25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

Mar 23, 2024

உலக சிட்டுக்குருவி தினம்

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினம் மற்றும்உலக காடுகள் தினம் 20.03.24 புதன்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மாணவி வாணி அனைவரையும் வரவேற்றுப்பேசினாள்.பள்ளித்தலைமைஆசிரியர்திருமதி.ஜெயபவானிஅவர்கள்சிறப்புவிருந்தினராகியதமிழ்நாடுகலைஇலக்கியமாநிலத்துணைத்தலைவர்திரு.கண்மணிராசாஅவர்களைஅறிமுகப்படுத்திப்பேசினார்.பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மேலும்அவர் மாணவர்களை நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.பள்ளி மாணவர்கள்பேச்சு,பாடல்,கவிதை,உரையாடல்மற்றும்நடனம்வாயிலாகசிட்டுக்குருவிகள்பற்றியும் காடுகள் பற்றியும் தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.திரு. கண்மணி ராசா அவர்கள் மாணவர்களிடம் பறவைகள், விலங்குகள் பற்றிய கதைகள் கூறினார். அவர்தன்னுடைய உரையில் இயற்கையோடுஒன்றிவாழவேண்டும்என்றும்இயற்கைத்தொடர்பானகேள்விகள்கேட்டும்மாணவர்களைஉற்சாகப்படுத்தினார்.மாணவன் பிரஜேஷ் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Mar 21, 2024

ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி, இராஜபாளையம் திறமை காணும் விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் திறமை காணும் விழா 16.3.24.சனிக்கிழமை அன்று ஆனந்தா கார்டனில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மித்ரா மாண்டிசோரி பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரிகார்த்திகா கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெயபவானி அவர்கள் விழாவிற்கு வருகை தந்தஅனைவரையும் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.பள்ளித்தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்.மேலும் அவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பாடல், நடனம், பேச்சு, ஓவியம்,சிலம்பம்,பறை மற்றும் கீ போர்டு போன்ற கலைகளில் தங்களது திறமைகளை வெளிகாட்டினார்கள்.எல்.கே,.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்கள் அருமையான இசைக்கு நாகரிக நடை நடந்துஅனைவரையும் கவர்ந்தார்கள்.சிறப்பு விருந்தினர் தனது உரையில்நான்ஒருகலைஞன்என்பதைநினைவில்வைத்துக்கொள்ளவேண்டும்என்றும்,தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.மேலும் அவர் அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிய கதை ஒன்றும் கூறி,அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன், நிர்வாகக் குழு அலுவலர் திரு வெங்கட பெருமாள் மற்றும் எல். ஐ .சி திரு வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.ஆசிரியர் திருமதி தீபா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Mar 08, 2024

அறிவியல் தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் 28 .2 .2024 புதன்கிழமைஅன்று அறிவியல் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. ராக்கெட் ஏவுகணை, விவசாய முறை, காற்றாலை, சூரிய குடும்பம், நீர்மின் சக்தி, பாம்பன் பாலம்என பலவிதமான அறிவியல் படைப்புகளை மாணவர்கள் செய்து வைத்திருந்தனர்.இவ்விழாவிற்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் மாவட்டப் பொருளாளர் நித்யாகணேசன் அவர்கள் கலந்து கொண்டார்.அவர் மாணவர்களிடம் அறிவியலில் நாட்டம் கொண்டுசமூக சிந்தனையோடு இருக்க வேண்டும் என்றும் படிப்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டும்என்றும் கூறினார். பள்ளித் தாளாளர் கவிஞர் ஆனந்தி அவர்கள் அறிவே ஆயுதம் என்று கூறி மாணவர்களின்படைப்புகளைப் பாராட்டி பேசினார்.பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெயபவானி அவர்கள் மாணவர்களிடம் தனது உரையில்புதிது புதிதாக அறிவியல் சாதனங்களை கண்டறிந்து தாங்கள் படித்த ஆனந்தா பள்ளிக்கு சிறப்புவிருந்தினராக வருகை புரிய வேண்டும் என்று பேசினார்.மாணவர்களில் சிலர் தங்களது படைப்புகள் பற்றியும் பாரம்பரிய உணவு வகைகள்,விவசாயம் பற்றியும் பேச விழா இனிதே நிறைவடைந்தது.

