25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >> ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா >> ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில்  இலக்கிய மன்றம் நிறைவு விழா >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா . >> கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா. >> பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >>


இன்றைய தினம்

Apr 22, 2025

போப் ஆண்டவர், உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர் மரணமடைந்தார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோலியோ, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி, போப் ஆண்டவராக பொறுப்பேற்று தனது பெயரை "போப்" பிரான்சிஸ்" என்று மாற்றிக் கொண்டார். 12 ஆண்டுகள் போப் பதவியில் இருந்த அவர் , தனது 89 வது வயதில்  (போப் பிரான்சிஸ் 1936 - 2025 )உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.  போப் ஆண்டவர். உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாபெரும் தலைவர். ரோம் நகர போப், புனித பீட்டரின் வாரிசு, வாடிகன் நகர தலைவர் என்ற பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரர்.போப் ஆண்டவருக்கு போன்டிபெக்ஸ் மேக்சிமஸ் என்ற பட்டமும் உண்டு. இது "மிக உயர்ந்த பூசாரி" என்று பொருள்படும்.மனித நேயம் மிக்க மறைந்த போப் பிரான்சிஸ், ஒரு மதத்தின் தலைவராக மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். அவரது மரணம் உலகத்திற்கே மாபெரும் ஓர் இழப்பாகும். அனைத்து நாடுகளிலும் அவருக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. போப் என்பது லத்தீன் மொழியில்  பொருள் தந்தை ,பப்பா என்ற சொல்லில் இருந்து உருவானது.. ஒரு போப் ஆண்டவர், தான் விரும்பி ராஜினாமா செய்யும் வரையும், மரணம் அடையும் வரையும் அந்த பதவியில் இருக்கலாம். அவரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. 

Apr 14, 2025

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும் இன்னிசை முழங்கட்டும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.நல்லதே நடக்க... நானிலம் சிறக்க...மகிழ்ச்சி பெருக...மனிதநேயம் சிறக்க...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  

Apr 06, 2025

CHITRA HOSPITALS

Chitra Hospitals, with a new facelift, to be inaugurated by Thiru K.K.S.S.R. Ramachandran Minister - Revenue and Disaster ManagementVirudhunagar's largest 24/7 Emergency Department to be inaugurated by Thiru P.R. Venketrama Raja Chairman - RamcoThe regions's most advanced Cardiac Surgery Department to be inaugurated by Thiru K.T. Srinivasa Raja MD-Adyar Ananda BhavanThe district's most sophisticated Cardiac Cath Lab to be inaugurated by Dr. G.S.K. Velu Chairman - Neuberg and TrivitronHTI Scans and Labs with the district's first 80-Slice CT Scanner to be inaugurated by Dr. C. Vijayabaskar MLA - Viralimalai | Former Minister - Health and Family Welfare24/7 HTI Pharmacy to be inaugurated by Dr. Xavier Britto Chairman - Kerry Indev Logistics | Movie Producer In the presence ofDr. Rani Srikumar -MP-TenkasiThiru S. Thangappandian -MLA RajapalayamTmt. A.A.S. Pavithra Shyam -Chairperson - Rajapalayam MunicipalityThiru S. Sivaprakasam -Ex-Chairman - AruppukottaiWith the blessings of our founder. Late Dr. K. Bhimraja, M. D.

Apr 04, 2025

திரவுபதி அம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றம்

ராஜபாளையம்திரவுபதி அம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனைத்தொடர்ந்து அம்மனுக்குகாப்பு கட்டும்நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்று விழாவில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ,சாமி தரிசனம் செய்தனர். தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் திருவீதி உலா வந்து ,பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திரு விழா 13-ந் தேதி நடக்க இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Mar 31, 2025

இனிய ரமலான் வாழ்த்துக்கள் .

இந்த நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும்.அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழ இனிய ரமலான் வாழ்த்துக்கள் .

Mar 08, 2025

ROTARY CLUB OF RAJAPALAYAM Naatru Literary Organization Celebrates World Womens Day - 2025

Expecting your Gracious Presence.Program starts  sharply at 5.30 p.m.Introductory Speech -2 mnsAcceptance Speech -3 -mins  நம்மை நாம்அங்கீகரிக்காமல்யார் நம்மை அங்கீகரிப்பது?நம்மை நாம்பாராட்டாமல்யார் நம்மை பாராட்டுவது?நம்மை நாம் வாழ்த்தாமல்யார் நம்மைவாழ்த்துவது?நம்மை நாம்அன்பு செய்யாமல்யார் நம்மைஅன்பு செய்வது?அங்கீகரிப்போம்பாராட்டுவோம்வாழ்த்துவோம்இன்று மட்டுமல்லஎந்நாளும் !நாளின் மலர்வும்நாளின் மகிழ்வும்நம்மோடு!     ----------   ROTARY PRESIDENT  ANANDHI

