கிராம்பு பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும்.ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும்.இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.உணவில் ஏற்படும் அஃபலாக்சின்(en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (en:Eugenol Eugenol) அழிக்கும்.
மரவள்ளிக்கிழங்கு கொழுப்பு இல்லாதது என்பதால் ஆரோக்கியமான உடல் எடையை கொடுக்க வல்லது. இதிலுள்ள தாதுக்கள் ரத்தசோகை போன்ற நோய்களை போக்க உதவுகிறது. இதயத்திற்கு நல்லது. பக்கவாதம் தடுப்பு உள்பட பல நன்மைகளை வழங்குகிறது. இதிலுள்ள வைட்டமின் கே. மனஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மூளை நரம்பியல் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
பொட்டுகடலையில் நம் உடலின் சரியான வளர்ச்சிக்கு தேவையான பல ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. பொட்டுகடலையில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச் சத்து அதிகம்.மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு சிறந்தது. பொட்டு கடலையில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஏனெனில் இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. மேலும் இது நமது பெருங்குடலை ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கிறது.பொட்டுகடலை பெண்களின் ஹார்மோன் அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது.
ஓமவள்ளி இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரைசேர்த்துநெற்றியில்பற்றுப்போட்டால்ஜலதோஷம், தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.இந்த இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இவற்றுடன், ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இதனை நீங்கள் மூன்று நாள் மட்டும் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள்.இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும் .
மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி,உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.சமையலில் மணத்தக்காளி கீ ரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு
வெந்தயம்,மல்லி, பட்டை, நெல்லி முள்ளி மற்றும் கறிவேப்பிலை (காய வைத்தது) ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும். இந்த மூலிகை பொடியை காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடிக்கவும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் எதுவுமே குடிக்காமல், சாப்பிடாமல் 'வெறும் வயிற்றில் பழைய சோறு தண்ணி நல்ல புளித்த நீராகாரம் நல்ல உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்து ஒரு செம்பு நிறைய குடித்து விட்டால் அடுத்து ஒரு மணி நேரத்தில் வயிறு நல்ல சுத்தமாகி விடும். வயிற்றை சுத்தம் செய்யும் போதெல்லாம் இப்படி செய்தால் போதும் நல்ல வயிறு சுத்தமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
1.தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன. 2.தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. 3.பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. 4.தினமும் ஒரு தக்காளியை சாப்பிடுவது உடலை சுறுசுறுப்பாக்கும்.
1. மஞ்சள்.2. பிஸ்தா.3. குங்குமப்பூ.4. கோழி இறைச்சி.5.கல்லீரல்.6. மாட்டிறைச்சி.7. பன்றி இறைச்சி.8. சால்மன் மீன்.9. டோஃபு.10.பிரிஞ்சி இலை.