காட்டு மூங்கில் துளைகளில் காற்று எழுப்பும் அழகு ஓசையைக் கேட்பதற்கு, ஓடும் ஆற்றின் சலசலப்புச் சத்தம் கேட்க ரசனை வேண்டும்.அன்றாட வாழ்வில், சாப்பிடுவது, காபி குடிப்பது, காதல் மிக்க தாம்பத்யம், குழந்தைகளுடன் விளையாட்டு என எல்லாவற்றிலும் வேகம் அல்லது அவசரம் இல்லாமல் ரசித்து வாழ்தலே இன்பம். குறிப்பிட்ட விஷயத்தின் மீது சுவை கொள்ளுதல் ரசனை எனப்படும். ரசனை கொண்ட ஒருவரே ரசிகன் அல்லது ரசிகை எனப்படுவார். ரசம் என்பதற்கு 'சாறு' சொல் சுவை, கலை உணர்வு எனப் பொருள்குற்றால அருவியில் ஆனந்தமாக குளிப்பது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை நிதானமாக ரசிப்பது.தஞ்சை கோபுர அழகை ரசிப்பது.நெல்லையப்பர் கோயிலின் துாண்களின் வரும் பலவித சப்தங்கள்.தென்காசி கோயில் வாசலில் நம்மை உள்ளே போக வைக்கும் வெளியே தள்ளும் தென்றல் காற்றை உணர்தல்.மதுரை மீனாட்சியம்மனின் மாணிக்க மூக்குத்தியின் அழகு.சிருங்கேரி சாரதாம்பாளின் ஆபரணங்களின் அழகு.காஞ்சி காமாட்சியின் மடித்து உட்கார்ந்த நிலை அழகு. காருகுறிச்சி நாதஸ்வரம், லால்குடி வயலின், பாலமுரளி கச்சேரி. கட்டபொம்மனாக நடித்த சிவாஜியின் வீர வசனம். என எங்கும் ரசனைக்கு இடமுண்டு. அதற்கான நேரம், இடம், ரசிக்கக் கூடிய மனம் வேண்டும். அதுதான் கடவுள் தரும் கொடை. பாரதியார் அதையே 'ரசத்தில் தேர்ச்சி கொள்' என்கிறார்.பாரதியாருக்கு சுற்றிலும் எத்தனை விதமான முட்டுக்கட்டைகள்?போதிய வருமானம் இன்மை, குடும்பப் பிரச்னை, அரசின் கண்காணிப்பு, ஊரெங்கும் பித்தன் என்ற ஏளனம் எந்தளவிற்கு ரசனை இருந்தால் அவர், 'ரசத்திலே தேர்ச்சி கொள்' என எழுதிஇருப்பார்.
ஐரோப்பிய நாடான போலந்து, நோவே ஜர்னோவா கிராமத்தில்,'க்ஸ்வி லாஸ்' எனப்படும்,கோணல் காடு அமைந்துள்ளது. இங்கு,400 பைன் மரங்கள். தரைப்பகுதியில் வடக்கு நோக்கி வளைந்து, பின் நிமிர்ந்து வளர்ந்திருக்கும், காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த மரங்கள்9அடி வரை வளைந்து பின் நெடிதாக நிற்கின்றன. வழக்கமான பைன் மரங்கள் அடர்ந்த காடும் உள்ளது.இந்த மரங்கள் பெரும் புயலால் வளைந்ததாக கூறப்பட்டது. புவி ஈர்ப்பு விசையால் வளைந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.ஆனால் விஞ்ஞானிகள் இதை மறுக்கின்றனர். ஏனெனில் புவி ஈர்ப்பு விசை கீழ்நோக்கியே இழுக்கும்.இந்த பகுதி விவசாயிகள், படகு கட்டுவதற்காக,1930ல் மரங்களை செயற்கையாக வளைத்து இந்த பகுதியில் வளர்க்க முயன்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதுபரவலாக ஏற்கப்பட்டுள்ளது.இரண்டாம் உலகப் போரில், ஐரோப்பிய நாடான ஜெர்மனி,1939ல் போலந்தைக் கைப்பற்றிய போது, விவசாயிகளின் செயல்பாடு தடைபட்டு, திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.இதுபோன்று மரங்களை வளைத்து வளர்ப்பது சாத்தியமா என்பதற்கு அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள,"ஜில்ராய் கார்டன்' முன் உதாரணமாக உள்ளது. அங்கு, இது போல் வளைந்து, வளர்ந்துள்ள மரங்கள் உள்ளன.போலந்தில் உள்ள கோணல் காடு, அதன் தனித்துவத்தால் உலகப் புகழ் பெற்றுள்ளது. அதைபோலந்து அரசு பாதுகாக்கப்பட்ட இயற்கை சின்னமாக பராமரித்து வருகிறது.
