25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 05, 2025

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க பெருமளவு உதவும் சணல் பைகள்.

சணல் என்பது 'கோர் கோரஸ்' நார் இழைகளை கொண்ட தாவரம் ஆகும். சணல் இழைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த, செலவுகுறைந்த இயற்கை இழை ஆகும். சணல் இழையை பயன்படுத்தி பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், சணல் பைகள் மிகவும் பிரபலமானவை. நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் காற்று ஊடுருவும் இயல்பு காரணமாக, பல்வேறு பொருட்களை கையாள உதவும் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.பிளாஸ்டிக் பைகளால், நிலம், நீர் மாசுபடுகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.பிளாஸ்டிக்பைகளுக்கு மாற்றாக மக்கள் பயன்பாட்டுக்கு உலக நாடுகள் பலவும் சணல் பைகளை முன்னிறுத்தி வருகின்றன. பிளாஸ்டிக் பைகள் மண்ணில் வீசப்படும் போது அவை மக்குவதில்லை. மேலும், பிளாஸ்டிக் கழிவு மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களை மடிந்து போக செய்வதுடன், மண் மலடாகும் நிலையும் உள்ளது. ஆனால், சணல் உடனே மக்கி உரமாகிவிடும். எனவே, கட்டுப்பாடற்ற பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க பெருமளவு சணல் பைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். பொதுவாக, சணல் இந்திய துணைக்கண்டத்தில்தான் பெருமளவு பயிரிடப்படுகிறது. சணல் மூலம் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற பைகளை உருவாக்கும்போது, உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.இதனால், இந்தியாவில் சணல் சாகுபடி செய்யும் பல லட்சம் விவசாயிகள் பொருளாதார வளர்ச்சியை எட்ட மிகப்பெரிய வாய்ப்பும்,சணல் பைகள் உற்பத்தி செய்யும் பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சணல் பயிர் வெறும் 4 மாதங்களில் விளைந்து அறுவடை பருவத்தை எட்டும். மிகக்குறைந்த நீர் போதும். உரத்துக்கான தேவையும் பெரிய அளவில் இருக்காது.

Jul 04, 2025

குகை ஓவியங்கள்.

எழுத்து, சொற்கள் இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த ஆதிகால மக்கள், தங்கள் வாழ்க்கையை பதிவு செய்ய எந்த வழியும் இல்லாததால், அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்கு இன் றைய ஆராய்ச்சியாளர்களுக்கு கடினமாக இருந்து வருகிறது.இந்த நிலையில், பல்வேறு குகைகளில் கண்டறியப்பட்ட கற்கால கருவிகள், வாழ்விடங்கள். விலங் குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகள், குகைகளில் வரையப்பட்ட வரைபடங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஒன்றாக இணைத்ததன் மூலம் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி ஓரளவு அறியமுடிகிறது.ஆதிமனிதர்கள் குகை பாறைகளை தங்கள் ஓவிய தளமாக பயன்படுத்திக் கொண்டனர். இந்தியாவில், பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.அதில், தமிழ்நாட்டில் இருக்கும் சித்தன்னவாசல் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. பறவைகள், விலங்குகள், மீன்கள் மற்றும் இயற்கையை மதிக்கும் மக்கள் குறித்த ஓவியங்களை அங்கு காணலாம்.தமிழ்நாட்டின் வேலூர் பகுதியில் அமைந்துள்ள ஆர்மமலை குகை ஓவியங்கள் 8-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இந்த பாறை ஓவியங்கள், சமண துறவிகளால் உருவாக்கப்பட்டவை.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலையில் தற்போது, ஒரு குகையில் இரும்புக்கால பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.விலங்குகளின் மீது மனிதன் ஏறி ஆயுதங்களுடன் சண்டையிடும் காட்சிகள் வரையப்பட்டு இருக்கின்றன. ஒருவர் சிறுத்தையை ஆயுதத்தால் தாக்குவதையும், மக்கள் நடனமாடுவது, போர் வெற்றிகளை கொண்டாடுவது, ஒருவரை பல்லக்கில் சுமந்து செல்வது போன்றும் வரையப்பட்டு உள்ளது.

Jul 02, 2025

2,600 வகையான பனை மரங்கள் உள்ளன.