Feb 26, 2025

இனிய மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்

 மகாசிவராத்திரி என்பது ஆழ்ந்த பக்தியின் நேரம், நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கை. போலேநாத் என்று அழைக்கப்படும் அவர், இரக்கமுள்ளவர், மகிழ்விப்பது எளிது., அவருடைய அருளைப் பெறலாம். இந்த புனிதமான இரவில், பக்தர்கள் விரதம், பிரார்த்தனை, மற்றும் அவரது நாமத்தை உச்சரித்து, அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். மகாசிவராத்திரி அன்று, சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற பக்தர்கள் ஒரு சில சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். பலர் இந்த சடங்குகளை வீட்டில் செய்யும்போது, ​​மற்றவர்கள் நன்கு அறியப்பட்ட சிவன் கோவில்கள் அல்லது அருகிலுள்ள சிவன் கோவில்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து, அடிக்கடி கங்காஜலை தண்ணீரில் கலந்து விடுவார்கள். இந்த ஆண்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து ஏராளமானோர் தண்ணீர் கொண்டு வந்துள்ளனர் பலர் சிவலிங்கத்திற்கு தண்ணீர், பால் மற்றும் பேல் பத்திரத்தை வழங்குவதற்காக சிவன் கோவில்களுக்கு வருகிறார்கள். பால், தயிர், நெய், தேன் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் புனித கலவையான பஞ்சாமிர்தத்துடன் சிவபெருமானை வழிபடும் ருத்ராபிஷேக் சடங்கிலும் சிலர் பங்கேற்கின்றனர். பக்தர்கள் குழுவாகவோ அல்லது மௌனமாகவோ ‘ஓம் நம சிவாய’ என்று ஜபிக்கிறார்கள், மேலும் பலர் மஹாமிருத்யுஞ்சய மந்திரம் அல்லது பிற சிவ மந்திரங்களையும் ஓதுகிறார்கள்.இன்று மஹாசிவராத்திரியில் விரதம் அனுஷ்டிப்பவர்கள் பிப்ரவரி 26ஆம் தேதி பிரம்ம முஹூர்த்தத்தின்போது அதைத் தொடங்கி பிப்ரவரி 27ஆம் தேதி பிரம்ம முஹூர்த்தத்திற்குப் பிறகுதான் அதை முறிப்பார்கள்.நீண்ட வருட காத்திருப்பு மற்றும் சாதனாவிற்குப் பிறகு சிவபெருமானும் பார்வதியும் சந்திக்கும் புனிதமான நாள் மஹாசிவராத்திரி என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் மற்றவர்களுக்கு இது பிரியமான சிவன் தாண்டவத்தை நிகழ்த்தும் இரவு, இது பிரபஞ்ச உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவின் நடனமாகும். இந்த நாளில் சிவபெருமான் பூமியில் இறங்கி வருகிறார், குறிப்பாக அவருக்கு பிடித்தமான காசிக்கு வந்து மகிழ்ச்சியை பரப்புகிறார் என்றும் சிலர் நம்புகிறார்கள். இந்த நன்னாளில் விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். மேலும், இரவில் விழித்திருப்பது ஆன்மீக வளர்ச்சியின் வலுவான அடையாளமாகக் கருதப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் நச்சு நீக்கம் செய்வதற்கு மட்டுமல்ல, சிறப்பு சுத்திகரிப்பு அனுபவத்திற்காகவும் செய்கிறார்கள்.

Jan 26, 2025

குடியரசு தின வாழ்த்துக்கள்.

தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடேஎன் வீடு தாய் தமிழ்நாடுஎன்று சொல்லடா என் நாமம்இந்தியன் என்றே என்றும் நில்லடாதாய் மீதான பாசம் போன்றதே தாய் நாட்டின் மீதான பாசமும்தாயை நேசிப்போம்தாய் நாட்டைமூச்சாய் சுவாசிப்போம்எத்தனை மதம்எத்தனை மொழிஇருந்தாலும் நாம்அனைவரும் பாரதத்தாயின் பிள்ளைகள் தான்வந்தே மாதரம்!

Jan 16, 2025

உழவர் திருநாள்

தினம் சோற்றில் கைவைக்க, சேற்றில் கால்வைக்கும் உழவர்களை, நன்றியுடன் நினைவு கூர்வோம் ! அவர் வாழ்வு வளம்பெற முயற்சி மேற்கொள்ளும் உறுதி கொண்டு, உழவர் நாளை கொண்டாடுவோம்.உலகில் உயர்ந்த சாதி என்று மாத்தட்டி சொல்லும், தகுதி படைத்த ஒரே சாதி, உழுது விதைத்து பசியாற்றும் விவசாய சாதிதான்.உழவும் உழவனும் இல்லை என்றால், உடலுக்கு உணர்வில்லை. உயிருக்கு உடலில்லை, இதை உணராதோர் மனிதனே இல்லை.

Jan 15, 2025

மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

விவசாயம் செய்யும் மனித குலத்திற்கு எல்லா வழிகளிலும் உதவும் பசு, கன்று, காளைகளுக்கு நன்றி சொல்லி வணங்குகிறோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News