தாவரங்களில் உள்ள புரதம் மாமிசப் புரதத்தை விட தரம் குறைந்தது என்று நம்பப் பட்டது. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது என்று தெரியவந்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம் .மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம்.
.நாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், என்.ஆர்.ஐ., என அழைக்கப்படுகின்றனர். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் தர்மஜ் கிராமம் உள்ளது. 2011 சென்செஸ் படி மக்கள்தொகை10,429. இக்கிராமத்தை சேர்ந்த1700 குடும்பத்தினர் பிரிட்டனிலும்,800 குடும்பத்தினர் அமெரிக்காவிலும், பலர் கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றனர். இதனால் இது என்.ஆர்.ஐ., கிராமம்' என அழைக்கப்படுகிறது. இவர்கள் இணைந்து தங்கள் கிராமத்தில், சாலை, குடிநீர் உள்ளிட்ட நகரத்துக்கு இணையாக வசதிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு 13 அரசு, தனியார் வங்கிகள் உள்ளன.
ரிஸ்வான் சாஜனின்.16 வயதில் தந்தையை இழந்த அவர், தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக புத்தகங்கள் விற்பது, பட்டாசு வெடிப்பது மற்றும் பால் விநியோகம் செய்வது போன்ற பல வேலைகளை மேற்கொண்டார்.1993 ஆம் ஆண்டில், அவர் டானூப் குழுமத்தை நிறுவினார், இது ஒரு சிறிய கட்டுமானப் பொருட்கள் வணிகத்திலிருந்து மத்திய கிழக்கு முழுவதும் வீட்டு அலங்காரம், ரியல் எஸ்டேட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட சாம்ராஜ்யமாக வளர்ந்தது.மும்பையில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே,16 வயதில் தந்தையை இழந்த பிறகு, நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். தனது குடும்பத்தை ஆதரிக்கத் தீர்மானித்த அவர், புத்தகங்கள், பட்டாசுகள் விற்றார், பால் கூட விற்று, தனது எதிர்கால வெற்றிக்கு அடித்தளமிட்டார்.ஒரு நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த சாஜன், கடின உழைப்பின் மதிப்பை ஆரம்பத்திலேயே கற்றுக்கொண்டார். தனது கல்வியை முடிக்கும் போது பல வேலைகளைச் சமநிலைப்படுத்தியதன் மூலம், அவர் தனது தொழில்முனைவோர் பயணத்தை வளர்த்துக் கொண்டார்.1993 ஆம் ஆண்டு, கட்டுமானப் பொருட்களில் ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய சாஜன், டானூப் குழுமத்தை நிறுவினார். அவரது தொலைநோக்குப் பார்வையும் இடைவிடாத முயற்சியும் ,இந்த எளிமையான வணிகத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப்பெரிய கட்டுமானப் பொருள் நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.2019 ஆம் ஆண்டு வாக்கில், டானூப் குழுமம் ஆண்டுக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பதிவு செய்து, சந்தையில் அதன் ஆதிக்கத்தைக் குறித்தது. ஒரு சிறிய தொடக்க நிறுவனமாகத் தொடங்கிய இது, சாஜனின் தலைமையின் கீழ் ஒரு முக்கிய நிறுவனமாக மாறியது.கட்டுமானப் பொருட்களுடன் மட்டும் சஜன் நின்றுவிடவில்லை. அவரது வழிகாட்டுதலின் கீழ், டானூப் குழுமம் வீட்டு அலங்காரம், ரியல் எஸ்டேட் மற்றும் பிற துறைகளில் பன்முகப்படுத்தப்பட்டது. இன்று, ஓமன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்த நிறுவனம் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.ரிஸ்வான் சாஜனின் விடாமுயற்சி பலனளித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார அமைச்சகத்தின்படி,2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.20,830 கோடி) நிகர மதிப்புடன், அவர் துபாயின் பணக்கார இந்தியர்களில் ஒருவராக உள்ளார். மும்பையின் குடிசைப் பகுதிகளிலிருந்து வணிக வெற்றியின் உச்சங்கள் வரை, சாஜனின் கதை ஆர்வமுள்ள தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை எந்த தடையையும் கடக்க முடியும் என்பதை அவர் நிரூபிக்கிறார். ரிஸ்வான் சாஜன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் அதற்கு அப்பாலும் மற்றவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். அவரது வாழ்க்கை, அசாதாரண வெற்றிக்குத் தாழ்மையான தொடக்கங்கள் தடையல்ல என்பதை நினைவூட்டுகிறது.
