25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


வெள்ளித்திரை

Mar 20, 2024

சிவகுமார் என்ற தனது பெயரை விஜயகுமார் என்று மாற்றிக் கொண்ட நடிகர்

கந்தன் கருணை படத்தின் மேக்கப் டெஸ்டுக்கு நடிகர் சிவகுமார் சென்றிருந்த நேரம், வேறொருவரும் வந்திருந்தார். அவர் பெயரும் சிவகுமார்.தமிழ் சினிமாவில் பெயர் குழப்பம் தொன்றுதொட்டே இருந்து வருகிறது இந்த இரண்டாவது சிவகுமாரின் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமானவர்.அவரை சந்திக்கச் சென்ற போது சிவகுமாரையும் அழைத்துச் சென்றுள்ளார். மேக்கப் டெஸ்ட் விஷயத்தை கலைஞரிடம் நண்பர் கூறியுள்ளார். உடனே கலைஞர் கருணாநிதி படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து, சிவகுமார் நம்ம பையன், அவனுக்கே வேடத்தை  கொடுத்துவிடுங்கள் என்றிருக்கிறார்.ஆனால், வாய்ப்பு இந்த இரண்டாவது சிவகுமாருக்கு கிடைக்கவில்லை. முதல் சிவகுமாருக்குதான் கிடைத்தது. கலைஞர் சிவகுமார் என்றுதான் சொன்னார், எந்த சிவகுமார் என்று சொல்லவில்லை. இந்த பெயர் குழப்பத்திற்குப் பிறகு இரண்டாவது சிவகுமாரும் தனது பெயரை விஜயகுமார் என்று மாற்றிக் கொண்டார். நாட்டாமை விஜயகுமார் தான் அவர்.

Mar 06, 2024

அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் தமிழ் இயக்குநர் அட்லீ

சமீப நாட்களாக பேசப்பட்டு வரும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானிமகனின் திருமண கொண்டாட்டத்தில், இயக்குநர் அட்லீ தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்டுக்கும் சூலை மாதம் திருமண நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மார்ச்1 முதல்3 வரை நடைபெறும் நிகழ்ச்சிகள் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.குஜராத்தின் ஜாம் நகர் கோலாகலமாக உள்ளது. பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல தமிழ் இயக்குநர் அட்லீ, தனது மனைவி ப்ரியா மற்றும் மகன் மீர் உடன் அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளார். தனது மகனின் முகத்தை முதல் முறையாக அவர் கமெரா முன் காட்டியுள்ளார். மூவரும் நிகழ்ச்சியில் தோன்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.தமிழில் வெற்றிப்படங்களை கொடுத்த அட்லீ, இந்தியில் ஷாரூக் கானை வைத்து எடுத்த''ஜவான்'' திரைப்படம்1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. 

Mar 06, 2024

ஹீரோக்களை விட  அழகாக  இருக்கும் 5 இயக்குனர்கள்..

 சினிமாவை பொருத்தவரை அழகு எந்த அளவுக்கு முக்கியமோ அதே மாதிரி திறமையும் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று பலரும் நிரூபித்துக் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் சிலரை பார்க்கும் பொழுது அழகாக  இருக்கிறாரே, ஹீரோவை விட சூப்பரா இருக்கிறாரே என்று நினைக்கத் தோன்றும். அந்த மாதிரி சில ஐந்து இயக்குனர்கள் ஹீரோக்களை தாண்டி  அழகாக இருக்கிறார்கள். .ராஜமவுலிதெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் இவர் எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி பெற்று விடுகிறதுஅப்படி இவர் எடுத்து அனைத்து திரையுலகத்தையும் திரும்பி பார்க்க வைத்த படங்களான மகதீரா, நானி,பாகுபலி, ஆர்ஆர்ஆர். இப்படி பல படங்களை எடுத்த திறமையான இயக்குனர். அத்துடன் இவர் கதாநாயகனாக நடித்தாலும் ஹீரோ மாதிரி மக்கள் மனதை வென்று விடுவார்.தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவர் இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார். அதில் இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி வெளிவந்த குண்டூர் காரம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. இந்த இயக்குனரை பார்ப்பதற்கு 52 வயது போல தெரியாது அந்த அளவிற்கு இளமை துள்ளலுடன் ஹீரோ மாதிரி ஜொலித்து வருகிறார்.மோகன்ராஜா முக்கால்வாசி ரீமேக் படங்களை எடுத்து பல ஹிட் கொடுத்தவர். அந்த வகையில் முதன் முதலில் தென்காசி பட்டணம் படத்தை தெலுங்கில் ரீமேக் பண்ணி வெற்றி பெற்றார். அதன் பிறகு ஜெயம் ரவிக்கு ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல படங்களை வெற்றியாக கொடுத்தார். தற்போது தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுத்து சீக்கிரம் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று ஜெயம் ரவி அண்ணனுடன் சண்டை போட்டு வருகிறார். மேலும் மோகன் ராஜாவை பார்ப்பதற்கும் ஒரு ஹீரோ மாதிரி தான்  இருக்கிறார்.மகிழ்திருமேனி தமிழில்" முன்தினம் பார்த்தேன்" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார். அதன் பின் தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன், தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை எடுத்து வருகிறார். இதற்கிடையில் நடிகராகவும் டெடி படத்தில் டாக்டர் வரதராஜன் ஆக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் ராஜன் கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கும் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எப்பொழுதெல்லாம் கேப் கிடைக்கிறதோ அப்ப எல்லாம் ஆசையை நிறைவேற்றி வருகிறார்.கார்த்திக் நரேன்இயக்குனராக அறிமுகமான முதல் படமே கிரைம் த்ரில்லர் படமாக துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன் பின் மாஃபியா மாறன் போன்ற படங்களை கொடுத்தார். இதற்கிடையில் அரவிந்த்சாமி வைத்து நரகாசுரன் படத்தை இயக்கி வருகிறார். 

