25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல்

Sep 28, 2024

பூண்டு சாதம்

தேவையான பொருட்கள்:சாதம்- 1 கப் , தோல் உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி,  , தக்காளி-3, ப.மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா – சிறிது, சீரகம் - அரை ஸ்பூன், கடுகு - அரை ஸ்பூன், நெய் - 2 ஸ்பூன்செய்முறை:ஒரு கடாயில் ஒரு கைப்பிடி தோல் உரித்த பூண்டு,ப.மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி-3, சிறிது புதினா சேர்த்து நன்கு வதக்கவும். சூடு ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து, இன்னொரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் கறிவேப்பிலை, அரைத்த பேஸ்ட்உப்பு, வேகவைத்த சோறு சேர்த்து கிளறி மேலாக கொத்தமல்லி தூவி, சிறிது நெய் ஊற்றி பரிமாறலாம். .பூண்டு சாதம் ரெடி. அப்பளத்தோடு சாப்பிடசுவையாக இருக்கும்.

Sep 28, 2024

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:பாஸ்மதி அரிசி, வெங்காயம், தக்காளி, கொத்தம்மலி, புதினா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எண்ணெய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், கரம் மசாலா பொருட்கள்,செய்முறை:1. முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கரம்மசாலா பொருட்கள் ( பட்டை, கிராம்பு, பிரியாணி இல்லை, அன்னாச்சி பூ) ஆகியவறை சேர்த்து தாளிக்க வேடும்.2. பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நறுக்கிய, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.3. தக்காளி - வெங்காய குழைந்து வந்த பின்பு அதில் மிளகாய் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து கலந்துக் கொள வேண்டும்.இப்போது ஒரு கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி அதில் தேவையான அளவு தண்ணீர்  சேர்க்க வேண்டும்.5. பின்பு அதில் பாஸ்மதி அரிசி சேர்த்து உப்பு சேர்த்து 1 விசில் விட்டு வேக வைத்து எடுத்தால் சூப்பரான குக்கரில் தாளித்த தக்காளி சாதம் தயார்.6. இதனுடன் தயிர் பச்சடி அல்லது பக்கோடா வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Sep 21, 2024

வெங்காயதூள் பஜ்ஜி

தேவையான பொருட்கள் ;கடலை மாவு - 3 கப் , அரிசி மாவு- அரைகப் , தனி மிளகாய்பொடி -2ஸ்பூன், சீரகப்பொடி - அரைஸ்பூன்பெருங்காயப்பொடி- அரைடீஸ்பூன், உப்பு -தேவைக்கு பெரிய வெங்காயம்-3, காஷ்மீர்சில்லிபொடி 1ஸ்பூன்(தேவைப்பட்டால்)பொரிக்கசமையல் எண்ணெய் தேவைக்குசெய்முறை ;முதலில் வெங்காயம்நீளவாக்கில் கட்பண்ணிக்கொள்ளவும்.பின் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு ,2ஸ்பூன்எண்ணெய், மிளகாய்தூள், பெருங்காயம். சீரகத்தூள்,காஷ்மீர் மிளகாய்தூள் சேர்த்துக்கலக்கவும்.பின்கட்பண்ணியவெங்காயம்சேர்த்துசிறிதளவுதண்ணிசேர்த்துக்கலக்கவும்.வெங்காயம்மேல்மாவுஇருக்கனும்.வேறுவாணலியில்எண்ணெய்விட்டு சூடு ஆனதும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உதிர்த்தது போல்போடவும்.நன்கு சிவந்து வந்ததும் எடுத்து விடவும், மழைக்கு ஏற்ற ஸ்நாக்ஸ். வெங்காயத்தூள் பஜ்ஜி ரெடி.

Sep 21, 2024

சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் :15 சிலைஸ் சக்கரை வள்ளி கிழங்கு,  1கப்கடலை மாவு,1/4 கப் அரிசி மாவு, 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1சிட்டிகை சமையல் சோடா,தேவைக்குஉப்பு, மஞ்சள்தூள், பெருங்காயம், பொரிப்பதற்கு எண்ணெய்செய்முறை ;முதலில் சக்கரை வள்ளி கிழங்கை அதன் தோல் சீவி நன்றாக கழுவி  உருளை கிழங்கு, அல்லது வாழைக்காய் பஜ்ஜி போல் கனம் குறைத்து கட் செய்து வைத்துக்கவும். கடலைமாவை மிளகாய் தூள், சமையல் சோடா, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.ஸ்டவ்வில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீடியம் ஹீட்டில் வைத்து கிழங்கை பஜ்ஜி மாவில் தோயத்து சூடான எண்ணையில் வறுத்து எடுக்கவும்.நன்கு வெந்து இரண்டு பக்கமும் திருப்பி, நன்கு மொறு மொறுப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும். பிரெட் பஜ்ஜி போல் சிறு இனிப்பு சுவையில் மிக அருமையாக இருக்கும். இந்த சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி தேங்காய் தக்காளி சட்னியுடன் சேர்த்து சுவைக்கவும்.

