செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் தொடங்கின.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செஸ் ஒலிம்பியாட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 46வது சீசன் நேற்று உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் தொடங்கியது. ஓபன் பிரிவில் 208 அணிகளும், பெண்கள் பிரிவில் 192 அணிகளும் என மொத்தம் 400 அணிகள் பங்கேற்கின்றன.
ஓபன் பிரிவில் ‘நம்பர்-2’ அந்தஸ்து பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் தாய்லாந்தை சந்தித்தது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிஹால் சரின், 28வது நகர்த்தலில் தனடோனை வீழ்த்தி, இந்தியாவுக்கு முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
உலக சாம்பியன் குகேஷ், பரிஷ் ரஷித்தை வீழ்த்தினார். விதித் குஜராத்தி, டுபாவை வென்றார். மற்றொரு போட்டியில் அர்ஜுன் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் ‘நம்பர்-1’ அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் போட்டியில் டொமினிகன் குடியரசு அணியை சந்தித்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய வைஷாலி, ஹம்பி, சவிதாஸ்ரீ, வந்திகா ஆகிய நான்கு பேரும் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 4.0-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply