ஜெர்மனியில் கிரென்கே செஸ் தொடர் ஓபன் பிரிவில் 875 பேர் கள மிறங்கினர். இந்தியா சார்பில் அஸ்வத், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் அஸ்வத், மங்கோலியாவின் முகமது முராடிலியை எதிர்கொண்டார்.கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய அஸ்வத், துவக் கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
டேபிள் டென்னிஸ் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடர் டுனிசியாவில் நடக்கிறது ஒற்றையர் தகுதிச்சுற்று நடந்தன. பெண்கள் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் தியா சிட்டாலே, ருமேனியாவின் எலினா ஜஹாரியாவை சந்தித் தார். முதல் செட்டை 6-11 என இழந்த தியா, அடுத்த செட்டை 11-9 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த கடைசி செட்டை 12-10 என போராடி வென்றார். முடிவில் தியா 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கோல்ப் ஹரியானாவில் இந்திய கிளாசிக் கோல்ப் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் இரு சுற்று முடிவில் 67,73 ஸ்டிரோக்குடன் கோல்கட்டாவின் விராஜ் மடப்பா நான்காவது இடத்தில் இருந்தார். நேற்று கடைசி சுற்று போட்டி நடந்தது. இதில் சிறப்பாக செயல் பட்ட விராஜ், 65 ஸ்டிரோக் பெற்றார். இதையடுத்து 205 ஸ்டிரோக்குடன் (67, 73, 65) முதலிடத்துக்கு முன்னேறி கோப்பை வென்றார்.
தடகள போட்டி 28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகளபோட்டி கேரள மாநிலம் கொச்சியில், பெண்களுக்கான 400மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில், இலக்கை 56.04 வினாடியில் கடந்த தமிழகத்தின் வித்யா ராம் ராஜ், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றார். ஆசிய சாம்பி யன்ஷிப் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்திற்கான ஃ தகுதி இலக்கை(57.80வினாடி) விட வேகமாக வந்த வித்யா, இத்தொ டரில் தனது 2வது பதக்கத்தை வென்றார்.குத்துசண்டை 15, 17, வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் ஜோர்டானில். நேற்று,15 வயதுக்குட்பட்டோருக்கான காலிறுதி நடந்தன. ஆண்களுக்கான 46 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ருத்ராக்ஷ், கிர்கிஸ்தானின் ஐதர்முசேவ் மோதினர். ருத்ராக்ஷ் 3-0 என்றகணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.ஆண்களுக்கான 37 கிலோ பிரிவு காலிறு தியில் இந்தியாவின் ஹர்சில் 5,0 என, துர்க் மெனிஸ்தானின் செர்டரோவை தோற்கடித்தார். ஆண்களுக்கான 49 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சஞ்சித் ஜயனி5-0 எனசீனதைபேயின் சென்-என்யுவை வென்றார். மற்றஎடைப்பிரிவு காலிறுதியில் இந்தியா வின் சன்ஸ்கர் வினோத் அத்ரம் (35கிலோ), பிரிக் ஷித் பலஹ்ரா(40 கிலோ)வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர்.பெண்களுக்கான 43 கிலோ பிரிவு காலிறுதி யில் இந்தியாவின் மில்கி மெய்னம் 5-0 என கஜகஸ் தானின் அப்திகானியை வென்றார். மல்யுத்தம் (20 வயதுக்குட்பட்டோருக்கான) ராஜஸ்தானில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 76 கிலோ பிரிவில் பிரியா மாலிக் களமிறங்கினார். 20 வயதுஉலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் கைப்பற்றிய பிரியா, மீண்டும் தேசிய சாம்பியன் ஆனார்.17 வயதுபிரிவு உலக சாம்பியன்ஷிப்பில் ஹர்சித்தா(72கிலோ), சுராஜ்(60கிலோ,கிரிகோ ரோமன்) தங்கம்வென்றனர்.. 62 கிலோபிரிவில்,'உலக' தொடரில் வெள்ளி வென்ற நிகிதா, இம்முறை வெண்கலம் தான் வெல்ல முடிந்தது. மஹாராஷ்டிராவின் பிரகதி தங்கம் வென்றார். தவிர, ஜஸ்பூரன் சிங்(125கிலோ), ரீனா(55),சங்வான்(57)உள்ளிட்டோர் தங்கள் பிரிவுகளில் தங்கம் வசப்படுத்தினார்.ஒட்டுமொத்தமாக பிரீஸ்டைல், கிரிகோ ரோமன் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சிறப்பாக செயல் பட்டஹரியானா ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. டில்லி அணி இரண்டாவது இடம் பிடித்தது. செஸ் ('பிடே') சார்பில் சர்வதேச செஸ் கூட்ட மைப்பு பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' தொடர் 5ம் கட்ட போட்டிகள் புனேயில் நடந்தது. இந்தியாவின் ஹம்பி, திவ்யா தேஷ்முக்,வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி உட்பட 10 பேர் பங்கேற்றனர். நேற்று கடைசி, 9வது சுற்று போட்டி நடந்தன. முடிவில் இத்தொடரில் ஒருபோட்டியில் கூட தோற்காத ஹம்பி,7.0 புள் ளியுடன் முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ.17.50 லட்சம் பரிசு கிடைத்தது. ஜு ஜினெர் (7.0 புள்ளி, 1 தோல்வி, ரூ. 12.60 லட்சம்) இரண்டா வது, திவ்யா (5.5, ரூ.10.20 லட்சம்) மூன்றாவது இடம்பெற்றனர்.
APRIL 23-ம் தேதி ஐதராபாத்தில், மும்பை, ஐதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத்அணி 143/8 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 146/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக TRENT BOULT தேர்ந்தெடுக்கப்பட்டார்.
APRIL 22-ம் தேதி லக்னோவில், டெல்லி, லக்னோ அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 159/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 161/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக MUKESH KUMAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் தமிழ்நாடுகிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் தேசிய மற்றும் சர்வதேச போட்டியில் சிறந்து விளங்கும் தமிழக இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தாகை வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊக்கத் தொகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த அபிநந்த் கபிள்டென்னிஸ்), வெனிசாஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வல்லச்சாமி (பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), ஜயந்த், நந்தனா இருவரும் கிரிக்கெட்), கமலி (அலைச்சறுக்கு , அபிநயா, ஜித்தின் அர்ஜூனன் இருவரும் தடகளம்).தக்க்ஷந்த் (செஸ்) ஆகியோருக்கு தலா ரூ.30 ஆயிரம் வழங்கினார். இது அருமையான் திட்டம் என்று பாராட்டி, ஷிவம் துபே தனது சொந்த பணத்தில் இருந்து ,ஒவ்வொவருக்கும் தலா ரூ.70 ஆயிரம் விதம் மொத்தம் ரூ.7 லட்சமும் வழங்கினார்.விழாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக இயக்குனர் கே.எஸ்.விஸ்வ தன், தமிழ்நாடு கிரிக்கெட்சங்கசெயலாளர் ஆர்.ஐ.பழனி, -உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுருக்கும், சீனாவின் யுஜ்லி சன்னுக்கும் டையே கடும் போட்டி நில வியது 9-வது சுற்று நிறைவில் புஜ்லி சன் ஒரு புள்ளி வித்தி யாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால் கடைசி ரவுண்ட் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த ரவுண்டில் இருவரும் தலா 3 புள்ளிகள் எடுத்தனர். முடிவில் யுஜிலி சன் 34 புள் ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.சிம்ரன்பிரீத்கவுர் 33புள்ளிகளுடன் 2 வதுஇடத்தைபெற்றுவெள்ளிப்பதக்கத்தைசொந்தமாக்கினார்.இந்தபோட்டியில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கத்துடன் 3 வது இடத்தை பெற்றது.
APRIL 21-ம் தேதி கொல்கத்தாவில், குஜராத், கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 198/3 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 159/8 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHUBMAN GILL தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் ஹம்பி, திவ்யா தேஷ்முக், வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி உட்பட 10 பேர் பங்கேற்கும். சர்வதேச செஸ் கூட்டமைப்பு('பிடே) சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 5ம் கட்ட போட்டிகள் புனேயில் நடக்கிறது. ஏழாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, சீனாவின் ஜு ஜினெர் மோதினர். ஹம்பி, 55வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஏழு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் ஹம்பி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். சீனாவின் ஜூ ஜினெர் (5.0 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரஷ்யாவின் போலினா ஷுவலோவா(4.0 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். ஹரிகா, திவ்யா (தலா 3.5 புள்ளி) 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். வைஷாலி (3.0) 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
28வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகள போட்டி கேரள மாநிலம் கொச்சியில், பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பவித்ரா, அதிகபட்சமாக 4.00 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.மற்றொரு தமிழக வீராங்கனை பரானிகா (4.00 மீ.,) வெள்ளி வென்றார். ஹரியானாவின் வன்ஷிகா (3.90 மீ.,) வெண்கல பதக்கத்தை தட்டிச் வென்றார்.