லக்சயா இரட்டை சதம் நெருங்கினார்.
இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முதல் 'யூத்' டெஸ்டில் இந்திய அணி வலுவான பதிலடி கொடுத்தது.
முதல் இன்னிங்சில் இலங்கை 424/9 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் லக்சயா ராய்சந்தனி மற்றும் சாகர் விர்க் சிறப்பான தொடக்கம் அமைத்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 295 ரன் சேர்த்த நிலையில், சாகர் விர்க் 134 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் குஷாக்ரா ஓஜா (24), கேப்டன் யாஷ்பர்தன் சவுகான் (6) விரைவில் வெளியேறினர். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய லக்சயா, 196 ரன்களுடன் களத்தில் நீடித்து இரட்டை சதத்தை நெருங்கினார்.
3-வது நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 378/3 ரன் எடுத்து, இலங்கையை விட 46 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. லக்சயா (196), குஷ் படேல் (3) ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் முழுமையாக முடிவடைய வாய்ப்பு குறைவாக இருப்பதால், போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply