வெஜ் புலவு
தேவையான பொருட்கள் :- பாசுமதி 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3 ,புளித்த தயிர் - கால் கப், தேங்காய்ப்பால் - அரை கப், பட்டாணி (விருப்பப்பட்டால்) - கால் கப், உப்பு தேவையான அளவு.
அரைக்க: பச்சை மிளகாய் & தனியா - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு-6-8 பல், கசகசா ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, பட்டை-1.லவங்கம்- 1. எலக்காய் -1. புதினா ஒரு கட்டு, மல்லித்தழை அரை கட்டு,
தாளிக்க: பிரிஞ்சி இலை - 2 நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை : அரிசியைக் கழுவி, தேங்காய்ப்பால். இரண்டரை கப்தண்ணீர் சேர்த்து ஊறவையுங்கள். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள்.குக்கரில் நெய். எண்ணெயைக் காயவைத்து, பிரிஞ்சி இலையை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், அரைத்த விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு தக்காளி, உப்பு சேர்த்து நன்கு கிளறி தேங்காய்ப்பால், தண்ணீருடன் அரிசியைச் சேருங்கள். குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 3 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
0
Leave a Reply