பொருட்கள் தயாரித்தல்(Mehendi and clay Modelling) என்ற தலைப்பிலும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாம்களில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 50 மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள இயலும். ஒரு மாணவர் இரண்டு பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்க பதிவு செய்யலாம்.இந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற விரும்பும் மாணவர்கள் 30.4.2024- க்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி முகாம் முற்றிலும் கட்டணமில்லா பயிற்சியாகும். மதிய உணவு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 98437- 21133 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில்தொடங்கிவிட்டது. மார்ச் முழுவதும் வெயில் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தீவிரமாகதான் இருக்கிறது.இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் பதிவான வெயிலின் அளவு குறித்து இந்திய வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான பகுதிகளில் சேலம் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆந்திராவின் அனந்தப்பூர் 110.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் முதல் இடத்திலும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 109.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் ஈரோட்டில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெப்ப அலை தீவிரமடைந்து வருவதால், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிக அளவில் தண்ணீர், நீர் சத்து கொண்ட பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழ்நாட்டின் வானிலையை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் சேலம், ஈரோடு, திருப்பத்தூர், கரூர் பரமத்தி, வேலூர், தருமபுரி, மதுரை, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் உயர்ந்திருக்கிறது.இன்று தொடங்கி அடுத்த 6 நாட்களை பொறுத்த அளவில், வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றும் நாளையும், தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஏப்.26 தொடங்கி ஏப்.30 வரை தமிழகம் காரைக்காலில் வறண்ட வானிலையை நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மட்டுமல்லாது இன்றும் நாளையும் வட உள் தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கையை கொடுத்திருக்கிறது.
ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தைபெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 130 வது பிறந்தநாள் உத்சவம்24.04.2024 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில்ஸ்ரீமான் பி.ஏ.சி .ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும், புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.காலை 7.45 மணிக்கு அமரர் ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24.04.2024 மாலை 6.30 மணிக்கு இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமிராஜா அரங்கத்தில்"அக்கரை சகோதரிகளின்" கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாம் நம் வீடு, நம் குடும்பத்திற்கு மட்டுமே முதலிடம் தருவது மிகச் சரியானதுதான். ஆனால் நாம் இருக்கும் தேசத்தின் மீது பற்றுதல் மிக மிக அவசியம். முக்கியமும் கூட நம்வீடு, குடும்பம் என்ற வட்டத்திற்குள் இருந்து விட்டால் நம்மைச் சுற்றியுள்ள மற்ற இடங்கள், அரசாங்க அலுவலகங்கள், சட்டத்தை மதிக்கும் அரசாங்கம், மக்களுடைய தேவையறிந்து பூர்த்தி செய்தல், போன்ற நல்ல காரியங்களுக்கு நல்லதொரு தலைவன் நமக்குத் தேவை இல்லையா? ஒரு பிரச்சனை என்றால் ஏழைகளுக்கோ, பணக்காரர்களுக்கோ, சமமான உதவி கிடைக்க வேண்டும். ஜாதி ,மதம் பாகுபாடு இருக்கவே கூடாது.நமக்கு நீதி நேர்மை தவறாத தலைவர்கள் தேவை. அப்படிப்பட்ட தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஜனநாயக உரிமைப்படி, நம்மிடம் தான் இருக்கிறது. இந்த தேர்தலில் நன்றாகப் படித்த, சட்டம் தெரிந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்குத்தான் இருக்கிறது. ஒருவரின் அழகைப் பார்த்தோ, பேச்சாற்றலைப் பார்த்தோ, இலவசங்களை அள்ளித்தருவதாக கூறுபவர்களுக்கு, வாக்களிப்பது மக்களாகிய நமக்கு நாமே குழி தோண்டி புதைத்துக் கொள்வதற்குச் சமம். இலவசங்கள் எல்லாம், நாம் கட்டும் வரிப்பணத்தில் இருந்துதான் தர முடியும். தலைவர்கள் கையில் இருந்து இல்லவே இல்லை, நாம் கட்டும் வரிப் பணத்தில் பேரிடர் காலமாகிய வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற காலங்களில் நமக்குத் தேவை, அதைத் தவிர்த்து இலவசங்களாகத் தந்து விட்டால் மக்களுக்கு யார் உதவி செய்வார்கள். சிந்தியுங்கள் மக்களே! ஒவ்வொருவருக்கும்ஒரு நாட்டை நல்லபடி நடத்திட உதவும்,.