25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இன்றைய தினம்

Aug 01, 2023

NATIONAL PAPER DAY

5% காகிதம் விவசாயக் கழிவுகளான கரும்புச்சக்கை, நெல் மற்றும் கோதுமை வைக்கோல் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.காகிதம் தயாரிக்க காடுகள் அழிக்கப்படுவதில்லை. காகிதம் நடப்பட்ட மரங்களில், சமுதாய காடுகளில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.77%காகிதம் சேகரிக்கப்பட்ட பழைய கழிவுக் காகிதத்திலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படுகிறது.சுற்றுப்புற சூழலின் நண்பன். * மக்கும் தன்மை கொண்டது * மறுசுழற்சிக்கு உகந்தது, நிலையானது.புவியின் சுற்றுச்சூழலை பாதுகாத்து காகித பயன்பாட்டை உற்சாகப்படுத்துவோம்.

Jul 29, 2023

சர்வதேச புலிகள் தினம்

புலி இந்தியாவின் தேசிய விலங்கு.உலகில் அழிவின் விளிம்பில் இருக்கும் பல உயிரினங்களில் புலி இனமும் ஒன்று. புலிகளின் எண்ணிக்கை சில நூற்று என்ற கணக்கை எட்டியபோது தான், சர்வதேச புலிகள் தினம் அறிவிக்கப்பட்டு, புலிகளை காக்கும் திட்டம் உருவானது.காடுகளை காக்கும் காவலன் என போற்றப்படும் விலங்கு புலி..புலிகளை காப்பதற்காககடந்த2010ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம்29ம் நாள் சர்வதேச புலிகள் தினம்  அனுசரிக்கப்படுகிறது.2030 இல் உலகத்தில் மொத்தமே 3900 புலிகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.பல ஆண்டுகளாகவே புலிகள் அழிவின் விளிம்பில் இருந்து  பல்வேறு தகவல்களின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. உலக புலிகள் எண்ணிக்கையில் 70% இந்தியாவில் தான் உள்ளன. நம் நாட்டில் 51 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. கடந்த ஆண்டு கணக்கின்படி மத்தியப் பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகத்தில்,524 புலிகளும் தமிழகத்தில்229 புலிகளும் வசிக்கின்றன. மீதமுள்ளவை மற்ற புலிகள் பாதுகாப்பகங்களில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றன.உலகக் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு(WorldWildlifeFund) மற்றும் சர்வதேச புலிகள் பாதுகாப்பு அமைப்பு(GlobalTigerForum) ஆகியவற்றின் தரவுகள்படி உலகளவில் மொத்தம்3,890 புலிகள் வாழ்கின்றனஉணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினம் புலிகள் தான்.9 வகையான புலிகள் இருந்த நிலையில் தற்போது,6 வகையான புலிகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.100 ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. தற்போது வெறும்3,800 புலிகள் மட்டுமே இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் என வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.உலகின் 70 சதவீத புலிகள் இந்தியாவில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். அதிலும் புலிகளின் புகலிடமாக நீடித்து நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலைகள். உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.மனித இனத்தின் அவசியத் தேவையான நீர், தூய்மையான காற்று இவை இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் செழிக்க புலிகள் வேண்டும். அதனால், புலிகளை பாதுகாக்கும் வகையில் சர்வதேச புலிகள் தினத்தை கொண்டாட வேண்டியது அவசியம்.இன்றும் புலிகளை அவற்றின் தோல், நகம், பல் என பலவற்றிற்காக வேட்டையாடும் பல கும்பல்கள் உள்ளன. இவர்களிடமிருந்து இந்த மிருகங்களைக் காக்க பொது மக்களாகிய நாமும் ஒன்றுபட வேண்டும்.  

Jul 18, 2023

தமிழ்நாடு நாள் விழா சூலை 18-யை முன்னிட்டு மாபெரும் மாணவர் பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, சூலை 18 அன்று தமிழ்நாடு நாளாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணி, சிறப்பு புகைப்படக் கண்;காட்சி நடைபெறவுள்ளது.அதன்படி, தமிழ்நாடு நாள் சூலை 18-யை முன்னிட்டு(18.07.2023) விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.அதனைத்தொடர்ந்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாணவர் பேரணி துவக்கி வைக்கப்படவுள்ளது.தொடர்ந்து, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கு திறந்து வைக்கப்படவுள்ளது.எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Jul 15, 2023

தென்னாட்டு காந்தி படிக்காத மேதை கர்மவீரர் பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த காமராஜர் 121 வது பிறந்த தினம் 

காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை15ஆம்தேதி மகனாய் பிறந்தார். தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்தகாரணமாக அவரால்தொடந்துபடிக்கமுடியவில்லை.அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக, அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். காமராஜர் தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்யும் பல தலைவர்கள் உரையாற்றுவதை பார்த்து அவர்களது போராட்ட குணத்தால் ஈர்க்கப்பட்டு 1920ஆம் ஆண்டு தனது16ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில்தன்னைஇணைத்துக்கொண்டார். அன்றுமுதல் அவர் மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எண்று தனது மனதிற்குள் கணக்கு போட்டு அதன்படி நடக்க ஆரம்பித்தார்.மொத்தமாக அவரது வாழ்நாளில்9 ஆண்டுகள் மக்களுக்காக அவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.-1940 விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகி வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தவாறே விருதுநகர் நகரத்தின் நகராட்சி தலைவர் போட்டியில் நின்று வெற்றி கொண்டார்.காங்கிரஸ் கட்சியின் முதன்மை பேச்சாளரும் தலைவருமான சத்தியமூர்த்தியின் மேல் இருந்த மதிப்பின் காரணமாக அவரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். சத்யமூர்த்தியுடன் தனது நல் உறவினை தொடர்ந்தார். சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜரை செயலாளராக நியமித்தார். மத்தியில் காங்கிரஸ் பலமாக இருந்தாலும் தமிழகத்தில் தனது பலத்தினை இழந்தது. இதன் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியினை துறந்தார். மேலும் தனக்கு பதிலாக சுப்பிரமணியம் என்பவரை நிறுத்தினார். ஆனால் சட்டசபையில் காமராசருக்கு இருந்த செல்வாக்கின் அடிப்படியில் ஓட்டெடுப்பில் வென்று1953ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்வர் ஆனார். அமைச்சரவை குழுவினை கூட்டி தமிழக பள்ளி தேர்ச்சி மற்றும் எண்ணிக்கை குறித்து அமைச்சர்களிடம் பேசினார் . அவர்களிடம் ஆலோசித்த பிறகு காமராஜர் ஒரு முடிவுக்கு வந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வர முதலில் நாம் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்த அவர் மதியஉணவு அளித்தால் கண்டிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து மதிய உணவு திட்டத்தினை துவங்கினார்.. தமிழகத்தில் மூடி இருந்த6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். மேலும்17000க்கும் மேற்பட்ட பள்ளிகளை தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு அவரே சென்று திறந்து வைத்தார் தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலை செய்யவேண்டும் என்று தனது முற்போக்கு சிந்தனையில் அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார் . மின்சாரம் மற்றும் நீர்வளதுறைகள் மீதும் நாட்டம் கொண்டிருந்த அவர் அந்தத்துறையிலும் பல வியக்கதகும் திட்டங்களை கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தினார் மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த அவர் பதவியைவிட மக்களின் முன்னேற்றமும் மற்றும் கட்சியின் முன்னேற்றத்தினையும் மனதில் வைத்துக்கொண்டு தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். மக்களுக்காக செய்த மக்கள் தலைவன் காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய72 வது வயதில் காலமானார். எளிமையின் மறுமுகம் காமராஜர்.: ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும் சாகும் வரை அவர் வாடகை வீட்டிலேயே வசித்தார். மேலும் கதர் ஆடையினை மட்டுமே வைத்திருந்தார். மேலும் அவரது வங்கிக்கணக்கில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வைப்புத்தொகை இல்லை. தனக்காக அனைத்தையும் செய்யும் அரசியல் வாதிகளின் மத்தியில் இப்படி ஒரு அரசியல்வாதி ,இப்படி ஒரு தலைவன் கிடைப்பது என்பது மிக அரிதே 

Jul 01, 2023

தேசிய மருத்துவர் தினம்

தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்த மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள் என்றும் இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும் மற்றும் துணை நிற்கும் என்றும் தமிழக முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் ஏற்கனவே தேசிய மருத்துவர் தினத்தில் பிரதமர் மோடி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .

Jun 29, 2023

பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

ஈகை திருநாளான பக்ரீத் தினம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் உங்களிடம் உள்ளதை பகிர்ந்து கூடி வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் நாளாக கொண்டாட படுகிறது. நீங்கள் பிறரின் தேவைகளை பூர்த்தி செய்யும்போது எல்லாம் வல்ல இறைவன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்.நண்பர்களுக்கும், உறவினருக்கும், எளியோருக்கும் உதவி செய்யும் , நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை நினைவூட்டும் நாள். இந்த ஈகை திருநாளில் உங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து உதவுங்கள்..பக்ரீத் நல்வாழ்த்துக்கள்

Jun 05, 2023

உலக சுற்றுச்சூழல் தினம்.

