25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Sep 25, 2023

ஒயிட் சாக்லெட் சாப்பிடுவதால்

சாக்லேட்டுகள் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகளில் உள்ளது. ஒயிட் சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது.ஒயிட் சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார்169 மிகி கால்சியம் இருக்கும். இதனால், இவை எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு உதவுகிறது.ஒயிட் சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளான பளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.ஒயிட் சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். இதில் உள்ள கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். ஒயிட் சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.ஒயிட் சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாகஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒயிட் சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால், அதில் உள்ள டோபமைன், மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியடைய செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற செய்யும்.

Sep 23, 2023

பிஸ்கட் அதிகம் பிஸ்கட் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

 குழந்தைகள் பிஸ்கட்டுகளை விரும்பி சாப்பிடும் என்பதும் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்பதற்காக, பெற்றோர்கள் பிஸ்கட்டுகளை அதிகம் வாங்கிக் கொடுப்பதும் நடந்து வருகின்றன. ஆனால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிட்டால். குழந்தையின் செரிமான சக்தி குறையும் என்றும் பிஸ்கட்டுகள் நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சும் தன்மை உடையதால் மலச்சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.  பிஸ்கட் என்பதை உணவுக்கு மாற்றாக பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல என்றும் உடல்நலம் இல்லாத நிலையில் உணவு சாப்பிட முடியாத பட்சத்தில் மட்டும் பிஸ்கட் கொடுக்கலாம்.. சத்தான உணவு மட்டுமே குழந்தைகளுக்கு ஏற்றது என்றும் அதற்கு மாற்றாக ஒருபோதும் பிஸ்கட்டுகளை கொடுக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது. பிஸ்கட்டுக்கு பதிலாக பழங்கள் சுண்டல் ஆகிவற்றை கொடுக்கலாம் என்றும் பிஸ்கட்டுகளை அளவோடு குழந்தைகளுக்கு கொடுத்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Sep 22, 2023

பாதாம் பால் நன்மைகள்

பாதம் பாலில் நிறைந்துள்ள பண்புகள் ஆரோக்கியத்தில்நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாதாம் வைட்டமின்E இன் சிறந்த ஆதாரமாகும். இது செல்களின் மீளுருவாக்கத்திற்கும், சூரிய கதிர்களால் சேதமடைந்த சருமத்தை மீட்டெடுக்கவும் உதவுகிறது.பாதாம் பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்நிறைந்துள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்களின் எதிர்மறை விளைவுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. இதனுடன் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.இது தாவர அடிப்படையிலானது என்பதால், வேகன் உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு ஏற்றது. இதை பசும்பாலுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.100 மில்லி பாதாம் பாலில்30 முதல்55 கலோரிகள் வரை இருக்கும். மற்ற பாலுடன் ஒப்பிடுகையில் பாதாம் பால் குறைவான கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.பாதாம் பாலில் வலுவூட்டப்பட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்துக்கள் மிகவும் முக்கியமானவை பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு பாதாம் பால் ஒரு சிறந்த மாற்று உணவாக இருக்கும்.நட்ஸ் வகைகளில் உள்ள நல்ல கொழுப்புகள் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.இந்நிலையில் அதிக அளவு வைட்டமின்E மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்த பாதாம் பால் இதயத்திற்கு நன்மை தரும்.

