25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நலம் வாழ

Oct 10, 2023

பிரெட் அதிகம் -சாப்பிடக்கூடாது

பெரும்பாலானோர் காலை சிற்றுண்டி உணவுக்கு பிரெட் சாப்பிடுவது வழக்கம்ஆனால் மைதா மாவில் தயாரிக்கப்படும் பிரெட், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.மாறாக அதில் சேர்க்கப்படும் பொருட்களால் பிரெட் பல நாட்கள் கெடாமல் இருக்கும், ஆனால் பல்வேறு உடல் உபாதைகள், மற்றும் சில நோய்களுக்கு வழிவகுக்கும்.அதில் சேர்க்கப்படும் மூலப்பொருள் ஈஸ்ட் பூஸ்டர், சர்க்கரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.அதிகம் சாப்பிட்டால் வயிறு கோளாறுகள் செரிமான பிரச்சனைகளை அதிகரித்துவிடும்.பிரெட் கெட்டு போகாமல் இருக்க சேர்க்கப்படும் வேதிபொருகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும், ஆனால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

Oct 07, 2023

ஆலம்பழம்

...ஆலமரத்துப் பால், இலைகள், பட்டை கனிகள். விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவ பொருட்களாக பயன்படுகின்றன. ஆலம்பழம் தசை வயிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்கு பிரச்சினைகளை நீக்க வல்லது பல்வலி ஏற்படும் நேரத்தில்,ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி தீரும். சரும பளபளப்பிற்கும் ஆலம்பழம் ஏற்றது.ஆலமரத்தின் பழங்களைகொண்டு ஆண் மற்றும் பெண்இருவருக்கும் கருத்தரிப்பு குறைபாடுகள் சிறியதாக இருக்கும்பட்சத்தில் அதை நீக்க முடியும். பெண்களுக்கு கர்ப்பப்பையில் உண்டாகும் சிறு குறைபாடுகளை நீக்கும். சிலருக்கு கர்ப்பப்பை வீக்கம் இருக்கும் இந்தவீக்கத்தை கட்டுப்படுத்தவும் இது உதவும். மாதவிடாய்கோளாறை குணபப்டுத்தி சீரான மாதவிடாயை உண்டாக்கும். வெள்ளைப்படுதலை குணமாக்கும்.சருமத்துக்கும் நன்மை செய்யும் குணம்இதற்கு உண்டு. ஆலம் மரத்தின்பழமானது மூலநோயை குணப்படுத்தும்.வளரும் குழந்தைகளுக்கு அவ்வபோது பாலில் சிட்டிகை பொடிகலந்து கொடுத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். ஆலம் மரத்தின் பழங்களில்இருக்கும் செரடோனின் என்னும் பொருள் மனஅழுத்தத்தையும் மன சோர்வையும் குணப்படுத்தும்.ஆலம்மரத்தின் பழத்தை வாரம் ஒருமுறைஅனைவருமே பாலில் கலந்து குடிக்கலாம். வளரும் பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். இதை மருந்தாக எடுத்துகொள்ளநினைப்பவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனைபெற்று எடுப்பது நல்லது. 

Oct 06, 2023

சாரபருப்பு

சார பருப்பில் புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச் சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின்- பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.சாரப்பருப்பு குளிர்ச்சி தன்மை கொண்டது. இது இயற்கையாகவே உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், கூட நினைப்பவர்கள் தினமும்10 கிராம் சார பருப்பு சாப்பிடலாம்.சாரப்பருப்பு குடல் இயக்கங்களை முறைப்படுத்தும், மேலும் வயிற்று பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்..  ஆயுர்வேத மருந்துகளில், சாரபருப்பு பெரும்பாலும் சருமத்தில் அரிப்பு, வேர்க்குரு போன்ற சரும சிகிச்சையளிப்பதற்கான தயாரிப்புகளில் சேர்க்கப்படுகிறது.

