25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இன்றைய தினம்

Aug 25, 2024

கோகுலாஷ்டமி

கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது.மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள். கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின்அருள்100சதவீதம்அதிகரிப்பதாகபக்தர்கள்நம்புகிறார்கள்.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும். கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் – சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை..கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும். கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

Aug 14, 2024

இந்திய சுதந்திர தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினம், 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று சுதந்திர நாடாக மாறிய வரலாற்று தருணத்தை இந்த நாள் குறிக்கிறது. இந்தியாவில் ஒரு முக்கிய தேசியவிழாவாகும்1947 ஆகஸ்ட் 15 அன்றுநாடுசுதந்திரமாகஅறிவிக்கப்பட்டது.பிரிட்டிஷ்ஆட்சியாளர்களிடமிருந்து இந்தியாவிற்கு கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்15ம்தேதி சுதந்திரம் கிடைத்தது.இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்து அதன் பொறுப்பை கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தது. அவர் 1947-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி அதற்கான திட்டத்தை வெளியிட்டார். திருப்பூர் குமரன், பாரதியார், வ. உ.சி, பழசிராஜா, கட்டபொம்மன், திப்பு சுல்தான், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என்று ஏராளமான தென்னிந்திய போராளிகளும் தியாகிகளும் தான் சுதந்திரம் வாங்கபோராடினார்கள். வாங்கித் தந்தார்கள்..மகாத்மா காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் தொடர்ந்தது மகாத்மா காந்தி அகிம்சை வழி நாடு முழுவதும் வேகமாக பரவி அனைவரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட முன் வந்தனர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு டெல்லியில் செங்கோட்டையில் லகோரி கேட் மீது இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திரத்திற்காக சுதந்திர வீரர்கள் தங்களது உயிர்களை தியாகம் செய்தனர். அவர்களுடைய நினைவாகவே ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் குமரன், பாரதியார், வ. உ.சி, பழசிராஜா, கட்டபொம்மன், திப்பு சுல்தான், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் என்று ஏராளமான தென்னிந்திய போராளிகளும் தியாகிகளும் தான் சுதந்திரம் வாங்கபோராடினார்கள். வாங்கித் தந்தார்கள்இந்தியசுதந்திர தின விழா உற்சாகமாக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியாவின் தேசிய கொடி உயரமாக உயர்த்தப்பட்டு பெருமை மற்றும் தேசபக்தியுடன் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். சுதந்திர தினத்தன்று பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அரசு அலுவலகங்களில் நாடக நடனங்கள், கலாச்சார நிகழ்வு மற்றும் நடனம், இசை போன்றவை ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் தேசியக்கொடி கொண்டு அலங்கரித்து மக்கள் தங்களது சுதந்திர தின விழாவை கொண்டாடுகின்றனர். அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி, அரசுஅலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நடன நிகழ்ச்சி கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.சுதந்திர தினத்தன்று மாநில தலைநகரங்களில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது, அதில் பிரதமர் பங்கேற்று கொடியேற்ற விழா நடந்த பிறகு ஆயுதப்படை மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தப்படும், ஆண்டின் இந்தியாவில் முக்கிய சாதனைகள் குறித்தும் எதிர்கால சவால்கள் மற்றும் இலக்குகள் போன்றவற்றைக் குறித்து பேசப்படுகின்றது.

Aug 09, 2024

இராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமி ராஜா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கலந்துரையாடல் விழா,