Sep 20, 2023

உடல் சதை கரைய வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையின் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரையும் முதிர்ந்த விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின், ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. வெந்தயக்கீரை மட்டுமல்ல, இந்த செடியின் விதைகள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவமும், மகத்துவமும் நிறைந்தவையாகும்.இந்த விதைகளும் நோயை தீர்க்கும். சிறுநீர் பெருக்கத்தை அதிகரிக்கும். குளிர்ச்சியை தரக்கூடியது.. அஜீரணத்தை நீக்கும்.. மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும்.. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணப்படுத்தும். நூறு கிராம் அளவு வெந்தயக்கீரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது. இதில், வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாகவே உள்ளன.. அதனால், உடல் சோர்வாக உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். கண்பார்வை: வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும்.  நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த உணவாக இந்த கீரையை பயன்படுத்தலாம்.. தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். அதனால், நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து 40 நாட்களுக்கு இந்த கீரையை சாப்பிட்டாலே நீரிழிவு கட்டுப்படுமாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும், காச நோய் கோளாறு உள்ளவர்களுக்கும் சிறந்த தேர்வு.இந்த கீரை.. கீரைகள்: கீரைகள் என்றாலே மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது என்றாலும், இந்த வெந்தயக்கீரையை, வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாப்பிட்டால், வயிறு சுத்தமாகும்.. குடல் புண்களும் குணமாகும்.. வெந்தயக்கீரையை வெண்ணையில் வதக்கி சாப்பிட்டால், வயிறு உப்பசம், பசியின்மை போன்ற வயிறு கோளாறுகள் நீங்கும்.. இந்த கீரையின் தண்டுகூட மருத்துவ குணம் கொண்டது.. வெந்தயக்கீரையின் தண்டை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட்டு வந்தாலும், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும்.வெந்தயக்கீரையை நெய்யுடன் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை விரைவில் ஆறும். உடல் எடை: உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, வெந்தயக்கீரை பெஸ்ட் சாய்ஸ்.... பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கீரையை அடிக்கடி சமைத்து தந்தால், பால் உற்பத்தி பெருகும்.. அல்லது கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தந்தாலும் பால் சுரக்கும். இந்த வெந்தய விதைகளில், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை செய்யலாம் என்றாலும். வெந்தயத்தில் களி செய்யலாம்.. இந்த வெந்தயக்களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. இந்த கீரை குளிர்ச்சி என்பதால் முடி கொட்டுவதை தடுக்கிறது.. வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, நைசாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வதுநிற்கும்..

Sep 19, 2023

வாழைத்தண்டு சூப்'

தேவையான பொருட்கள்-வாழைத்தண்டு - 1| தக்காளி-1/ சின்ன வெங்காயம் - 6 | பெரிய வெங்காயம் - 1 | பூண்டு பல் - 10 | சீரகம் - அரை  ஸ்பூன் | மிளகு - அரை  ஸ்பூன் | இஞ்சி - 1" அளவு | உப்பு, எண்ணெய் - போதுமான அளவுசெய்முறை வாழைத்தண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.குக்கர் ஒன்றில்சிறிதளவு தண்ணீருடன் வாழைத்தண்டு, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து4 விசில் வர வேக வைத்து இறக்கவும்.பின்  மிக்ஸர் ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனியேதயாராக எடுத்து வைக்கவும். சூப் தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம்(நறுக்கிய) இஞ்சி சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நிறம் மாறியதும் 'மிக்ஸியில் அரைத்தது, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.கால் கப் தண்ணீரில்ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்துகரைத்துஅடுப்பில் கொதிக்கும்சூப்பில் சேர்த்து கலந்து8 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.வாழைத்தண்டு சூப் ரெடிஇறுதியாக இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான வாழைத்தண்டு சூப் ரெடி. இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.

Sep 16, 2023

முலாம்பழம்,சூரியகாந்தி விதைகளின் நன்மைகள்

புரதம் நிறைந்தது.நார்சத்து அதிகம். கொலஸ்ட்ராலை குறைக்கிறது. வீக்கக்தை குறைக்கிறது, முலாம்பழம்விதைகள்.நோய்எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. கொலஸ்ட்ராலை குறைக்கிறது,சூரியகாந்தி விதைகள்சூரியகாந்தி விதைகளில் ஒலிக் மற்றும் லினோலிக் அமிலம் நிறைந்துள்ளது மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும்சோடியம் குறைவாக உள்ளது.அவற்றில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன.புற்றுநோய் அபாயத்தைக் குறைக் கிறது.மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.சூரியகாந்தி விதைகள் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பயனுள்ளதாகஇருக்கும்.

