பூமியைத் தாக்கும் என்று அஞ்சப்பட்ட விண்கல் 2024 YR4. ஆனால் இது, 2032இல் நிலவைத் தாக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதனால் ஏற்படும் வெடிப்புகளால் விண்ணில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்
இடி, மின்னல் தடுப்பதற்கு இடிதாங்கியை கண்டுபிடித்தவர் அமெரிக்காவின் பெஞ்சமின் பிராங்ளின். உயரமான கட்டடங்களின் உச்சியில், கூர்முனை உள்ள ஒரு தடித்த கம்பி பொருத்தப் படுகிறது . அதுதான் இடிதாங்கி. அந்தக் கம்பி பூமி வரை இழுக்கப்பட்டு பூமியினுள் புதைக்கப்படும். இதற்கு எர்த்திங் என பெயர். இப்படி செய்வதன் மூலம் கட்டடத்தின் மேல் இடி, மின்னல் விழும்போது அதிலுள்ள மின்சாரம், இடிதாங்கி மூலம் பூமிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கட்டடம் பாதிப்பது தடுக்கப்படுகிறது. மழைக்காலங்களில்இடி, மின்னலால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
ரோகிணி பாட்டீல் 2017 ஆம் ஆண்டு தேனீ வளர்ப்பைத் தொடங்கி,மருத்துவ தாவரங்களுடன் கூடிய காடுகளில் தேனீ பெட்டிகளை வைத்து இயற்கை தேனை உற்பத்தி செய்து தனது வீட்டிலிருந்து நேரடியாக விற்பனை செய்கிறார். மகரந்தச் சேர்க்கைக்காக விவசாயிகளுக்கு தேனீ பெட்டிகளையும் விற்பனை செய்கிறார், மேலும் ஒரு முதன்மை பயிற்சியாளராகவும்உள்ளார்.தேன் உற்பத்திக்காக தேனீ வளர்ப்பு பற்றிய செய்தித்தாள் விளம்பரத்தைப் பார்த்தாள். ஆர்வத்துடன், அவள் அதைப் பற்றி மக்களிடம் கேட்கத் தொடங்கினாள், ஆனால் தேனீக்களை எவ்வாறு தேன் உற்பத்தி செய்ய வளர்க்க முடியும் என்பது யாருக்கும் தெரியாது.மகாபலேஷ்வரில்உள்ள காதிகிராம் உத்யோக் தேனீ வளர்ப்பு பயிற்சி நிறுவனம் தேனீ வளர்ப்பில்பயிற்சி அளிப்பதாக உள்ளூர் விவசாய அதிகாரி ஒருவர் அவரிடம் கூறினார். "நான் ஏப்ரல் 2014 இல் அங்கு சென்றேன், ஆனால் என் குழந்தைக்கு ஆறு மாத வயதுதான் என்பதால் பயிற்சி பெற முடியவில்லை. 35 உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடிந்தால் பயிற்சிக்காக என் கிராமத்திற்கு வர அவர்கள் ஒப்புக்கொண்டனர்," என்று ரோகிணி கூறுகிறார். . "தேனீக்களை வளர்ப்பது மற்றும் பராமரித்தல் மற்றும் தேன் எடுப்பது உள்ளிட்ட ஐந்து நாட்களுக்கு அந்தக் குழு எங்களுக்குப் பயிற்சி அளித்தது," என்று அவர் கூறுகிறார்.பயிற்சிக்குப் பிறகு, 15 பெண்கள் தேன் வளர்ப்பு (தேனீ வளர்ப்பு) சுய உதவிக் குழுவை உருவாக்கி, தலைநகருக்கு தலா ரூ.5,000 பங்களித்தனர்."இருப்பினும், பெரும்பாலான பெண்கள் பிற வருமான வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருந்ததால், அந்தக் குழு நீண்ட காலம் நீடிக்கவில்லை," என்று அவர் கூறுகிறார்.2017 ஆம் ஆண்டில், ரோகிணி தனியாக செல்ல முடிவு செய்தார்."சுய உதவிக் குழுக்களின் மற்ற உறுப்பினர்களின் மூலதனத்தைத் திருப்பித் தந்த பிறகு, முதலீட்டிற்கு என்னிடம் பணம் இல்லை.தனது நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கிய பிறகு, ரோகிணி கோலாப்பூரில் உள்ள ஒரு விற்பனையாளரிடமிருந்து ரூ.2700 மதிப்புள்ள 35 மரத் தேனீ பெட்டிகளை வாங்கினார். பாதுகாப்பு உபகரணங்கள், தேன்கூடு, பிரேம்களிலிருந்து அவற்றை அகற்றுவதற்கான தேனீ தூரிகை, தேன் பிரித்தெடுக்கும் கருவி, ராணி பிடிப்பான் மற்றும் ராணி விலக்கு கருவி ஆகியவற்றிலும் முதலீடு செய்தார்.இன்று, ரோகிணி ஆர்கானிக் தேன் மற்றும் தேனீ காலனிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டுகிறார். "நான் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன். தேவை அதிகமாக இருப்பதால், நான் எந்த மொத்த விற்பனையாளரையோஅல்லது சில்லறை விற்பனையாளரையோ அணுக வேண்டியதில்லை. வாங்குபவர்கள் என்வீட்டுத் துறைக்கே வருகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். ரோகிணியின்தேன் சத்தாராவில் உள்ள கொய்னா அணையைச் சுற்றியுள்ள காடுகளில் தனது தேனீபெட்டிகளை வைப்பதால் சிறப்பு வாய்ந்தது.பின்னர் தர்மா லைஃப் என்ற அரசு சாரா நிறுவனத்தின் ஆதரவுடன் ரோகிணி பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் கற்றுக்கொண்டார். "அதுதான் 'ஃபாரஸ்ட் ஹனி' என்ற எனது பிராண்டைத் தொடங்க என்னைத் தயார்படுத்தியது," என்று அவர் கூறுகிறார்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11 ஏக்கர் நிலப்பரப்பில், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் . மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில், . 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,300 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு,இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லு நர்களுடன் ஆலோசித்து மின்கோபுரம் அமைக்ப்பட்டுள்ளது.. மைதானம் அதன் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ் நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்.,ஐ.பி.எல்., . ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.இதை இந்திய முன்னாள் கேப்டன் டோனி இன்று திறந்து வைக்கிறார்.
சீனாவில் ஓவி ராப்டோரோசாரி யன் இனத் சேர்ந்த டைனோசரின் தொல்லெச்சத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.11 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறுகின்றனர்.சமீபத்தில் எகிப்து நாட்டில் முற்றிலும் வித்தியாசமான ஒரு படிமத்தைத் தொல்லியலாளர் கண்டெ டுத்தனர். இது 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினத்துடையது. இது இன்றைய கழுதைப் புலியைப் போன்றது.
