புதிய வருடம் ,புதிய கனவுகளின் தொடக்கம்,தைரியத்துடன் நகருங்கள்,வெற்றி உங்களையே தேடிவரும்.எண்ணங்களில் தெளிவு,செயல்களில் நம்பிக்கை,வாழ்க்கையில் நிறைவு தரும் ஒரு புத்தாண்டாக மலரட்டும்.
26 ஆம் ஆண்டில் இராஜபாளையம் டைம்ஸ் .4 ஆம் ஆண்டில் இராஜபாளையம் டைம்ஸ். E . paper.தினமும் 5000 பார்வையாளர்களை கொண்ட E. Paper
மகாவீரரின் 2624வதுபிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு,மகாவீர் ஜெயந்தி மார்ச் 31ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களின் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரின் பிறப்பை குறிப்பதுடன் அகிம்சை,சத்தியம், கருணை ஆகிய அடிப்படை கோட்பாடுகளை வலியுறுத்துகிறது. ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் கந்தசாமி ,தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, திருச்சுழி, அருப்புக்கோட்டையில் சமணம் செழித்திருந்ததற்கான ஆவணங்கள் கிடைத்தாலும், ராஜபாளையம் அடுத்த சேத்துாரில் சமணர் சிற்பமும், புத்தூரில் சமண முனிவர்களின் கற்படுகைகளும், மீனாட்சிபுரம் குகை களும் சமண முனிவர்கள் அதிகமாக இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதை பிர திபலிக்கின்றது.இத்தகைய வரலாற்று இடங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பள்ளி, கல்லுாரி மாணவர்களை அழைத்துச் சென்று நமது பாரம்பரியத்தின் முக்கியத்துவம் உணர்த்த வேண்டும் என்றார்.
பிறை கண்டு கொண்டாடும் பெருநாள் ஈகையும் நட்பையும் போற்றும் நாள் .இந்நன்னாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க,இந்த புனித நாளானது உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தட்டும்.ரமலானின் வாசலில் மூன்று கதவுகள் முதல் கதவை திறந்தவன் அருளை பெறுகிறான் இரண்டாம் கதவை கடந்தவன் பாவமன்னிப்பை வரமாக பெறுகிறான இறுதிக் கதவை அடைந்தவன் நரகத்தின் வாயிலை விட்டும் சுவனத்தில் வாழ்கிறான்வீட்டின் சுவர்களை வண்ணங்களால் அலங்கரித்து கூரையின் தூசுக்களை சுத்தப்படுத்தி எழிலாக்குவதை போல உள்ளத்தின் அடித்தளத்தில் நன்மையான ரமலானின் நிலையான தூண்களால் சுவர்க்கத்தில் விலைமதிப்பான அமல்களால் மாளிகை கட்டு முடித்தால் இன்னும் எதையாவது சேர்த்துக் கொள்.உங்களுடைய எல்லா தேவைகனையும் இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக...இனிய ரமலான் மாதம் கடைபிடிக்க வேண்டியவைரமலான் என்பது பொறுமை, அன்பு மற்றும் தான தர்மத்தின் அடையாளம்ரமலானில் 1 ரூபாய் தர்மம் செய்தால் 70 மடங்கு முதல் 700 மடங்கு வரை நன்மை கிடைக்கும்நம்மிடம் உள்ள பழைய கிழிந்த ஆடைகளை கொடுக்கக் கூடாது. நாம் எதை விரும்பி அணிகிறோமோ அதையே கொடுக்க வேண்டும்தர்மம் செய்வதால் நமது சொத்துக்கள் குறையாது. மாறாக சொத்துக்கள் சுத்தம் செய்யப்பட்டு பெருகும் மற்றும் பாதுகாக்கப்படும்.பசியோடு இருப்பவருக்கு உணவிடும் போது கிடைக்கும் அந்த மகிழ்ச்சி மனதுக்கு பெரிய நிம்மதியை தரும்..கொடுப்பவருடைய கை எப்போதும் உயர்ந்தது.