பெட்ரோல் டீசலில் ஓடும் வாகனங்களைவிடஎலெக்ட்ரிக்கில் ஓடும் வாகனங்களால்தான் சுற்றுச்சூழலுக்குப்பெரிய ஆபத்து!’ அந்த உண்மைஇதுதான். எலெக்ட்ரிக்வாகனங்கள் சத்தம் போடாது; இரண்டாவதுவாகனங்களில் புகையே வராது. அட, எக்ஸாஸ்ட் பைப் என்று சொல்லக்கூடிய சைலன்சரே இருக்காதுஇதுகொஞ்சம் வியக்கத்தக்க உண்மை. இது காலங்காலமாகச்சொல்லப்பட்டு வந்தாலும், கான்பூரில் உள்ள IIT (Indian Institute of Technology)–யின் மூலம் லேட்டஸ்ட்டாக நடத்தப்பட்டஓர் ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டடி ரிப்போர்ட்இப்படிச் சொல்கிறது: ‘‘ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களைஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்கள் நாம் நினைப்பதுபோல், எக்கோ ஃப்ரெண்ட்லியான கார்கள் இல்லை!’’இந்தப் படிப்பாராய்ச்சியின்படி, எலெக்ட்ரிக் கார்கள், ஒரு சாதாரண ICE வாகனத்தைவிட (பெட்ரோல்/டீசல் வாகனம்) சுமார் 15-50% எமிஷனைத் தன் வாழ்நாளில் வெளியிடுகிறது.  எலெக்ட்ரிக் வாகனங்கள் 15 – 60% அதிகமாக இருக்கிறதாம் சாதா ICE வாகனங்களைவிட! ‘‘உண்மைதான்; நாம் நினைப்பதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்கள்,ICE வாகனங்களை ஒப்பிடும்போது நல்லஎக்கோ ஃப்ரெண்ட்லி கார்கிடையாது. பொதுவாக, நாம்வாகனம் ஓடும்போது வெளியிடப்படும் நச்சுப்புகையை மட்டும் கணக்கிடுகிறோம்.TPE(TailpipeEmission)படி… அதாவது,எக்ஸாஸ்ட் புகையை மட்டும்வைத்துக் கணக்கிட்டால்,ICE வாகனங்கள் புகையை உமிழ்வது உண்மைதான். ஆனால், அந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க நாம்எவ்வளவு நச்சுப்புகையை வெளியிடுகிறோம் தெரியுமா?எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எது முக்கியம்? லித்தியம் அயன் பேட்டரி! அந்த Li பேட்டரிக்கு முக்கியமான 3 மூலப்பொருட்கள்  லித்தியம், கோபால்ட், மாங்கனீசு (Lithium, Cobalt, Manganese). ஒருஎலெக்ட்ரிக் வாகனத்துக்குப் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியில் சுமார் 8 கிலோ லித்தியம்,14 கிலோ கோபால்ட் மற்றும்20 கிலோ மாங்கனீசு இருக்கும். இவை தயாரிப்பதற்கு நீர் மற்றும் மண்வளம் நாம் நினைப்பதைவிட அதிகமான அளவில் மாசுபடும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது மண் அரிப்பையும் ஏற்படுத்தி, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் காலி செய்யும் என்பதும் உண்மை.என்ன தீர்வு என்றால்,இந்த கான்பூர்IIT ஆய்வில்,அதற்கு ஒரு வழிசொல்லியிருக்கிறார்கள்.அதாவது, ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இதற்கு நல்லதீர்வு என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 5ல் உலக வகை சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாசுபாடு நமது நிலம், நீர், காற்றை மாசுபடுத்துகிறது. பருவநிலை மாற்றம் சொ காரணமாக வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளது. நவீன வளர்ச்சி என்ற பெயரில் அதிகரித்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு காரணமாக பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. இந்தாண்டு மையக்கருத்தாக   'பிளாஸ்டிக் மாசுவுக்கு தீர்வு' என்பது.

May 01, 2023

 மே 1 தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள்(

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள்(LabourDay அல்லதுLaborDay) என்பது உலகம் முழுவதும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன.

