1. Broadway Cinemas, Coimbatore + Epiq, laser imax, seats, Food - outside city centre www ww (travel time) rest room maintenance.2. DNC, Dharmapuri +2 gaint screens, top notch picture clarity, Dolby sound, ample parking space, food - interval time local advertisements it's kill ur time.3. Varadharaja Cinemas. Chennai + Food, especially pastry all screens, RGB laser and Atmos, couple seats screen, - car parking conjunction, staff behaviour.4. PVR aero mall, Chennai + Latest RGB Laser and seats, leg room timing, parking.5. PSS Tirunelveli + Seats RGB Laser - Food
.மலையாளத்தில்2017ம் ஆண்டு வெளியாக கேர் ஆஃப் சாய்ரா பானு என்ற 2023ம் ஆண்டு சித்தா மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற இரண்டு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன்.அதே ஆண்டு பகத் பாசிலுடன் இவர் நடித்த தொண்டி முதலும் த்ர்காக்ஷியம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.அடுத்து இடா, ஒரு கர்புரசிதா பையன், சோலா, தி கிரேட் இன்டியன் கிச்சன், நயட்டு, மாலிக் எனபல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான சித்தா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிமிஷா சஜயன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.சித்தார்த் நாயகனாக நடித்து அவரே தயாரித்த இந்த படத்தை, அருண்குமார் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா2 படத்தில் மலையரசி என்ற கேரக்டரில் சிறப்பான நடித்திருந்தார் நிமிஷா சஜயன்.காடுகளின் வாழும் பழக்குடியின மக்கள், மற்றும் காட்டு யானைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த படத்தில் லாரன்சின் மனைவியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார்.தமிழில் நடித்த இரு படங்களுக்குமே நிமிஷா சஜயனுக்கு வெற்றியை கொடுத்துள்ள நிலையில், அடுத்து அருண் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள மிஷன் சாப்டர்1 படத்தில் நடித்துள்ளார்,சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நிமிஷா சஜயன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
தந்தையை பலரும் பெருமையாக பேசுவதை கேட்கும்போது மகனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும், அதேவேளையில் தனது மகனை பலரும் பாராட்டி பேசும் போது தந்தைக்கு பெருமையாக இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளையும் அனுபவித்தவர்கள் இறைவனின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாக பெற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மலையாள திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான மம்முட்டியும், அவரது மகனும் இளம் நடிகருமான துல்கர் சல்மானும் அந்த விஷயத்தில் பாக்கியம் செய்தவர்கள்தான்.துல்கர் சல்மான் பர்டூ பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர். படிப்பை முடித்தவுடன், துபாயில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றினார்.இருப்பினும் தனக்கு உண்மையான ஆர்வம் நடிப்பில் இருப்பதை உணர்ந்து வேலையை துறந்து விட்டு கேரளாவுக்கு விமானம் ஏறினார். 2012ல் செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். நடித்தால் கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என்பவர்களுக்கு மத்தியில், தனது முதல் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.துல்கர் சல்மானின் நடிப்பில் வெளிவந்த உஸ்தாத் ஹோட்டல், பெங்களூரு டேஸ், சார்லி மற்றும் குரூப் போன்ற படங்கள் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றிகளை பதிவு செய்தன.தனது தந்தை மம்முட்டியின் புகழ் நிழலை தவிர்த்து, தனது வெற்றி பாதையை செதுக்கியுள்ளார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நடிப்பு அவரை நட்சத்திர அந்தஸ்து உயரத்துக்கு உயர்த்தியது. 2024ல் லக்கி பாஸ்கர், கன்ஸ் & குலாப்ஸ் மற்றும் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஒரு படம் என துல்கர் சல்மானின் நடிப்பில் வெளிவர உள்ளது. கல்கி 2898-கி.பி. என்ற புதிரான படமும் அவரது கையில் உள்ளது. துல்கர் சல்மான் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த தொழிலதிபரும் கூட. வேஃபேரர் பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களும் தயாரிக்கிறார். மேலும் பல விளம்பரங்களில் நடித்தும் வருமானம் ஈட்டுகிறார். 2023ம் ஆண்டு நிலவரப்படி துல்கர் சல்மானின் சொத்து மதிப்பு சுமார் ரூ.57 கோடியாகும். இவருக்கு துபாயில் சுமார் ரூ.14 கோடி மதிப்பிலான பென்ட்ஹவுஸ் மற்றும் கொச்சியின் மேல்தட்டு பகுதியான கடவந்தாராவில் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து ஆகியவையும் அவரது ரியல் சொத்துக்களில் அடங்கும் துல்கர் சல்மானுக்கு சொகுசு கார்கள் மீது அலாதி பிரியம். அவரது கேரேஜில், கார்கள் அணிவகுத்து நிற்கின்றன தனிப்பயன் சொகுசு பைக்குகளும் உள்ளன.
மும்பை: ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்க சில ஆண்டுகள் மும்பையிலேயே முகாமிட்டு இருந்த அட்லீ அங்கே ஷாருக்கான் நிறுவனத்துடன் இணைந்து பயணித்ததில் ஏகப்பட்ட பிசினஸ்களை கற்றுக் கொண்டதாக கூறுகின்றனர். ஷாருக்கான் தயாரிப்பில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி இதுவரை வசூல் ரீதியாக நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இயக்குநர் ஷங்கருக்கே கிடைக்காத வாய்ப்பாக பாலிவுட்டில் முதல் படத்திலேயே தனது கொடியை நாட்டி விட்டார்.ஜவான் படத்தை முடித்த கையோடு பாலிவுட்டில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தெறி படத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்கி வருகிறார். அந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது, மும்பையில் சொந்தமாக பெரிய அலுவலகம் ஒன்றையே அட்லீ உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். அந்த படம் ஹிட் அடித்த நிலையில், மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த அட்லீ, தற்போது ஜவான் படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹீட் கொடுத்துள்ளார்.இயக்குநர் ஷங்கரே இவ்வளவு சம்பளம் வாங்குவாரா என தெரியவில்லை. அட்லீ 100 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து பிரம்மண்டமாக ஒரு படத்தை இயக்க திரைக்கதை வடிவமைத்து வருகிறார். 10,000 சதுர அடியில் அலுவலகம்: ஏற்கனவே மும்பையில் வீடு வாங்கியுள்ள அட்லீ தற்போது அங்கே 40 கோடி செலவில் 10 ஆயிரம் சதுரடியில் அலுவலகம் ஒன்றை உருவாக்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களை தயாரித்து மிகப்பெரிய லாபத்தை அடைவதற்கான அத்தனை வழிகளையும் அட்லீ அறிந்து வைத்துள்ளார் எனக் கூறுகின்றனர். காப்பி இயக்குநர் என தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தாலும் அட்லீயின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போய் தான் முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில் நடிக்க தவமாய் தவம் கிடந்து வருகின்றனர். ஷாருக்கானுக்கு ஜவான் படத்தின் மூலம் பெரிய சம்பவம் செய்த அட்லீ, என் அண்ணனுக்கு நான் தான் செய்வேன் என அடுத்து ஷாருக்கானையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பான் வேல்ர்ட் படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன: அட்லீயின் இந்த அசுர வேக வளர்ச்சியை பார்த்து பாலிவுட்டில் பல பிரபலங்களே பொறாமைப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். அவர்களை அங்கே சமாளிக்கவே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல முன்னணி நடிகர்களை தனது நண்பர்களாக மாற்றும் முயற்சியில் அட்லீ ஈடுபட்டு வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஜெயிலர் - ஹுகும்திரைப்படம் – ஜெயிலர் பாடல் – ஹுகும்,இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர் வாரிசு - தீ தளபதி,திரைப்படம் - வாரிசுபாடல் - தீ தளபதி,இசையமைப்பாளர் - தமன் எஸ்துணிவு - காசேதான் கடவுளடா- துணிவு பாடல் - காசேதான் கடவுளடா,இசையமைப்பாளர் – ஜிப்ரான்ஜெயிலர் – காவாலா,திரைப்படம் - ஜெயிலர்பாடல் – காவாலா,இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர்லியோ - பேட் தாஸ்,திரைப்படம் - லியோபாடல் - பேட் தாஸ்,இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர்அயோத்தி