சிவராத்திரி என்பது விழா அல்ல.அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிப்பது சரியானது.சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதைபுரிந்து கொள்ளலாம்.அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும்.நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர் .நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும். அலைபாயும் மனதை கட்டுப் படுத்த சிவராத்திரி மகாவிரதத்தை தத்துவம் உணர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
ஆசைகளைவெளிப்படையாக காட்டிக்கொள்ள மாட்டார்கள்அவர்களிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசும் போதுஅவர்களின் ஆசைகள் மற்றும் இலட்சியங்கள் அவர்களின்உணர்வுகளை மதிப்போம் துணை யாய் நிற்போம்.
பத்தாம் திருநாள் 24.02.2024 சனிக்கிழமை (மாசி மாதம் 12ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடு காலை 7.15 7.45 மணிக்குள் கும்ப லக்னத்தில் தீர்த்தவாரி, மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடுமண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா - ஸ்ரீமதி R.நளினா ராமலெக்ஷ்மிஸ்ரீ S.R.ஸ்ரீராம் ராஜா - ஸ்ரீமதி S.சாரதா தீபாபஜன் மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: திரு. S.S. மாடசாமிராஜா அவர்கள் தலைமையில் வாழும் கலை அமைப்பினர்
ஒன்பதாம் திருநாள் 23.02.2024 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 11ம் தேதி) தேர்த்திருவிழாபல்வேறு வாத்யமேள தாளங்களுடன், காலை 6.00 மணிக்கு மேல் கும்ப லக்னத்தில் தேர்த்திருவிழாமண்டகப்படிதாரர்கள் ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்இரவு 7.35 மணிக்கு தேர் உலா பாதையில் வலம் வருதல்.மண்டகப்படிதாரர்கள் ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர்; செல்வன் R.M.பாலு, M.A.M.Phil., மதுரை. மற்றும் குழுவினர்.
எட்டாம் திருநாள்22.02.2024 வியாழக்கிழமை (மாசி மாதம் 10ம் தேதி) தெப்போற்சவம்இரவு 7.00 மணிக்கு திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் தெப்போற்சவம் தொடர்ந்து அம்பாள், ஸ்வாமி குதிரை வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்
ஏழாம் திருநாள்21.02.2024 புதன்கிழமை(மாசி மாதம்09ம் தேதி) திருக்கல்யாணம் துவாதசி திதியும், புனர்பூச நக்ஷத்திரமும், ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில்காலை10.30-11.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப்பல்லாக்குமண்டகப்படிதாரர்கள் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர் : ஸ்ரீ B.V.கணேஷ் (இசை பேராசிரியர், மியூசிக் அகாடமி, சென்னை)
ஆறாம் திருநாள்20.02.2024 செவ்வாய்கிழமை(மாசி மாதம்08ம் தேதி) காலை9.00 மணிக்குமேல் மூலவருக்கு விஷேச108 கலசாபிஷேகம், இரவில் அம்பாள், ஸ்வாமி ரிஷப வாஹனம்.மண்டகப்படிதாரர்கள்: தி ராமராஜு சர்ஜிக்கல் காட்டன் மில் லிமிடெட்வீணை இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: Dr.S.B.பத்மசங்கர் (பேராசிரியர் சத்குரு சமாஜம்) மதுரை.மற்றும் குழுவினர் .
ஐந்தாம் திருநாள்19.02.2024 திங்கள்கிழமை (மாசி மாதம் 07ம் தேதி) இரவில் அம்பாள் கிளி வாஹனம், ஸ்வாமி யானை வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு நிகழ்த்துபவர்: மதுரை செல்வி மீனாக்ஷி ஸ்ரீனிவாசன் மற்றும் குழுவினர்
நான்காம் திருநாள் 18.02.2024 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 06ம் தேதி) இரவில் அம்பாள் அன்னம் வாஹனம், ஸ்வாமி கற்பகவிருக்ஷம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ S.S. ராமச்சந்திர ராஜா - ஸ்ரீமதி R.சிட்டம்மாள் குடும்பத்தினர்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு சின்மயா வித்யாலயாஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவிகள், இராஜபாளையம்.
மாசி மகம் மஹா ப்ரம்மோற்சவம் மூன்றாம் திருநாள்17.02.2024 சனிக்கிழமை ( மாசி 05ம் தேதி )இரவில் அம்பாள் காமதேனு வாஹனம், ஸ்வாமி கைலாச வாஹனம்மண்டகப்படிதாரர்கள் ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா குடும்பத்தினர் (ஸ்ரீ N.K.ராமசுவாமிராஜா, ஸ்ரீமதி N.S.வசந்தா சுப்புராம ராஜா, ஸ்ரீ N.K.ஸ்ரீகண்டன் ராஜா, ஸ்ரீ N.R.K.வெங்கடேஷ் ராஜா. ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா. ஸ்ரீமதி P.S. ரமணியம்மாள்)இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு, P.A.சின்னையராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள்.