குளிப்பதற்கு சோப் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது.சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக நலங்கு மாவு பயன்படுத்தினால் சருமம் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.நலங்கு மாவு செய்ய தேவையானவை:கடலை மாவு, பச்சை பயிறு மாவு- கால் கிலோ,வெட்டிவேர், விளாமிச்சு வேர். பூலாங்கிழங்கு, கோரைக் கிழங்கு, சந்தனச் சிராய், ஆவாரம் பூ, ஆகியவை 50 கிராம், கார்போக அரிசி, காட்டுச் சீரகம் -20 கிராம்.மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை அரைத்து சலித்து குளியலுக்கு பயன்படுத்த முகம் இயற்கை பொலிவு பெறும்.
சிலருக்கு உதட்டிற்கு மேல் பகுதியில் முடி வளர்ந்து அழகை கெடுக்கும். இதற்கு ஒரு ஸ்பூன் தேன், இரண்டு ஸ்பூன் சர்க்கரை இரண்டையும் சிறிதளவு தண்ணீர் விட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும்.ஆறியதும் முடிகள் உள் இடத்தில் தடவி வர சருமத்தில் உள்ள முடிகளை முற்றிலுமாக நீக்கிவிடும்.
சின்ன வெங்காயம் வேப்பிலைக் கொழுந்து இரண்டையும் சுத்தம் செய்து, அரைத்து முற்றிய தேங்காய்ப்பால் அல்லது தயிருடன் கலந்து, கூந்தலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசவும் பொடுகு அகன்று தலை சுத்தமாகும்.ஆவார இலைச்சாற்றை புற்று மண்ணுடன்.கலந்து தலையில் பூசி அரை மணி கழித்து குளித்து வந்தால் விரைவில் பொடுகு குணமாகும்.
எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் இந்த நரைமுடியால் பலரும் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த முதுமை தோற்றத்தை பெறக் கூடாது என்பதற்காகவே நரைமுடியை மறைப்பதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் அவர்களுடைய அழகும் தலைமுடியும் பாலாய் போய்விடும். இந்த எண்ணெய் அதிக அளவில் கேரள மக்களால் பயன்படுத்தக்கூடிய எண்ணையாக திகழ்கிறது. இதில் பல மூலிகை பொருட்களை சேர்த்து எண்ணை தயாரித்திருப்பதால் இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம் விரைவிலேயே தலைமுடி பிரச்சனைகளும் நீங்கும், நரைமுடி பிரச்சனையும் நீங்கும். இதற்கு நமக்கு சில பவுடர்கள் தேவை. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெல்லிக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பவுடர் ஒரு டீஸ்பூன், செம்பருத்தி பவுடர் ஒரு டீஸ்பூன், நில ஆவாரை பவுடர் அரை டீஸ்பூன், மருதாணி பவுடர் 2 டீஸ்பூன், கருஞ்சீரகப் பவுடர் மூன்று டீஸ்பூன், கடுக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன், சீயக்காய் பவுடர் ஒரு டீஸ்பூன் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கருஞ்சீரக பவுடர் என்று கிடைக்காது. அதனால் கருஞ்சீரகத்தை வாங்கி நன்றாக வறுத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக 12 கிராம்பு, 1/2 டீஸ்பூன் வெந்தயம், 1/2 டீஸ்பூன் ஆளிவிதை, 1/2 டீஸ்பூன் சியாவிதைகள் இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து அதையும் இந்த பவுடர்களுடன் சேர்த்து விட வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.இப்பொழுது இது மூழ்கி திக்காக ஹேர்டை பதத்திற்கு வரும் வரை தேவையான அளவு தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இதை மூன்று நாட்கள் அப்படியே வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஹேர் டை ஆயில் தயாராகி விட்டது. இதை தினமும் தலைக்கு உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதை நாம் வடிகட்டுவது கிடையாது. மேலும் இதை நாம் நன்றாக கலக்கி விட்டு தலையில் தேய்ப்பதன் மூலம் இதில் இருக்கக்கூடிய அந்த பவுடர்கள் தலையில் அப்படியே தங்குவது போல் தோன்றும் என்பதால் தினமும் பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக என்றைக்கெல்லாம் நீங்கள் தலைக்கு குளிக்கிறீர்களோ அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த எண்ணெயை நன்றாக தலையில் தடவி மசாஜ் செய்து ஊறவைத்து பிறகு குளிப்பது நல்லது. சளி பிடிக்காது என்று நினைப்பவர்கள் இரவே இந்த எண்ணெயை தலையில் தேய்த்து தலையை கவர் செய்து விட்டு மறுநாள் காலையில் எழுந்து கூட தலைக்கு குளிக்கலாம். ஒரு முறை தயார் செய்து வைத்தாலே போதும். தொடர்ச்சியாக நாம் இந்த எண்ணையை உபயோகப்படுத்துவதன் மூலம் விரைவிலேயே நரைமுடி என்பது கருமை ஆவதை உணர முடியும்.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த இந்த பொடிகளை நாமும் பயன்படுத்தி நம்முடைய நரைமுடிபிரச்சினையும்,தலைமுடிபிரச்சினையும்தீர்த்துக் கொள்வோம்.கொத்தமல்லி,கறிவேப்பிலை, வெந்தயகீரை வகைகளை உடனேஆய்ந்து காற்று வெளிச்சத்தில் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடமால் இருக்கும்.வெள்ளிப் பொருட்களைப் புளித்த தயிரில் ஊற வைத்துச் சுத்தம் செய்தால் பளீரென இருக்கும்.