Apr 22, 2023

அட்சய திருதியை

ஒரு முறை காசியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையில் வாடினர். உண்பதற்கு வழியில்லாமல் பல உயிர்கள் செத்து மடிந்தன. பிரம்ம கபாலத்தை நிரப்பினால்தான் அந்தப் பஞ்சம் தீரும் என்பதால், சிவன் பிரம்ம கபாலத்தை எந்தியவராய் பிட்ஷாடன மூர்த்தியாய் திரிந்து கொண்டிருந்தார். அவரது கையிலிருந்த கபாலம் யார் வந்து என்ன பிட்சையிட்டாலும் நிரம்பவேயில்லை. அப்போது பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாள்.தன்னுடைய அட்சயப் பாத்திரத்திலிருந்து அள்ள அள்ளக் குறையாமல் அனைவருக்கும் அன்னத்தை வாரி வழங்கி அனைவரின் பசிப்பிணி தீர்த்தாள்.சிவனார் கையிலிருந்த பிரும்ம கபாலம் நிரம்பும் அளவுக்கு அதில் உணவினை இட்டாள். அதன் பிறகே அது இறைவனின் திருக்கரத்தில் இருந்து நீங்கியது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னபூரணி தேவி அவதரித்ததும் அட்சய திருதியை நாளில்தான்,அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூரணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத்தொடங்கி, தினமும் 108 முறை சொல்லலாம்.அட்சய திருதியை அன்றைக்கு, முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரிசிதான் முனை முறியாத அரிசி.கல் உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள் வாங்கலாம். மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி. வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி எழுதுகோல் லட்சுமி படம், அடுப்பு பணப்பெட்டி மணிபரஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய் மஞ்சள்,குங்குமம் போன்றவற்றை, வசதிக்கேற்ப புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, ததும் வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி பூஜையில் வைத்து வணங்கலாம்.அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்றும்,மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரா மணந்தார் என்றும், புராணங்கள் சொல்கின்றன.அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு [பொன்னனர் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மணம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய  தினத்தில் இருந்து வளரத்  தொடங்கினார்.

Apr 13, 2023

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரை, தமிழ் மாதத்தின் முதல் நாள் திருவிழா நிகழும் போது வருஷ பிறப்பு என்றும் அழைக்கப்படுகிறது.பிரம்மதேவனால் பிரபஞ்சம் உருவான நாளாக புத்தாண்டு தமிழ் சமூகத்தினரிடையே கொண்டாடப்படுகிறது. அதேசமயம்,'நல்லிணக்கத்தின் இளவரசர்' இந்திரதேவ், அமைதி மற்றும் மனநிறைவை உறுதிப்படுத்த இந்த நாளில் பூமிக்கு விஜயம் செய்தார் என்றும் சிலர் நம்புகிறார்கள். எனவே, இந்த நாள் ஆண்டின் மிகவும் சாதகமான மற்றும் குறிப்பிடத்தக்க நாளாகக் கருதப்படுகிறது. தமிழ் புத்தாண்டு அன்று, சூரியனின் நிலை தெற்கு மற்றும் வடக்கு அரைக்கோளத்திற்கு இடையில் பூமியின் நடுவில் இருக்கும். இது மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமநிலையை குறிக்கிறது.மக்கள் தங்களுடைய வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பொடித்த அரிசி மாவால் செய்யப்பட்ட'கோலம்' மூலம் அழகுபடுத்துகிறார்கள். இந்த ரங்கோலி அல்லது கோலத்தின் நடுவில்'குத்துவிளக்கு' என்று அழைக்கப்படும் ஒரு விளக்கு வைக்கப்படுகிறது, இது ஒருவரின் வாழ்க்கையில் இருளை அகற்றுவதைக் குறிக்கிறது.இந்த புனித நாளில் மக்கள் சைவ உணவை உண்கின்றனர். மாங்காய் பச்சடி(வெல்லம், மிளகாய், வேப்பிலை, உப்பு, பூக்கள் மற்றும் புளி ஆகியவற்றின் கலவை), அப்பளம், பாயாசம், தேங்காய்ப்பால், பருப்பு வடை, அவியல், தயிர், வேப்பம் பூ ரசம் போன்ற மற்ற சுவையான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன.பெரியவர்களின் ஆசீர்வாதமாக குழந்தைகளுக்கு பரிசுகளும் பணமும் வழங்கப்படுகிறது.பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று தெய்வங்களை வணங்குவதன் மூலம் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். ஒரு சில தமிழ் குடும்பங்கள் தங்கள் முன்னோர்களின் உயிர் பிரிந்தவர்களின் இரட்சிப்புக்காக'தர்ப்பணம்' போன்ற புனித சடங்குகளை செய்கின்றனர்.தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News