திரைப்படம் - அயோத்திபாடல் - காற்றோடு பட்டம் போல இசையமைப்பாளர் - என் ஆர் ரகுநந்தன் குட் நைட் - நான் காலிதிரைப்படம் - குட் நைட்பாடல் - நான் காலி,இசையமைப்பாளர் - சீன் ரோல்டன்விடுதலை – காட்டுமல்லிதிரைப்படம் - விடுதலைபாடல் – காட்டுமல்லி,இசையமைப்பாளர் - இளையராஜாமார்க் ஆன்டனி – அதிருதாதிரைப்படம் - மார்க் ஆன்டனிபாடல் – அதிருதா,இசையமைப்பாளர் - ஜி வி பிரகாஷ் குமார் விடுதலை - உன்னோடு நடந்தா திரைப்படம் - விடுதலைபாடல் - உன்னோடு நடந்தாஇசையமைப்பாளர் - இளையராஜாபொன்னியின் செல்வன் 2 – அகநகதிரைப்படம் - பொன்னியின் செல்வன் 2பாடல் – அகநக,இசையமைப்பாளர் - ஏ ஆர் ரஹ்மான்லியோ - நா ரெடி தான்,திரைப்படம் – லியோ,பாடல் - நா ரெடி தான்,இசையமைப்பாளர் - அனிருத் ரவிச்சந்தர்மாமன்னன் – நெஞ்சமே,திரைப்படம் - மாமன்னன்பாடல் – நெஞ்சமே,இசையமைப்பாளர் - ஏ ஆர் ரஹ்மான்மாவீரன் – வண்ணாரப்பேட்டை,திரைப்படம் – மாவீரன்,பாடல் - வண்ணாரப்பேட்டைஇசையமைப்பாளர் - பரத் ஷங்கர்வாத்தி - வா வாத்தி,திரைப்படம் - வாத்திபாடல் - வா வாத்தி,இசையமைப்பாளர் - ஜி வி பிரகாஷ் குமார்பத்து தல - நீ சிங்கம் தான்,திரைப்படம் - பத்து தலபாடல் - நீ சிங்கம் தான்,இசையமைப்பாளர் - ஏ ஆர் ரஹ்மான்வாரிசு - சோல் ஆப் வாரிசு,திரைப்படம் - வாரிசுபாடல் - சோல் ஆப் வாரிசுஇசையமைப்பாளர் - தமன் எஸ்டாடா - தாயாக நான்,திரைப்படம் - டாடாபாடல் - டாடா பாடல்இசையமைப்பாளர் - ஜென் மார்ட்டின்ஜிகர்தண்டா XX - மா மதுர,திரைப்படம் - ஜிகர்தண்டா XXபாடல் - மா மதுர,இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன்துணிவு - சில்லா சில்லா,திரைப்படம் - துணிவுபாடல் - சில்லா சில்லா,இசையமைப்பாளர் - ஜிப்ரான்
கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டை நகரில்1996 ஏப்ரல்5ம் தேதியன்று ராஷ்மிகா மந்தனா பிறந்தார். பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமய்யா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.2014ல் கிளீன் அண்ட் கிளியர் டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பட்டத்தை வென்றதையடுத்து பிரபலமானார்2016ல் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.கீதா கோவிந்தம், புஷ்பா என இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவர் நடித்த அனிமல் படம் வெளியாகி அதிக வசூல் செய்து வருகிறது.27 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு பெங்களூரில் ரூ.8 கோடி மதிப்புள்ள பங்களா, மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு, கோவா, கூர்க் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன.இவரிடம் நவீன அம்சங்களுடன் கூடிய ஜெர்மன் எஸ்.வி.யூ. காரான ஆடி க்யூ3 உள்ளது. இது தவிர அவரது வீட்டில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் சிகிளாஸ், டொயோட்டா இன்னோவா மற்றும் ஹுண்டாய் க்ரெட்டா கார்களும் உள்ளன.சினிமாவை தவிர்த்து, கல்யாண் ஜூவல்லர்ஸ், எப்சன் இந்தியா, ஒனிட்சுகா டைகர் மற்றும்7அப் போன்ற பிராண்டடு விளம்பரங்களில் நடித்தும் சம்பாதிக்கிறார்.ஒவ்வொரு படத்திற்கும் சுமார்4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ.45 கோடி இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகார் ஆகியோர் நடிப்பில் தயாராகியுயுள்ள படம் 'அயலான்'. கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ...ஏலியனை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தபடம் சில வருடங்கள் கிடப்பில் இருந்த நிலையில் பின்னர் கிராபிக்ஸ.கிராபிக்ஸ் காட்சிகளால் தாமதமாகி வந்தது. தற்போது வரும் ஜனவரி 12ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வருகின்ற ஜனவரி 5ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