Sep 15, 2023

20 நிமிசம்வாக்கிங்:

இன்றைய பிஸியானவாழ்க்கையில், மக்கள்பெரும்பாலும் நாள்முழுவதும் உட்கார்ந்துவேலை செய்கிறார்கள்.இது அவர்களின்ஆரோக்கியத்தில் மோசமானவிளைவை ஏற்படுத்துகிறது.ஐடி துறைஉள்பட பல்வேறுதுறைகளை சேர்ந்தவர்கள்பல மணிநேரம்கணினி முன்உட்கார்ந்தே வேலைபார்ப்பதை வழக்கமாகவைத்துள்ளனர். இவர்கள்பெரிதாக நடைபயிற்சிமேற்கொள்வதில்லை ஒரு ஆய்வின்படி, தினமும் 20 நிமிடம் நடைபயிற்சிசெய்வது பலஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. உட்கார்ந்துஉடற்பயிற்சி செய்வது, நடைபயிற்சி போன்றபலன்களை அளிக்காது. நாள் முழுவதும்சிறிது நேரம்நடப்பது தசைகளைசெயல்படுத்தி இரத்தசர்க்கரை அளவைக்கட்டுப்படுத்த உதவுகிறது.உட்கார்ந்த நிலைகால்களின் இரத்தநாளங்களில் அழுத்தத்தைஏற்படுத்துகிறது, இதுஇரத்த ஓட்டத்தைமாற்றுகிறது மற்றும்இரத்த அழுத்தத்தைஅதிகரிக்கும்.20 நிமிடம்நடைப்பயிற்சி செய்வதால்ரத்தத்தில் உள்ளசர்க்கரை மற்றும்ரத்த அழுத்தஅளவைக் குறைக்கமுடியும் என்றுஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நடைபயிற்சி ஒருநல்ல கார்டியோஉடற்பயிற்சி ஆகும், இது கலோரிகளைஎரிக்க உதவுகிறது. நீங்கள் உடல்எடையை குறைக்கவிரும்பினால், தினமும் 20 நிமிடம் நடைபயிற்சிசெய்வது நல்லது. தினமும்20 நிமிடங்கள்நடைப்பயிற்சி மேற்கொள்வது,.இதயத்தை ஆரோக்கியமாகவைத்திருக்க உதவுகிறது. இரத்தஅழுத்தம் மற்றும்கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்க உதவுகிறதுநடைபயிற்சி சிலவகையான புற்றுநோய்களின்அபாயத்தைக் குறைக்கஉதவும்.தினமும் 20 நிமிடம்நடப்பது மனஆரோக்கியத்தை மேம்படுத்தும். நடைபயிற்சி மனஅழுத்தத்தையும் பதட்டத்தையும்குறைக்க உதவுகிறது. இது தன்னம்பிக்கை மற்றும் மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.நடைபயிற்சி பலஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. நடைபயிற்சிஎலும்புகள் மற்றும்தசைகளை வலுப்படுத்தவும்.,தூக்கத்தின் தரத்தைமேம்படுத்தவும் உதவும்..

Sep 13, 2023

கண் சார்ந்த பிரச்சினை குறைய

ஸ்ப்ரிங் ஆனியன் என்ற பெயரில் பரவலாக அறியப்படும் வெங்காயத்தாள் உணவுக்கு சுவையூட்டுவதாக மட்டுமல்லாமல் பல்வேறு ஊட்டச்சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. பல உடல் பிரச்சினைகளை தீர்க்கும் மருத்துவ குணம் இதில் உள்ளது.வெங்காயத்தாளில் விட்டமின் சி, பி2, ஏ, கே காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கியுள்ளது.வெங்காயத்தாளில் உள்ள சல்பர் சேர்மங்கள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.இதில் உள்ள குரோமியம் சத்தானது நீரிழிவு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.இதில் உள்ள புரோப்பைல் டை சல்பேட் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இதய ஆரோக்கியத்திற்கும் கொழுப்புகளை குறைக்கவும் வெங்காயத்தாள் நல்ல உணவு.வெங்காயத்தாள் சாப்பிடுவதால் கண் சார்ந்த பிரச்சினைகள் பெருமளவில் குறையும்.

