25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

May 02, 2025

(ஏ.ஐ.எப்.எப்.,) இந்திய கால்பந்து விருது வழங்கும் விழா.

(ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில்அனைத்துஇந்தியகால்பந்துகூட்டமைப்பு,ஒவ்வொருஆண்டும்சிறப்பாகசெயல்படும்வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.நேற்று,ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் சிறந்த வீரருக்கான விருதை சுபாஷிஷ் போஸ் கைப்பற்றினார். கோல்கட் டாவை சேர்ந்த தற்காப்பு வீரரான இவர், இந்தியாவுக்காக 42 போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரது தலைமையிலான மோகன் பகான் அணி, இந்தியன் சூப் பர் லீக் (ஐ. எஸ்.எல்.,) 11வது சீசனில் (2024-25) கோப்பை வென்றது. தவிர, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஐ.எஸ்.எல்., ஷீல்டு வென்றது.தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான ஈஸ்ட் பெங்கால் அணியின் சவுமியா சிறந்த வீராங்கனைக்கான விருதை தட்டிச் சென்றார். தெலுங்கானாவை சேர்ந்த மத்தியகள வீராங்கனையான இவர், இந்தியாவுக்காக 33 போட்டியில் களமிறங்கினார். சிறந்த கோல்கீப்பருக்கான விருதை ஹிமாச்சல பிரதேசத்தின் விஷால் கைத் கைப்பற்றினார். இவர், ஐ.எஸ்.எல்., 11வது சீசனில் சிறந்த கோல்கீப்பராக தேர்வாகினார். பெண்கள் பிரிவில் சிறந்த கோல்கீப்பராக மணிப்பூரின் பந்தோய் சானு கைப்பற்றினார்.சிறந்த நம்பிக்கைக்குரிய வீரராக கோவாவின் பிரிசான் பெர்ணான்டஸ், வீராங்கனையாக மணிப்பூரின் தோய்பி சானா சானு தேர்வாகினர்.

May 02, 2025

2ND MAY விளையாட்டு போட்டிகள்

கராத்தே கோஜுரியு தேசியக் கராத்தே பஞ்சாபில் 2வது அனைத்து சாம்பியன்ஷிப் ,தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 13 அணிகள் பங்கேற்றன. இதில் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர்கள், 34 தங்கம், 28 வெள்ளி, 35 வெண்கலம் என, மொத்தம் 97 பதக்கங்கள் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் கைப்பற்றினர். கர்நாடகா, பஞ்சாப் அடுத்த இரு இடம் பிடித்தன.டென்னிஸ், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஜார்ஜியாவில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா ஜோடி, ரஷ்யாவின் வார்வரா பான்ஷினா, டேரியா ஜோடியை எதிர் கொண்டது. ராஷ்மிகா ஜோடி 6-3, 3-6, 10-8 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன் னேறியது.‎இந்தியாவின் ருடுஜா போசாலே, பெய்ஜ் மேரி ஜோடி, மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கெயட்டனோ, வடக்கு மரியானா தீவின் கரோல் லீ ஜோடியை சந்தித்தது. ருடுஜா ஜோடி 6-7, 6-3, 10-8 என போராடி வென்றது. 

May 01, 2025

30TH APRIL AND 1ST  MAY IPL MATCH

30TH APRIL IPL MATCH CHENNAI - PUNJAB APRIL 30-ம் தேதி  சென்னையில், பஞ்சாப், சென்னை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 190/10 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 194/6 ரன்கள்  எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHREYAS  IYER  தேர்ந்தெடுக்கப்பட்டார்.1ST  MAY IPL MATCH. MUMBAI - RAJASTHANMAY 1-ம் தேதி  ஜெய்ப்பூரில், மும்பை, ராஜஸ்தான், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 217/2 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய  ராஜஸ்தான் அணி 117/10  ரன்கள்  எடுத்து  தோல்வியடைந்தது,  100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக RYAN RICKELTON தேர்ந்தெடுக்கப்பட்டார். 