பனை குடும்பத்தில் உலகம் முழுவதும் 200 இனங்களை சேர்ந்த 2,600 வகையான பனை மரங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் சுமார் 106 இனங்கள் பரவியுள்ளன.இந்தியாவில் பனை குடும்ப மரங்கள் பயிரிடப்பட்ட வகை, அலங்கார வகை, காட்டு வகை என 3 குழுக்களாக வகைப்படுத் தப்படுகின்றன. பயிரிடப்படும் பனை மரங்களில், கோகஸ் நுசி பெரா என்ற தாவரவியல் பெயர் கொண்டதென்னை மரம் இளநீர், தேங்காய்களை தருவதால் 'சொர்க்கத்தின் அதிசய பனை' என அழைக்கப்படுகிறது.இதற்கடுத்து, நுங்கு பதநீர் தரும் போராசஸ் பிளாபெல்லிபர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பனை மரங்கள் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மரம் ஆகும். இந்தியாவில் 8½ கோடி பனை மரங்கள் உள்ளன, அவற்றில் 4 கோடி தமிழ்நாட்டில் உள்ளன. பனை மரத்தை கற்பகதரு என அழைப்பர். அலங்கார பனையில், கோதை பனை என்ற பனையின் இலைகளில் விசிறிகள், பாய்கள், குடைகள் ஆகியவை தயார் செய்யப்பயன்படுகின்றன. தாலிபோட் பனை என்பது பனை மரக்குடும்பத்திலேயே 100 அடி உயரம் தாண்டி வளரும் அற்புதமான மரம் ஆகும்.கூந்தபனை என்பது மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையான காடுகளில் வளர்கிறது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் யானையின் விருப்பமான உணவாகும். இவ்வாறு பனை என்பது உலக அளவில் அதிசயமாக கருதப்படுகிறது.

Jul 01, 2025

இந்திய யூட்யூபர்களுக்கு மூன்று ஆண்டுகளில் 21 ஆயிரம் கோடி வருமானம்.

 21 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவில் இருக்கும் யூட்யூப் க்ரியேட்டர்களுக்கு கடந்த3 ஆண்டுகளில் கொடுத்திருப்பதாக யூட்யூப் தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் ஸ்மார்ட்போன் வசதியும், இணைய வசதியும் பெருகிவிட்ட நிலையில் பலரும் யூட்யூப் சேனல் தொடங்குவதை குடிசைத் தொழில் போல ஆரம்பித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் கல்வி, பொழுதுபோக்கு, சமையல் என ஒவ்வொரு துறை சார்ந்தும் சில சேனல்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் குறைந்த விலையில் மைக், கேமரா கிடைப்பதால் புற்றீசல் போல தினம்தோறும் ஆயிரக்கணக்கான யூட்யூபர்கள் இந்தியாவில் உருவாகி வருகின்றனர். இதில் பெரும்பாலும் ஃபுட் வ்லாக், ட்ராவல் வ்லாக் செய்பவர்களே அதிகம்.சமீபத்தில் இந்தியயூட்யூபர்களின்வருமானம்குறித்துபேசியயூட்யூப்சிஇஓநீல்மோகன், இந்தியாவில்இருக்கும்யூட்யூப்க்ரியேட்டர்கள், ஆர்ட்டிஸ்டுகள், மீடியாகம்பெனிகள்உள்ளிட்டவற்றிற்குகடந்த 3 ஆண்டுகளில்மட்டும்வருவாயாகரூ.21,000 கோடியைவழங்கியுள்ளதாககூறியுள்ளார். இதிலிருந்தேஇந்தியாவில்யூட்யூப்எவ்வளவுபெரியவருமானமாகஇருக்கிறதுஎன்பதுதெரியவருகிறது.ஆனால் இவற்றில் பெரும்பாலும் வருமானம் ஈட்டுபவர்கள் மீடியா கம்பெனிகளும், ஒரு சில இன்ப்ளூயன்சர்களும்தான். எந்த வித திட்டமிடலும் இல்லாமல் மனம் போன போக்கில் வீடியோ போடும் சேனல்கள் வருமானம் ஈட்ட முடியாமல் காணமல் போவதும் யூட்யூபில் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Jun 30, 2025

புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதை ஏஐ உதவியுடன் தெரிந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவம், கல்வி, பொருளாதாரம் என பல துறைகளிலும் ,ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் ஏதாவது தகவல் தேட வேண்டியிருந்தால் கூகிளுக்கு செல்வதை தாண்டி, எல்லாமும் ஏஐயிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை வந்துவிட்டது.சமீபத்தில் ஒரு பெண் சாட் ஜிபிடியிடம் பேசி தனக்கு கேன்சர் இருப்பதை கண்டறிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரான்ஸை சேர்ந்த மார்லி என்ற பெண் சமீபமாக இரவில் அதிகமாக வியர்ப்பது, சருமத்தில் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்தபோதும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அதன் பின்னர் அவர் இதுகுறித்து சாட்ஜிபிடியிடம் பேசியுள்ளார். அது வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் மருத்துவரை அணுகியபோது அவருக்குHodgkinLymphoma என்ற அரியவகை புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Jun 30, 2025

உலகின் மிக சோம் பேறியான விலங்கு என்று கருதப்படுவது 'ஸ்லாத்'.

