உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் நிர்வாக ஆணையம் 1989-ம் ஆண்டு முதல் ,உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கப் பரிந்துரைத்தது. உலக மக்கள் தொகை தினம் என்பது உலகளாவிய மக்கள் தொகை வளர்ச்சி, மக்கள் தொகை மாற்றங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கியமான பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான முருகப்பெருமானின் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 2023ல் திருப்பணிகள் துவங்கின. பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, 6:15 முதல், 6:50 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. . 6100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப் பட்டன. கோயிலுக்குள் நேற்று மதியம் 12:00 மணிக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 12ம் கால யாக சாலை பூஜை அதிகாலை 4:00 மணிக்கு நடை பெற்றது. காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் ராஜகோபுர கும்ப கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்நடை பெற்றது.அதேநேரத்தில், சண்முகர், ஜெயந்திநாதர்,வள்ளி, தெய்வானை, குமரவிடங்கபெருமாள், நடராஜர், உள்வெளி பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபி ஷேகம் நடை பெற்றது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க 20 ட்ரோன் வசதி செய்யப்பட்டது.
ROTARY CLUB OF RAJAPALAYAM Cordially invites you to the INSTALLATION CEREMONY Of Rtn. Srimaan Ramachandra Raja ,As PresidentRtn.Dr.N. Karthikeyan, as SecretaryFor the year 2025 - 2026 ,On 02/07/2025, Wednesday 6.30 pm ,@PRR Rotary Hall, Cotton Market, Rajapalayam.Chief Guest - Rtn. PDG AKS V.R. MUTHUEND POLIO NOW COORDINATOR ZONE. 5 Year 2025-2028Guest of Honour - Rtn PDG H. SHAJAHAN Special Guest - P.V. ABINAV RAJAManaging Director, Ramco Systems Ltd.,FelicitationRtn. Dr. M. RADHA MD.DM., Asst Governor, Zone-11Rtn. PAG. T. MAYIL BALASUBRAMANIANRtn. R. Ananthi, President. Rtn.Dr.N. Karthikeyan,Secretary
உங்களின் உடல், மன ஆரோக்கியத்திற்காக, சர்வதேச யோகா தினத்தில் யோகா கற்றுக் கொள்ள ஓர் வாய்ப்பு.ஞானோதயம் கல்வி அறக்கட்டளை* 21.06.2025 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடத்தும் *ஆரோக்கியமான வாழ்விற்கான யோகா* என்ற தலைப்பில் யோகா பற்றிய அறிமுக வகுப்பு ஆன்லைனில் நடைபெற உள்ளது.கட்டணங்கள் ஏதுமில்லை.இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (கூகுள் பார்மை)https://forms.gle/dRAgtxYTSfwD8mec9Google form பூர்த்தி செய்து whatsapp குரூப்பில் இணைந்தால் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் யோகா வகுப்பில் பங்கேற்கலாம்.WhatsApp group Link https://chat.whatsapp.com/LvatF8EYKLJFqSf3Kd8Ujc
முதலில் வீட்டை சுத்தம் செய்து, முருகப் பெருமானின் படம், விளக்கு உள்ளிட்ட அனைத்தையும் சுத்தம் செய்து விட வேண்டும். வைகாசி விசாக நாளன்று அதிகாலையில் எழுந்து முருகப் பெருமான் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். வேல் அல்லது முருகப் பெருமானின் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அன்றைய தினம் முருகப் பெருமானின் மனம் குளிர குளிர பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும் இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தை பேரு கிட்டும் என்பது நம்பிக்கை.
