மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்,தேர்தல் கல்வி அறிவுக் குழு(ELC) கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் கல்வி அறிவுக் குழு கலந்தாய்வுக் கூட்டம் (15.09.2026) நடைபெற்றது.தேர்தல் கல்வியறிவு குழு(ELC) என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு சிறப்பு முயற்சியாகும். இது மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் தேர்தல் உரிமைகளை அறிந்து கொள்ளவும் வாக்குப்பதிவு மற்றும் வாக்களிக்கும் முறைகளை எளிதாக புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
நேர்மையான மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய வாக்களிப்பில் வாக்காளர்களை பங்கேற்க செய்தல், தேர்தல் உரிமைகள் மற்றும் வாக்காளர் பதிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே மாணவர்களைப் பொறுப்புள்ள வாக்காளர்களாக தயார்படுத்துதல், ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்ளச் செய்தல் ஆகியவை தேர்தல் கல்வியறிவு குழுவின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
அதன்படி, இந்த குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவுகள், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் செயல் விளக்கங்கள், வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு விவாதங்கள், போட்டிகள், இளையோர் நாடாளுமன்றம் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தேர்தல் கல்வி அறிவுக் குழுவில் உறுப்பினர்களை சேர்த்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளம் வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் தேர்தல் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கல்வி அறிவு குழு ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply