மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ,ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி யில் நேற்று நடந்த ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரரான விஸ்வநாத் சுரேஷ், ஜப்பானின் டாய்சி இவாயை சந்தித்தார். விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சென்னை பெரம்பூரை சேர்ந்த 21 வயதான விஸ்வநாத் சுரேஷ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்திய வீராங்கனைகள் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்று பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.இந்தியா மொத்தம் 5 தங்கம் உள்பட 16 பதக்கங் களை கைப்பற்றி ,2-வது இடம் பிடித்தது.
கொல்கத்தா, லக்னோ அணிகள் நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டனில் மோதின. 'டாஸ்' ஜெயித்த லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்தது.லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுண்டாரி என்க் அம்கலானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் ,54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் ஹூவாங்சியாயோவென்னை வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் பிரியா 60 கிலோ எடைப்பிரிவில், 3-0 என்ற கோல் கணக்கில்வடகொரியாவின் வோன் அன் கியோங்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். உலக கோப்பை போட்டியில், 70 கிலோ எடைப்பிரிவில், தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தானின் பக்கித் செய்டிசைதோற்கடித்து தங்கப்பதக்கத்தைதனதாக்கினார்.இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை பெண்கள் பிரிவில் வென்று ஆதிக்கம் செலுத்தியது.
சைப்ரஸ் நாட்டில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தேர்வு செய்வதற்கான ' நடப்பு கேண்டி டேட்ஸ் செஸ் போட்டி சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 9-வது சுற்றுநடந்தது. பெண்கள் பிரிவில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தின் ஆர்.வைஷாலி 31-வது நகர்த்தலில் ,திவ்யா தேஷ் முக்கை வென்று3-வது வெற்றியை பெற்றார். 9-வது சுற்று முடிவில் வைஷாலி, சீனாவின் ஜூஜினெர்ஆகியோர் தலா 5½ புள்ளியுடன் முன்னணியில் உள்ளனர். இன்று 10-வது சுற்று நடக்கிறது.
சீனாவின் நிங்போ நகரில் ,43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் லக்ஷயா சென் 12-21, 19-21 என்றநேர் செட்டில் லீசேக்யிடம் (சீனதைபே) தோற்றார். உலக தரவரிசையில் 25-வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற நேர் செட்டில் 7-ம் நிலை வீரர் லின் ஷிபெங்கை (சீனா) வென்றார். இந்தியாவின் பிரனாய் தன்னை எதிர்த்த நுயேன் ஹாய் டாங்கை (வியட்நாம்) 24-22, 21-12 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார்.முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 'பெண்கள் ஒற்றையரில் 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வோங் லிங்சிங்கை வென்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 67 நிமிடங்கள் தேவைப்பட்டது. 2-வது சுற்றில் சிந்து, 2 முறை உலக சாம்பியனான சீனாவின் வாங்ஷியியை எதிர்கொள்கிறார்.
குஜராத், டெல்லி அணி நேற்றிரவு டெல்லியில் நடந்த போட்டியில் மோதியது. டாஸ்' ஜெயித்த டெல்லி கேப் டன் அக்ஷர் பட்டேல் முதலில் பந்து வீச்சை தேர்வுசெய்தார். 20 ஓவரில் குஜராத் அணி 4 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது, டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 209 ரன்களே எடுக்க முடிந்தது. குஜராத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் குஜராத்தின் முதல் வெற்றியாகும்.
தாய்லாந்தில் 12-வது பெண்கள் ஆசியகோப்பை உட்பட் கால்பந்து (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி ,'சி' பிரிவில் ,இந்திய அணி. தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சீன தைபேவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை வென்றது. இந்திய அணியில் சிபானி தேவி (32-வது, 87-வது நிமிடம்), பூமிகா தேவி (26-வது நிமிடம்) கோலடித்தனர். சீன தைபே தரப்பில் மாற்று ஆட்டக்காரர் காவ் ஹசின்கடைசி நிமிடத்தில் கோல்திருப்பி,இந்திய அணி தனது பிரிவில் 3-வது இடம் பெற்றது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் இந்தியா முதல் வெற்றி. இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது.
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 8-வது சுற்று ,செஸ் கேண்டிடேட்ஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. பெண்கள்பிரிவில் ஆர். வைஷாலி (இந்தியா)-பிபிசரா அசாபயேவா (கஜகஸ்தான்) இடையிலானஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், உக்ரைனின் அன்னா முசிசுக்கை தோற்கடித்தார். 8-வது சுற்றுமுடிவில் வைஷாலி, திவ்யா, முசிசுக் உள்பட 5 வீராங்கனைகள் தலா 4-1/2புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ஆசியகுத்துச்சண்டை பியன்ஷிப் போட்டியில் இந்தியர்கள் வெகுவாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நேற்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை மீனாட்சி ஹூடா 4-1 - என்ற கணக்கில் தாய்லாந்தின் திப்சாட்சா யோத்வாரியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்தவிஸ்வநாத் சுரேஷ் ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் ,5-0 என்ற கணக்கில் ஹூதைபா எஷிசை (ஜோர் டான்) வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். . இந்தியாவை சேர்ந்த 6 வீராங்கனைகள், 2 வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ஸ்பெயினின் கிரனடாவில் நேற்று முன்தினம் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் முதலில் தகுதி சுற்றில் பங்கேற்ற ,42 ஜோடிகளில் முதல் 4 இடத்தை பிடித்தவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள்தகுதி சுற்றில் 2-வது இடத்தை பெற்ற பலாக்-முகேஷ் நெலவள்ளி ஜோடி இறுதி ஆட்டத்தில் 487.7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர்.