1.பால்2. தயிர்3.சீஸ் 4. பன்னீர்5.பாதாம்6.சர்க்கரைவள்ளி கிழங்கு7. சோயா பீன்ஸ்8.வெண்டக்காய்9. சியா விதைகள்10. காய்ந்த அத்திப்பழம்11.ஆரஞ்சு12.சுண்டல்13. எள் விதைகள்14. சோயா பால்15.கிவி 16. கொய்யாப்பழம்17. அன்னாசிப்பழம்18. மத்தி மீன்கள்19.கீரைகள்20. ஓட்ஸ்.
சளி மற்றும் இருமல் ஏற்பட்டால், ஒரு கப் தண்ணீரில் இஞ்சி, மல்லி விதை மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து , அதை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சூடாக பருக வேண்டும். இது தொண்டை வலியும், சளியும் குறைய உடனடி நிவாரணம் தரும்.
.அதிமதுர பொடி ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைக்க வேண்டும் காலையில் சோறு வடித்த கஞ்சியில், கலக்கி குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட அல்சரும் குணமாகும்.அதிமதுரத்தை வாயிலிட்டு சுவைக்கும்பொழுது, மிகவும் இதமான இனிப்புச்சுவை தொண்டையினுள் இறங்குவதை, வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதிமதுரத்தின் சுவையும், குளிர்ச்சியும் நீண்டநேரம் நாவிலும், தொண்டையிலும் நீடித்து நிற்கும். உமிழ்நீர் சுரப்பினை அதிகரித்து, நாவறட்சி, தொண்டை பிரச்சனைகளை குணமாக்குகிறது. கண்நோய்கள், எலும்புநோய்கள் இருமல், சளி தலைவலி, மஞ்சள்காமாலை, புண்கள் போன்றவற்றை குணப்படுத்தப் பயன்படுகிறது. அதிமதுர வேர் மூக்கில் ரத்தம் வடிதல், காக்கை வலிப்பு, படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. நரம்புதளர்ச்சி ,பித்தம், கப நோய்களுக்கு கசப்பில்லா இனிப்பு மருந்து அதிமதுரம்.வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிமதுரத்தை பொடி செய்து சாப்பிட்டால் மிகவும் நல்ல பலனை பெறலாம்.
கோதுமை மற்றும் உளுந்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். மீதமுள்ள கோதுமை மற்றும் உளுந்தை அரைத்து, ரொட்டி செய்து சாப்பிடவும். ஒன்றரை மாதங்களில் சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் சரி, சிறுநீர்ப்பையில் உள்ள கல்லாக இருந்தாலும் சரி,வெடித்து சிதறும்.பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்கும்.
புளி சாறு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். புளி உடலில் கார்போஹைட்ரேட்டுகள் சேர அனுமதிக்காது, இதனால் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. இது தவிர, புளியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் செரிமானத்தை மேம்படுத்தி இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கின்றன. இந்த சாறு இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும் உதவியாக இருக்கும். இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது மற்றும் சோர்வைக் குறைக்கிறது. புளி சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல முழு உடலின் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தஉதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரித்து, பித்தப்பை கற்களை கரைக்க உதவுகிறது. உடலுக்குள் ஏற்பட்ட காயங்களை ஆற்றி, மூட்டு வலியை குறைக்கும் தன்மை கொண்டது.
நாரத்தை இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். இந்த இலை வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. நாரத்தை இலையின் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி, இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கெட்டியான சிறு உருண்டையாக்கி, காற்று போகாத பாட்டில் போட்டு மூடி வைத்து தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு இன்னும் சிறந்த காம்பினேஷன். முற்றிய இலையாக இருக்கக்கூடாது. இளம் இலையாக பார்த்து பொடி செய்வது சுவை கூடுதலாக கிடைக்கும்.
கற்றாழை குடும்பத்தை சேர்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவர இனம் 'டிராகன்'. இந்தப் பழம் அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில் வெள்ளை நிறத்திலான இனிப்புக்கூழ் சிறு கறுப்பு விதைகளுடன் காணப்படும். சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்டது. இது உலகின் வெப்பமண்டல பகுதிகளில் பயிரி டப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்தப் பழத்தில் வைட்டமின் பி3 இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்க உதவுகிறது. இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப் படுத்துகிறது.
வெறும் தலையில் சூடி அழகு பார்ப்பதாக மட்டுமல்லாமல், காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பூவிற்கு உண்டு.கனகாம்பர பூவுடன் மிளகுத்தூளை கலந்து பேஸ்ட் போல் ஆக்கிவிட்டு காயங்கள் மீது தடவினால் குணமாகும். அன்றைய நாட்களில் இரும்பு பொருள் துருப்பிடிக்காமல் இருக்க கனகாம்பரத்தின் பேஸ்ட் பயன்படுத்தப்பட்டதாம்.நம் உடலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா, வைரஸ், ஈஸ்ட் தொற்றுகளை குறைக்கும் தன்மையும் கனகாம்பரத்திற்கு உண்டு.ஒவ்வாமை வாந்தி வராமல் தடுப்பதற்கும் முக்கியமான மருந்தாக கனகாம்பரத்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.அத்துடன் தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும் கனகாம்பரத்தில் மாலை செய்து அணிந்தால் இதயம் நலம் பெறும் .
சாத்துக்குடி, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடியது. பசியை ஏற்படுத்தக்கூடியது. வயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸைக் குடித்துவந்தால், நல்ல தீர்வு காண முடியும். இது செரிமானப் பிரச்னையைச் சரிசெய்யக் கூடியது. வறண்ட சருமத்தினர், கடினமான சருமத்தினர் இருவருக்குமே சாத்துக்குடி ஜூஸ் ஏற்றது. இதனைத் தொடந்து பருகிவர முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.