இயற்கையில் ஒவ்வோர் உயிரும் மற்றோர் உயிரைச் சார்ந்து தான் வாழ்கிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். விலங்குகள், தாவரங்கள் ஏதேனும் ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றன. இதேபோல இரண்டு வெவ்வேறு விலங்குகள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்ளும்.சமீபத்தில் வரிக்குதிரைகள் ஒட்டைச்சிவிங்கி களுக்கு இடையே இப்படியான நட்பு இருப்பது முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள புல்வெளிகளில் வாழும் வரிக்குதிரைகள் இடையே ஓர் ஆய்வை உயிரியலாளர்கள் மேற் கொண்டார்கள். ஆறு வரிக்குதிரைகளின் கழுத்துகளில் வீடியோ கேமரா வைக்கட்டி வைத்தார்கள். இதன்மூலம் அவை எங்கெல்லாம் செல்கின்றன, எந்த விலங்குகளுடன் எல்லாம் ஒருங்கிணைந்து வாழ்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகளுடன் இணைந்து வரிக்குதிரைகள் புல் மேய்வது, தண்ணீர் குடிப்பதுமாக இருந்தது தெரிய வந்தது.ஆனால் இவற்றை விட அதிகமான நேரத்தை ஓட் டகச் சிவிங்கிகளுடன் தான் வரிக்குதிரைகள் செலவிட்டுள்ளன.ஏன் இந்த இரண்டு விலங்குகளுக்கு இடையே மட்டும் இப்படியான நெருக்கம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அப்போதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. அதாவது ஒட்ட கச்சிவிங்கிகள் உயரமாக இருப்பதால் துாரத்தில் வரும் ஆபத்தை முதலி லேயே கண்டு உணர்ந்து எச்சரித்து விடுகின்றன.அதேபோல் வரிக் குதிரைகள் பொதுவாகக் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவதால், எதிரி விலங்குகள் அவ்வளவு சுலபமாகத் தாக்க முற்படுவதில்லை.இதனால் இவற்றுடன் சேர்ந்திருக்கும் ஒட்டகச் சிவிங்கிகளும் பாதுகாப்பு பெறுகின்றன. இந்த வகையில் இரண்டு விலங்குகளும் ஒன்றுக்கொன்று உதவி வாழ்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது
உலகின் மிக ஒல்லியான கார் இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் 'பிளான் பான்டா', சாதாரண கார்களை போல நான்கு சக்கரங்கள் உள்ளன. ஆனால் இதன் அகலம் வெறும் 50 செ.மீ., மட்டுமே. ஒருவர் மட்டுமே உட்கார்ந்து, அவரே ஓட்டிச் செல்லவும் வேண்டும். ஓட்டுநர் இருக்கையின் இருபுறமும் கதவு உள்ளது. பின்புறம் சிறிய இடம் மட்டுமே உள்ளது. மின்சாரத்தில் இயங்கும். இதன் எடை 264 கிலோ. உயரம் 145 செ.மீ. நீளம் 340 செ.மீ. இது மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் தான் செல்லும். இது விற்பனைக்கு அல்ல என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலைNH 44 மிக நீளமானது, மொத்த நீளம் சுமார்4,112 கிலோமீட்டர்கள். இருப்பினும், உலகின் மிக நீளமான சாலையைப் பற்றிப் பேசும்போது,அதன் நீளம் மிக அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு500 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும், அதை முடிக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாகும். இந்தச் சாலை, ஒரு யூடர்ன் கூட இல்லாமல் மொத்தம்14 நாடுகளைக் கடந்து செல்கிறது. பான்அமெரிக்கன் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும், இந்த சாலை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாதை வட அமெரிக்காவை தென் அமெரிக்காவுடன் இணைக்கிறது. இது வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ப்ருதோ விரிகுடாவில் தொடங்கி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் முடிகிறது. ஒட்டுமொத்தமாக, இதன் நீளம் 30,600 கிலோமீட்டர்கள் அல்லது 19,000 மைல்கள்..பான்அமெரிக்கன் நெடுஞ்சாலை என்பது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, குவாத்தமாலா, பனாமா, கொலம்பியா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட மொத்தம் 14 நாடுகளின் வழியாகச் செல்லும் ஒரு சாலையாகும். இது வெறும் சாலை அல்ல; இது பல்வேறு நாடுகளின் பாரம்பரியத்தையும் வாழ்க்கை முறையையும் இணைக்கும் ஒரு வரலாற்று மற்றும் கலாச்சாரப் பயணமாகும். இந்த நெடுஞ்சாலையைப் பராமரிப்பது அமெரிக்காவின் பொறுப்பு மட்டுமல்ல; அது கடந்து செல்லும்14 நாடுகளும் அதன் பராமரிப்பில் பங்கேற்கின்றன.இந்தப் பாதையில் பயணிக்கும்போது,எல்லா வகையான இயற்கைக் காட்சிகளையும், சில சமயங்களில் பாலைவனங்களையும், சில சமயங்களில் உயர்ந்த மலைகளையும், அடர்ந்த காடுகளையும், சில சமயங்களில் கடலின் கரைகளையும் காண முடிகிறது. பயணம் மிகவும் அழகாக இருப்பதால், பயணம் எப்படி செல்கிறது என்பதை நீங்கள் உணரவே மாட்டீர்கள்பான்..