25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


பொது அறிவுச்சுடர்

Sep 03, 2023

வானில் ஒரு வெள்ளை கோடு

வானில் எப்போதாவது புகை போல வெள்ளை நிறத்தில் கோடு போட்டுக்கொண்டு விமானம் செல்வதை பார்த்திருப்போம். 'ஜெட்' விமானங்களில் மட்டும் இது போன்று ஏற்படுகிறது.விமானம் பறக்கும்போது மட்டும் வானத்தில் வெள்ளை கோடு தெரியுதே? அது ஏன் தெரியுமா?  வானத்தில் எவ்வளவோ விமானங்கள் பறந்தாலும், ஒரு சில விமானங்கள் பறக்கும் போது மட்டும் வானில் வெள்ளை நிறத்தில் புகை போல கோடு தெரிவதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையில் அது புகை இல்லை.. விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே கிட்ஸ்களும் அவர்களுக்கு முந்தைய தலைமுறையினரும் அண்ணாந்து பார்த்து கண் பார்வையில் இருந்து மறையும் வரை விமானத்தை வேடிக்கை பார்க்காமல் இருந்து இருக்கவே மாட்டார்கள். அந்த பழக்கம் தற்போது கூட பல 90 கிட்ஸ்களுக்கும் இருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்து வந்த விமானங்கள் தற்போது மத்திய தர வர்க்கத்தினர் கூட பயணிக்கும் அளவுக்கு வந்து விட்டது. மெட்ரோ நகரங்கள் மட்டும் இன்றி ஓரளவு பெரிய நகரங்களுக்கு கூட தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான சேவையை இன்னும் விரிவுபடுத்தி ,இதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்களுக்கு கூட விமான சேவையை கொண்டு செல்ல உலக அளவில் பல்வேறு நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன.. என்னதான், விமானம் தற்போது பரிட்சயம் ஆகிவிட்டாலும் இன்னமும் விமானம் மேலே பறந்தால் அண்ணாந்து பார்க்கும் பழக்கம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. விமானம் வானத்தில் செல்லும் போது சில சமயங்களில் விமானம் புகை போல ஒரு தடத்தை உருவாக்கி செல்லும் இதை அனைவருமே பார்த்து இருக்கலாம். வானில் பல அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது இப்படி விமானத்திற்கு பின்னால் வால் போல அப்படியே வெள்ளை நிறத்தில் தடத்தை விட்டு செல்லும். சில நிமிடங்கள் கழித்து இது காற்றோடு காற்றாக கலந்து போவதை காண முடியும். எத்தனையோ விமானங்கள் சென்றாலும் சில விமானங்களில் மட்டும் ஏன் புகை போன்று வெளியாகிறது என பலரும் யோசித்து இருக்கக்கூடும். சாதாரண பெட்ரோல் வாகனங்களில் கூட தற்போது புகை வெளியேறுவது கண்ணுக்கு தெரிவது இல்லை. ஆனால், விமானம் இப்படி புகையை கக்கியபடியா செல்ல வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. புகை கிடையாது. உண்மையில் விமானத்தில் இருந்து புகைதான் வெள்ளை நிறத்தில் இப்படி வெளியேறுகிறதா? விமானம் பல அடி உயரத்தில் வானத்தில் சென்று கொண்டு இருக்கும் போது இப்படி விமானத்தின் பின்னால் வால் போல வெள்ளை நிறத்தில் தடம் உருவாவது உண்மையில் புகை கிடையாது. அது வெறும் நீராவிதான்.. நீராவி தான் இப்படி வெள்ளை நிற பட்டையை உருவாக்குகிறதாம். விமானம் காற்றில் இருக்கும் போது, என்ஜின் குறிப்பிட்ட அளவு நீரை உற்பத்தி செய்வதோடு அதை வெளியிடவும் செய்யும். நீராவியாக இந்த நீர் வெளியேற்றப்படும் போது பல அடி உயரத்தில் உள்ள குளிர்ச்சியான காற்றில், இது பரவுகிறது. குளிர்ச்சியான இடத்தில் வெளியேறும் இந்த நீராவி அப்படியே உறைந்து வளிமண்டலத்தில் ஒடுங்கும். ஈரப்பதம் இல்லாவிட்டால்: இதுவே விமானத்தின் பின்பகுதியில் நீளமான வெள்ளை மேகங்களாக காட்சி அளிக்கிறதாம்.. எது எப்படியோ இவ்வளோ நாளா அது விமானத்தின் புகை என நம்பிக் கொண்டு இருந்த நிலையில் புகைக்கும் அந்த வெள்ளை நிறப்பட்டைக்கும் தொடர்பே இல்லை என்பதே உண்மை.. அது ஜெட் என்ஜின் கொண்ட விமானங்களில் மட்டுமே இந்த நிகழ்வு ஏற்படும். அதேவேளையில் அனைத்து விமானங்களும் இந்த நீராவியை உருவாக்காது. இது வெளிப்புறத்தில் உள்ள வளிமண்டலத்தின் சூழலை பொறுத்தது. காற்று போதுமான குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமாக இருந்தால் மட்டுமே வெள்ளை நிறத்தில் நீராவி பட்டை விமானத்தில் பின்னால் உருவாகும். காற்றில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டால் என்ஜினில் இருந்து துகள்கள் (particles) உறைவது தவிர்க்கப்படும்.ஆனால் இது புகை இல்லை. நீராவி. ஜெட் விமான இன்ஜின் உள்ளே எரிபொருள் எரியும் போது, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஜிசனும் சேர்ந்து நீராவியாக மாறுகிறது. இந்த நீராவி வெளியேற்றப்படுவது தான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது. இப்பகுதியில் ஈரப்பதம் குறைவு எனில் கோடு விரைவில் மறையும். அதிகம் இருந்தால் மறைய நேரம் ஆகும்.

