25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 12, 2025

 'பெர்ப்ளெக்சிட்டி' 'கூகுள்' க்கு போட்டியாக … 

இணையத்தில்பலதேடுதல், இயந்திரங்கள் வந்து விட்டாலும் கூகுள்தான்கோலோச்சிநிற்கிறது.அதற்குபோட்டியாக, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) என்றொரு அந்த தேடுதல் இயந்திரம் வந்திருக்கிறது. 2022ல் துவக்கப்பட்ட இது, செயற்கை நுண்ணறிவு வாயிலாக இயங்குகிறது. நிகழ்நேர பதில்களை வழங்குவதன் வாயிலாக, கூகுள்- க்கு ஒரு தீவிர சவாலாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. Nvidia மற்றும் Amazon நிறுவனர் ஜெப் பெசோஸ் போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவுடன், இந்த ஸ்டார்ட்அப் விரைவாக உலகளவில் பெரும் புகழ் பெற்று வருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், தகவல்களைக் கண்டுபிடித்து மக்களுக்கு தரும் முறை சிறிது வித்தியாசமாக இருப்பதே. நீங்கள் ஏதாவது இணையத்தில் தேடினால், பல இணைப்புகளைக் காட்டும் நிலையில், Perplexity  ஆனது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன், உரையாடல் வடிவில் துல்லியமான பதில்களை வழங்குகிறது. எந்த கேள்வியைக் கேட்டாலும்,  இணையத்தில் அது தேடி, அணுகக்கூடிய, உரையாடல் பாணியிலான மற்றும் சரி பார்க்கக்கூடிய பதிலைக் கொடுக்கிறது. இதனால், உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தைச் சேமிக்கிறது.  

Jul 12, 2025

கட்டுப்படியாகாத ஸ்டார்லிங்க் கட்டணம்..! 

ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவைக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, "எங்களுக்கு ஜியோ, ஏர்டெல் சேவை போதும்" என்று பலர் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்டார்லிங்க் சேவை பெற வேண்டுமானால் அதற்கான டிவைஸ் வாங்க வேண்டும் என்றும், அதன் விலை 33 ஆயிரம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், இதுதான் குறைந்த விலை என்றும் கூறப்படுகிறது.  ஏற்கனவே ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் எந்த விதமான டிவைஸ் கட்டணமும் பெறாமல் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற கட்டணத்தை வைத்திருக்கும் நிலையில், 33 ஆயிரம் ரூபாய் டிவைஸ் மற்றும் 3000 ரூபாய் குறைந்தபட்ச ரீசார்ஜ் என்பது நமக்கு கட்டுப்படியாகாது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்புத் துறையின் கடும் போட்டிக்கு இடையே இவ்வளவு பெரிய கட்டணத்துடன் அறிமுகமாகும் ஸ்டார்லிங்க், பொதுமக்களின் ஆதரவைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Jul 12, 2025

புற்றுநோய்க்கு காரணமாகும் சிவப்பு இறைச்சி.

மனித இனத்தை அச்சுறுத்தும் அபாயகரமான குடல் புற்றுநோய். உலகஅள வில் குடல் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம். இதைத் தடுப்பதற்கான வழிகளை விஞ் ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள என்.சி.சி.எஸ். எனும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. குடல் புற்றுநோயை அதிகப் படுத்துவதில் டெலோமெரேஸ் (Telomerase) என்னும் ஒரு நொதிக்கு முக்கியமான பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதியைச் செயலிழக்கச் செய்யஎஸ்பி 2509 என்னும் ஒருமூலக் கூற்றைப்பயன்படுத்த முடியும். இந்தக்  கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பெரிய புரட்சியாக இருக் கும் என்று கூறப்படுகிறது.இது ஒரு பக்கம் இருக்க டெலோ மெரேஸ் நொதிக்கும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது.சிவப்பு இறைச்சியை அளவுக்கு அதிகமாக உண்பது குடல் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கும் என்று ஆய்வாளர்கள் கண் டறிந்திருக்கிறார்கள்.ஆடு, பன்றி, மாடு உள் ளிட்டவற்றின் இறைச்சி சிவப்பு இறைச்சி என்று பொதுவாக அழைக் கப்படுகிறது. இதை அதிக அளவில் உண்பதால் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இறைச்சியில் இருக்கும் இரும்புச் சத்து உடலுக்கு நல்லது தான்  என்றாலும் கூட, அளவை மீறும் போது இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரும்புச் சத்து தான் டெலோமெரேஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி புற்றுநோயை வேகப்ப டுத்துகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.எனவே காய்கறி, பழங்கள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொண்டு சிவப்பு இறைச்சிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Jul 11, 2025