50 ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் குடிநீர் தேவைக்கு இறக்குமதியை நம்பி இருந்த சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகள். இன்று மழை நீர் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் ஆகியவற்றின் மூலம் நீர்ப்பற்றாக்குறை இல்லாதநிலையை எட்டியுள்ளன. மழைநீரை ஒரு மதிப்புமிக்க இயற்கை வளமாக உலக நாடுகள்அறிவித்து உள்ளன. மழைநீர் சேமிப் பின் பலன்கள் குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தி வருகின்றன.வீடுகளில் சரியான மழைநீர் சேகரிப்பு அமைப்புக்களை நிறுவினால், வீடுகளில் விழும் மழைநீர் தெருவில் ஓடி சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவது தடுக்கப்படுகிறது. மழைநீரை சேமிப்பதால், வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து விடுகிறது.பொதுவாகவே பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை கலந்து காணப்படும். மழைநீர் சேகரிப்பு மூலம் சேகரிக்கப்படும் மழைநீர் இயற்கையாகவே மென்மையாகவும், ரசாயனங்கள், உப்பு மற்றும் தாதுக்கள் இல்லாத தூய நீராக இருப்பதால், தாவர வளர்ச்சிக்கும் மண்ணை வளமாக்கவும் உதவுகிறது.விவசாயிகள் பாசனத்திற்காக மழைநீரை சேமித்து வைக்கும்போது, வறட்சி நிலைமைகளில் விவசாயம் தங்கு தடையின்றி நடைபெற உதவுகிறது. பூமியின் நீரில் 97 சதவீதத்திற்கும் அதிகமானவை கடல்களில் உப்பு நீராக காணப்படுகின்றன. குடிக்க தகுந்த நீர் வெறும் 3 சதவீதம்தான். எனவே.. மழைநீர் என்பது அனைத்தையும் விட மதிப்புமிக்கது.
ஒரு குடும்பம் தங்கள் குழந்தையின் மூளை அறுவை சிகிச்சைக்கு $83,000 மதிப்புள்ள ஏலத்தில் நிதியளிக்க ரொனால்டோவிடம் பூட்ஸ் கேட்டது. அதற்கு பதிலாக, அவர் அமைதியாக முழு செலவையும் தானே செலுத்தினார்.
அமெரிக்காவில் டாட் காம் நிறுவனங்கள் இண்டர்நெட் வசதி அறிமுகமான காலத்தில் அதிக ளவில் தொடங்கப்பட்டன. இதை ஸ்டார்ட் அப் நிறுவனம் என வகைப்படுத்தினர். புதுமையுடன் வரும் தொழில்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக மாறுகின்றன. உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் தொழிலே வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் ஓட்டல் உணவை டெலிவரி செய்வதுதான். இந்நிறுவனங்கள் அதை ஒரு தொழில்நுட்பத்துடன் இணைத்து,அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஓட்டலின் பெயர், அங்குள்ள உணவு வகைகள், அதில் வாடிக்கையாளர்களுக்கு தனக்கு பிடித்த உணவை தேர்ந்தெடுப்பது, அந்த உணவு எவ்வளவு நேரத்தில் டெலிவரியாகும், அதற்கான கட்டணம் என்ன, யார் அந்த உணவை டெலிவரி செய்கிறார்கள் என அவர்களின் செயலியை (ஆப்) வடிவமைத்துள்ளனர். இதனால்மிக எளிதாக இருந்த இடத்தில் இருந்தே வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்து சாப்பிடமுடியும். அதாவது புதுமையுடன் விரைவில் வளரக்கூடிய நிறுவனங்களே ஸ்டார்ட் அப் நிறுவனம் எனப்படுகிறது.ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி ,மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கும் வகையிலான ஐடியா மட்டுமே இருந்தால் தொழிலே ஜெயிக்கலாம்.