நாள்: 10.08.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிஇடம் : பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியம், இராஜபாளையம்.தலைமைஉயர்திரு.P.R.வெங்கட்ராமராஜாதலைவர், ராம்கோ குழுமம், ராஜபாளையம்சிறப்பு விருந்தினர்கள்:டாக்டர் நித்தியானந்தன் தேவராஜ் CEO/ நிர்வாக இயக்குனர், A Voith Group நிறுவனம், கோயம்புத்தூர்.திரு.A.சண்முகவேலாயுதன்,நிறுவனர்- I.P.L. தயாரிப்புகள், சென்னை (1967 பேட்ச் மெக். முன்னாள் மாணவர்)முன்னாள் மாணவ, மாணவியர்கள் அனைவரும் வந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்...திரு.பி.சந்திரசேகர் ராஜா தலைவர், முன்னாள் மாணவர் சங்கம்திரு.K.R.சுரேந்திர ராஜா தலைவர், முன்னாள் மாணவர் சங்கம் மத்திய கிழக்கு நாடுகள், மஸ்கட்திரு .S .ரவிசங்கர் செயலாளர், முன்னாள் மாணவர் சங்கம்எஸ்.சிவக்குமார் துணைத்தலைவர்பி.ராஜ்குமார் துணைத்தலைவர்பி.ரகுபதி பொருளாளர்

Aug 06, 2024

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் தேரோட்டம்

அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் திருத்தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.எம்.மான்ராஜ் அவர்கள்  மற்றும்திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பி.ஆர்.வெங்கட்ராமராஜா(சேர்மன்- ராம்கோ குழுமம்)ஆகியோர் திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.இவ்விழா.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் வீதி உலா வந்தது.ஆடிப்பூரத்தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன்,திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.தங்கம் ரவிக்கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.கு.ஆறுமுகம், திருக்கோவில் செயல் அலுவலர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Apr 30, 2024

தொழிலாளர்களின் உழைப்பு தான் இந்த உலகம் நின்றுவிடமால் சுழல வைக்கிறது.

உழைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம்1ம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.ஏன் மே1ம் தேதி உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது என்று கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியாதுமே தினமும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் தவறாக எண்ணிவிடக்கூடாது. உழைப்பாளர்கள் முற்காலத்தில்12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில்20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம் ஆகும்..முன்பு உள்ள மக்கள் ஓய்வில்லமால்தொடர்ந்துவேலை பார்த்துகொண்டே இருந்தார்கள் .அவர்களின்உழைப்பிற்குஏற்ற ஊதியமும்கிடைக்கவில்லை. 1886 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரத்தில்2.5 லட்சம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், மில்வாக்கி, பிலடெல்பியா, சின்சினாட்டி, பிட்ஸ்பர்க், பால்டிமோர், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும்3.5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது.இதை எதிர்த்து சிகாகோ நகரத்தில்1886ம் ஆண்டு மே1ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றதன் அடையாளமே தொழிலாளர் தினம் உருவானதற்கு காரணமாக இருந்தது.தொழிலாளர்களின் துன்பத்தை கண்டறிந்து,முதலாளிகள் தங்களதுஉழைப்பை சுரண்டுகின்றனர் என்பதைஅறிந்து உலகதொழிலாளர்கள் அனைவரும்ஒன்றுசேர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டனர்.உழைப்பாளர்கள் ஒன்று சேர்வதற்கு அடிக்கல் நாட்டியவர் காரல் மார்க்ஸ்.உழைப்பு இல்லாமல் எந்த ஒரு பொருளும் உருவாகாது என்பதை உணர்ந்தும், ஆனால் இங்கு தொழிலாளர்கள் ஐந்தறிவு ஜீவன்களை விட கீழ்த்தரமான நிலையில் நடத்தப்படுகிறார்கள் என்றும் நினைத்தனர்.  முக்கிய கோரிக்கை தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரம் என்பது தான். இந்த கோரிக்கை 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி நடைபெற்றது.தொழிலாளர்களின் இந்த போராட்டத்தை தாங்க முடியாமால் அரசு1890ம் ஆண்டு ஏற்று8 மணி நேர வேலைக்கு ஒத்துக்கொண்டது. இதன் விளைவாக உருவானது தான் தொழிலாளர் தினம்.தற்போது80நாடுகளுக்குமேல்இந்ததினத்தைகொண்டாடிவருகின்றனர். இந்தியாவில்முதன் முதலில்1923ம் ஆண்டும.சிங்காரவேலர் என்பவர்மெரினா கடற்கரையில் செங்கொடியைஏற்றி கொண்டாடினார்.இந்த நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் உழைப்பாளிகள் சிலை எழுப்பப்பட்டது, இது 1959-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. மேலும் சென்னையில் உள்ள நேப்பியர் பூங்கா1990ம் ஆண்டு மே தினப் பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொழிலாளர்களின் உழைப்பு தான் இந்த உலகம் நின்றுவிடமால் சுழல வைக்கிறது. 