Oct 05, 2023

Tonsil , தொற்று நோய் 

குழந்தை முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்று காரணமாக உள்நாக்கு வீக்கம் உண்டாகும்.இந்த உள்நாக்கு வீக்கத்தை Tonsilitis என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது.உள்நாக்கு வீங்கி வளர்ந்துவிடும்,அதை அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது முறையான சிகிச்சையாகும்.உள்நாக்கில் வீக்கம் மற்றும் சதை வளர்வதை ஆரம்ப கட்டத்திலேயே, இயற்கையான பொருட்களைகொண்டுமிகஎளிமையானமுறையில்குணப்படுத்தலாம்.10-15 பூண்டு பல் எடுத்து, அதை இடித்து சாறு பிழிந்து கொள்ளவும்இந்த சாற்றை ஆள்காட்டி அல்லது நடுவிரலில் தொட்டு உள்நாக்கு வளர்ச்சியின் மீது தடவி வந்தால் விரைவில் வீக்கம் கரையும்.தொடர்ச்சியாக இவ்வாறு செய்து வந்தால் பூரண குணம் பெறலாம்.

Oct 04, 2023

சுண்டைக்காய்

சுவாசம் சம்பந்தப்பட்டநோய்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி, சுண்டைக்காய் வற்றல் செய்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் தணியும், இந்த நோயினால் வரக்கூடிய உடற் சோர்வு வயிற்றுப் பொருமல், கை கால் நடுக்கம், மயக்கம் முதலியவற்றை நீக்கக்கூடிய சக்தி இதில் உள்ளதுஹீமோகுளோபின் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு மருந்தாக பயன்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான வயிற்று வலி அஜீரணம் செரிமான பிரச்சனை போன்றவற்றை தீர்க்க சுண்டைக்காய் பயன்படுகிறது.பெண்களுக்கு பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது வழக்கம். அப்படி ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்ய சுண்டைக்காய் பயன்படுகிறது. இதில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது.தலைசுற்றல் சோர்வு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை போக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது.

Oct 03, 2023

மூட்டு முழங்கால் வலி குறைய ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ள இந்த எண்ணெயை உடல் பயன்பாட்டிற்காகவும் பல விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சன்னைக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் 1-2 சொட்டு உட்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.உடல் சுளுக்கு மசாஜ் செய்யலாம், நல்ல நிவாரணம் கிடைக்கும்.பித்தம் காரணமாக கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது, தினமும் இரவில் 2 சொட்டு தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.முடி உதிர்வதற்கு தேங்காய் எண்ணெயில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து தடவினால், முடி உதிர்வது நின்றுவிடும்.உடல் சூடு, மற்றும் மாதாவிடாய் நாட்களில் ஏற்படும், வலிக்கு எண்ணெய் தடவினால் தசை பிடிப்பு, வயிற்று வலி நீங்கும்.கணினியில்நீண்டநேரம்வேலைசெய்பவர்கள்,இரவில்கண்களுக்குமேல்எண்ணெய்துளிகள்தடவினால்,கண்குளிர்ச்சியடையும்.மூட்டு, முழங்கால்களில்எண்ணெய் தடவினால், விரைவில் வலி குறையும்.

Sep 30, 2023

நீரிழிவு  நோயாளிகளுக்கு, நினைவாற்றலுக்கு முருங்கைப்பூ

நீரிழிவு நோயாளிகள்,முருங்கைப்பூவை அடிக்கடிசமைத்து சாப்பிடலாம்..உடல் சூட்டை தணிக்கக்கூடியது இந்த பூ.. பெண்களுக்கு ஏற்படும்.உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது..நினைவாற்றலுக்கு, இந்த முருங்கைப்பூ பொரியல்குழந்தைகளுக்குசெய்து தரலாம்.. அல்லது, முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்கவைத்து, அத்துடன் பனங்கல்கண்டு கலந்து,தினமும் காலை, 2 வேளையும்  குடித்துவந்தாலும், நினைவாற்றல். அதிகரிக்கும்.முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, பிறகு அந்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.. கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்கள் இந்த முருங்கை பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து கொள்ள வேண்டும்.அல்லது, இந்த பூவை. நிழலில் உலர்த்திகாயவைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்..

