விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் F.L-1, F.L-2, F.L-3 மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981- ன்படி, காந்தி ஜெயந்தி தினமான 02.10.2024 ( புதன் ) அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2,F.L-3 மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981- ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 05.10.2024 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா, இன்னோவல் மென்பொருள் நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவை, அடையார் ஆனந்த பவன், ரிலையன்ஸ் ஜியோ, ராயல் என்பீல்டு, விவிவி இதயம் நல்லெண்ணெய் ஆகிய 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என்ற விபரமும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாள் : 01-10-2024 நேரம் : 10 AM இடம் : ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம்இராஜபாளையம்.நிகழ்ச்சி நிரல்தமிழ்தாய் வாழ்த்துதிரு. K. பெத்துராஜா தலைவர், REWA.வரவேற்புரை :திரு. M.R. அழகராஜா அவர்கள் புரவலர், இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்.தலைமையுரை :திருமதி. M.சீலா சுந்தரி M.C.A.,M.A., மாவட்ட சமூக நல அலுவலர், விருதுநகர் மாவட்டம்.முன்னிலை :நவபாரத் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள்உறுதி மொழி :முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்வாழ்த்துரை :திரு. S. மீனாட்சி சுந்தரம் அவர்கள் பொதுச்செயலாளர், FOSCATAN, சென்னை.திரு. Ln. V.R. ஜெயகுமார் அவர்கள் Health Care Coordinator, Apollo Hospitals Chennai.திரு. R. இளங்கோ அவர்கள் இயக்குநர், முதியோருக்கான முதியோர் அமைப்பு. கடலூர்.திரு. S. டாக்டர் ஹக்கீம் ஹான் அவர்கள் Vice President, RBM, Equitas Small Finance Bank, Madurai.திரு. Ln.P.M. ராமராஜ் அவர்கள் B, "SON OF PRIDE" P.R. VIJAYKUMAR CHARITABLE TRUST.முனைவர். P.N. நாராயண ராஜா அவர்கள் Trustee, இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்,திரு. V. தர்மலிங்கம் அவர்கள் ஆலோசகர், Helpage India, விருதுநகர் மாவட்டம்விழா சிறப்புரை :உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் சேர்மன், ராம்கோ குரூப், இராஜபாளையம்.விழா பேருரை:முனைவர் V.P. ஜெயசீலன் I.A.S., அவர்கள் ஆட்சித்தலைவர், விருதுநகர் மாவட்டம்.நன்றியுரை :திரு. N. தேவராஜா அவர்கள்தேசியகீதம்:நிகழ்ச்சி தொகுப்பாளர் : யுவகலா பாரதி, இளம் விஞ்ஞானி, இளம் பெண் சாதனையளர்என்.டி.3, நிறுவனர், "ஆர்ட் ஆஃப் மைண்ட்" உந்துதல் மையம்.செயலாளர், இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்.அன்பாதரவு: equitas எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், இராஜபாளையம்.
விருதுநகர் மாவட்டம், மூன்றாவது புத்தகத் திருவிழா 27.09.2024 வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாக துவங்குகிறது. புத்தக திருவிழாவில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கவிஞர்கள் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். பல்வேறு துறைகள் சார்ந்து கண்களையும், சிந்தையையும் கவரும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாணவர்கள் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் பொருட்டும் புத்தகங்கள் வாங்கும் எண்ணத்தை வளர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தக உண்டியல்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகத் திருவிழாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாது கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்கள் வாங்கும் மாணவச் செல்வங்களுக்கு 20 விழுக்காடு புத்தக விலையில் தள்ளுபடி வழங்கப்படும். எண்ணற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தவறாது கலந்து கொள்ள செய்து புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தினை மேம்படுத்துவதற்கு மற்றும் அவர்கள் கல்வியில் மேம்பாடு அடையுமாறு செய்வதற்கு தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். புத்தகத் திருவிழாவில் உணவு அரங்குகள் மற்றும் சிற்றுண்டி அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த காலாண்டு விடுமுறையை பயனுள்ளதாக அமைத்திட அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுடன் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாள்: 28.09.2024 ( சனிக்கிழமை )நேரம் :காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இடம் :இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம்,ஆண்கள் - பெண்கள் இருபாலருக்கும்சிறுநீரகக் கற்களால் வயிற்றுவலி, வாந்தி, நீர்கடுப்பு ,சிறுநீர் சொட்டுச் சொட்டாக போகுதல்,தன்னை அறியாமல் சிறுநீர் கழித்தல் சிறுநீரக வீக்கம் ,சிறுநீரக பாதையில் அடைப்பு ,ப்ராஸ்டேட் சதை வளர்ச்சி,சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,விரை வீக்கம் மற்றும் இதர சிறுநீரக உபாதைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.மருத்துவ பரிசோதனைகள்ஹிமோகுளோபின் , யூரியா,சிறுநீர் பரிசோதனை ,*இரத்தத்தில் சர்க்கரையின் அளவு,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Abdomen)பரிசோதனைக் கட்டணம் RS 300/- மட்டுமேமுன்பதிவு செய்யும் நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்து தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சிறுநீரியல் துறை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் Dr. R. ரவிச்சந்திரன், Dr. K. வேணுகோபால், Dr. பால் வின்சென்ட், Dr. வீசர் விக்னேஷ் அவர்களது குழுவினர் கலந்து கொண்டு ஆலோசனை அளிக்கிறார்கள்.முன்பதிவிற்கு அழைக்கவும்: 98425 97883, 73730 61694
இந்தியா முழுவதும் பராமரிப்பு தொழில்நுட்ப காரணமாக இன்று (செப். 20) இரவு 8:00 மணி முதல் ,செப். 23 காலை 6:00 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது. எனவே விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வது முதல்அனைத்து பணிகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்தபின் பாஸ்போர்ட் சேவைக்கான இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும்.பாஸ்போர்ட் இணையதளம் விவரங்களுக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை 0452 -252 1205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் F.L-1, F.L-2, F.L-3 மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, மிலாடி நபி தினமான 17.09.2024 (செவ்வாய்) அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் F.L-1, F.L-2,F.L-3 மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் 13.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவிருந்த சிறப்பு கல்வி கடன் முகாம், நிர்வாக காரணங்களால் 19.09.2024(வியாழக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கல்வி கடன் விண்ணப்ப நகல், மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டபடிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல்பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.இம்முகாமில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
2025 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு கட்டணம் (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) தேர்வு 15.10.2024 அன்றும் மற்றும் செய்முறை (Practical) தேர்வு 16.10.2024 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத 04.09.2024 முதல் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2024. அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த 01-01-2024 முதல் 31-08-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் குழுவாக இணைந்து 571 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 251 கடைகள் மற்றும் 28 வாகனங்களில் 1183 கிலோ 920 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 251 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 251 கடைகள் மற்றும் 28 வாகனங்களுக்கும்;; ரூ.65,10,000/- ( ரூபாய் அறுபத்து ஐந்து இலட்சத்து பத்தாயிரம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 01-09-2024 முதல் 07-09-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 15 குழு ஆய்வுகளில் 9 கடைகள் மற்றும் 1 வாகனங்களில் 23 கிலோ 854 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 9 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 9 கடைகள் மற்றும் 1 வாகனங்களுக்கு ரூ.2,50,000/- (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும.; 3வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.