Jan 12, 2024

24 TH SCHOOL DAY CELEBRATION

ANANDA VIDYALAYA  24 TH SCHOOL DAY CELEBRATION .TODAY   5.P.M ,AT ANANDA GARDEN  

Nov 15, 2023

குழந்தைகள் தின விழா

 இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில் குழந்தைகள் தின விழா14.11.2023செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்தா கார்டனில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  சிறப்பு விருந்தினராக குற்றாலம் சக்தி ரோட்டரி சங்கத்தலைவர் திருமதி.அனிதா ஆனந்த் கலந்து கொண்டார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித்தலைமை ஆசிரியர் திருமதி. ஜெய பவானி அவர்கள் வரவேற்று பேசினார். பள்ளித்தாளாளர் கவிஞர்.ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி  நினைவுப்பரிசுவழங்கி கௌரவப்படுத்தினார்.                                                            பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் மாறுவேடப்போட்டி நடைபெற்றது.பெற்றோர்களும்  உற்சாகத்துடன் கலந்து கொண்டு விழாவினை அழகு செய்தனர்.  சிறப்பு விருந்தினர் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டினார்.மேலும்  தமது உரையில் பெற்றோர்கள் அதிக நேரம் தம் குழந்தைகளிடம்  செலவிடவேண்டும் என்றும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை ஒன்றும் கூறினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார்.                          பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருமதி. ரமணி சந்திரசேகர் ராஜா,திருமதி.ரம்யா மோகன் , எல்.ஐ.சி.திரு.வெங்கடேசன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழு அலுவலர் திரு.வெங்கடபெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை  சிறப்பித்தனர். ஆசிரியர் திருமதி. முத்துலட்சுமி நன்றியுரை  கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Nov 06, 2023

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா

ஒவ்வொரு வருடமும் எமது ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி சுற்றுலா நடைபெறும்.  தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து நடத்திய மாநில அளவிலான தொல்லியல் கண்காட்சிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.ஆறு முதல் பன்னிரெண்டாம்  வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர். வெம்பக்கோட்டை அகழாய்வு, விஜயகரிசல்குளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கி.மு, கி.பி யில் தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணால்  செய்யப்பட்ட பொம்மைகள், பானைகள், முதுமக்கள் தாழிகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை மாணவர்கள் கண்டு வியந்தனர். மாணவர்கள் வரலாற்று புத்தகத்தில் கண்டவற்றை நேரிலே கண்டதும் மிகவும் உற்சாகம் அடைந்தனர். ராஜபாளையத்தை சுற்றியுள்ள இடங்களில் மற்றும் கிராமங்களில் கிடைத்த குகை ஓவியங்கள், பலியிடம், சிலைகள், குத்துக்கல் மற்றும் நடுகற்களின் புகைப்படங்களை கண்டு தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மான் கொம்புகள், வேட்டையாட உபயோகித்த ஆயுதங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை கண்டு வியந்து மகிழ்ந்தனர்.இந்த கண்காட்சியில் மாணவர்களோடு ஆசிரியர்களும், முதல்வரும்,  தாளாளரும்  கலந்து கொண்டனர்.

Oct 31, 2023

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா கல்விக் குழுமத்தின் 24 ஆவது விளையாட்டு விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா கல்விக் குழுமத்தின்  24 ஆவது விளையாட்டு விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக  திருமதி.L.சுஜாதா Deputy General Manager SDAT, Chennai அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்க, ஆனந்தா போர்டிங் நிர்வாகத் தலைவர் திரு.K.R.பிரபாகர் அவர்கள் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர்  தனது உரையில்இராஜபாளையம் மண்ணில் பிறந்து வளர்ந்து  இத்தகைய பதவியில் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் இன்ஜினியர் ஆக வேண்டும், டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் ஆக வேண்டும் என்று நினைப்பது இல்லை. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதைப் போல வீட்டுக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் உருவாக்கினால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்க முடியும் என்றும் விளையாட்டுத் துறையில் ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன அதனை இம்மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அரசாங்கத்தில் இருந்து கிடைக்கின்ற பல்வேறு சலுகைகளையும், சிறப்புகளையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.விழாவில் மாணவர்கள் டேக் வான்டோ, யோகா, பிரமிடு, வில்வித்தை, சிலம்பம் மற்றும் பல வகையான உடற்பயிற்சிகளை அழகாக நிகழ்த்திக் காட்டினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினர். விழாவில் நிர்வாகக் குழு  உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Oct 07, 2023

மாணவர்களுக்கான இலக்கியத் திருவிழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான   இலக்கியத் திருவிழா பள்ளித் தாளாளர் கவிஞர். ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக  எழுத்தாளர் மற்றும் கதை சொல்லியுமான திருமதி. சரிதா ஜோ கலந்து கொண்டார் .அவரை  முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்று அறிமுகம் செய்ய, பள்ளித் தாளாளர் திருமதி, ஆனந்தி அவர்கள்  சிறப்புப் பரிசினை வழங்கி கௌரவம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தனது கதைக் களத்தை ஆடல் பாடலுடன் உற்சாகமாக  தொடங்கினார்.  கதையானது மாணவர்களின் கற்பனைத் திறனையும், அவர்களது வாசிக்கும் பழக்கத்தினையும் வளர்க்கிறது என்று கூறினார்.  இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்வாகவும் இருந்தது. கதை கூறும் போதும், கேட்கும் போதும், வாசிக்கும் போதும்  மாணவர்கள் தங்களை அந்த கதாபாத்திரமாகவே கருதிக் கொள்வதால் அவர்கள் வெற்றி அடைய முடியும் என்று கூறினார்.மேலும் அவர் தமது கதையில் வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது மட்டுமே வாழ்க்கை மிகவும் ரசனை மிக்கதாக மாறுகிறது என்பதனை ஒரு சிறிய கதையின் மூலம் எடுத்துரைத்தார். தோற்கும் இடத்திலிருந்து வெற்றியை துவக்க வேண்டும் என்ற கருத்தினை மாணவர்களுக்கு தனது கதையின் மூலம் ஆழமாக பதிவிட்டார். பின்பு ஒரு சிறிய பாடலுடன் தனது உரையை முடித்தார்.ஆசிரியை திருமதி. அழகுராணி  நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Sep 09, 2023

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் இன்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியும் இணைந்து Career Choices for Commerce Students என்னும் நிகழ்ச்சி

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் இன்ட்ராக்ட் கிளப் ஆஃப் ஆனந்தா வித்யாலயா மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியும் இணைந்து Career Choices for Commerce Students என்னும் நிகழ்ச்சி பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.Interact Club  President  தாமரைச் செல்வி ரோட்டரி இறை வணக்கம் பாடினார்.சிறப்பு விருந்தினராக Rtn. முகமது சர்பராஸ், கத்தார்  சென்ட்ரல் பேங்க், கத்தார். (Retd. AGM, Reserve Bank of India) கலந்து கொண்டு சிறப்பித்தார்.  Rtn.M.J. வெங்கட பெருமாள், Chairman - Youth Service  அனைவரையும் வரவேற்று, விருந்தினரை கெளரவம் செய்தார். பள்ளி முதல்வர் திரு.S. கோபால கிருஷ்ணன் விருந்தினரை அறிமுகம் செய்தார்.சிறப்பு விருந்தினர் தமது உரையில் மாணவர்கள் தாங்கள்  படிக்கும் காலத்தில் ஒரு இலக்கை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கு உண்டான சரியான முயற்சியையும், திட்டமிடலையும் செய்ய வேண்டும்  என்று  கூறினார்.மேலும் வணிகவியல் மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு உண்டான பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் தெளிவாக எடுத்துரைத்தார் . மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளித்து பேசினார்.மாணவர்கள் தங்கள் அறிவை  மேம்படுத்திக் கொள்ள தினமும் செய்தித் தாள்களை வாசிக்க வேண்டும் என்றும் ஆங்கிலப் புலமையின் முக்கியத் துவத்தையும் தன்னுடைய அனுபவத்தின் மூலம் விளக்கிக் கூறினார்.Interact Club  Secretary சனந்தா  நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.

Sep 06, 2023

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தின விழா 

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தின விழா  பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மதுமிதா அவர்கள் கலந்து  கொண்டார்கள்.பள்ளி முதல்வர் திரு.கோபால கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்ய தாளாளர் திருமதி.ஆனந்தி,அவருக்கு சிறப்புப்பரிசு வழங்கினார்.சிறப்பு விருந்தினர் தனது உரையில்  கூறியதாவது,ஆசிரியர்கள் குழந்தைகளுக்கும் சமுதாயத்திற்கும் என்ன செய்வார்களோ அதைத்தான் பள்ளி தாளாளர் ஆனந்தி அவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் அவரும் ஒரு ஆசிரியரே எனக் கூறி ஆசிரியர் தின வாழ்த்துகள் கூறினார்.இப்பள்ளியில் பாடங்களுடன் மற்றத் திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுக்கின்றனர். மேலும் கல்வி தலைமுறைக்கு தலைமுறை மாறுபடுகிறது. வாய்ப்பை பயன்படுத்திய தலைமுறையும் உண்டு. தவறவிட்ட தலைமுறையும் உண்டு. இப்பொழுது வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. நாம் தான்  அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.உங்கள் passion என்ன என்று தேடுங்கள். Passion பிறப்பில் வருவதும் இல்லை. நடுவில் வருவதும் இல்லை. அது எப்போது  வேண்டுமானாலும் வரலாம்.நிலவைப் பார்த்து சோறு ஊட்டிய காலம் போய் நிலவுக்கே சென்று  சோறு சாப்பிடும்  காலத்தில் வாழ்கிறோம். ஆதலால் தோல்வியை கண்டு துவளக் கூடாது. நம்மை நாமே குறைவாக எண்ணக் கூடாது.நேற்றைய தினத்தை விட இன்று வளர்ந்து இருக்கிறோமா? இன்றைய நாளை விட நாளை வளர்வதற்கு என்ன செய்யப் போகிறோம்? என சிந்திக்க வேண்டும் என்று அழகாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.விழாவில் மாணவர்கள் உரைவீச்சு, சேர்ந்திசைப் பாடல், ஆசிரியர்களின் சேர்ந்திசைப் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கினார். நிகழ்வில்  நிர்வாக அலுவலர் திரு. வெங்கடப்பெருமாள், திருமதி. பிரபா ராமராஜ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  ஆசிரியர்கள் மிக அழகாக விழாவினை ஒருங்கிணைக்க நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

1 2 3 4 5 6

AD's



More News