சிலருக்கு முழங்கை, கணுக்கால், முட்டி போன்ற இடங்களில் கருப்பு தட்டி இருக்கும். இந்த கருமை நீங்க எலுமிச்சை சாறுடன் சிறிது வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து, கருமை படர்ந்த இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர கருமை மறைந்துவிடும்.
முல்தானிமட்டி என்பது, சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொருள். இது, சருமத்தை சுத்தப்படுத்தவும், உலர்ந்த செல்களை நீக்கவும் - 'ஸ்கிரப்பிங்' எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் உதவுகிறது.முல்தானிமட்டியில் உள்ள துத்த நாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது. இதனுடன், தயிர், பன்னீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து வீட்டிலேயே, 'பேஸ் பேக்'குகள் தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், தோலின் நிறத்தையும், அழகையும் பாதுகாக்கலாம்.முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளி போன்ற பிரச்னைகளுக்கு முல்தானிமட்டியுடன் வேப்ப இலையின் விழுதை கலந்து பூசி, காய்ந்ததும் முகத்தை கழுவவேண்டும். இவ்வாறுசெய்தால், முகத்தில்உள்ளகரும்புள்ளிகளும், வெண்புள்ளிகளும் நீங்கி, சருமம் பொலிவடையும்.கோடைகாலத்தில் முல்தானிமட்டிபயன்படுத்தும்போது, சிலருக்குமுகத்தில்எரிச்சல் ஏற்படலாம்.அவர்கள்முல்தானிமட்டியுடன், துாய்மையான சந்தன தூளை கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளிர்ச்சியாக இருக்கும்.வெளியே செல்வதற்கு முன், முகத்தில் முல்தானிமட்டியை பூசி, 15 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரில் கழுவ முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.பூலான் கிழங்கு - 50 கிராம், கஸ்துாரி மஞ்சள் - 50 கிராம், கடலைப்பருப்பு -100 கிராம், பயத்தம் பருப்பு - 100 கிராம், வெள்ளரி விதை -100 கிராம், வெட்டிவேர் 25 கிராம்ஆகியவற்றைபொடியாகஅரைத்துவைத்து, தினமும் குளிக்கும்போதுபயன்படுத்தலாம்.வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குளியல் பவுடருடன், ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து, சருமம் பொலிவடையும்.முகத்தில் பருக்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய்சுரப்புபிரச்னைஉள்ளோர், பன்னீருடன், முல்தானிமட்டியைகுழைத்து, சிறிய பிரஷால் முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், விரைவில் இப்பிரச்னை தீரும்.
முருங்கை இலை 1கப் நன்றாக கழுவி கொதிக்கும் நீரில் 3 நிமிடம் வேகவைக்கவும்.அதில் 1தேக்கரண்டிஎலுமிச்சைச்சாறு, சிறிது உப்பு சேர்க்கவும்,விரும்பினால்1 சிட்டிகை மிளகு தூள் அல்லது சுக்கு தூள் சேர்க்கலாம்.தினமும் காலை அல்லது மாலை வெதுவெதுப்பாக குடிக்கலாம்.இது இரத்தத்தை சுத்தப்படுத்தி, ஹீமோகுளோபின் அதிகரித்து, உடல் சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி, பெண்கள் ஹார்மோன் சமநிலை, முடி & தோல் நலனை மேம்படுத்த உதவும்.
ஒருபிடி கறிவேப்பிலை நான்கு கடுக்காய் இரண்டையும் ஒன்றாக அரைத்து சாறு எடுத்து அதில் பாதி அளவுக்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்துவர தலைமுடி நன்றாகவளரும் பொடுகு தொல்லையும் நீங்கும்.
தக்காளி விழுது மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கும்.
சிலருக்கு சதா உடலில் அரிப்பு குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும். இதற்கு காரணம் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறட் சியாக காணப்படுவதுதான். இதற்கு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஈரப்பதம் மூட்டும் கிரீம்கள் அல்லது மாய்ஸரைசரை பயன்படுத்த அரிப்பு நீங்கி தூக்கம் கெடாமல் இருக்கும். அல்லது வீட்டு வைத்தியமாக சந்தனத் தூளுடன் பன்னீர் கலந்து குழைத்து உடலில் தடவி வர அரிப்பு காணாமல் போகும்.அத்துடன் பருத்தி ஆடைகளை அணிவதும் நல்ல பலன் தரும்.