தேசிய தலைநகரான டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நிலைமை மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக காவல்துறையின் அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துகின்றன.2026 ஆம் ஆண்டின் ஜனவரி 1 முதல் 15 வரை, டெல்லியில் மொத்தம் 807 பேர் காணாமல் போனதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 54 வழக்குகள் என்ற அதிர்ச்சிகரமான எண்ணிக்கையாகும்.இந்த 807 பேரில்,509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள்,298 பேர் ஆண்கள் ஆகும்.குறிப்பாக, குழந்தைகள் தொடர்பான தரவுகள் இன்னும் தீவிர அச்சத்தை ஏற்படுத்துகின்றன.இந்தக் காலகட்டத்தில்,191 பேர் சிறார்கள்,இவர்களில் 146 பேர் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.தினமும் சராசரியாக 13 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.2025 ஆம் ஆண்டின் நிலவரம்-2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை, டெல்லியில்24,508 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.இதில் 14,870 பேர் (60%) பெண்கள்,9,638 பேர் ஆண்கள்.காவல்துறையினர் 15,421 பேரை மீட்டுள்ளனர்,ஆனால் 9,087 வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.மேலும், 2016 முதல் 2026 வரை உள்ள தசாப்த தரவுகள்,ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போகும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகின்றன.பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகள்இந்த புள்ளிவிவரங்கள் வெறும் எண்கள் அல்ல.இவை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மிகப்பெரிய சமூக நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன.தேசிய தலைநகரிலேயே இந்நிலைமை என்றால், நாட்டின் பிற பகுதிகளின் நிலை குறித்து தீவிர கவலை எழுகிறது.Child Alert Alliance (CAA) – கோரிக்கைபெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பது அரசின் அரசியலமைப்பு கடமை.இந்தப் பிரச்சினையை அரசு இனியும் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக செயல்பட வேண்டும்.Child Alert Alliance (CAA), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி,அரசிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:காணாமல் போனோர் வழக்குகளுக்கு விரைவு மற்றும் சிறப்பு விசாரணை அமைப்புகள்பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான வலுவான கொள்கை நடவடிக்கைகள்காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சமூகத்தின் ஒற்றுமையான ஒருங்கிணைந்த செயல்பாடுபெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத எந்த சமூகமும் முன்னேற முடியாது.அரசு இதை உணர்ந்து, உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என Child Alert Alliance வலியுறுத்துகிறது.Child Alert Alliance (CAA)Tamil Nadu & Puducherry
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தும்மண்னை நேசித்த மாண்பாளர்கள் நினைவு விழாஇடம் : மேலவளவு, நாள்:07.02.2026 சனிக்கிழமை, நேரம் : காலை 9.00 மணிவரவேற்புரை,தலைமை, வாழ்த்துரை,கலை நிகழ்ச்சிசிறப்பு விருந்தினர்கள் - பேராசிரியர், D.நரசிம்மன் சென்னை கிறிஸ்தவக்கல்லூரி, தாவிரவியல் துறைதிரு. Lt Col சத்தியமூர்த்தி ஓய்வு இந்திய இராணுவம்,திரு. S.குறிஞ்சி குமரன் பங்ஸ்டன் எதிர்ப்பு குழு தலைவர்,திரு. பேராசிரியர் S.தினகரன் (ஓய்வு) துறைத்தலைவர் விலங்கியல் துறை மதுரா கல்லூரி,திரு. N.அப்துல் ரஹ்மான் வையை திண்டுக்கல்,நன்றியுரைநிகழ்ச்சியை வாழ்த்தும் : சென்னை கிறிஸ்துவ கல்லூரி தாவரவியல் துறை நண்பர்கள்.தொடர்புக்கு : 97892 42192
ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் .பி.ஏ.சி.ராமசாமிராஜா சாலை, இராஜபாளையம்.5 நாள் ஆன்மீக சிறப்புச் சொற்பொழிவு 05.02.2026 முதல் 10.02.2026 தினசரி மாலை 6:30 - 07:45 - "ஸ்ரீமத் பகவத்கீதை"06.02.2026 முதல் 10.02.2026 தினசரி மாலை 10:00 - 11:00 - ''கடோபநிஷத்''இடம் : ஸ்ரீமதி P.S.K ருக்மணி அம்மாள் அரங்கம் (காந்தி கலைமன்ற வளாகம்)இராஜபாளையம்.
ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா அவர்களின் 110-வது பிறந்த நாள் விழா, திருமிகு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (ராம்கோ குரூப் சேர்மன்)முன்னிலையில் ஆன்மீகச் சொற்பொழிவு , ஸ்ரீ உ.வே. ஸ்ரீநிதி ஸ்வாமிகள் அக்காரகனி அவர்கள் ,02-02-2026 & 03-02-2026 திங்கள் & செவ்வாய்க்கிழமை தினமும் மாலை 6-30 மணிக்கு நடைபெறும்.இடம் : ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா மண்டபம், பழையபாளையம், இராஜபாளையம்தலைப்பு'இடந்ததும் அளந்ததும்"(வராஹ, வாமன சரித்திரம் )(02.02.2026, திங்கட்கிழமை) ''பிளந்ததும் வகிர்ந்ததும்''(நரஸிம்ஹ வைபவம்) (03.02.2026, செவ்வாய்க்கிழமை)அனைவரும் கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை கேட்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.பிறந்தநாள் விழாக் குழுவினர் இராஜபாளையம்.
CHINMAYA VIDYALAYA P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND CHINMAYA VIDYALAYASRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAYAMFIFTY-SIXTH SCHOOL YEAR ANNUAL DAYat 5.00 p.m. on Saturday, 31st January 2026, at the School Campus, Ilanthope. Rajapalayam.
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி .இராஜபாளையம் ஆண்டு விழா எமது பள்ளியின் ஆண்டுவிழா 31.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் A.K.D. தர்மராஜா பெண்கள் கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.இறைவணக்கம் : மாணவர்கள்வரவேற்புரை : திரு. A.K.D. கிருஷ்ணம ராஜீ, B.E. தாளாளர்ஆண்டறிக்கை : திரு. K. சரவணன்,M.A., M.Sc., M.Phil., B.Ed., Ph.D., தலைமையாசிரியர்,SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளிதலைவர் உரை & : பரிசு வழங்குதல் - Dr. P. பாலசுப்பிரமணியம், M.Sc., M.Phil, Ph.D. M.C.A.D.Sc.காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தின் அறிவியல் பள்ளியின் டீன் மற்றும் கணிதத்துறை மூத்த பேராசிரியர், காந்திகிராமம்.வாழ்த்துரை : முன்னாள் மாணவர் -திரு. R பிரதீப் குமார், Bachelor of cryptology இளங்கலை பட்டம் பெற்றவர். சுபேதார் மேஜர் (ஓய்வு), இந்திய ராணுவம். மேலாளர், பீமா ஜூவல்லரி, ராஜபாளையம்.கலை நிகழ்ச்சிகள் : மாணவர்கள்நன்றி நவிலல்: N., செந்தில் குமார் .BSc., M.A., M.Ed., பட்டதாரி ஆசிரியர், SRB.A.K.D.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.நாட்டுப்பண் : மாணவர்கள்
லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம்தமிழ் இனிமை சிறப்புப் பட்டிமன்றம்தலைப்புகுடும்ப உறவுகளைப் பெரிதும் பேணிக்காப்பவர்கள் ஆண்களா ? பெண்களா ? இடம் : P.S. குமாரசாமி ராஜாதிருமண மண்டபம், இராஜபாளையம்.நடுவர்கலைமாமணி. திரைப்பட நடிகர்பேராசிரியர் முனைவர். கு. ஞானசம்பந்தன்.
ராஜபாளையம் முதியோர் நலச் சங்கம் (REWA),டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு/உணர்திறன் திட்டம்ஏற்பாடு: ஹெல்ப் ஏஜ் இந்தியாதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிராந்திய வள மற்றும் பயிற்சி மையம்இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் புது தில்லியின் மூத்த குடிமக்கள் பிரிவு தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து.நமது 37 வது நிகழ்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சி :Venue: Shri Meenakshi Sundareswarar Thirumana Mandapam, Rajapalayam - 626 117தேதி: வெள்ளிக்கிழமை 30 ஜனவரி 2026நேரம் : காலை 10 மணிக்கு இடம் : சொக்கர் கோவில் மண்டபம் அங்கத்தினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.P.K.திருப்பதி ராஜா விழா ஒருங்கிணைப்பாளர்.
ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி இராஜபாளையம்,ஆண்டு விழா 30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஸ்ரீ ராவ்பகதூர் A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளியில் சிறப்பாக நடைபெற உள்ளது. இறைவணக்கம் : மாணவியர்வரவேற்புரை : திரு. A.K.D. கிருஷ்ணம ராஜு, B.E., தாளாளர்ஆண்டறிக்கை : திருமதி. K. தனலட்சுமி, D.T.Ed., தலைமையாசிரியை (பொறுப்பு). SRB.A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி,தலைவர் உரை & : பரிசு வழங்குதல்திருமதி. S. மலர்கொடி, M.A., M.Ed., M.Phil., வட்டாரக்கல்வி அலுவலர், இராஜபாளையம்.வாழ்த்துரை : முன்னாள் மாணவி Dr. P. கோகிலா, M.D.(S) Raksha Siddha Clinic, Rajapalaiyam.கலை நிகழ்ச்சிகள் : மாணவியர்நன்றி நவிலல்: திருமதி. P. வித்யா, M.A., B.Ed., இடைநிலை உதவி ஆசிரியை, SRB.A.K.D. தர்மராஜா ஆரம்பப்பள்ளி.நாட்டுப்பண் : மாணவியர்.
விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கிடுவதற்கு ஏதுவாக 27.01.2026 முதல் 30.01.2026 வரையிலான நாட்களில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இதில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் செய்வதற்கும் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு (கல்வி பயில்பவர்கள் / பணிபுரிபவர்கள்) ஒரே வழித்தடத்தில் இலவசமாக பயணம் செய்வதற்கும் கீழ்க்கண்ட தேசிய அடையாள அட்டை நகல் அனைத்து பக்கங்கள், UDID CARD நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் – 2, கல்வி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது வேறு துறைகள் மூலமாகவோ இலவச பயணச் சலுகை வழங்கப்படவில்லை எனச் சான்று, பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மேற்கண்ட நாட்களில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.