இராஜபாளையம் மூத்தோர் நலச் சங்கத்தின் சார்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி “ஆபரேசன் சிந்தூர் வெற்றி பேரணி” உரிய அனுமதியுடன் நடைபெற உள்ளது. இன்று மாலை 05:30 மணிக்குநாள்: 17-05-25, சனிக்கிழமை நேரம்: மாலை 05:30 மணிதுவங்கும் இடம் : ஜவஹர் மைதானம் தியாகி P S K சிலை வளாகம்அங்கிருந்து காந்திகலைமன்றம், PSK பார்க், அம்பலப்புளி பஜார் வழியாக மீண்டும் ஜவஹர் மைதானத்தை வந்தடையும்.பேரணி *தேசியக்கொடி* ஏந்தி,கீழ்கண்ட கோஷங்களுடன் நடைபெறும்.1. தேச ஒற்றுமை - ஓங்குக .2. முப்படைகளை - போற்றுவோம்.3. வந்தே மாதரம் - ஜெய் ஹிந்த் !4. பாரத மாதாகி - ஜெய்ஆண்கள் வெள்ளை சட்டையும், பெண்கள் குங்குமம் (மெரூன்) கலர் சேலையும் அணிந்து வந்தால் சீருடை போல் நன்றாக இருக்கும்.கட்டுக்கோப்பாக தேசமே முதன்மை என்ற கோட்பாடுடன் *தேசபக்தி உள்ள அனைத்து பொதுமக்களும்* கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.நம் நகர் முன்னாள் இராணுவ வீரர்கள் வெற்றி பேரணியில் கலந்து கொண்டு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
11.5.2025 ஞாயிறு இரவு முதல் திங்கள் இரவு வரை சித்ரா பெளர்ணமிகடும் வெயில் காலத்தில் குளிர் நிலவுடன் வரும் நாள் சித்திரா பெளர்ணமி அன்றுதான் இந்திர லோக தலைவன் இந்திரன் மதுரை சொக்கரை வழிபட்டு பல வரங்களை பெற்றான் .அழகர் ஆற்றில் இறங்கி மதுரையை சொர்க்கமாக மாற்றும் நாள்.மதுரையின் ஆதி வழிபாடு மட்டுமல்ல தமிழின் ஆதி விழா சித்திரை திருவிழா .கோடிக்கணக்கான உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தன் அவதாரம் நாள்.கணக்கு எழுதுபவரின் பிறந்த நாள் என நமக்கு சூட்சுமமாக சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் ஒளிந்து இருக்கிறதுபூர்வ புண்ணியாதிபதி சூரியன் லக்னத்தில் உச்சம் பெறுகிறார் பேரறிவு கிரகம் லக்னத்தில் இருக்கும் நாள் அறிவுக்கு பலம் கொடுக்கும் நாள் அல்லவா அன்றைய தினம் நம் அறிவுக்கண் பிரகாசம் அடையும் நாள்..மதுரையம்பதியில் சொக்கனை நாளை தரிசிப்பவர்கள் நாளை கிரிவலம் வந்து அண்ணாமலையானை பூசிப்பவர்கள் ,தாமிரபரணியில் குளித்து நெல்லையப்பனை காண்பவர்கள் ,கொடுமுடி மகுடேஸ்வரர் ,பவானி சங்கமேஸ்வரரை ,சென்னை கபாலீஸ்வரனை தரிசிப்பவர்கள் மட்டுமல்லஉங்க வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆற்றிலோ குளத்திலோ குளித்து விட்டு அரச மர வினாயகரை காலையோ மாலையோ தரிசனம் செய்தாலும் பெரும் புண்ணியம்.அதிர்ஷ்டம்.அவர்கள் மூளை திறன் பல மடங்கு பிரகாசிக்க போகிறதுநாளை ஒரு வேளை உணவாவது பசித்தவர்களுக்கு கொடுங்கள் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு பேனா வாங்கி கொடுங்கள்முதியவர்கள் வெயிலில் நொந்து நடந்து செல்பவர்களுக்கு குடையோ செருப்போ வாங்கி கொடுங்கள் ..மாலையில் வீட்டில் தீபம் ஏற்றி ,வழிபடுங்கள் .உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் அம்மன் கோயிலில் சிவன் கோயிலில் அபிசேகத்துக்கு பால் வாங்கி கொடுங்கள்.நீண்டதொலைவில்இருக்கும்கோயிலுக்குசென்றுஅவதிபடாதீர்கள்.முக்கியமாக மிதுனம் ,கன்னி ,தனுசு ,மீனம் ராசியினர் அருகில் இருக்கும் கோயிலில் வழிபடுவதே நல்லது.குலதெய்வம் கோயில் சென்று மாவிளக்கு போட்டு சர்க்கரை பொங்கல் வைத்து சுவாமிக்கு பால் அபிசேகம் செய்து வழிபட்டால் எல்லா கஷ்டமும் தீர்ந்து செல்வ நிலை உயரும்.
மே 1-ம் தேதி கொடியேற்றதுடன், துவங்கிய புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டு விழா. திரளாக அம்மன் அருளைப் பெற மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
வீட்டை உயர்த்திட நாட்டை வளர்த்திட நாளை உருவாக இன்று உழைந்திடும் உன்னதக் கரங்களே..! தொழிலாளர்கள் உங்கள் உழைப்பும் அப்பணிப்புமே நாட்டை கட்டமைக்க உதவுகிறது.உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் உன்னத தோழனே உன்னுடைய நாளில் உங்களை நாங்கள் வணங்குகிறோம்..!
இந்த அட்சய திருதியை நாளில் வாழ்க்கை எப்போதும் ஏராளமான செழிப்பையும் மகிழ்ச்சியை நிறைந்ததாக இருக்க லட்சுமி தேவியின்பூரண அருள் கிடைக்கட்டும். செல்வ வளம் பெற்று, இன்பமுடன் இனிதே வாழ அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்.