25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இன்றைய தினம்

Sep 05, 2025

தேசிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

மாணவர்களுக்கு கல்வி, நற்பண்புகளை கற்றுத்தரும் ஆசிரியர் பணி கடவுளுக்கு இணையானது என போற்றப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது. தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணன், ஆசிரியர் பணியில் ஈடுபாடு கொண்டவர். அவரது பிறந்த தினமான செப்.5, இந்தியாவில் தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

Aug 27, 2025

விநாயகர் சதுர்த்தி  வழிபாட்டிற்கான சுப முகூர்த்த நேரம்..

 விநாயகர் சதுர்த்தி வழிபாடு ஆகஸ்ட் 26ம் தேதியா? ஆகஸ்ட் 27ம் தேதியா?தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதர்த்தி வழிபாடு மட்டுமே சந்திர உதய்த்தை அடிப்படையாக வைத்து வழிபட வேண்டியதாகும். வளர்பிறை சதுர்த்தி வழிபாடு என்பது சதுர்த்தி திதியை அடிப்படையாக வைத்து செய்யப்படும் வழிபாடு ஆகும். அதனால் ஆகஸ்ட் 27ம் தேதி தான் சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி உள்ளது.ஆகஸ்ட் 26ம் தேதி பிற்பகலுக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்குகிறது. இதனால் ஆகஸ்ட் 27ம் தேதியை தான் விநாயகர் சதுர்த்தியாக கணக்கில் எடுத்துக் கொண்டு வழிபட வேண்டும்.ஆகஸ்ட் 27ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 01.40 வரை  எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினைசெய்யலாம். இதுவே விநாயகர் சதுர்த்தி   வழிபாட்டிற்கான சுபமுகூர்த்தநேரமாக  குறிப்பிடப்படுகிறது.

Aug 23, 2025

தேசிய விண்வெளி தினம்.

இந்தியாவின் 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பிய 'சந்திரயான் 3' விண்கலத்தின் லேண்டர்,  2023 ஆக. 23ல் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இப்பகுதியில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியது. ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பின் நிலவில் இச்சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக  பிரதமர் மோடி இந்நாள் (ஆக.23) தேசிய விண்வெளி தினமாக கடைபிடிக்கப் படும் என 2023ல் அறிவித்தார். 

Aug 20, 2025

கொசு ஒழிப்பு தினம் ( 20.08.2025)

மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் மலேரியா, டெங்கு உள்பட பல நோய்களுக்கு  உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசுக்களே காரணம். 'பிளாஸ்மோடியம்' ஒட்டுண்ணி 'அனாபெலஸ்' பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இது ஒரு வரை கடிப்பதன் மூலம் தான் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் உண்மையை பிரிட்டன் டாக்டர் ரொனால்டு ரோஸ் 1897 ஆக., 20ல் கண்டுபிடித்து, 1902ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நாள் உலக கொசு ஒழிப்பு தினமாக' கடைபிடிக்கப் படுகிறது.

Aug 16, 2025

கிருஷ்ண ஜென்மாஷ்டமி

மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தைபோற்றும் விதமாககொண்டாடப்படுவதே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகும்.இது மக்களுக்கு கலாச்சாரம்,ஒற்றுமை,தெய்வீக குணங்கள்ஆகியவற்றை கற்றுத்தரும் விதமாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, ரோகிணி அஷ்டமிஉள்ளிட்ட பலபெயர்களால் இந்தபண்டிகை உலகம்முழுவதிலும் உள்ளமக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

Aug 15, 2025

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

பல வண்ணங்கள், வடிவங்கள் உணர்வுகள், மொழிகள் ஆகியவை உள்ளன. எனினும், அனைத்து இந்தியர்கள் ஒன்று!சுதந்திர பூமியில் நாம் சுவாசிப்பதற்கு தங்கள் சுவாசங்களை இழந்த தியாகிகள் அனைவருக்கும் நன்றி செலுத்துவோம் இந்த நன்னாளில்.தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Aug 08, 2025

வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்

வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள். மஹாலட்சுமி தாயாரை போற்றி வணங்கி அனைத்து செல்வ வளங்களையும் பெறுவோம். 

Jul 30, 2025

சர்வதேச நண்பர்கள் தினம் .

அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  இன்பம், துன்பம் என அனைத்து சூழல்களிலும் துணையாக இருப்பவர்களே உண்மையான நண்பர்கள். அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு 'நண்பர்கள்'. மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வுசெய்யக்கூடியது. பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில், வெவ்வேறு தேதியில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Jul 29, 2025

காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்தும் புலிகள்.

உலகில் வாழும் புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் உள்ளன. அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரிஜூலை 29ல்உலகபுலிகள்தினம்கடைபிடிக்கப்படுகிறது.இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம், பூடான், நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா, சீனா, தைவான், லாவோஸ், ரஷ்யா என 13 நாடுகளில் புலிகள் வாழ்கின்றன. புலிகள், தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது. காடுகளில் உற்பத்தியாகும் நதிகளையும் பாதுகாக்கிறது. இயற்கையை பாதுகாக்கும் புலிகளை பாதுகாக்கஉலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Jul 28, 2025

ஸ்ரீவில்லிபுத்துார்ஆண்டாள்கோயிலில்இன்றுஆடிப்பூரதேரோட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்(ஜூலை 28) காலை 9:10 மணிக்கு துவங்க இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்க நாதர், மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து நேற்று பட்டு, மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்  கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்களைகோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல மங்களப் பொருட்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News