வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.. சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக். பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார். `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.. ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது. வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.`பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
கோயில்கள் இல்லாத நாடு -சௌதி அரேபியா இரவே இல்லாத நாடு. நார்வேஇராணுவம் இல்லாத நாடு- ஐஸ்லாந்துதென்கிழக்கு ஆசியாவின் அரசி தாய்லாந்துமூன்றாம் துருவம் - திபெத்நாடாளுமன்றம் மட்டும் அரசியலைமைப்பை திருத்த முடியும்.
.உலகின் உயரமான 50 மலைச் சிகரங்கள் ஆசியாவிலேயே அமைந்துள்ளன.மிளகின் காரத்தையும், தரத்தையும் அளவிட உதவுவது, எஸ்.ஹெச்.யூ. (Scoville Heat Units) என்ற அளவீடு. இதனை கண்டறிந்தவர் அமெரிக்க விஞ்ஞானியான ஸ்கோவில்லே..உலகிலுள்ள 70 சதவிகித பொம்மை களின் பிரம்மா சீனாதான்..மின்னல் வேகத்தில் வேட்டையாடும் சிறுத்தைகளால், பகலில் 5 கி.மீ தூரம் வரை பார்க்க முடியும். இதன் உச்ச பாய்ச்சல் வேகம் ஒரு மணிநேரத்திற்கு 121 கி.மீ..யானைக்கு 4 பற்கள் உண்டு, அதன் மேல் தாடையிலுள்ள வெட்டுப் பற்களே தந்தமாக வளர்ச்சி பெறுகிறது.உலகில் ஏறக்குறைய 50 சதவீத உடைகள் பருத்தியிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.ஐரோப்பிய அழகுப்பொருள் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் 38 ஆயிரம் விலங்குகளிடம் தங்கள் தயாரிப்புகளைப் பரிசோதிக்கிறா ர்கள். அதற்கு பிறகுதான் விற்பனைக்கு வருகிறது.ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் (பிளாஸ்டிக் அல்லது டெட்ராபேக் பானம்) தயாரிக்க குறைந்தது 5 கிளாஸ் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது..
. ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல். நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர். ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.
கண்ணாடிப் பாத்திரங்களை முதன் முதலில் செய்தவர்கள் மெசபடோமியர்கள்.தமிழகத்தில் பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி.இந்திய பட்டுக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்த ரோமானிய அரசர் ரோம அரசர் ஆரிலியன்.பாரசீகம் என்பது ஈரான் நாட்டைக் குறிக்கிறது.பழைய கற்காலத்தில் ஆதி மனிதன் சிக்கிமுக்கி கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்மென்புலம் நன்செய் என்று அழைக்கப்பட்ட சங்ககால நிலப்பகுதி மருத நிலம்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பி.டி. உஷா.இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? விடை: டேவிட் ஜசன் ஹோவர்.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது? விடை: வேளாண்மை.மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம்: ஆந்திரப்பிரதேசம்.ஈராக் நாட்டின் தலைநகரம் விடை: பாக்தாக்.தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் ஏற்காட்டில் அமைந்துள்ளது . இந்தியாவில் ஒரேயொரு கிராமத்தில் மட்டும் அனைத்து வீடுகளுக்கும் இண்டர்நெட், இ-மெயில் ஐடி வசதி பெறப்பட்டுள்ளது. அந்த கிராமம் பலாஹி (பஞ்சாப்)இந்தியாவில் முதல் மருத்துவக் கல்லூரி 1835, சென்னையில் தொடங்கப்பட்டது இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் நாளந்தா பல்கலைக்கழகம்.
ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் உயிரினம் வரிக்குதிரைஇரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீசிப்பி யில் முத்து உருவாக எத்தனை ஆண்டுகள் 15 ஆண்டுஇந்தியாவில் அதிக நூலகங்கள்உள்ள மாநிலம் கேரளாX-கதிர்களின் மின்னூட்டம் ஓரலகு எதிர் மின்னூட்டம்
வானில் எப்போதாவது புகை போல வெள்ளை நிறத்தில் கோடு போட்டுக்கொண்டு விமானம் செல்வதை பார்த்திருப்போம். 'ஜெட்' விமானங்களில் மட்டும் இது போன்று ஏற்படுகிறது.விமானம் பறக்கும்போது மட்டும் வானத்தில் வெள்ளை கோடு தெரியுதே? அது ஏன் தெரியுமா? வானத்தில் எவ்வளவோ விமானங்கள் பறந்தாலும், ஒரு சில விமானங்கள் பறக்கும் போது மட்டும் வானில் வெள்ளை நிறத்தில் புகை போல கோடு தெரிவதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் அது புகை இல்லை.. விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே கிட்ஸ்களும் அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரும் அண்ணாந்து பார்த்து கண் பார்வையில் இருந்து மறையும் வரை விமானத்தை வேடிக்கை பார்க்காமல் இருந்து இருக்கவே மாட்டார்கள். அந்த பழக்கம் தற்போது கூட பல 90 கிட்ஸ்களுக்கும் இருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்து வந்த விமானங்கள் தற்போது மத்திய தர வர்க்கத்தினர் கூட பயணிக்கும் அளவுக்கு வந்து விட்டது. மெட்ரோ நகரங்கள் மட்டும் இன்றி ஓரளவு பெரிய நகரங்களுக்கு கூட தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான சேவையை இன்னும் விரிவுபடுத்தி ,இதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்களுக்கு கூட விமான சேவையை கொண்டு செல்ல உலக அளவில் பல்வேறு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.. என்னதான், விமானம் தற்போது பரிட்சயம் ஆகிவிட்டாலும் இன்னமும் விமானம் மேலே பறந்தால் அண்ணாந்து பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. விமானம் வானத்தில் செல்லும் போது சில சமயங்களில் விமானம் புகை போல ஒரு தடத்தை உருவாக்கி செல்லும் இதை அனைவருமே பார்த்து இருக்கலாம். வானில் பல அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது இப்படி விமானத்திற்கு பின்னால் வால் போல அப்படியே வெள்ளை நிறத்தில் தடத்தை விட்டு செல்லும். சில நிமிடங்கள் கழித்து இது காற்றோடு காற்றாக கலந்து போவதை காண முடியும். எத்தனையோ விமானங்கள் சென்றாலும் சில விமானங்களில் மட்டும் ஏன் புகை போன்று வெளியாகிறது என பலரும் யோசித்து இருக்கக்கூடும். சாதாரண பெட்ரோல் வாகனங்களில் கூட தற்போது புகை வெளியேறுவது கண்ணுக்கு தெரிவது இல்லை. ஆனால், விமானம் இப்படி புகையை கக்கியபடியா செல்ல வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. புகை கிடையாது. உண்மையில் விமானத்தில் இருந்து புகைதான் வெள்ளை நிறத்தில் இப்படி வெளியேறுகிறதா? விமானம் பல அடி உயரத்தில் வானத்தில் சென்று கொண்டு இருக்கும் போது இப்படி விமானத்தின் பின்னால் வால் போல வெள்ளை நிறத்தில் தடம் உருவாவது உண்மையில் புகை கிடையாது. அது வெறும் நீராவிதான்.. நீராவி தான் இப்படி வெள்ளை நிற பட்டையை உருவாக்குகிறதாம். விமானம் காற்றில் இருக்கும் போது, என்ஜின் குறிப்பிட்ட அளவு நீரை உற்பத்தி செய்வதோடு அதை வெளியிடவும் செய்யும். நீராவியாக இந்த நீர் வெளியேற்றப்படும் போது பல அடி உயரத்தில் உள்ள குளிர்ச்சியான காற்றில், இது பரவுகிறது. குளிர்ச்சியான இடத்தில் வெளியேறும் இந்த நீராவி அப்படியே உறைந்து வளிமண்டலத்தில் ஒடுங்கும். ஈரப்பதம் இல்லாவிட்டால்: இதுவே விமானத்தின் பின்பகுதியில் நீளமான வெள்ளை மேகங்களாக காட்சி அளிக்கிறதாம்.. எது எப்படியோ இவ்வளோ நாளா அது விமானத்தின் புகை என நம்பிக் கொண்டு இருந்த நிலையில் புகைக்கும் அந்த வெள்ளை நிறப்பட்டைக்கும் தொடர்பே இல்லை என்பதே உண்மை.. அது ஜெட் என்ஜின் கொண்ட விமானங்களில் மட்டுமே இந்த நிகழ்வு ஏற்படும். அதேவேளையில் அனைத்து விமானங்களும் இந்த நீராவியை உருவாக்காது. இது வெளிப்புறத்தில் உள்ள வளிமண்டலத்தின் சூழலை பொறுத்தது. காற்று போதுமான குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமாக இருந்தால் மட்டுமே வெள்ளை நிறத்தில் நீராவி பட்டை விமானத்தில் பின்னால் உருவாகும். காற்றில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டால் என்ஜினில் இருந்து துகள்கள் (particles) உறைவது தவிர்க்கப்படும்.ஆனால் இது புகை இல்லை. நீராவி. ஜெட் விமான இன்ஜின் உள்ளே எரிபொருள் எரியும் போது, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஜிசனும் சேர்ந்து நீராவியாக மாறுகிறது. இந்த நீராவி வெளியேற்றப்படுவது தான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது. இப்பகுதியில் ஈரப்பதம் குறைவு எனில் கோடு விரைவில் மறையும். அதிகம் இருந்தால் மறைய நேரம் ஆகும்.
பற்கள் இல்லாத பாலூட்டி எறும்பு தின்னி.நட்சத்திர மீன்களுக்கு எட்டு கண்கள் உள்ளது.மூன்று இதயங்கள் கொண்ட கடல் வாழ் உயிரினம் ஆக்டோபஸ்உலகிலேயே மிகவும் விஷத்தன்மை உடைய மீன் ஸ்டோன் ஃபிஷ். சாணத்தில் இருந்து கிடைக்கும் வாயு மீத்தேன்.
திடப்பொருட்களின் அடர்த்தி ததண்ணீரின்அடர்த்தியைவிட அதிகம் இருப்பதால்,அவை நீரில் இடும்போது மூழ்கிவிடுகின்றன. ஆனால் பனிக்கட்டி வெண்ணெய் போன்ற திடப்பொருள் மூழ்குவதில்லை.இவற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால், இவை மிதக்கின்றன. நீரின் மூலக்கூறு.(எச்2ஓ). இரண்டு ஹைட்ரஜன் அணு, ஒரு ஆக்சிஜன் அணுவால் ஆனது. இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் எலக்ட்ரான்களைச் சமமாக வழங்கி, சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன இதனால் பனிக்கட்டியின் அடர்த்தி குறைகிறது.அமெரிக்காவின்டென்னிஸ்டிட்டோ. 1940 ஆக., 8ல் பிறந்த இவர் ஏரோநாட்டிகல் இன்ஜினியர் தொழிலதிபராக இருந்தவர். இவர் உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி என அழைக்கப்படுகிறார். இவர் 2001 ஏப்., 28ல் ரஷ்யாவின் 'சோயுஜ் டி.எம் 32 விண்கலம் மூலம், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா சென்றார் ஏழு நாட்கள், 22 மணி, 4 நிமிடம் விண்வெளியில் தங்கியிருந்தார். இவர் தன் விண்வெளி பயணத்துக்காக ரூ.137 கோடி பயணக்கட்டணமாக செலுத்தினார் இதன்பின் பலர் சென்றுள்ளனர். ஐந்து பெருங்கடல்களில் பெரியது, ஆழமான பசிபிக் பெருங்கடல். இதன் பரப்பளவு 16.25 கோ சதுர கி.மீ. இதன் சராசரி ஆழம் 14,040 அடி. அதிகபட் ஆழம் 35,797 அடி. பூமியின் மொத்த நீர் பரப்பளவில் 46% இக்கடலில் உள்ளது. இக்கடலுக்கு பெயரிட்டவர் போர்ச்சுக்கலின் மெகல்லன். இவர் 1519ல் ஸ்பெயினில் இருந்து ஐந்து கப்பல்களில் 280 மாலுமிகளுடன் கிழக்கு நோக்கி பயணித்தார். ஒவ்வொரு பகுதியாக கண்டறிந்த இவர், அமெரிக்க கண்டத்துக்கு அப்பால் மேற்கே உள்ள கடலுக்கு 'பசிபிக் கடல்' என பெயர் வைத்தார்.