Aug 27, 2023

நட்சத்திர மீன்களுக்கு எட்டு கண்கள்

பற்கள் இல்லாத பாலூட்டி எறும்பு தின்னி.நட்சத்திர மீன்களுக்கு எட்டு கண்கள் உள்ளது.மூன்று இதயங்கள் கொண்ட கடல் வாழ் உயிரினம் ஆக்டோபஸ்உலகிலேயே மிகவும் விஷத்தன்மை உடைய மீன்  ஸ்டோன் ஃபிஷ். சாணத்தில் இருந்து கிடைக்கும் வாயு மீத்தேன்.

Aug 20, 2023

ஆழமான பசிபிக் பெருங்கடல்.

 திடப்பொருட்களின் அடர்த்தி ததண்ணீரின்அடர்த்தியைவிட அதிகம் இருப்பதால்,அவை நீரில் இடும்போது மூழ்கிவிடுகின்றன. ஆனால் பனிக்கட்டி வெண்ணெய் போன்ற திடப்பொருள் மூழ்குவதில்லை.இவற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருப்பதால், இவை மிதக்கின்றன. நீரின் மூலக்கூறு.(எச்2ஓ). இரண்டு ஹைட்ரஜன் அணு, ஒரு ஆக்சிஜன் அணுவால் ஆனது. இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் எலக்ட்ரான்களைச் சமமாக வழங்கி, சமமாகப் பகிர்ந்து கொள்கின்றன இதனால் பனிக்கட்டியின் அடர்த்தி குறைகிறது.அமெரிக்காவின்டென்னிஸ்டிட்டோ. 1940 ஆக., 8ல் பிறந்த இவர் ஏரோநாட்டிகல் இன்ஜினியர் தொழிலதிபராக இருந்தவர். இவர் உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி என அழைக்கப்படுகிறார். இவர் 2001 ஏப்., 28ல் ரஷ்யாவின் 'சோயுஜ் டி.எம் 32 விண்கலம் மூலம், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா சென்றார் ஏழு நாட்கள், 22 மணி, 4 நிமிடம் விண்வெளியில் தங்கியிருந்தார். இவர் தன் விண்வெளி பயணத்துக்காக ரூ.137 கோடி பயணக்கட்டணமாக செலுத்தினார் இதன்பின் பலர் சென்றுள்ளனர். ஐந்து பெருங்கடல்களில் பெரியது, ஆழமான பசிபிக் பெருங்கடல். இதன் பரப்பளவு 16.25 கோ சதுர கி.மீ. இதன் சராசரி ஆழம் 14,040 அடி. அதிகபட் ஆழம் 35,797 அடி. பூமியின் மொத்த நீர் பரப்பளவில்  46% இக்கடலில் உள்ளது. இக்கடலுக்கு பெயரிட்டவர்  போர்ச்சுக்கலின் மெகல்லன். இவர் 1519ல் ஸ்பெயினில்  இருந்து ஐந்து கப்பல்களில் 280 மாலுமிகளுடன் கிழக்கு  நோக்கி பயணித்தார். ஒவ்வொரு பகுதியாக  கண்டறிந்த இவர், அமெரிக்க கண்டத்துக்கு அப்பால்  மேற்கே உள்ள கடலுக்கு 'பசிபிக் கடல்' என பெயர்  வைத்தார்.