அதிக அளவில் பட்ஜெட் படங்கள்தான் வெற்றி பெறும் என்பதை சின்ன பட்ஜெட் படங்கள் வசூலை அதிகமாக்கி வெற்றி பெற்றுள்ளன. வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச்31ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் விடுதலை படம் வெளியானது. இப்படத்தில் நடிப்பதற்கு முன் காமெடி நடிகராக இருந்த சூரி இதில் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார். அப்படி நடித்த இந்த படம் மக்கள் ஹீரோவாக வரவேற்கும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பும் கதைக்கு ஏற்ற தத்ரூபமான விஷயங்களும் அமைந்து இருந்தது. அதனாலேயே மக்கள் இப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு கொடுத்தார்கள்..கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் திரைப்படம்.இப்படத்தின் கதை ஹரிஸ்க்கும், எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே நடக்கும் வரட்டு கௌரவத்தால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி அழகாக விவரித்து காட்டப்பட்டிருக்கும். படம் பார்க்கிற இரண்டு மணி நேரம் எந்தவித எரிச்சலும் இல்லாமல் படம் பார்க்கும் திருப்தியை கொடுத்தது ரா. வெங்கட் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காளி வெங்கட் மற்றும் ராமு நடிப்பில் கிடா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்டையும் பாசத்தையும் வைத்து தாத்தா பேரனின் அன்பை வெளிப்படுத்தும் கதைஇப் படம் சர்வதேச திரைப்படம் விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் இறுகப்பற்று திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது காதலித்து கல்யாணம் செய்த தம்பதிகள் மற்றும் பெற்றோர்களால் பார்த்து திருமணம் செய்த தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விஷயங்களை காட்டும் விதமாக கதை ,மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுவிட்டது.எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சித்தா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமையை எதிர்த்து காட்டும் விதமாக எந்தவித அலப்பரையும் காட்டாமல் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
ரஜினிகதாநாயகனாக நடிக்கும்.'வேட்டையன்'.படம்ஜெய்பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவருகிறது.அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும்இப்படத்தின் படப்பிடிப்புபல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.'வேட்டையன்' படத்தின் தலைப்பு மற்றும் டீசர் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின்கவனத்தை ஈர்த்தது.இந்நிலையில், நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றுள்ளார். 