May 01, 2025

ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்

 ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 15 தங்கம், 6 வெள்ளி, 22 வெண்கலம் 43 என, பதக்கம் கைப்பற் றிய இந்தியா 2வது இடத்தை கைப்பற்றியது.ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில், 17 15, வயதுக்குட்பட்டோருக்கான நடந்தது. இதன் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியாவுக்கு 11 தங்கம், 3 வெள்ளி, 11 வெண்கலம் என, 25 பதக்கம் கிடைத்தது. நேற்று 17 வயதுக்குட்பட்டோருக்கான பைனல் நடந்தது. பெண்களுக்கான 46 கிலோ பிரிவில் இந்தியாவின் குஷி சந்த், மங் கோலியாவின்அல்தான்சுல் மோதினர். குஷி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். மற்ற எடைப்பிரிவு பைன்லில் இந்தியாவின் அஹானா சர்மா (50 கிலோ), ஜன்னத் (54 கிலோ), அன்ஷிகா (80+ கிலோ) வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றனர். சிம்ரன்ஜீத் கவுர் (60 கிலோ), ஹர்சிகா (63 கிலோ) வெள்ளி வென்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் கிடைத்தது. .

May 01, 2025

MAY 1 ST விளையாட்டு போட்டிகள்

சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர்சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் சீனாவில், இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றது. முதல் இரு போட்டியில் (டென்மார்க், இந்தோனேஷியா) தோற்ற இந்திய அணி, காலிறுதி வாய்ப்பை இழந்தது. நேற்று தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது.முதலில் பெண்கள் நடந்த ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் அனுபமா, இங்கிலாந்தின் லின்கன் மோதினர். இதில் அனுபமா 21-12, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்திய அணி 3-2 என்ற , கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. பளுதூக்குதல் உலக யூத், ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்  பெருவில், யூத் பெண் களுக்கான பிரிவில் 40 கிலோ இந்தியாவின் ஜோஷ்னா சபர் பங்கேற்றார். யூத் ஆண்களுக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஹர்சபர்தன் சாஹு களமிறங்கினார்.  இதில் இந்தியாவிற்கு, 2 வெண்கலம் கிடைத்தது. பெண்களுக்கான 'டி-20 உலக கோப்பை  லார்ட்சில் 'உலக' பைனல்மே 2-பெண்களுக்கான 'டி-20 உலக கோப்பை (2026) பைனல், துபாய்,  லண் டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது.இங்கிலாந்தில், அடுத்த ஆண்டு (ஜூன் 12 -ஜூலை 5) பெண்களுக்கான 'டி-20 உலக கோப்பை 10வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கு, 'நடப்பு சாம்பியன்' நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றன. மீதமுள்ள 4 இடங்களுக்கு தகுதி சுற்று நடத்தப்படும். மொத்தம் 33 போட்டிகள், 6 மைதானங்களில் நடக்க உள்ளன. இத்தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியாக இந்நிலையில் பைனல் நடக்கும் மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன் சில் (ஐ.சி.சி.,) அறிவித் துள்ளது.இதன்படி லண் டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் பைனல் (ஜூலை 5, 2026) நடக்க வுள்ளது. ஏற்கனவே இங்கு, 2017ல் பெண்க ளுக்கான உலக கோப்பை (50 ஓவர்) நடந்தது. பைனல்2020ல் மெல் போர்னில் நடந்த ஆஸ்தி ரேலியா, இந்தியா அணி கள் மோதிய பெண்கள் 'டி-20' உலக கோப்பை பைனலை காண 86,174 பேர் வந்திருந்தனர். இது போல அடுத்த ஆண்டு லண்டன், லார்ட்சில் நடக்கும் பைனலை காண அதிக ரசிகர்கள் வரலாம்.

Apr 29, 2025

29TH APRIL IPL MATCH.  DELHI - KOLKATTA

 APRIL 28-ம் தேதி  டெல்லியில்,   கொல்கத்தா, டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  கொல்கத்தா அணி 204/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 190/9 ரன்கள்  தோல்வியடைந்தது. 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SUNIL NARINE தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Apr 29, 2025

கிரிக்கெட் பெண்களுக்கான  முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..

 கிரிக்கெட்  பெண்களுக்கான  முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில்…..பெண்களுக்கான முத்தரப்பு ஒரு நாள் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.முதல் போட்டி யில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. நேற்று தனது இரண்டாவது போட்டி யில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர் கொண்டது. 'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.   இந்திய அணி 50 ஓவரில் 276/6 ரன் எடுத்தது . 49.2 ஓவரில் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி  தென் ஆப்ரிக்கா தோற்றது.ஸ்னே ராணா 5 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகி ஆனார். சுதிர்மன் கோப்பை பாட்மின்டன்சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் சீனாவில், இந்திய அணி 'டி' பிரிவில் இங்கிலாந்து, இந்தோனேஷியா, டென்மார்க் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதல் போட்டியில் இந்தியா 1-4 என டென் மார்க்கிடம் தோற்றது. இரண்டாவது போட்டி யில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இந்திய அணி, வலிமை யான இந்தோனேஷி யாவை சந்தித்தது. முதலில் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோஜோடி, 10-21, 21-18, 21-19 சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் இந்தோனேஷியாவின் டாப்ட், மேக்லண்ட் ஜோடியை சாய்த்தது. இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி ஜோடி 10-21, 9-21 என இந்தோனேஷி யாவின் மாயாசரி, ரதாந்தி ஜோடியிடம் தோற்று , 1-4 என்ற கணக்கில்காலிறுதி வாய்ப்பை இழந்தது