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்.

மொபைல் எண்களை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், தொலைத்தொடர்புத் துறை சில புதிய இணைய பாதுகாப்பு விதிகளை முன்மொழிந்துள்ளது. ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட இந்த வரைவு விதிகள், தொலைபேசி எண்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய ஒரு புதிய தளத்தை உருவாக்கும் திட்டத்தை விவரிக்கின்றன. UPI போன்ற பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர் அடையாளத்திற்கு மொபைல் எண்களை பயன்படுத்தும் வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களும் இந்த தளத்துடன் இணைக்கப்படும். இந்த அமைப்பு "MNV தளம்" (Mobile Number Validation platform) என்று அழைக்கப்படும். இதன்மூலம், அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள், ஒரு மொபைல் எண் அங்கீகரிக்கப்பட்ட தரவுத்தளத்தில் இருக்கிறதா என்பதை சரிபார்க்க முடியும்.புதிய விதிகளின்படி, மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம், தொலைத்தொடர்பு தரவுத்தளத்தில் ஒரு மொபைல் எண்ணின் நிலையை சரிபார்க்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் ரூ.1.50 கட்டணம் வசூலிக்கப்படும். பிற நிறுவனங்கள் இதே சரிபார்ப்புக்கு ரூ.3 செலுத்த வேண்டும் என்றும் திருத்தங்கள் தெரிவிக்கின்றன.இந்த சரிபார்ப்புக் கட்டணத்தை யார் இறுதியாக செலுத்துவார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், பயனர்கள் தான் இந்தக் கட்டணத்தை செலுத்த நேரிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.இதன்மூலம், மோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபடும் எண்களை கண்டறிய முடியும். மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட எந்த ஒரு எண்ணும் 90 நாட்களுக்கு செயலிழக்கப்படும். இந்த காலக்கெடுவுக்குப் பிறகு, அந்த எண்ணின் வரலாறு தானாகவே அழிக்கப்படும். இதனால், அதே எண்ணை மீண்டும் பெறும் நபர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Jul 09, 2025

இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..! காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.

இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சீனா திடீரென மின்சார கார் உற்பத்திக்கு தேவையான காந்தங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.மின்கார் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும் அரிய உலோகமான காந்தங்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா இந்த உலோகங்களில் 90% அளவை சீனாவிலிருந்து பெறுகிறது.திடீரென சீனா இந்த காந்தங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது டாடா, மஹிந்திரா, மாருதி சுசுகி போன்ற நிறுவனங்களின் உற்பத்தி செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.சீனாவின் இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள், அமெரிக்காவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையாக கூறப்படுகிறது. ஆனால் அதன் தாக்கம் இந்தியாவின் கார் உற்பத்தி வளர்ச்சிக்கே இடையூறாக உள்ளது. பிற நாடுகளிலிருந்து காந்தங்களை பெற முயற்சி செய்தாலும், அதன் செலவு அதிகமாகும். இதனால் உற்பத்தி மொத்த செலவிலும் உயர்வை ஏற்படுத்தும்.தற்போது சீனாவுடன் இந்திய உறவுகள் சீராக இல்லாததால், பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால், இந்திய வாகனத் துறை நிறுவனங்கள் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளன. 

