25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


( ஐ. பி. எல் ) இந்தியன் பிரிமியர் லீக் 'டி - 20' தொடர் இன்று ஆரம்பம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

( ஐ. பி. எல் ) இந்தியன் பிரிமியர் லீக் 'டி - 20' தொடர் இன்று ஆரம்பம்.

பெங்களூரு, சின்ன சாமி மைதானத்தில் இந்தியன்பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டி-20' தொடரின் 19வது சீசன் இன்றுதுவங்குகிறது. மே 31ல் பைனல் நடக்கஉள்ளது.சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று முதல் லீக்போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

இம்முறை லீக் சுற்றில்ஐ.பி.எல்., தொடரில் 70 போட்டிகள் ,அடுத்து 'பிளே ஆப்' சுற்றில் 4 என மொத்தம் 65 நாளில், 74 போட்டிகள் நடக்க உள்ளன.சென்னையில் சேப்பாக்கம், மும்பை வான்கடே, கொல்கட்டா ஈடன் கார்டன் உட்பட 13 மைதானங்களில் போட்டிகள் நடக்கும்.

ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் 'ஏ', 'பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், மற்ற அணிகளுடன் தலா 1 முறை (4 போட்டி) மோதும். அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளுடன் தலா இருமுறை மோதும் (10 போட்டி). ஒவ்வொரு அணியும் தலா 14 போட் டியில் பங்கேற்கும்.

புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் தகுதிச்சுற்று 1ல் மோதும். வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். 3, 4 வது இடம் பிடிக்கும் அணி கள் 'எலிமினேட்டர்' 'போட்டியில் மோதும். வெல்லும் அணி தகுதிச் சுற்று 2க்கு முன்னேறும்.தோற்கும் அணி வெளியேறும்.

தகுதிச்சுற்று 1ல் தோற்ற, 'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற அணிகள் தகுதிச்சுற்று 2ல் மோதும். வெல்லும் அணி பைனலுக்கு செல்லும். தோற்கும் அணிக்கு 3வது இடம் கிடைக்கும்.

தகுதிச்சுற்று 1, 2ல் வென்ற அணிகள் மே 31 ல், நடக்கவுள்ள பைனலில்  மோதும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News