அமெரிக்க நெடுஞ்சாலையின் கட்டுமானம்1920களின் முற்பகுதியில் தொடங்கியது. அமெரிக்காவில் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். 1937 ஆம் ஆண்டில், இந்த சாலையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக 14 நாடுகளும் பரஸ்பர உடன்பாட்டை எட்டின, இறுதியாக இது 1960 இல் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் ரயில் சேவைகளை ஒரே செயலியில் ஒருங்கிணைக்கும் விதமாக ரயில்வே துறைRailOne செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.புறநகர் ரயில்களுக்கு டிக்கெட் புக் செய்யUTS செயலி, வெளியூர் முன்பதிவுகளுக்குIRCTC,RailConnect என ஒவ்வொன்றுக்கும் பல செயலிகள் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில் தற்போது அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து RailOne செயலி அறிமுகமாகியுள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். Rail One செயலியில் உள்ள வசதிகள்:முன்பதிவு டிக்கெட்டுகள், முன்பதிவில்லா டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளும் வசதிரயில் வந்து சேரும் நடைமேடை எண், கோச் வரிசை, ட்ராக்கிங், பிஎன்ஆர் நிலை சரிபார்த்தல் உள்ளிட்ட வசதிகள்பயண திட்டமிடுதல், ரயில் சேவை உதவி எண்கள் மற்றும் விவரங்கள்ரயிலில் உணவு முன்பதிவு செய்தல், ஆன்லை ஆர்டர் செய்யும் வசதிரயில் டிக்கெட்டுகளை யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதிரயில்வே இ வாலெட்டில் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு எளிதாக டிக்கெட் புக் செய்யும் வசதிMPIN மற்றும் பயொமெட்ரிக் லாக் இன் வசதிகள், கெஸ்ட் லாக் இன் வசதிகள்.
இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள், ஜூலை 8-ஆம் தேதி சந்தையில் ,நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ்4ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், உள்நாட்டுத் தயாரிப்பாக மட்டுமன்றி, உலக சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.இரண்டு மாடல்களுமே அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் வரவிருப்பதுடன், அவற்றின் விலை ₹5,000-லிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:செயலி: யூனிசோக் T8200 புராசஸர். இயங்குதளம்: நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் (Next Quantum OS). கேமரா: பின்புறத்தில் இரட்டை 50MP கேமரா அமைப்பு. பேட்டரி: 5000mAh பேட்டரி திறன். நினைவகம்: 6GB ரேம் (உள் நினைவகம்), 128GB சேமிப்புத் திறன். விரிவாக்கக்கூடிய நினைவகம்: 1TB வரை மெமரி கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம். நிறங்கள்: கருப்பு, நீலம், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். நோவா பிளஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: செயலி: யூனிசோக் T7250 புராசஸர். கேமரா மற்றும் பேட்டரி: நோவா 5ஜி மாடலில் உள்ள அதே பேட்டரி மற்றும் கேமரா அம்சங்கள். இயங்குதளம்: நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் (Next Quantum OS). இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன், இந்தத் தொழில்நுட்பத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு என்பது தவறு செய்யவே செய்யாது என்றில்லை என்றும், அது தவறான தகவல்களையும், கணிக்க முடியாத முடிவுகளையும் உருவாக்கக்கூடியதே என்றும் ஆல்ட்மன் தெளிவாக விளக்கினார். எனவே அதை முழு அளவுக்கு மக்கள் நம்ப வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார். சாட்ஜிபிடிக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவரே இப்படிப் பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "மக்கள் சாட்ஜிபிடி மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அவ்வாறு செய்யாதீர்கள். ஏனென்றால், செயற்கை நுண்ணறிவும் தவறுகளை செய்யும்" என்று அவர் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.சாட்ஜிபிடி எங்கள் தயாரிப்பாக இருந்தாலும் குறித்து சில உண்மைகளை நேர்மையாக பேச வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தின் உண்மை தன்மை என்பது மிக சிறப்பானது அல்ல" என்றும் அவர் கூறினார்.
கனடாவின் மிசிசாகாவில் உள்ள கிரெடிட் நதிக்கரையில் இந்திய சமூக உறுப்பினர்கள் குழு ஒன்று'கங்கா ஆரத்தி' நிகழ்த்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.கனடாவில் உள்ள கிரெடிட் நதிக்கரையில்'கங்கா ஆரத்தி' நிகழ்த்தப்பட்டதுஇந்த நிகழ்வு மிசிசாகாவில் உள்ள எரிண்டேல் பூங்காவில் ரேடியோ டிஷூம் ஏற்பாடு செய்ததுஇந்திய தூதர் சஞ்சீவ் சக்லானி இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்இந்திய சமூகத்தினர்'கங்கா ஆரத்தி' நிகழ்த்தும்இந்த வீடியோ வைரலாகி, ஆன்லைனில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் தூண்டியுள்ளது.இந்திய புலம்பெயர்ந்தோர் கிரெடிட் நதிக்கரையில் புனிதமான கங்கா ஆரத்தி சடங்கை மீண்டும் உருவாக்கினர். ரேடியோ டிஷூம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, மிசிசாகாவில் உள்ள எரிண்டேல் பூங்காவில்பக்தர்கள் பாரம்பரிய உடையில் கூடினர் .டொராண்டோவில் உள்ள இந்தியத் தூதரகம்,X இல் ஒரு பதிவில், நிகழ்வின் படங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், தூதர் சஞ்சீவ் சக்லானி விழாவில் கலந்து கொண்டதை உறுதிப்படுத்தியது. "மிசிசாகாவின் எரிண்டேல் பூங்காவில் உள்ள கிரெடிட் நதிக்கரையில் @RadioDhishum குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட தெய்வீக மந்திரங்கள் மற்றும் பக்தி மந்திரங்களின் ஆத்மார்த்தமான மாலைப் பொழுதான கங்கா ஆரத்தியில் தூதர் சஞ்சீவ் சக்லானி தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்" என்று பதிவில் கூறப்பட்டுள்ளது
மயில் சிலந்தி: இதன்வயிற்றுப் பகுதி வண்ணங்களால் நிரம்பி இருக்கும். ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. அண்டை நாடான சீனாவிலும் இருக்கிறது. வேகமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.ஜெர்போவா: பாலைவனப் பகுதியில்காணப்படுகிறது. நீண்ட காதுகளை உடையது. கங்காரு போல் கால்கள் உடையது. மணிக்கு, 24 கி.மீ., வேகத்தில் ஓடும். இதற்கு கேட்கும் திறன் அதிகம். ஆறு ஆண்டுகள் வரை வாழும். மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.ஆஸ்ட்ரோகோட்ஸ்: ஒரு வித கடல்வாழ் உயிரினம். 30 மி.மீ., வரை வளரக் கூடியது. உடல் அளவோடு ஒப்பிடும் போது, அதிக விந்தணுவை உற்பத்தி செய்யும் திறன் உடையது.உலகின் வேறெந்த உயிரினத்திற்கும், இத்தகைய திறன் கிடையாது.கோபிளின் சுறா: ஆழ் கடல்பகுதியில் மட்டுமே வசிக்கும் அரிய வகை இனம். நான்கு மீட்டர் வரை வளரக் கூடியது. பிங்க்நிறத்தில் இருக்கும். இதன் தோல் தாடை பகுதிக்கு மேலே நீட்டியபடி இருக்கும். வினோத மூக்குப் பகுதி இந்த உயிரினத்ன வேறுபடுத்தி காட்டும்.ஆக்ஸலோடிஸ்: வட அமெரிக்க நாடானமெக்சிகோவில் உள்ளது. இதிலிருந்து உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது பார்ப்பதற்கு சாலமாண்டர் போல இருக்கும். இதை, நடக்கும் மீன் என்று அழைப்பர்.