ரோஸ் ஆப் ஜெரிகோ உயிர்த் தெழும் தாவரம் .
ரோஸ் ஆப் ஜெரிகோ, என்று அழைக்கப்படும் இந்த தாவரம் வறண்ட சூழலுக்கும் தாக்குப்பிடித்து வளரும். அதனால் நீர் இன்றி கூட நீண்ட காலம் வாழ முடியும்.கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் இலைகள் காய்ந்து பந்து போன்ற வடிவத்தில் சுருண்டு விடும் . பார்ப்பதற்கு இறந்துவிட்டதாகவே தோன்றும். ஆனால் அதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலோ அல்லது மழை மூலம் தண்ணீர் கிடைத்துவிட்டாலோ சில மணி நேரத்துக்குள்ளேயே மீண்டும் துளிர்விட தொடங்கிவிடும். அதனால் இதனை உயிர்த்தெழும் தாவரம் என்றும் அழைக்கிறார்கள். இது இயற்கை வழங்கிய அதிசய தாவரமாக பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply