மின்னஞ்சல் எந்த அமெரிக்கராலும் கண்டுபிடிக்கப்படவில்லை, மாறாக 1978ஆம் ஆண்டு 14 வயது இந்திய சிறுவன் சிவா அய்யாதுரையால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நம் இந்தியாவில் பலருக்கு அவரைப் பற்றித் தெரியாது என்பதுதான் சோகமான விஷயம் அவருக்கு ஒரு லைக் கொடுங்கள்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களிலுள்ள 'காவிரிக்கரைக் காடுகளிலும் மலைக்காடுகளி லும் பழுப்பு மலை அணில்கள் காணப்படுகின்றன.இவற்றுக்குநரையணில்கள்என்றபெயரும்உண்டு.மலையாளத்தில்மலையண்ணான், சாம்பலண்ணான்,புள்ளியண்ணா ன் என்ற பெயர்களாலும், கன்னடத்தில் பெட்ட அல்லுமா என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலுள்ள பிற மலை அனில்களுடன் ஒப்பிடும் போது இது சிறிய இனமாகும்.இந்த அணில்களின் முதுகுப்புறம் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கும் இடையிடையே முடிகள் நரைத்தாற்போல காணப்படும். அடிப்பகுதி கோழி முட்டை போன்ற மங்கலான வெளிர் நிறத்தில் இருக்கும். காதுகள், பின்னந்தலை, நடுமுதுகு வரை அடர் பழுப்பாகவும் கறுப்பாகவும் காட்சியளிக்கும். இவற்றின் மூக்குப்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் தென் படும்.காதுகள் சிறியதாகவும், வட்டமாகவும் காணப்படும். வால் எஞ்சிய உடற்பகுதியைக் காட்டிலும் நீளமாக அமைந்திருக்கும். இதன் முடி நரை முடிபோலவும், சாம் பல் நிற முடி போலவும் பளிச்சிடும். இவற்றின்அகலமான பாதங்களும், நன்கு வளர்ந்த நகங்களும் மரங்களை பிடித்து ஏறுவதற்கு உதவியாக உள்ளன. கை,கால்களில் நன்கு வளர்ந்த நான்கு விரல்களையும், ஒரு சிறு கட்டைவிரலையும் கொண்டிருக்கின்றன.பழுப்பு மலை அணில்கள் புளிய இலைக்கொழுந்துகளையும், வாகை மரங்களின் கொழுந்து, பூந்தூள், மரப்பட்டை ஆகியவற்றையும் உட்கொள்கின்றன. இவற்றை தவிர பழங்கள், கொட்டைகள், பூச்சிகள், முட்டைகள் போன்றவற்றையும் தின்னும்.இந்த அணில்களின் பார்வைத்திறன் கூர்மையானது. அதனால் கொன்றுண்ணிகள் வருவதை அறிந்து தப் பித்து விடுகின்றன. இவற்றின் ஓசை சத்தமாக ஒலிக்கும் கொக்கரிப்புப் போல இருக்கும். காலையிலும் மாலையி லும் அதை கேட்கலாம். இவை அருகிலுள்ள மற்ற அணில்களை தொடர்புகொள்ள மெலிதாக ஒலி எழுப்புகின்றன.
காந்திஜிக்கு அருகில் பச்சை நிறக் கோடு கொண்ட 500 ரூபாய் நோட்டை எடுக்காதீர்கள், ஏனென்றால் அது போலியானது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் பச்சை நிறக் கோடு உள்ள குறிப்பை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த செய்தியை உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்..
விமானத்தின் பின்பகுதியில் 'கருப்பு பெட்டி' (பிளாக் பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். இதில் 'பிளைட் டேட்டா ரிகார்டர்', 'காக்பிட் வாய்ஸ்' என இரு பகுதி இருக்கும். ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரென் இதை கண்டுபிடித்தார். இது கருப்பு நிறத்தில் இருக் காது. எளிதில் தெரியும் விதமாக ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். விமானம் புறப்பட்டது முதல் தரையிறங்கும் வரையிலான புள்ளி விவரங்கள், கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் பேசியது இதில் பதிவாகியிருக்கும். இது 1100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங் கும். துருப்பிடிக்காத இரும்பு அல்லது டைட்டா னியம் உலோகத்தால் ஆன நினைவுத்திறன்பகுதி (மெமரி) இருக்கும். 25 மணி நேர தகவல்களை பதிவு செய்யும். பேட்டரி 6 ஆண்டு நீடித்திருக் கும். 30 நாட்களுக்கு ரேடியோ சிக்னல் வரும். நீரில் 20 ஆயிரம் அடி ஆழத்திலும் வேலை செய்யும்.ஆமதாபாதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் 'கருப்பு பெட்டி' கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால், விரைவில்உண்மை காரணம் தெரிய வரும்.
ரேடியோ டேப்ரிகார்டரை கலர் டி.வி.யின் மீது வைக்கக் கூடாது. ஸ்பீக்கரின் காந்தம் டி.வி.யில் கலர்ப் புள்ளிகள் தோன்றச் செய்யும்.டி.வி. மேல் நட் ஸ்குரூ போன்றவற்றை வைக்கக் கூடாது. அவைத் தவறிப் பின் துளைகள் வழியாக உள்ளே விழுந்தால் டி.வி. பழுதடையும்.டி.வி.யை துணி அல்லது அதற்குரிய கவரால் மூடும் போது டிவி.யின் பின் பகுதி திறந்த படி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.டி.வி.யின் பிரதான பகுதியே பிக்சர் டியூப் தான். முறையாகப் பராமரிக்கும் பட்சத்தில் பிக்சர் டியூப் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். டி.வி.யும் அடிக்கடி பழுதாகாது.டெலி விஷன் நிலையத்துக்கு அருகில் வீடு இருந்தால் இன்டோர் ஆன்டனாவே (Indoor Antenna) போதும். அதிக தூரத்தில் இருந்தால் அவுட்டோர் ஆன்டனா அவசியம்.
பறவைகளில் மிக அழகானது மயில். முருகப்பெருமானின் வாகனமாக போற்றப்படுகிறது. பொதுவாக, பறவைகளில் பெண் இனங்கள்தான் அழகாக தோன்றும். ஆனால், மயில் இனத்தில் ஆண் மயில்கள்தான் அழகாக தோன்றுகிறது. மயில்கள் தெற்காசிய நாடுகளில் பரவி காணப்படும் மிகப்பெரிய பறவை இனம். இவற்றின் அழகை கண்டு, ஐரோப்பிய செல்வந்தர்கள் வளர்ப்பு பறவைகளாக தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்றதாக வரலாறுகள் கூறுகின்றன. பின்னர் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மயில்கள், வளர்ப்பு பறவைகளாக மாறின. எகிப்து நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட மயில்களின் அழகில் மயங்கிய எகிப்தியர்கள் அதனை மாயப் பறவை என்று புகழ்ந்தனர். மயில்கள் நல்ல நல்ல அதிர்ஷ்டங்களை கொண்டு வரும் என்று நம்பினர். மயில்கள் தோகையை விரிக்கும் அழகிய நிகழ்வை வெளிநாடுகளில் வியந்து ரசிக்கிற மக்கள் ஏராளம். மயில்கள் கோழி இனத்தை சேர்ந்த பறவைகள் என்றாலும், கோழிகளை விட புத்திசாலித்தனமும், மனிதர்களோடு எளிதாக பழகும் தன்மையும் கொண்டிருக்கின்றன.ஒரு காலத்தில், மயில் இறைச்சியை அதிக அளவில் உணவாக சாப்பிட்ட ஐரோப்பியர்கள், மயில்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்று, மயில் இறைச்சியை விட்டுவிட்டு ,வான்கோழி இறைச்சிக்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பெருமைமிகு பறவை இனமான மயில்கள், உலகம் முழுவதும் விரும்பக்கூடிய பறவைகள் என்பதில் சந்தேகமில்லை.
BILL GATES ஒரு ஓட்டலில் சாப்பிட்டு முடித்த பின்பு ஓட்டல் சர்வருக்கு5 டாலர் டிப்ஸ் கொடுத்தார். அதை அந்த நபர் வாங்கிக் கொண்டு சிரித்தார். அதைப் பார்த்த BILL GATES ஏன் என்று கேட்டார்.உங்கள் மகள் எனக்கு 500 டாலர் டிப்ஸ் கொடுத்தார். ஆனால் நீங்கள் இந்த உலகத்தில் மிகப்பெரிய பணக்காரர். எனக்கு 5 டாலர் தருகிறீர்கள். அதான் சிரித்தேன் என்றார். அதற்கு BILL GATES அவள் உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர் மகள். நான் சாதாரண விறகு வெட்டுபவர் மகன் என்றார்.
காலை உணவை 'பிரேக் பாஸ்ட்' என்கிறோம்.பிரேக் (Break) என்றால் உடைப்பது.பாஸ்ட் (Fast) என்றால் உண்ணாவிரதம். முதல் நாள் இரவு உணவிற்குப் பின்பு மறுநாள் காலை உணவு சாப்பிடும் வரை தொடரும்.உண்ணாவிரதத்தை உடைப்பதே 'பிரேக் பாஸ்ட்' என்று அழைக்கப்படுகிறது. இந்த காலை உணவை குழந்தைகளும் பெரியவர்களும் தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும்.
தனது தந்தை பிரகாஷ் படுகோனின்70வது பிறந்தநாளில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன் படுகோன் பள்ளியின் லட்சிய விரிவாக்கத்தை அறிவித்தார். அடிமட்ட திறமைகளை வளர்ப்பதற்கும் இந்தியா முழுவதும் விளையாட்டை உயர்த்துவதற்கும் புதிய பயிற்சி மையங்களைத் தொடங்கினார்.படுகோன் ஸ்கூல் ஆஃப் பேட்மிண்டன், அதன் முதல் வருடத்திலேயே பெங்களூரு, என்சிஆர், மும்பை, சென்னை, ஜெய்ப்பூர், புனே, நாசிக், மைசூர், பானிபட், டேராடூன், உதய்பூர், கோயம்புத்தூர், சாங்லி மற்றும் சூரத் உள்ளிட்ட 18 இந்திய நகரங்களில்75 அடிமட்ட பயிற்சி மையங்களை நிறுவியுள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள்100 மையங்களை அடையும் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தீபிகா, மூன்று ஆண்டுகளுக்குள்250 மையங்களை அடைய இலக்கு வைத்துள்ளார். இதன் மூலம் ஆர்வமுள்ள வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.நாடு முழுவதும் உள்ள இளம் குழந்தைகளுக்கு பேட்மிண்டனை அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் என்ற தனது தந்தையின் தொலைநோக்குப் பார்வையை தீபிகா ஆதரித்துள்ளார். படுகோன் பேட்மிண்டன் பள்ளியை நிறுவியுள்ளார்.பேட்மிண்டன் விளையாடி வளர்ந்த ஒருவராக, இந்த விளையாட்டு ஒருவரின் வாழ்க்கையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் எவ்வளவு வடிவமைக்கும் என்பதை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன்.'படுகோன் பேட்மிண்டன் பள்ளி மூலம், பேட்மிண்டனின் மகிழ்ச்சியையும் ஒழுக்கத்தையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சென்று, ஆரோக்கியமான, அதிக கவனம் செலுத்தும் மற்றும் விளையாட்டால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறையை உருவாக்க நாங்கள் நம்புகிறோம்,' என்று தீபிகா தனது தந்தையுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அப்பா, உங்களை நன்கு அறிந்தவர்களுக்கு இந்த விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம் தெரியும்.70 வயதிலும் நீங்கள் செய்வது சாப்பிடுவது, தூங்குவது, சுவாசிப்பது மட்டுமே. உங்கள் ஆர்வத்தை நனவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்அனைவருக்கும் பேட்மிண்டன்.
அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை 'DigiPIN' என்ற டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் நாட்டில் DIGIPIN புதிய முகவரி அமைப்பாக இருக்கும். பாரம்பரிய PIN குறியீடுகள் பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், 10 இலக்க DigiPIN அமைப்பு உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தைக் குறிக்கிறது. அதாவது, உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தை இந்த DigiPIN மூலம் காணலாம். DigiPIN ஐ உருவாக்கி குறியீட்டைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட அரசாங்க வலைத்தளத்தைப் பார்வையிட்டு உங்கள் வீட்டைக் கண்டறியலாம். DigiPIN இன் நன்மை என்னவென்றால், அது சரியான இடத்திற்கு கடிதங்களை வழங்கும் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புத் துறைகள் போன்ற அவசர சேவைகள் இருப்பிடத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அதை துல்லியமாக அடைய உதவும். கிராமப்புறங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் DigiPIN பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.கடிதப் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல, மின் வணிக வலைத்தளங்களுக்கும் DigiPIN சரியான இடத்திற்கு பார்சல்களை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.உங்கள் Digipin ஐ எவ்வாறு கண்டுபிடிப்பது?உங்கள் டிஜிபினைக் கண்டறிய அரசாங்க வலைத்தளமான https://dac.indiapost.gov.in/mydigipin/home தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டு நீங்கள் கண்டறிந்த இடத்தைக் கிளிக் செய்வதன் மூலம், உங்கள் 10 இலக்க டிஜிபினைக் கண்டறியலாம். மற்ற முகவரி அமைப்புகளிலிருந்து டிஜிபினை வேறுபடுத்துவது என்னவென்றால், நான்கு மீட்டர் சுற்றளவில் உங்கள் சரியான இருப்பிடத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஐஐடி ஹைதராபாத், NRSC மற்றும் ISRO ஆகியவற்றுடன் இணைந்து டிஜிபின் எனப்படும் புவிசார் குறியீடு செய்யப்பட்ட டிஜிட்டல் முகவரி அமைப்பை இந்திய போஸ்ட் உருவாக்கியுள்ளது. டிஜிபினை ஆஃப்லைனிலும் பயன்படுத்தலாம்.