இதன் ஆயுளில் அதிக காலம் இளமை பருவமாகவே கழிகிறது.ஜியோடக்ஸ்: அதிக ஆயுட்காலம்உடைய உயிரினங்களில் ஒன்று.கிராபிக்ஸ் படங்கள் போல இருக்கும். வட அமெரிக்க நாடான கனடாவின் மேற்கு பகுதியில் அதிகம் உள்ளது. அதிகபட்சமாக, 20 செ.மீ., வரை வளரும். இது, 140 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. சில, 168 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.டப்டட் மான்:குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வசிக்கும் உயிரினம். அண்டை நாடான மியான்மர் மற்றும் மத்திய சீனப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும், ஜோடியாகவே காட்டில் உலவித் திரியும். மிகவும் அழகு வாய்ந்தது.
நாம் கட்டடத்தில் பயன்படுத்தும் சாதாரண பொருட்களையே சற்று மாற்றி வடிவமைத்தால் வலிமையை அதிகரிக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி., பல்கலை கண்டறிந்துள்ளது.பொதுவாக மனித இனம் இயற்கையில் உள்ள விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து அவற்றை தமக்குத் தகுந்தாற் போல் பயன்படுத்தி வருகிறது.ஆர். எம்.ஐ.டி., பல்கலை விஞ்ஞானிகள் வீனஸ் ப்ளவர் பாஸ் கெட்' எனும் ஒரு வகை கடற்பஞ்சுகளின் எலும்புக் கூட்டை ஆராய்ந்த னர். அதில் இருக்கும் பின்னல் மாதிரியானஅமைப்பால் தான் இந்தக் கடற்பஞ்சு இவ்வளவு வலிமையுடன் இருக்கிறது என்பதை உணர்ந்தனர்.இவற்றின்மீதுஎப்பேர்ப்பட்டவிசையைச்செலுத்தினாலும்அவற்றைச்சரிசமமாகப்பிரித்துவிடுவதால்இவைஉருமாறாமல், நிலைகுலையாமல் இருக்கின்றன என்பது ஆய்வில் தெரிந்தது.எனவே,தெர்மோ பிளாஸ்டிக் பாலியுரி தேன் எனும் ஒருவகை நெகிழியை 3 டி பிரின் டிங் முறையில் கடற் பஞ்சுகளின் எலும்புக் கூட்டின் அதே வடிவில் உருவாக்கினார்கள்.இது மற்ற வடிவங்களை விட வலிமையுடன் இருந்தது. இதேபோல் இரும்புக் கம்பிகளை வடிவமைத்து அவற்றைக் கட்டடங்களில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதே வடிவமைப்பில் மருத்துவ, விளை யாட்டு, பாதுகாப்புக் கருவிகளை உருவாக்க முடியும்.
தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவைதான் நெல்லிக்காயின் பூர்வீகம். இது பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது.நெல்லிக்காயில் நட்சத்திர நெல்லிக்காய் என்ற ஒரு வகை உண்டு. பார்ப்பதற்கு நட்சத்திரம் போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் இந்தப் பெயரால் குறிப்பிடப்படுகிறது. இது அரை நெல்லிக்காய் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அதிகளவு நெல்லிக்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 மில்லி கிராம் வைட்டமின் தேவைப்படுகிறது. பெரிய நெல்லிக்காயில் ஏறத்தாழ 600 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. உடலில் உள்ள சூட்டைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும் தன்மையும் நெல்லிக்காய்க்கு உண்டு.