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில்நடைபெறுவதால் நடிகர்ரஜினி தூத்துக்குடி 'சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு வெளியான நல்ல கதை கரு கொண்ட 5 படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படாமல் படு தோல்வி அடைந்தது. பொம்மை நாயகி: காமெடியனாக ரசிகர்களை சிரிக்க வைத்த யோகிபாபு கதாநாயகனாக நடித்த படம் தான்பொம்மை நாயகி. இந்தப் படத்தில்யோகி பாபுவின் சென்டிமென்ட் ஆன நடிப்பை பார்க்கமுடிந்தது. ஷாம் இயக்கத்தில் நீலம்ப்ரொடக்சன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ‘பாரதமாதா’ என பெண்கள் பெயரால்போற்றப்படும் இந்த பாரத நாட்டில், தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலைமை என்ன என்பதைஇந்த படம் அப்பட்டமாக சொல்கிறது. அதிலும் இதில் அப்பா தன்னுடையமகளுக்கு நேர்ந்த அநீதியை எப்படிதட்டி கேட்கிறார் என்பதை மையமாகக் கொண்டுபடத்தை எடுத்தனர். நல்ல கருத்துக்களை சொன்னஇந்தப் படத்தை தியேட்டரில் : பார்ப்பதற்கு தான்ஆளில்லாமல் போச்சு. லக்கி மேன்: காமன் மேனுக்கும், கராரான போலீஸ் மேனுக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்த லக்கி மேன் படத்தின் கதை கரு. ரொம்ப சிம்பிளான காமெடி கதை என்றாலும் யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது. இந்த படத்தில் தனக்கு அதிர்ஷ்டத்தை அளித்த காரையும், இழந்த தன் அதிர்ஷ்டத்தையும் யோகி பாபு எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை கிளைமாக்ஸில் உருக்கத்துடன் காட்டினார். கிடா: சில தினங்களுக்கு முன்பு ரா வெங்கட் இயக்கத்தில் காளி வெங்கட், பூராமு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிடா படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களின் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கி குவித்தது. இந்த படத்தில், தாத்தா தீபாவளிக்கு தன் பேரனுக்கு புது துணியை வாங்கித் தர முடியவில்லை என்ற சோகத்தில், வீட்டில் செல்லமாக வளர்த்த கிடாயை விற்பதற்கு முயற்சி செய்கிறார். பின்பு அந்த கிடா காணாமல் போகிறது. கடைசியில் கிடா கிடைக்கிறதா? பேரனுக்கு தாத்தா துணி வாங்கி கொடுத்தாரா? என பல உணர்ச்சிப்பூர்வ காட்சிகளை இந்த படத்தில் காட்டினர்.யாத்திசை: ஏழாம் நூற்றாண்டில் சேர, சோழ அரசர்களை வென்று சோழ நாட்டிற்கு வந்து ஆட்சி செய்தனர் பாண்டியர்கள். ஆனால் பாண்டியர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் எயினர் எனும் பழங்குடிகள் குழுவும் ஒன்று. பாண்டியர்களின் வெற்றிக்குப் பிறகு பாலை நில நாடோடி வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட அக்குழுவினருக்கு அரசு அதிகாரத்தை கைப்பற்ற கிளம்பிய கொதி என்னும் மாவீரனின் வீரப் போராட்டத்தை இந்த படத்தில் காட்டினர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு, யாத்திசையை கொண்டாட மனசில்லை. இதனால் இந்த படம் நல்ல கதை களத்தில் சிறப்பான படைப்பாக வெளிவந்தாலும் மக்களிடம் போய் சேரவில்லை.நூடுல்ஸ்: அருவி புகழ் மதன் இயக்கத்தில் வெளியான படம் தான் நூடுல்ஸ். இந்தப் படத்தில் ஹரிஷ் உத்தமன் ஷீலா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம், ஒரு எளிமையான கதையை வைத்துக்கொண்டு சுவாரசியமான திரை கதையை அமைத்து ரசிக்க வைத்தனர். இந்த படத்தில் போலீஸ் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை மதன் தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கடைசி அரை மணி நேரம் கூடுதல் சுவாரசியமாக இருந்தது. இரண்டு நிமிடங்களில் ஒரு மனிதனின் வாழ்க்கை மாறவும் முடியும், எல்லா பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நல்ல கதை கரு கொண்ட இந்த படம், மக்களிடம் போய் சேராமல் போனது.