உலகின் மிக சோம்பேறியான விலங்கு என்று கருதப்படுவது 'ஸ்லாத்'. தற்போது இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை கிடைத்த இவற்றின் தொல் எச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய யானை அளவு பெரிய ஸ்லாக்கள் வாழ்ந்துள்ளன என்கிறார்கள். இவை சராசரி யாக 3.63 டன் எடை கொண்டிருந்தனவாம்.

Jun 28, 2025

சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, "ECR கடல் பாலம்"  .

.சென்னையில் எண்ணூரை பூஞ்சேரியுடன் இணைக்கும் 92 கி.மீ கடல் இணைப்பு சுமார் 27,000 கோடி செலவாகும் என்றும் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டம்"ECR கடல் பாலம்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், திட்டமிடல் மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில்(ECR)92 கிலோமீட்டர் நீளமுள்ள கடல் மேம்பாலம் கட்டும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.27,600 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், சென்னைக்கும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கும் இடையிலான இணைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதோடு, முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது..ஈ.சி.ஆர் கடல் மேம்பாலம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும், முதல் கட்டத்திற்கு ரூ.5,400 கோடி, இரண்டாவது கட்டத்திற்கு ரூ.9,000 கோடி மற்றும் இறுதி கட்டத்திற்கு ரூ.13,200 கோடி செலவாகும். கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தும் திட்டம், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் (CRZ) தேவையான ஒப்புதல்கள் முதன்மையான முன்னுரிமையாகும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்., ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மாமல்லபுரம் போன்ற தொழில்துறை மற்றும் சுற்றுலா மையங்கள் வழியாக எண்ணூர் துறைமுகத்தை மகாபலிபுரத்துடன் இணைக்கும்120 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை புற வட்டச் சாலையை(CPRR) மாநிலம் வேகமாக செயல்படுத்தி வருகிறது. இந்தCPRR திட்டம் நிறைவடைந்தவுடன், சென்னை நகர எல்லைக்குள் நுழையும் சரக்கு போக்குவரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடல் மேம்பாலம் போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், கடற்கரையில் சரக்கு போக்குவரத்து மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. இருப்பினும், ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடு கட்டும் இடங்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய சேதம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கூடுதலாக, இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான நிதியைப் பெறுவது ஒரு தடையாக உள்ளது, அரசு பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மற்றும் சர்வதேச நிதி விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது.வெற்றியடைந்தால்,ECR கடல் மேம்பாலம் இந்தியாவின் பெரிய அளவிலான கடலோர உள்கட்டமைப்புக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும், இது சீனாவின் ஹாங்காங்-ஜுஹாய்-மக்காவ் பாலம் போன்ற உலகளாவிய திட்டங்களுடன் ஒப்பிடுகிறது. இப்போதைக்கு, அனைத்து கண்களும் சாத்தியக்கூறு அறிக்கையின் மீது உள்ளன.

Jun 28, 2025

"மூத்த குடிமக்களின் நலனுக்கான தேசிய செயல் திட்டம்"  .மூத்த குடிமக்கள் குறித்த புதிய தேசியக் கொள்கையை அரசு கொண்டு வரவுள்ளது.