பிரபஞ்சத்தில் எண்ணற்ற கேலக்ஸிகள் உள்ளன. நம்மால் கண்டுபிடிக்கப் பட்ட மிகப் பெரிய கேலக்ஸிகளுள் ஒன்று NGC 253. இது பூமியிலிருந்து 1.15 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. 1783ஆம் ஆண்டு கரோலின் ஹெர்செல் எனும் ஜெர்மனிய விண்வெளி ஆய்வாளர் இதைக் கண்டுபிடித்தார். இதற்கு வெள்ளிக் காசு கேலக்ஸி, வெள்ளி டாலர் கேலக்ஸி முதலிய பெயர்கள் உள்ளன.மிக அதிக அளவில் நட்சத்திரங்கள் உருவாகி அழிகின்ற கேலக்ஸிகளுள் இதுவும் ஒன்று. முதன்முறையாக உலகஅறிவியல் வரலாற்றில் இதைத் துல்லியமாகப் படமெடுத்துள்ளனர் விஞ்ஞானிகள்.தென் அமெரிக்க நாடான சிலியின் அடகாமா பாலைவனத் தில் உள்ள,.ஐரோப்பிய தெற்கு கோளரங்க ஆய்வகத்தின் (ஈஎஸ்ஓ) மிகப் பெரிய தொலைநோக்கி (விஎல்டி). இதைக் கொண்டு வெள்ளிக் காசு கேலக்ஸியைப் படமெடுத்துள்ளனர். இந்தப் படத்தில் 500 நட்சத்திரங்கள் உருவாவது பதிவாகி உள்ளது.ஒரு கேலக்ஸியில் அதிகபட் சம் 100 நட்சத்திரங்கள் உருவாகலாம். அதற்கு மேல் இதுவரை பதிவாக வில்லை. இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில்ஆழ்த்தியுள்ளது.இந்த கேலக்ஸியின் படத்தை எடுக்க விஞ்ஞானிகளுக்கு 50 மணிநேரம் தேவைப்பட்டது.ஏனென்றால் இந்த கேலக்ஸி 65,000 ஒளி யாண்டுகள் அகலமானது. ஒரே நேரத்தில் இவ் பெரிய கேலக்ஸியை படமெடுப்பது கடினம். அதனால் இதன் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக 100 படங்கள் பிடித்து அவற்றை இணைத்துள்ளனர். இந்த ஆய்வு பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்துத் தெரிந்து கொள்ள உதவும். வருங்காலங்களில் இந்த கேலக்ஸியில் நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன, வாயுக்கள் எப்படி நகர்கின்றன என்ற ஆழமான ஆய்வுகள் நடத்தப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
காந்தங்களில், எலக்ட் ரான்களின் சுழற்சிகள் ஒரே திசையில் இருக்கும். ஆனால் நிக்கல் அயோடைடு படிகத்தால் ஆன பி-வேவ் காந்தத்தில், எலக்ட்ரான்களின் சுழற்சிகள் ஒரு சுழல் வடிவில் (Spiral Pattern) அமைந்துள்ளன.எலக்ட்ரான்கள் இந்த வகையில் சுழல்வதில் மிகப்பெரிய நன்மை உண்டு. மிகமிக கம்மியான மின்சாரத்தூண்டல் அல்லது ஒளிக்கதிர் பாய்ச்சல் மூலம், பி-வேவ்எம் .ஐ.டி., இயற்பியலாளர்கள், 'பி-வேவ் காந்தம் என்ற புது தினுசான் காந்தத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை காந்தத்தை கணினி எரு நினைவகச் சில்லுகளில் (Memory Chips) பயன்படுத்தினால், அவற்றின் செயல்பாட்டை பலமடங்கு வேகப்படுத்த முடியும்.காந்தத்தின் காந்த ஆற்றலை உயர்த்தவோ, குறைக்கவோ முடியும்.இந்த வகை காந்தத்தால் இயங்கும் நினைவுச் சில்லுகள் எளிதில் சூடாகாது என்பதோடு, இவற்றின் மின் நுகர்வும் மிகக் குறைவாகவே இருக்கும். இது தற்போதையதொழில்நுட்பத்தை விட ஐந்து மடங்கு வரை மின் தேவைகளைக் குறைக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.தற்போதைக்கு, பி -வேவ் காந்தம் மிகக் குளிர்ந்த 213 டிகிரிசெல்ஷியஸ் வெப்ப நிலையில் மட்டுமே செயல்படுகிறது.அறை வெப்பநிலை யில் இயங்கக்கூடிய பி -வேவ் காந்தத்தை உருவாக்குவதே, அமெரிக்க எம். ஐ. டி விஞ்ஞானிகளின் அடுத் தகட்ட இலக்கு. அது சாத்தியமானால், கணினி தொழில்நுட்பத்தில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருக்கும்.