25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இன்றைய தினம்

Jan 25, 2026

ரத சப்தமி.

ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் "பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு" என்று கேட்க, " இரு கொண்டுவருகிறேன்" என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள்."ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என கோபித்து சாபமிட்டான்.பிராமணனிரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, "நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று. கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். காலை 6.00 லிருந்து 7.30 க்குள் ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள்' அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும்.. ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Jan 16, 2026

அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

தாய் கூட சில மாதங்கள் தான்  எனக்கு பால் ஊட்டினாள். ஆனால் நான் இருக்கும் வரை எனக்குபால்  கொடுக்கும் நீ, என் தாயினும் சிறந்தவள்.உழவனுக்கு மட்டும் அல்ல, ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான் .மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து,நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும், மனிதனுக்கு பால் கொடுக்கும்பசு மாடுகளை வணங்குவோம்,உழவனுக்கு தோள் கொடுக்கும்எருதுகளை போற்றுவோம்.மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

Jan 15, 2026

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

சூரியனின் ஒளியைப் போல் பொங்கும் பொங்கலை போல், மணக்கும் அறுசுவை கொண்டபொங்கலின் சுவையை போல் ,உங்கள் வாழ்க்கை எப்போதும்,இனிமையுடன் மலரட்டும்,அதிர்ஷ்டத்தின் ஒளியால் வளர்ச்சி காணவும்,அன்பின் காற்றால் வாழ்வின்அமைதியை உணரவும்,கரும்பின் இனிமை போலவே உங்கள் வாழ்க்கை,வயலின் மாறுபட்ட பசுமை போலவே உங்கள் மனம்,தை பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்க்கையில், அனைத்தும் வெற்றியடைய உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

Jan 03, 2026

வைத்தியநாத சுவாமி கோவிலில் இன்று திருவாதிரை திருவிழா !

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இன்று  காலை 10 மணிக்கு 10 அடிஉயர  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதன் பிறகு சந்தன காப்பு அணிவிக்கப்படும்,  வைத்திய நாத சுவாமி கோவில் கோபுரம் ,திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் நிர்வாகத்தினர்  இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 

Jan 01, 2026

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  2026

நிறைந்த வளம். நிறைந்த ஆரோக்கியம் மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.வெற்றிகள், சந்தோஷங்கள் மற்றும் உன்னதமான சாதனைகள் நிரம்பிய ஆண்டாக 2026 அமையட்டும்.

Dec 25, 2025

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

கிறிஸ்துமஸ் உனக்கு உன்னதரை உள்ளங்கள் பறைசாற்ற, நம்பாரம் தீர்த்திடவே பாவங்களை மீட்க வந்த பரமனவன் பிறந்தநாளை, பக்தியோடு ஏற்றிடுவோம் பந்தமென போற்றிடுவோம்.நட்சத்திரங்கள் போல் • உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசட்டும் ,கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

Dec 23, 2025

முன்னாள் பிரதமர்சவுத்ரி  சரண் சிங் பிறந்த தினமான டிச. 23 , தேசிய விவசாயிகள் தினம்.

இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வது விவசாயத்தொழில் உள்ளது.  முன்னாள் பிரதமர் சவுத்ரி  சரண் சிங் விவசாய துறைக்கு பல சட்டங்கள், திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.  அவரது பிறந்த தினமான டிச. 23 மத்திய அரசு சார்பில் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

Dec 03, 2025

'சமூக முன்னேற்றத்தை வளர்ப்பதில், மாற்றுத் திறனாளிகளையும் சமூகத்தில் இணைப்பது' என்பது இந்தாண்டு மையக்கருத்து. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

உலக மக்கள் தொகையில் 16 சதவீதம், 130 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால், பல துறைகளிலும் சாதிக்கின்றனர். இவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுதல், அவர்களுக்கான அடிப்படை உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச.,3ல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.  

Dec 03, 2025

 திருக்கார்த்திகை தினம்

சிவபெருமான் அக்னி வடிவமாக ஆதியும் அற்று அந்தமும் அற்று திருவண்ணாமலையில் உருவெடுத்தாக வரலாறு கூறுகிறது. அதனால் அந்த நாளை ஒவ்வொரு ஆண்டு திருக்கார்த்திகையாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Dec 02, 2025

பரணி தீபத்தை நம் வீட்டில் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, பஞ்ச பூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் 2025 பரணி தீபம் ஏற்ற உகந்த நேரம்.இந்த வருடம் பரணி நட்சத்திரம் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை ஆறு இருபத்து நான்கு மணிக்கு தொடங்கி ,மறுநாள் நான்கு நாற்பத்தி ஏழு மணிக்கு முடிகிறது. முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை அன்று தொடங்குகிறது இந்த தெய்வீக நாள்.இந்த நாளில் மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் ஐந்து விளக்கு ஏற்ற வேண்டும். கட்டாயம் ஐந்து விளக்கு தான் ஏற்ற வேண்டும் வீட்டில்.பாவத்தை போக்கும் பரணி தீபத்தை வீட்டில் ஏற்றும் முறை, அன்று வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் விளக்கும் ஏற்ற வேண்டும். அதோடு தனியாக ஒரு தாம்பாளத்தில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் ,என்பதால் திசை கணக்கு கிடையாது.நம்முடைய வாழ்க்கையில் செய்த சின்னச் சின்ன பாவங்கள் கூட நம்மை விட்டுப் போவதற்காக வேண்டி ஏற்றக்கூடிய தீபம்தான் பரணி தீபமாகும்.கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று (டிசம்பர் 2. 2025) ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம்.எமதர்ம ராஜனுக்கு மிகவும் பிரியமான பரணி நட்சத்திரத்தில் நாம் வாழும் காலமும், வாழ்க்கைக்குப் பிறகும் துன்பம் இல்லாமல் இருப்பதற்காக இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News