Apr 22, 2024

சித்திரா பௌர்ணமியன்று நமது பாவ, புண்ணிய கணக்கு  சித்திரகுப்தரால் எழுதப்படுகிறது

சித்திரா பௌர்ணமியன்று சித்திரகுப்தனை வழிபட்டால் அவர் நம் பாவ கணக்குகளைக் குறைத்து, புண்ணிய கணக்குகளை அதிகமாக்குவார் என்றும் ஒரு நம்பிக்கை இருப்பதால் சித்திரா பௌர்ணமியன்று பெருமாள், சிவன், அம்பிகை போன்ற தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதோடு, சித்திரகுப்தனுக்கும் வழிபாடு செய்கிறார்கள். சித்திரா பௌர்ணமி சித்திரகுப்தனின் பிறந்த நாள் என்று ஒரு சாராரும், அவருடைய திருமண நாள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.மரணத்திற்கு அதிபதி கடவுளான யமதர்மராஜாவுக்கும் ஒரு சமயம் சிக்கல் ஒன்று நேர்ந்தது. தான் யாருடைய உயிரை பறிக்க வேண்டுமோ அவர்களைப் பற்றிய முழு விவரங்களைப் பற்றி தெளிவான கருத்துகள் இல்லாத தனது தர்மசங்கடத்தைஸ்ரீ பிரம்மாவிடம் இவர் முறையிடுகிறார். அச்சமயம் அங்கு தோன்றும்  சிவபெருமான் சித்திரகுப்தனை அப்பணிக்கு அமர்த்துகிறார்.  சித்திரகுப்தரும் வெகு சிரத்தையாக மானிடர்கள் பிறந்த காலம் முதல் இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்து பாவ, புண்ணிய காரியங்களையும் 'ஆகாஷிக் குறிப்புகள்'  ஒரு பதிவேட்டில் பதிவு செய்கிறார். இவரது ஒரு கையில் மையினை உடைய ஒரு கிண்ணமும் மறு கையில் சிறகால் ஆன எழுதுகோலும் இருக்கும். சித்திரா பௌர்ணமியன்று இவர் இந்தக் கணக்கை யமதர்மராஜாவிடம் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து கணக்குகளையும் முறையாக எழுதி பராமரித்து வருபவர் சித்திரகுப்தர்தான் என்பது இந்து சமய நம்பிக்கை. ஒருவருடைய இறப்புக்குப் பிறகு இந்தக் கணக்கு வழக்குகளைப் பொறுத்தே அவரவருக்கு சொர்க்கமோ நரகமோ அமையும் என்பது இந்துக்களின் உறுதியான நம்பிக்கையாகும்.சித்திரா பௌர்ணமியன்று, "சித்திரகுப்தன் இன்றைக்கு நம்மோட பாவ, புண்ணிய கணக்கை எழுதி யம தர்மராஜா கிட்ட கொடுக்கிற நாள்.  இன்னிக்கு சேட்டை எதுவும் செய்யாம ஒழுக்கமா  ஜாக்கிரதையா இருங்க. ஒரு ஈ, எறும்பைக் கூட கொல்லக் கூடாது!" என்று வீட்டில்  பெரியோர்கள் எச்சரிப்பதை சின்ன வயதிலேயே நாம் கேட்டிருக்கிறோம்.இன்று உப்பில்லாத விரதம் அனுசரித்து சித்திரகுப்தனை வழிபடுவார்கள். இன்று எருமைப் பாலில் செய்த பாயசம் சிறப்பான நைவேத்தியமாகும்."நாங்கள் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் கணக்கில் எடுத்துக்கொள்!" என்று சித்திரகுப்தரிடம் இறைஞ்சி வழிபடுகின்றனர்.சித்திரகுப்தருக்கு தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் தனிக்கோயில் உள்ளது. அதேபோல, தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திரபுத்திர நாயனார் என்னும் பெயருடன் கோயில் அமைந்துள்ளது. இதைத்தவிர, திருவண்ணாமலை அருணாசலேஸ்வார் கோயிலில் இவருக்கு ஒரு தனி சன்னிதி உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் நுழைவு வாயில் அருகே உள்ள பிராகாரத்தில் இவர் ஒரு தூணில் காட்சியளிக்கிறார்.சித்திரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலமும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. இன்று சித்திரா பௌர்ணமி ஆகும். இன்று கிரிவலம் வருபவர்கள் ஈசனின் அருளோடு, சித்திரகுப்தரின் கருணையையும் பெற்று சிறக்கலாம்.