பிரம்மன் உலகத்தை படைத்த நாளாக கருதப்படும் யுகாதி நாளில் நிறைந்த வளம். நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.இன்னல்கள் நீங்கி இன்பம் சேர்க்கட்டும்.இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முழு சந்திர கிரகணம் மார்ச் 3,2026 இன்று நடைபெற உள்ளது.2026ஆம் ஆண்டின் முதல் மற்றும் முக்கியமான முழுச் சந்திர கிரகணம் மார்ச் 3, 2026 அன்று நிகழ உள்ளது. இந்த 'பிளட் மூன்' (Blood Moon) நிகழ்வு, இந்தியா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும். இது சந்திரன் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வாக கணிக்கப்பட்டுள்ளது.கிரகண நேரம் தொடக்கம், மதியம் 3.20. முழு கிரகணம்: மாலை 4:45 முதல், உச்ச நேரம்: மாலை 5.15, நிறைவு: மாலை 6:46 செய்ய வேண்டியவை:தர்ப்பை புல்: கதிர்வீச்சைத் தடுக்க உணவு, நீர், பாலில் கிரகணத்துக்கு முன்பே போடவும்.வழிபாடு: அமைதியாக அமர்ந்து மந்திரம் ஜபிக்கவும் (வாக்கு பலிக்கும்).குளியல் & தானம். கிரகணம் முடிந்ததும் தலைக்குக் குளித்துவிட்டு ஏழைகளுக்கு தானம் செய்யவும். செய்யக் கூடாதவை:உணவு & உறக்கம்: சாப்பிடவோ, தூங்கவோ கூடாது (முதியோர், நோயாளிகள், குழந்தைகளுக்கு விதிவிலக்கு).கர்ப்பிணிகள் கவனம்; வெளியே வர வேண்டாம்; கத்தி போன்ற கூர்மையான பொருட்களைத் தவிர்க்கவும்.சுப காரியங்கள்: புதிய தொழில், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளி வைக்கவும்.
உலகளவில் 1.20 கோடி தொண்டு நிறுவனங்களும், இந்தியாவில் 33 லட்சம் தொண்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.,) பணிகளை பாராட்டும் வகையில், அவை நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும் பிப். 27ல் உலக தொண்டு நிறுவன தினம் 89 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை. கல்வி, குழந்தைகள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகிறது. இது தவிர போர் பாதிப்பு. தொற்றுநோய் காலங்களில் இவற்றின் பணி மகத்தானது.
பிரம்மா மற்றும் விஷ்ணு இடையே 'யார் பெரியவர்' என்ற போட்டி வந்தபோது சிவன். ஜோதி பிழம்பாக அவர்கள் முன் தோன்றினார். அந்த நெருப்புத் தூணின் அடிமற்றும் முடியைக் காண முடியாத நாளே மகாசிவராத்திரி.இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி (அமாவாசைக்கு முந்தைய நாள்) அன்று கொண்டாடப்படுகிறது.இந்த நான்கு காலமும் விழித்திருக்க முடியாதவர் மூன்றாம் காலம் பார்வதிதேவி சிவனை வழிபாடும் நேரம் (15.2.26 இரவு 12 மணி முதல் 12.30 வரை விழித்திருக்கலாம்.)(15-02-2020) விரதம் துவங்கும் நாள் அன்று முழுவதும் உபவாசம் இருக்கலாம், (அல்லது) பால், பழம் மட்டும் உண்ணலாம்.விரதம் நிறைவு செய்யும் நாள்& நேரம் (16-02-2026) காலை 04:00 மணிக்குள் உங்கள் வேண்டுதலை சிவனிடம் வேண்டிக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.சிவன் வழிபாடோடு குலதெய்வத்தை வழிபாடு செய்வது குலதெய்வத்தின் அருள் பெற வழிவகுக்கும்.சிவராத்திரி, சிவன்-பார்வதி திருமணம் நிச்சயமான நாள், தேவர்கள் தங்கம், வெள்ளி, முத்துகளை பரிசாக கொண்டு வந்தார்கள்.ஆனால்,துறவியான சிவபெருமானிடம் செல்வம் இல்லை. இருப்பினும், பார்வதிக்கு ஒரு சிறப்பு பரிசு கொடுக்க வேண்டும் என்ற ஆசை.அவர் தானே பச்சை லாக் வளையல்கள் செய்து, வேஷம் பூண்டு இமயமலையில் சென்று, அதை பார்வதியின் கைக்கு அணிவித்தார்.அந்த நிமிஷத்திலேயே பார்வதி அவரை அடையாளம் கண்டார்.அப்போது சிவன் சொன்னார். 'இந்த பச்சை வளையல்கள் சௌபாக்கியத்துக்கும், படைப்பின் சக்திக்கும் அடையாளம்.‘ஆகவே ,சிவராத்திரியில் பச்சை வளையல் அணிவது, பார்வதிக்கு சிவன் அளித்த முதல் பரிசை நினைவுபடுத்துவது.சிவராத்திரியில் பச்சை வளையல்கள் அணிய வேண்டும்.
(பிப். 14) காதலர்தினம் இன்று உருவான கதை .14ம் நூற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார். இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' கொண்டாடதொடங்கினர். 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது.
சமத்துவம் தொடர்ந்து, சம உரிமை நீடித்து ,பாரதம் செழித்து,அடிமைத்தனம் தீர்ந்த தினம், அரசு அமைந்த தினம் ,சுதந்திரம் பெற்று வளர்ந்த தினம் ,தாய் மீதான பாசம் போன்றதே, தாய் நாட்டின் மீதான பாசமும், தாயை நேசிப்போம், தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்,இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.