Sep 21, 2024

பிரெட் பஜ்ஜி

தேவையான பொருட்கள் ;12 பிரெட் துண்டுகள்( கட் செய்தது). , தேவைக்குபோண்டாமிக்ஸ் மாவு,ருசிக்குஉப்பு ,  தேவையான அளவு தண்ணீர்  ,  பொரிப்பதற்கு எண்ணெய்செய்முறை :தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிரெட்டை 2 துண்டுகளாக கட் செய்யவும்,பௌலில் பஜ்ஜி மிக்ஸ் மாவு, தண்ணீர் உப்பு சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும்.கரைத்த மாவில் பிரெட் துண்டை போட்டு நன்கு எல்லா பக்கமும், படும்படி,தோய்த்துக் கொள்ளவும்.எண்ணெய் நன்கு சூடானதும், அடுப்பை சிறு தீயில் வைத்து, தோய்த்த பிரெட்துண்டுகளை எண்ணெயில் போட்டு, நன்கு பொரிக்கவும்,பொரித்ததை எண்ணெய் வடிய வைக்கும் கூடையில் எடுக்கவும்.இப்போது, சுவையான, சுலபமான,பிரெட் பஜ்ஜி தயார்.குளிர் காலத்திற்கு ஏற்ற ஈவ்னிங் சிற்றுண்டி.

Sep 21, 2024

பேபி கார்ன் பஜ்ஜி

தேவையான பொருட்கள் :கால் கிலோ பேபி கார்ன் , ஒரு கப் கடலை மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு , அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்,ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் ,  கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் உப்பு , தேவையான எண்ணெய் பொறிப்பதற்குசெய்முறை ;முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பேபி கார்ன் நன்றாக சுத்தம் செய்து நீல வாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.ஒரு பேசினில் கடலை மாவு அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவை கரைத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு சிறிய அகலமான கடாயில் எண்ணெய் வைத்து, கரைத்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து ஒன்றொன்றாக போட்டு நன்கு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.இது வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். கடிக்கும் பொழுது தனி சுவையாக இருக்கும்.பேபி கார்ன் பஜ்ஜி ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் வைத்து பரிமாறலாம்.

Sep 21, 2024

கற்பூரவல்லி இலை பஜ்ஜி

தேவையான பொருட்கள் : கப் கடலை மாவு, 2 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு, தேவையானஅளவு உப்பு , 1டீஸ்பூன் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் , 1டீஸ்பூன் சீரகம், 1டீஸ்பூன் ஓமம் ,  2 சிட்டிகை சமையல் சோடா,1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்,  10கற்பூரவல்லி இலை,தேவையான அளவுபொரிக்கத் எண்ணெய்செய்முறை:கற்பூரவல்லி இலைகளைக் கழுவி ஈரத்தை துடைத்து எடுக்கவும்.ஒரு பாத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் போட்டு, தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கற்பூரவல்லி இலையை, மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்கவும். மொறு மொறுவென்று சூப்பராக இருக்கும். சூடாக பரிமாறவும். சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும்.

Sep 21, 2024

ராகி பஜ்ஜி

தேவையானவை : ராகி மாவு -1 கப், கடலை மாவு-1 கப், மிளகாயத்தூள்-1 டீஸ்பூன், வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு அல்லது பெரிய வெங்காயம் - தேவைக்கு, சமையல் சோடா - 1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவைக்கு.செய்முறை: அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சோடா, தேவையான உப்பு சேர்த்து, வேண்டிய தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு அல்லது பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சுவையான ராகி பஜ்ஜி ரெடி.இது நார்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த சத்தான தானியமாகும்.

Sep 14, 2024

மிளகு சீரக இட்லி

தேவையான பொருட்கள் - இட்லி மாவு -2 கப், பெரிய வெங்காயம் -1. பூண்டு - 4 பல், கறிவேப்பிலை -சிறிது, கெட்டியான புளிச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.அரைக்க: மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், பூண்டு 3 பல். தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை:இட்லி மாவை, சிறுசிறு இட்லிகளாக ஊற்றி எடுங்கள். மிளகு, சீரகத்தை அரைத்தெடுங்கள். எடுக்கும் தறுவாயில் பூண்டை உரித்து, அதனுடன் வைத்து நசுக்கிக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டைச் சேருங்கள். அத்துடன் சிட்டிகை உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மிளகு, சீரகம், பூண்டுக் கலவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி புளிச்சாறு, இட்லி, கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள். உப்பு, காரம், புளிப்பு சேர்ந்து சப்புக் கொட்ட வைக்கும் இட்லி இது.

Sep 14, 2024

ஓட்ஸ் இட்லி

தேவையான பொருட்கள் - ஓட்ஸ் ஒரு கப், உளுத்தம்பருப்பு ஒரு கப், இஞ்சி -ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் சிறிதளவு.செய்முறை - உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸை 10 நிமிடம் ஊற வைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5 முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News