20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் .
ஜப்பானின் அய்ச்சி, நகோயா நகரங்களில் வரும் செப். 19 முதல் அக். 4 வரை 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன.
இந்தியா சார்பில் 35 வகையான விளையாட்டுகளில் 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என மொத்தம் 501 பேர் களமிறங்குகின்றனர். தடகளத்தில் அதிகபட்சமாக 79 பேர் (36 வீரர்கள், 43 வீராங்கனைகள்) பங்கேற்கின்றனர். இவர்களுடன் 265 உதவியாளர்களும் சென்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு வரலாற்றில், கடந்த முறை (2022) 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என அதிகபட்சமாக 106 பதக்கங்களைக் கைப்பற்றிய இந்தியா, பதக்கப் பட்டியலில் 4வது இடம் பிடித்தது.
இதேபோல, இம்முறையும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் கூறுகையில், “ஆசிய விளையாட்டில் இம்முறை டென்னிஸில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் உறுதி. ஒட்டுமொத்தமாக 113 பதக்கங்கள் கிடைக்கும்” என்றார்.
0
Leave a Reply