Sep 29, 2023

சமையலில் தவிர்க்க முடியாத வெந்தயம்

முந்தின நாள் இரவு வெந்தயம் அல்லது சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இந்த பானத்தை குடிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி ஏற்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.சீரகத் தண்ணீர் செரிமான பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்டது.சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று வெந்தயம், ஆனாலும் கூடபலருக்கு அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. கிராமங்களில் உள்ளபெரியவர்கள் பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்தால், உடனேவெந்தயத்தை வாயில் போட்டு மென்று மோரைகுடிக்க சொல்வார்கள். வயிற்று வலி நீக்குவதோடு உடல் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

Sep 27, 2023

களாக்காய் சாப்பிட்டால்

மிகவும் அதிகம் கிடைக்கும் அதே நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் களாக்காய் சாப்பிட்டால் மிகப்பெரிய அளவில் உடலுக்கு நல்லது என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் களாக்காய் மிக அதிகமாக கிடைக்கும். புளிப்பு இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்டாய்ந்த களாக்காய் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கின்றன.  ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை களாக்காய் சீசன் உண்டு. வைட்டமின் சி பி இரும்பு சத்து மாங்கனிசியம் பொட்டாசியம் காப்பர் உள்பட பல சத்துக்கள் இந்த களாக்காயில் உள்ளன. களாக்காய் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகிக்கிறது. மேலும் உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கும். தலை முடியை வலிமையாக்கும், கூந்தல் ஆரோக்கியமாகவும் நீளமாகவும்  பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், சீரான மாதவிடாய் ஏற்படுத்த உதவும் ஆகிய பல நன்மைகள் களாக்காய் சாப்பிடுவதால் உண்டாகிறது.

Sep 26, 2023

நன்மையை தரும் விளாம்பழம்  (Wood Apple )

விளாம்பழம். இதை ஆங்கிலத்தில் Wood Apple அல்லது Stone fruit என்பார்கள். இந்த பழம் எல்லா காலங்களில் கிடைக்காது. இது ஆவணி, புரட்டாசி மாதங்களில் கிடைக்கும் பழமாகும்.இதன் மேல் ஓடு போன்று இருக்கும். அதை உடைத்தால் அதில் ஒரு பல்ப் (pulp)இருக்கும். அந்த சதை பகுதியான பல்ப்பை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா. அதை சிறிது வெல்லத்தை பொடித்து நன்கு கைகளால் பிசைந்தால் பஞ்சாமிர்த பதத்திற்கு வரும். அதை அப்படியே ஸ்பூனாலோ அல்லது கைகளாலோ சாப்பிட்டால் பஞ்சாமிர்தம் திடீரென தேவாமிர்தமாக மாறிவிடும்.இது புளிப்பு சுவையுடையது. அதனால் அதை ஈடுகட்ட வெல்லத்தூள் சேர்க்கிறோம். இது புளிப்பு சுவை கொண்டது என்பதால் இது சீதளம், குளிர்ச்சி என கருதி பலர் தவிர்க்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனையாகும் இந்த பழத்தை வாங்கி விநாயகருக்கு படைத்துவிட்டு  குப்பையோடு குப்பையாக வீசி விடுகிறார்கள். இது பசியை தூண்டக் கூடியது. ரத்தத்தை சுரக்கும் தன்மை கொண்டது. வாந்தியை கட்டுப்படுத்தும், மலத்தை இறுக்கும், பித்தத்தை நீக்கிவிடும். இதனால் ஏற்படும் தலைச்சுற்றலை போக்கிவிடும். முக்கியமாக கோழையை அகற்றிவிடும். வாய்ப்புண், ஈறு பிரச்சினைக்கு நல்லது. இருமல், சளியை எடுக்கும். வெள்ளைப்படுதலை நீக்கும், மாதவிடாய் அதிக ரத்த போக்கை கட்டுப்படுத்தும்.வயிற்றுப்போக்கு, சீதபேதியை நிறுத்தும்.. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு இந்த பழத்தை கொடுத்தால் உள்ளுறுப்புகளில் புண் ஏதேனும் இருந்தாலும் அது ஆறிவிடும். ஆஸ்துமா, அலர்ஜிக்கு அருமருந்தாக அமைகிறது.

1 2 ... 12 13 14 15 16 17 18 19 20 21

AD's



More News