2029 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அனைத்து நீரையும் திருப்பிவிடும் ,வட இந்தியாவின் தாகத்தைத் தணிக்கும் மிகப்பெரிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .2029 ஆம் ஆண்டுக்கு முன்பு, சிந்து நதியின் நீர் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீரை அடையும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கோடிக்கணக்கானமக்களுக்கு தண்ணீர் வழங்கும் 14 கி.மீ நீள சுரங்கப்பாதை மற்றும் 113 கி.மீகால்வாய் கட்டப்படும்.மிகப்பெரியவிஷயம்என்னவென்றால், இந்தநீர்இனிபாகிஸ்தானை நோக்கிப் பாயாது.ஒவ்வொரு துளியும் இந்தியாவின்' நிலம் மற்றும் விவசாயிகளின் தாகத்தைத் தணிக்கப் பயன்படுத்தப்படும்.
பேனாக்களில் முக்கியமானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எழுதுவதற்கு பயன்படும் பால்பாயின்ட் பேனா. இது தமிழில் பந்து முனைப் பேனா என்று அழைக்கப் படுகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிகை யாளர் லாஸ்லோ பைரோ 1937-ம் ஆண்டு இதை கண்டுபிடித்தார்.பத்திரிகை அச்சடிக்கும்போது பயன்படுத்தும் மை உடனே உலர்ந்து போவதை அறிந்தவர், அந்த மையை பயன்படுத்தி பேனா தயாரிக்க முயற்சி செய்தார்.அவருடைய சகோதரர் ஜார்ஜ் பைரோ ,இந்த கண்டுபிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அடர்த்தியான மை வெளியேறுவதற்கு வசதியாக இருவரும் சேர்ந்து பந்து போன்ற குமிழ் முனையை பொருத்தினர்.இரண்டு சகோதரர்களும் இணைந்து இந்த பேனாவிற்கான காப்புரிமையை பெற்றனர்.
பறவைகள் வான் வெளியில் நீண்ட நேரம் பறக்கும் திறன் படைத்தவை. சில பறவை கள் ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக பறந்து,கண்டம் விட்டு கண்டம் செல்லும்,அசாத்திய திறமை படைத்தவை. ஆனால் எவ்வளவு நேரம் பறந்தாலும் அவை வான் வெளியை வசிப்பிடமாக கருதாது."ஒருகுறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வசிப்பிடத்திற்கு திரும்பிவிடும். ஆனால் அபஸ் அபஸ் என்னும் பறவை10 மாதங்களுக்கும் மேலாக வான்வெளியிலேயே வாழும் இயல்புடையது. பறந்தபடியே தூங்கும் சுபாவம் கொண்டது. அப்போது மூளையின் ஒரு பகுதி சுறுசுறுப்புடன் இயக்கத்தில் இருந்து பறந்தபடியே தூங்கவைக்கும்.
கோவையில் பட்டாசை விரும்பாத கிராமம் கிட்டாம்பளையம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்..கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க அங்குள்ள மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.இந்த கிராமத்தில் அதிக அளவில் பறவைகள் சரணாலயம்போல் வசிப்பதால் பட்டாசுகளை வைத்து பறவைகளின் அமைதியை குலைக்க விரும்பாமல் பசுமை தீபாவளியை கொண்டாடிவருகின்றனர். அந்த கிராம மக்களை வாழ்த்தி மகிழ்வோம்!