Jul 09, 2025

தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.

இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் நோக்குடன், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு உரிமம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பி.டி.ஐ. மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் செய்தி பிரிவுகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.இந்த உரிமத்தைப் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், ஏர்டெலின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் சேட்டிலைட் பிரிவு மட்டுமே இதற்கான அனுமதியுடன் செயல்பட்டுவந்தன. புதிதாக வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில், விண்ணப்பித்த 15 முதல் 20 நாட்களில் சோதனை அலைக்கற்றை (trial spectrum) ஸ்டார்லிங்கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உரிமத்தை நாடி காத்திருந்த ஸ்டார்லிங்கிற்கு இது ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறதுஇந்த அங்கீகாரத்துடன், இந்தியாவிலேயே விரைவில் அதிவேக செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவையை ஸ்டார்லிங்க் ஆரம்பிக்கலாம். நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த நடவடிக்கையை தொழில்நுட்பத் துறையினர் வரவேற்கின்றனர். 

Jul 08, 2025

பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

இந்நிலையில் பெட்ரோல், டீசல் கார்களின் அடுத்தக்கட்டமாக எலெக்ட்ரானிக் கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் சீன கார் நிறுவனங்களோ ஒருபடி மேலே போய் எலெக்ட்ரானிக் கார்களை பறக்கும் கார்களாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன.  விமானங்கள் பறக்கும் தொலைவுக்கு அல்லாமல் பூமி பரப்பிலிருந்து சில கிலோ மீட்டர் Low Altitiudeல் பறக்கும்படி இந்த கார்களின் திறன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் கார் தயாரிப்பு போட்டியில் சீனாவை சேர்ந்த செர்ரி என்ற நிறுவனம் தனது ப்ரோட்டோடைப் eVTOL பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த கார் மாடல் வெற்றிகரமாக பறந்து நிரூபணமான நிலையில், பறக்கும் கார்களுக்கான அனுமதி கோரி சீன அரசிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.வரும் அக்டோபர் மாதத்தில் செர்ரி நிறுவனம் தனது பறக்கும்  eVTOL கார்களை கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் போக்குவரத்துக்கான அடுத்தக்கட்டமாக இந்த பறக்கும் கார்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்ற தொல்லைகளை இது வெகுவாக குறைப்பதுடன், சாலையில் செல்லும் கார்களை விட விரைவாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியும் என்கிறார்கள்.

Jul 07, 2025

துணியிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.

அன்றாடம் பயன் படுத்தும் அத்தியா வசியப் பொருட்களில் ஒன்று காகிதம். காகித உற்பத்திக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின் றன.இதற்கு மாற்றாகக் கரும்புச் சக்கை உள்ளிட்ட கழிவுப் பொருட்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது.மற்றொரு பக்கம் பயன் படுத்தப்பட்ட உடைகள் மறுசுழற்சி செய்யப்படா மல் பெரும்பாலும் நிலத் தில் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின் றன. இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இப்படி வீணாக்கப்படுகின்ற துணிகளில் இருந்து பேப்பர் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.முதலில், பருத்தித் துணிகள் சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. பிறகு சில வேதிப்பொருட்கள் இவற்றுடன் கலக்கப்படுகின்றன.இதனால் துணியிலிருந்து பருத்தி இழைகள் தனியாகப் பிரிகின்றன. பிரியும் பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்துமுடிச்சு விழுந்து விடாத படி தனியாகச் சேகரிக்கப் படுகின்றன.இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதும் இவற்றை நேரடியாகக் காகித் உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். இந்த காகிதங்கள் எழுது வதற்குப் பயன்படுபவை அல்ல. மாறாகப் பொட்ட லம் கட்டுவதற்கு (பேக்கே ஜிங்) பயனுள்ளவையாக இருக்கும்.இந்த வகையான காகிதங்கள் நல்ல அடர்த்தியானவை, எளிதில் கிழியாது. எனவே, பேக்கேஜிங்கில் உபயோகமாகும். அட் டைப் பெட்டிகள் செய்யவும் பயன்படுத்த முடியும். இந்த செயல்முறை வருங் காலத்தில் இன்னும் மேம் படுத்தப்படும். அப்போது வீணாகக் கொட்டப்படும் துணிக்கழிவுகள் முழுவதும் காகிதங்களாக மாற்றப்படும்.துணிகளில் உள்ள இழைகள் ஒட்டாமல் கிடைப்பதற்கு சில நொதிகள் உதவும். அவற்றைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Jul 05, 2025

ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான உடல் எடையில் இருப்பது அவசியம்.

  பெண்கள் அந்த வயதிற்கு குறிப்பிட்ட எடைக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான உடல் எடையில் இருப்பது அவசியம்.12 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகள் 32-36/ கிலோ எடை இருக்க வேண்டும்.15 முதல் 20 வயதுடைய இளம் பெண்கள் 45-50 கிலோ எடையில் இருப்பது அவசியம்.21 முதல் 30 வயது வரை இளம் பெண்கள் 50-60 கிலோ எடையில் இருப்பது ஆரோக்கியமானதாகும்.31 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 60-65 கிலோ எடையில் இருக்க வேண்டும்.41 முதல் 60 வயது முதிர்ச்சி அடையும் பெண்கள்தங்கள் உடலை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 59- 63 கிலோ  எடை இருக்க வேண்டும்.பெண்களின் உடல் உயரத்தை பொறுத்து உடல் எடையின் அளவு மாறும்.கோடை வெயிலின் தாக்கம் இனி நாளுக்கு நாள் அதிகரிக்கும் எளிதில் நோய் தெற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Jul 05, 2025

விமானங்களின்  வகைகள்

விமானங்களில் சில வகை உள்ளன. ஆரம்பத்தில் பொதுப்போக்குவரத்து விமானங்கள் மணிக்கு 100 முதல் 350 மைல்கள் வரை மட்டுமே பறக்கும் திறன் வாய்ந்தவையாக இருந்தன. தற்போதுகூட இவை சிறிய ரக விமானம் என்ற அளவில் புழக்கத்தில் உள்ளன. வெளிநாடுகளில் பணக்காரர்கள் பயன்படுத்தும் 2 மற்றும் 4 இருக்கைகள் கொண்ட விமானங்கள் இந்த ரகத்தை சேர்ந்தவை. அடுத்ததாக, போயிங்-747 என்ற ரக விமானங்கள் சப்-சோனிக் விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மணிக்கு 350 முதல் 750 மைல்கள் வேகத்தில் பறக்கும். தற்போது புழக்கத்தில் உள்ள பல விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் இந்த வகையை சேர்ந்தவை.இந்த விமானங்களின் வேகம் ஒலியின் வேகத்தைவிட சற்று குறைவாகும். இதன் என்ஜின்கள் இலகு ரகத்தை சேர்ந்தவை என்றாலும், அதிக சக்தி வாய்ந்தவை. மற்றொரு வகை விமானங்கள் என்பது,கான்கார்டு எனப்படும் சூப்பர் சோனிக் விமானங்கள். இவை மணிக்கு 760 முதல் 3,500 மைல்கள் தொலைவை எட்டும். 760 மைல்கள் என்பது ஒலியின் வேகம். எனவே சூப்பர் சோனிக் விமானங்களால் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பறக்க முடியும். அடுத்ததாக, ஹைபர் சோனிக் ராக்கெட்டுகள். இவை மணிக்கு 3500 முதல் 7 ஆயிரம் மைல்கள் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தவை.

1 2 ... 69 70 71 72 73 74 75 ... 103 104

AD's



More News