அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள்.
தாய்லாந்தில் நடைபெற்று வரும் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 'டிவிஷன்-பி' மகளிர் கூடைப்பந்து தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
'ஏ' பிரிவில் இடம்பெற்ற இந்தியா, லெபனான் மற்றும் கஜகஸ்தானை வீழ்த்திய நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேஷியாவை சந்தித்தது. முதல் பாதி முடிவில் 33-26 என முன்னிலை வகித்த இந்திய அணி, இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்தி 79-46 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்தியா, நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
0
Leave a Reply