"வாழ்க்கையே ஆன்மிகம் இளையராஜா நெகிழ்ச்சி பேச்சு.
இளையராஜா இசையமைத்து, எழுதிய 'பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்' ஆல்பத்தை பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இதன் வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, "1980-களில் திருவண்ணாமலையில் அடிக்கடி கிரிவலம் செல்வேன். அப்போது என்னைப் பார்த்து பலரும் கிரிவலம் செல்லத் தொடங்கியதாக கூறுவார்கள். திருவண்ணாமலையில் காலடி வைத்தவுடன் செருப்பு அணிய மாட்டேன். இந்தப் பாடல்களை இறைவனே எனக்கு அருளினார். இசை என்பது தெய்வீகமான கலை. ஆன்மிகம் என்பது வாழ்க்கையிலிருந்து தனியானது அல்ல; வாழ்க்கையே ஆன்மிகம்" என்று உருக்கமாகப் பேசினார்.
0
Leave a Reply