மூத்த குடிமக்கள் குறித்த புதிய தேசியக் கொள்கை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் வரைவு நிலையில் உள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை(ஜூன்4,2025) சமூக நீதி அமைச்சர் வீரேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற மூத்த குடிமக்களுக்கான தேசிய கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த சில விவரங்கள் விவாதிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவின் எதிர்கால மக்கள்தொகை யதார்த்தங்களை வரைவு கொள்கை எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும் என்பது குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தியதாக சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.2047 ஆம் ஆண்டுக்குள் நாட்டின்20% பேர் மூத்த குடிமக்களாக இருப்பார்கள் என்று மக்கள்தொகை கணிப்புகள் மதிப்பிட்டுள்ளதாக அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்த நேரத்தில் நாட்டின் மக்கள் தொகையில் மூத்த குடிமக்கள் 8.23% ஆக இருந்தனர். அரசாங்கத்தின் கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டில் அவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 12.16% ஆக இருப்பார்கள். புதன்கிழமை (ஜூன் 4, 2025) அரசாங்கம் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் குறிப்பு காலம் 2027 மார்ச் மாதமாக இருக்கும் என்று கூறியது."இந்தக் கொள்கை தற்போது வரைவு நிலையில் உள்ளது. ஏற்கனவே தொடர்புடைய பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகள் வந்துள்ளன, மேலும் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த பரிந்துரைகளில் சில முன்வைக்கப்பட்டன" என்று ஒரு அரசு அதிகாரி தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் சமூக நீதி அமைச்சகத்தின்"மூத்த குடிமக்களின் நலனுக்கான தேசிய செயல் திட்டம்" என்று அழைக்கப்படும் குடைதிட்டத்தின்கீழ்உள்ளன.இந்ததேசியசெயல்திட்டம்ஏப்ரல்2020இல்உருவாக்கப்பட்டுவெளியிடப்பட்டது.முதியோர்களுக்கான தேசியக் கொள்கை முதன்முதலில் இந்திய அரசால்1999 இல் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மோகினி கிரி தலைமையிலான ஆணையம்2011 இல் மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கையை வெளியிட்டது, இது ஏப்ரல்2020 இல் மத்திய அரசின் தேசிய செயல் திட்டம் வெளிவரும் வரை நடைமுறையில் இருந்தது.இது மூத்த குடிமக்களுக்கான தேசிய கவுன்சிலின் நான்காவது கூட்டம் என்று அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கூட்டத்தில், மூத்த குடிமக்களின்"டிஜிட்டல் உள்ளடக்கம்" குறித்தும் கவுன்சில் விவாதித்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொள்கை உருவாக்கம், செயல்படுத்தல் மற்றும் பின்னூட்ட வழிமுறைகளில் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் சங்கங்களை நிறுவனமயமாக்குவது குறித்தும் இது மேலும் விவாதித்தது.முதியோர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பை நிவர்த்தி செய்வதற்கான குறை தீர்க்கும் பொறிமுறையை நிறுவ முயற்சிப்பது;"முதியோர் இல்லங்கள்" மற்றும் முதியோர் பராமரிப்பு நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச தரங்களை செயல்படுத்துதல்; மற்றும்"சமூக ஈடுபாடு மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை ஊக்குவித்தல்" போன்ற பகுதிகளிலும் விவாதங்கள் நடந்தன.ராஷ்ட்ரிய வயோஷ்ரி யோஜனா(RVY) மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம்(IPSrC), மூத்த குடிமக்கள் போர்டல் ஆகியவற்றின் கீழ், உதவி வாழ்க்கை சாதனங்களின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் விநியோகத்திற்குப் பிந்தைய பின்தொடர்தல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து கவுன்சில் விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டது என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஷ்ட்ரிய வயோஸ்ரீ யோஜனாவின் கீழ், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு"இலவச உதவி வாழ்க்கை சாதனங்கள்" வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐபிஎஸ்ஆர்சி மூலம்,"தொடர்ச்சியான பராமரிப்பு இல்லங்கள், பிசியோதெரபி மையங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ அலகுகளை" இயக்கும் 708 அரசு சாரா நிறுவனங்களுக்கு அமைச்சகம் தற்போது ஆதரவளித்து வருகிறது.

Jun 27, 2025

ஆக்டோபஸ் மீன்

ஆக்டோபஸ் மீனுக்கு அருகில் திமிங்கலம், சுறா போன்றவை வந்தால் உடனே கருப்பு நிறத் திரவத்தை சுரக்க ஆரம்பிக்கும். அது பாதுகாப்பு கவசம் போல செயல்படும் .அந்த நேரத்தில் இவை விரைவாக தப்பித்து விடுகின்றன . ஆக்டோபஸ் எட்டுக் கைகளைக் கொண்டு நண்டு, சிப்பி போன்றவைகளைப் பிடித்து அதன் ஒட்டை உடைத்து உணவை விழுங்கும். ஆக்டோபஸின் ஒவ்வொரு கைக்கு அடியிலும் வட்ட வட்டமான தசைகள் இருக்கும். இவை உணவைப் பிடிக்க வும் உறிஞ்சி விழுங்கவும் உதவுகின்றன.

Jun 27, 2025

இமய மலைத்தொடரின் ஒரு பகுதியான 'ஹிந்து குஷ் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள்.

புவி வெப்பமய மாதலால் இமய மலைத்தொடரின் ஒரு பகுதியான 'ஹிந்து குஷ் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதாகச் சூழலியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த வேகத்தில் உருகினால் இந்த, நுாற்றாண்டின் இறுதிக்குள் 75 சதவீத பனிப்பாறைகள் உருகிவிடும். இது ஆசியாவில் வாழும் 100 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடும்.

1 2 ... 70 71 72 73 74 75 76 ... 103 104

AD's



More News