Apr 13, 2024

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 தமிழ் புத்தாண்டு சந்தோசத்திற்கும்,கொண்டாட்டதிற்கு மான தருணம் இதுகுடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்குமிகுந்த சந்தோசங்களையும்,வளங்களையும் கொண்டு வர வாழ்த்துகிறேன்.

Apr 10, 2024

ரம்ஜான் வாழ்த்துக்கள்

மழையும் வெயிலும்மண்ணுக்கு வேண்டும்ஈகையும் நட்பும்மனிதனுக்கு வேண்டும்இந்நன்னாளில் உங்கள்எல்லா துன்பங்களும்கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்கஇனிய ரமலான் வாழ்த்துக்கள்

Apr 08, 2024

"யுகாதி"கொண்டாட்டம்

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.உகாதி என்கிற சொல் சமசுகிருதம் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமசுகிருதத்தில்"யுக" என்ற சொல்லுக்கு வயது என்றும்,"அடி" என்ற சொல்லுக்கு தொடக்கம் என்கிற பொருள் கணப்படுகிறது."ஓர் ஆண்டின் தொடக்கம்" என்கிற பொருளில்"உகாதி" என்கிற சொல் வந்துள்ளதைக் காணலாம்.உகாதி சித்திரை மாதத்தின் சுத்த பாட்டிமை தினத்தில் வருகிறது. பெரும்பாலும், இப் பண்டிகை, ஆங்கில நாட்காட்டியின் படி, மார்ச்சு மாதக் கடைசியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வருகிறது.கர்நாடக மாநிலத்தில் இது "யுகாதி" என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் "உகாதி" என்றும் அழைக்கப்படுகிறதுதமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதனால், இப் பச்சடியில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள் கலந்துள்ளன. இது, வருகிற புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறதுமகாராட்டிரம் மாநில இந்துக்களால் இந்த நாள் குடீ பாடவா என்று கொண்டாடப்படுகிறது. .சிந்து மாகாணம், சிந்தி இன மக்கள் இதனை சேட்டி சந்த் என்று கொண்டாடுகிறார்கள்மணிப்பூர் வாழ் மக்கள் இதனை "சாஜிபு நொங்மா பன்பா" எனக் கொண்டாடுகின்றனர்.பாலி மற்றும் இந்தோனேசியா வாழ் இந்துக்கள் இதனை நைபி என்று கொண்டாடுகின்றனர்.

Apr 07, 2024

85வது பிறந்தநாள் அஞ்சலி திரு.க.வீ.அழ.ராம.மு.ராம.முத்தையா செட்டியார்

சின்னய்யா அழகப்பர் சிறுவிழிகள் மலர்ந்த தினம் சகலகலாவல்லித் தாய் பன்னெடும் நாள் புரிந்த தவம் முன்னவர் வழிபாட்டால் முந்தி வந்த மூலதனம் முளைத்தெழுந்த தாமரையாய் முகம் காட்டி மலர்ந்த தினம் விளைவிக்க கல்விப்பயிர் விவசாயி ஜனித்த தினம் சளைக்காமல் அள்ளியிட சூரியனார் உதித்த தினம் மழையாகத் தனம் பொழிய மனை தவழ்ந்த மன்னரினம் மகத்தான கல்வித்தாய் மகவொன்றை ஈன்ற தினம் துளைத்திடும் நோவுக்கே தனை ஈந்த வள்ளலினம்.byவள்ளி முத்தையா 

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News