உங்கள் ஒட்டு ஒரு சரியான தலைவரை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டும்.அதைத் தவிர்த்து கொள்ளை அடிப்பவனுக்கும், மக்களை அலட்சியப் படுத்துபவனுக்கும் கிடையாது. அரசியல் வாதிகளுக்கு நாம் பயப்படாமல், நம் தேவைக்கு எந்த நேரமும் தைரியமாகச் சென்று நம்முடைய உரிமைகளை, கோரிக்கைகளை தைரியமாகக் கூற ,அனுமதி தரும், தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்அரசியல் தலைவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவர்களின் நல்ல செயல்களுக்கு மட்டுமே.மற்றபடி அவர்கள் நம்மைப் போல் இந் நாட்டு மக்களே. அதை மனதில் கொண்டு வாக்களியுங்கள்.அரசியல் தலைவர்கள் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தவறானவருக்கு வாக்களித்தால் அடுத்த எலக்சன் வரை ஒன்றுமே செய்ய முடியாது. April19th.சம்பளத்துடன்விடுமுறைஅளித்திருப்பதுவாக்களிப்பதற்காகத் தான். அதைத் தவிர்த்து வீட்டில் தூங்கி, டி.வி பார்ப்பதற்கு அல்ல. ஒவ்வொரு குடிமகனும் கண்டிப்பாக வாக்களித்து நல்லதொரு தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். நம் பிரச்சனைகளை சரி செய்யும் நல்ல அரசியல் தவைர்களின் சேவை நமக்குத் தேவை.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2/F.L-3 மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 ன்படி, மக்களவை பொதுத்தேர்தல் 2024 - வாக்கு பதிவினை முன்னிட்டு மகாவீரர் ஜெயந்தி தினமான 21.04.2024 மற்றும் மே தினமான 01.05.2024 அன்று முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2/F.L-3 மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மக்களவை பொது தேர்தல் - 2024-ஐ முன்னிட்டு, தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள நாட்கள் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள நாட்கள் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் உள்ள காலகட்டத்தில் வெடிபொருள்கள் சட்டம் 1884-இன் கீழ் செயல்படும் வெடிபொருள் பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மேற்படி நாட்களில் செயல்பட தடைவிதித்தும் மற்றும் மூடிடவும், மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பட்டாசுகள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்திடுமாறும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, மேற்படி அரசாணையின்படி, 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வெடிபொருள் பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களும் இயங்குவதை நிறுத்தம் செய்து மூடிட வேண்டும் என பட்டாசு கடை மற்றும் குடோன்களின் உரிமையாளர்கள் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மேற்படி காலகட்டத்தில் பிற மாநிலங்களில் இருந்து, விருதுநகர் மாவட்டத்திற்கு பட்டாசுகள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கைகளை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில், ராம நவமி தினமான ஏப்ரல் 17ஆம் தேதி, ராமரின் நெற்றியில், சூரிய ஒளிக்கதிர் பட்டு சூரிய திலகம் எனப்படும் நிகழ்வு நடந்தேறவிருக்கிறது. அறிவியல், கட்டடவியல் அனைத்தும் ஒன்றிணைத்து, ஆன்மிகச் சிந்தனையை அதிகரிக்கும் வகையில், ராம நவமி நாளில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு, காணக் கிடைக்காத இந்த சூரிய திலக தரிசனம் கிடைக்கவிருக்கிறது. ஆன்மிக ரீதியாகவும், அதே வேளையில், அறிவியலுடன், கட்டட அமைப்பும் ஒருங்கிணைந்து, கோயில் அறக்கட்டளையுடன் விஞ்ஞானிகள் இணைந்து, ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ராமநவமி நாளில் மட்டும் சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்ட வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வட இந்தியர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராமநவமி, ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய நாள் சூரிய ஒளிக்கதிர், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர்மீதுநான்குநிமிடங்கள்விழும்வகையில்வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாதையை துல்லியமாகக் கணித்து, அன்றைய நாள், எந்த இடத்தில் சூரியன் பயணிக்கும் என்பதை கண்டறிந்து, இந்த செயல்முறை அமைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது தளத்திலிருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறைக்குள் இருக்கும் பால ராமர் மீது விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.மிகச் சரியாக பாலராமரின் நெற்றியில் திலகம் போல சூரிய ஒளிக்கதிர் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
யாகசாலை பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சி விவரங்கள்17.04.2024 சித்திரை 04ம் தேதி புதன்கிழமை முதல் நாள்காலை 7.00-10.00 மணிவிச்வரூப தரிசனம், சுப்ரபாதம், மங்களஇசை, யஜமான, ஆச்சார்ய வர்ணம், அனுக்ஞை, ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், மஹாசங்கல்பம்,மாலை 4.00 மணி to இரவு 8.00 மணி |ம்ருத்ஸங்கிரஹணம், புண்ணியாகவாசனம் விசேஷ பூஜைகள் துவக்கம் கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், கும்பஸ்தாபனம், ரக்ஷாபந்தனம். 18.04.2024 சித்திரை 05ம் தேதி வியாழக்கிழமை இரண்டாம் நாள்முதலாம் கால யாக பூஜைகள், காலை 8.00 மணி.காலை 11.30 மணி பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி18.04.2024 சித்திரை 05ம் தேதி வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜைகள் மாலை 5.30 மணி , இரவு 8.30 மணி பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி 19.04.2024 சித்திரை 06ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள்,மூன்றாம் கால யாக பூஜைகள்காலை 8.00 மணி |to காலை 11.30 மணி , பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டிநான்காம் கால யாக பூஜைகள் மாலை 5.30 மணி |இரவு 8.30 மணி , பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம்கோஷ்டி 20.04.2024 சித்திரை 07ம் தேதி சனிக்கிழமை நான்காம் நாள்ஐந்தாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம் கோஷ்டிஆறாம் கால யாக பூஜைகள் மாலை 3.30 மணி |to மாலை 5.30 மணி |இரவு 8.30 மணி,, பிம்பஸுத்தி திருமஞ்சனம் ஆறாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், திருவாராதனம் கோஷ்டி, சயனாதி வாசம் 21.04.2024 சித்திரை 08ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் நாள்காலை 4.00 - 7.25 விச்வரூப தரிசனம், ஏழாம் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதி, தீபாராதனைகள், தசதானம், மஹாகும்ப யாத்திரை புறப்படுதல்காலை 7 .45 – 9.00 விமானங்களுக்கும் மூலவர் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப்பெருமாள், சஞ்சீவி ஆஞ்சநேயர், பரிவாரமூர்த்திகளுக்கும் மஹாஸம்ப்ரோக்ஷணம்.மாலை 6.30-8.00 ,கெருடோத்ஸவம் ஸ்வாமி கருட வாகன திருவீதி உலா.(வழி: வெங்கடேஸ்வரா நகர், ராமமந்திரம், சக்கராஜா கோட்டை வழியாக கோவிலுக்கு சென்றடைதல்.) நிகழ்ச்சி18.04.2024 வியாழன் ,மாலை 6.30-8.00 ,கர்நாடக இசை நிகழ்ச்சி ஸ்ரீமதி சாலை லக்ஷணா 19.04.2024 வெள்ளி மாலை 6,30 - 8.00 , ''அன்னமாச்சாரியார் கீர்த்தனைகள்" ஸ்ரீனிவாசலு குழுவினர் (TTD-திருப்பதி) 20.04.2024 சனி மாலை 6,30 - 8.00 உபந்யாஸம் "குறை ஒன்றுமில்லை கோவிந்தா" ''வாக் விலாஸ அம்ருத ரத்னம்" “சொல்லின் செல்வன்" ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் திருப்பணி தலைவர் திரு பி. ஆர். வெங்கட்ராம ராஜா சேர்மன் - ராம்கோகுரூப், அறங்காவலர் குழு தலைவர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (F.L-1), F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி, மக்களவை பொதுத்தேர்தல் 2024 - வாக்கு பதிவினை முன்னிட்டு 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (Poll Day) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 அன்று முழுவதும் தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2/F.L-3/FL-4A மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1981-ன்படி கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.