Apr 28, 2025

28TH APRIL IPL MATCH GUJARAT - RAJASTHAN

 APRIL 28-ம் தேதி  ஜெய்ப்பூரில்,  ராஜஸ்தான், குஜராத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 209/4 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 212/2  ரன்கள்  எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக VAIBHAV SURYAVANSHI (38 Ball 101 Run) தேர்ந்தெடுக்கப்பட்டார். 

Apr 28, 2025

ஐ.பி.எல் கிரிக்கெட் 14 வயது சூர்யவன்ஷி சதம்அடித்து சாதனை.

ஐ.பி.எல்.ல் குறைந்த வயதில்ஐ.பி.எல்.ல்அறிமுகம் ஆன வீரர் என்ற பெருமைக்குரிய பீகாரைச் சேர்ந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் நிர்வாகம் ரூ.1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தனது முதல் இரு ஆட்டங்களில் 34மற்றும் 16 ரன்கள் வீதம் எடுத்த சூர்யவன்ஷி 3 -வது ஆட்டத்திலேயே சதம்அடித்து கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.மொத்த ஸ்கோரில் 94ரன்களை பவுண்டரி, சிக்சர் மூலம் 35 பந்துகளில் சதத்தை எட்டிய சூர்யவன்ஷி எடுத்து விட்டார். ஒட்டு மொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரராக திகழ்கிறார். இதற்கு முன்பு 18 வயதுக்கு குறைந்த வீரர் யாரும் சதம் அடித்ததில்லை. 

Apr 28, 2025

28 TH APRIL விளையாட்டு போட்டிகள்

டேபிள் டென்னிஸ்  தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப்நேபாள தலைநகர் காத்மாண்டுவில்,19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, நேபாளம் மோதின.பிரிதா, அனன்யா, ஹர்தீ படேல், தியா இடம் பெற்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.பெண்கள் 15 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான பைனலில் பிரீத்தி பால், ஆருஷி நந்தி,ஆத்விகா அராவல், தன்மயி சஹா இடம் பெற்ற இந்திய அணி 3-0 என இலங்கையை வீழ்த்தி தங்கத்தை வென்றது. 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் சோப்தா 3-1 வீரர் குஷால் என சக பாலமுருகனை வென்றார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனிநபர் பைனலில் இந்தியாவின் அனன்யா 3-1 என பிரிதாவை  வீழ்த்தி தங்கம் வென்றார்.இரட்டையரில் (15, 19 வயது) ஆதிக்கம் செலுத்திய இந்திய நட்சத்திரங்கள் 6 தங்கத்தையும் தட்டிச் சென்றனர்.இந்தியாவுக்கு 13 தங்கம், 3 வெள்ளி என, மொத்தம் 16 பதக்கம் கிடைத்தது.  குத்து சண்டை 17, 15, வயதுக்குட்பட் டோருக்கானஆசியகுத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில், நேற்று, 17 வயதுக்குட்பட்டோருக் கான அரையிறுதி போட்டிகள் நடந்தன.பெண்களுக்கான 46 கிலோ பிரிவு அரையிறுதி யில் இந்தியாவின் குஷி சந்த், உக்ரைனின் ஒலெக் சாண்ட்ரா செரெவாடா மோதினர். இதில் குஷி சந்த் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.  ஆசிய பேஸ்பால்: இந்தியா தகுதி பெண்களுக்கான ஆசிய கோப்பை பேஸ்பால் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, இலங்கை, ஈரான் அணிகளை வீழ்த்தி முதலிடம்பிடித்தது. அடுத்து நடந்த 'சூப்பர் ரவுண்டு சுற்றில் இந்தோ னேஷியாவிடம் வீழ்ந்தஇந்தியா, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முடிவில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தோனேஷியா, இந்தியா அணிகள் பைனலுக்கு (ஏப். 29) முன்னேறின.இவ்விரு அணிகள், ஆசிய கோப்பை பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றன. இந்திய அணி, தொடர்ந்து 4வது முறையாக (2017, 2019, 2023, 2025) ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.

1 2 ... 107 108 109 110 111 112 113 ... 136 137

AD's



More News