Aug 13, 2023

நோபல் பரிசு,மாகசேசே விருது, பாரத ரத்னா மூன்று விருதுகளை பெற்றவர்-- அன்னை தெரசா

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்- கோவைவடஇந்தியாவின் மான்செஸ்டர்-கான்பூர்இந்தியாவின் மான்செஸ்டர்-மும்பைஉலக அளவில் மிகவும் மதிப்புமிக்க விருது- நோபல் பரிசுஆசியாவின் மிக உயர்ந்த விருது -மாகசேசே விருதுஇந்திய அரசின் மிக உயர்ந்த விருது- பாரத ரத்னா இந்த மூன்று விருதுகளை பெற்றவர்-- அன்னை தெரசா

Aug 06, 2023

எவரெஸ்ட் சிகரத்தை இருமுறை ஏறிய முதல் பெண் - சந்தோஷ் யாதவ்

எவரெஸ்ட் சிகரத்தை இருமுறை ஏறிய முதல் பெண் - சந்தோஷ் யாதவ்பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் - இந்திரா காந்திஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் பெண் இந்திய வீராங்கனை -கமல்ஜித் சந்துஇந்தியாவின் முதல் பெண் ஏர் வைஸ் மார்ஷல்- பந்தோபாத்யாய்100% கல்வி அறிவு பெற்ற மாவட்டம் எர்ணாகுளம்100% கணினி அறிவு பெற்ற மாவட்டம் - மணப்புரம்100% வங்கி கணக்கு உள்ள மாவட்டம் - பாலக்காடு

Jul 30, 2023

பறக்கும் போது உறங்கும் பறவை கழுகு.

பாம்புகளின் ஜென்ம விரோதி காரிய தரிசிப் பறவை. மிக அழகான இறக்கைகளைஉடைய பறவை  சொர்க்கப்பறவை.சொர்க்கப்பறவை வட ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. மிகச் சிறிய முட்டையிடும்பறவை வெர்வெயின் .பின் நோக்கி பறக்கும் பறவை ஹம்மிங் பறவை.பறக்கும் போது உறங்கும் பறவை கழுகு.மிக விரிவான இறக்கையடைய  பறவை.ஆல்பட்ராஸ்

Jul 23, 2023

உழவனின் எதிரி  வெட்டுக்கிளி

பறக்க கூடிய ஒரே பாலுட்டி  - வெளவால்உலகிலேயே குட்டியிடும் ஒரே பாம்பு - கடல் பாம்புஉழவனின் நண்பன் - மண்புழுஉழவனின் எதிரி  - வெட்டுக்கிளிஉலோகங்களின் அரசன் - இரும்பு ரசாயனங்களின் அரசன் - கந்தகம் மருந்துகளின் ராணி- பென்சிலின்  . கீரைகளின் அரச ன் - முருங்கை  கீரைகளின் ராணி -  தாளிக் கீரை.

Jul 16, 2023

நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு

ஒரு நாளைக்கு 7 கோடி மூளை செல்களுக்கு வேலை கொடுக்கிறோம்.ஒரு நாளில் 1 1/2% லிட்டர் நீரை சிறுநீரகம் வெளியேற்றுகிறது.பிறந்ததிலிருந்து உடலில் வளராத உறுப்பு கண்விழிகள்.ஒரு நாளில் 0.000046 அங்குலம் நகம் வளர்கிறது.பல்புகளில் ஒளிரும் இழையாக பயன்படும் உலோகம் டங்ஸ்டன்நுரையீரல் இல்லாத உயிரினம் எறும்பு

Jul 09, 2023

சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு பகுதிகள்

சேர நாடு-நீலகிரி,கரூர், கோவை, கன்னியாகுமரி மற்றும் இன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு-தஞ்சை, திருவாரூர்,நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள்.பாண்டியநாடு-மதுரை, ராமநாதபுரம்,சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, உள்ளிட்ட தென் மாவட்டங்கள்.தொண்டைநாடு-காஞ்சிபுரம், திருவள்ளூர்,தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. சேர , சோழ , பாண்டிய, தொண்டை, நாட்டு  பகுதிகள் 

Jul 02, 2023

இரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீ

ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குராங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.நல்ல நிலையில் உள்ள மனிதரின்கண்கள். சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர். கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.ஆப்பிரிக்காவில் மட்டும் வாழும் உயிரினம் வரிக்குதிரை.இரண்டு இரைப்பை உள்ள பிராணி தேனீ.

1 2 ... 8 9 10 11 12 13 14 15 16 17

AD's



More News