Sep 09, 2023

மதியம் சாப்பிடக் கூடாத உணவுகள்

மதிய நேரத்தில் உணவு சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியம்.காலை மற்றும் இரவு உணவை போலவே மத்திய நேரத்தில் உணவு சாப்பிடுவது மிக முக்கியமானது. பலரும் வேலைப்பளு காரணமாக மதிய உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள் இல்லை என்றால் மிக தாமதமாக சாப்பிடுகிறார்கள்.இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, சரியான நேரத்தில் தவறாமல் மதிய உணவு சாப்பிட வேண்டும் மதிய நேரத்தில் உணவு சாப்பிடுவது எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் மற்றும் எதை சாப்பிட கூடாது என்பதும் முக்கியம். மதியம் மற்றும் மாலை நேரங்களில் ,மிகவும் மோசமான துரித உணவுகளைசாப்பிடக் கூடாது  (பாஸ்தா உணவுகள்,கிரீன் ஜூஸ்,வறுத்த உணவுகள்,சாண்ட்விச்,நூடுல்ஸ் )காபி,டீ போன்றவை மதியம் சாப்பாட்டிற்கு பதில் சாப்பிடக் கூடாது.நேற்றிரவு பிரியாணியை மதிய உணவாக சாப்பிடக் கூடாது. அதிக காரமான உணவை ,சில நாட்களுக்கு முன்பே தயாரித்து சாப்பிடுவது, உங்கள் வயிற்றை மிகவும் மோசமாக பாதிக்கும்.மதிய உணவு நேரம் வறுத்த உணவுகள் வறுத்த உணவுகள் சாப்பிடக் கூடாது.  பலர் மதிய உணவிற்கு சூப் மற்றும் சாலட் சாப்பிடுவதைக் காணலாம். ஆனால் இதுபோன்ற குறைந்த கலோரி உணவை உட்கொள்வதால் இரவு உணவு வரை உங்களை முழுதாக வைத்திருக்க முடியாது. பழங்கள் உணவுக்குப் பின் அல்லது சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தை பாதிக்கிறது.சில பீட்சா துண்டுகள் சாப்பிடுவது உங்களை முழுதாக ஆக்கிவிடும் .ஆனால் அது உங்கள் உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்து அல்ல.மதிய நேரத்தில் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க..!

Sep 08, 2023

முதுமை அடையாமல் நீண்ட ஆயுளை அளிக்கும் சக்தி கொண்ட புரசு மரப்பூ கஷாயம்

புரசு மரப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் வாத சளி, மூல நோய்கள் மற்றும் பெண்களின் தனிப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது.புரசு இலையில் சாப்பாடு செய்தால் வயிற்றுக் கட்டிகள், ரத்தத்தில் உள்ள சூடு, பித்தம் குறையும்.புரசு மரத்தின் இலைகள், பூக்கள், மேல் பட்டை, வேர்ப்பட்டை, காய்களை சம பாகமாக இடித்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எல்லா நோய்களும் குறையும்.1 கிராம் புரசு விதையுடன் 5 கிராம் வெல்லம் கலந்து பேஸ்ட் செய்து சாப்பிட்டால் மாதவிடாய் வலி குறையும்.எலுமிச்சம்பழச் சாறுடன் புரசு விதைகளை அரைத்து சிரங்கு, படை போன்றவற்றின் மீது பூசி வந்தால் நாளடைவில் நோய் குறையும்.புரசு விதையை இளநீர், குங்குமப்பூ சேர்த்து அரைத்து மாத்திரை அளவு செய்து உலர்த்தி நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் மூல நோய் குறையும்.புரசு மர விதைகளை உலர்த்தி தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் நீங்கும்.

1 2 ... 12 13 14 15 16 17 18 19 20 21

AD's



More News