Feb 28, 2024

ரஜினியுடன் நான்கு படங்களில் நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய்

எந்திரன் படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அதற்கு முன் அவருடன் இணைந்து நடிக்க4 பட வாய்ப்புகளை நிராகரித்தார். ஐஸ்வர்யா ராய்1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அதன் பிறகு அவரை சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் இயக்குநர் மணிரத்னம்.1997 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கோலிவுட்டில் நுழைந்தார்.தொடர்ந்து ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த்திற்கு ஜோடியாக நடித்தார். அதுவும் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்து இருந்தார். கண்டு கொண்டானே கண்டு கொண்டானே, குரு, ராவணன், எந்திரன் படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்து உள்ளார். ஷங்கர் இயக்கிய இந்த மெகா படத்தில் சனா என்ற கேரக்டரில் நடித்து கவனத்தை ஈர்த்தார். ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டாரின் விருப்பமான நடிகைகளில் ஒருவர், எனவே அவருக்கு ஜோடியாக நடிக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்.எந்திரன் மூலம் அது நிறைவேறியது. எந்திரனுக்கு முன், ரஜினிக்கு ஜோடியாக நான்கு படங்களில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்குமாறு அணுகினர். பல்வேறு காரணங்களால் ஐஸ்வர்யா ராய் அந்த நான்கு படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். அந்த நான்கு படங்களின் பெயர்களை கேட்டால் அதிர்ந்து போவீர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அவரை அணுகிய முதல் படம் படையப்பா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்யை நாயகியாக நடிக்க இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முடிவு செய்து இருந்தார். ஆனால் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். அடுத்து அவர் பாபாவின் வாய்ப்பை நிராகரித்தார். அது மனிஷா கொய்ராலாவுக்குச் சென்றது.பின்னர் பி.வாசு இயக்கிய சந்திரமுகி, ஷங்கர் இயக்கிய சிவாஜி ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அவர் மறுத்த இந்த நான்கு படங்களில் மூன்று பிளாக் பஸ்டர் ஹிட் என்பது  குறிப்பிடத்தக்கது.

Feb 28, 2024

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ரூ.400 கோடி பட்ஜெட் படம்

 இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக400 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் சிவகார்த்திகேயன் படத்தை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் மொத்த பட்ஜெட்400 கோடி என்றும் கூறப்படுகிறது.ஏஆர் முருகதாஸ் ஏற்கனவே அமீர்கான் நடிப்பில் உருவான’கஜினி’ அக்ஷய் குமார் நடிப்பில் உருவான’ஹாலிடே’ மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவான’அகிரா’ ஆகிய பாலிவுட் திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது மீண்டும் மாஸாக பாலிவுட் திரையுலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார்..

Feb 28, 2024

ரூ 5,000 சம்பளத்தில் புக் ஆன சரோஜா தேவி;

.தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பி.சரோஜா தேவி. தங்கமலை ரகசியம், திருமணம், மனமுள்ள மருதாரம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படம் தான் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. எம்.ஜி.ஆர் படத்தில் இவர் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்து அவருக்கு 30 பட வாய்ப்புகள் குவிந்துள்ளது.கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அடுத்து ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, மீண்டும் பெங்களூர் சென்று தனது பள்ளி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில், தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார்.இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதன்பிறகு தான், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து சிவாஜியின் தங்கமலை ரசகியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான செங்கோட்டை சிங்கம் படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த முதல் படம்.அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப்பரிசு படத்தில் நடித்த சரோஜா தேவி, 1961-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தில் இவருடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக சரோஜா தேவிக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ5000. அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் படத்திலும் சரோஜா தேவியே நாயகியாக நடித்த நிலையில், அதன்பிறகு அடுத்தடுத்து 30 படத்திற்கு தனக்கு வாய்ப்பு வந்ததாக நடிகை சரோஜா தேவி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்..

Feb 21, 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்ட எஸ்.கே.21’ முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்’எஸ் கே21’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீர் உள்பட பல பகுதிகளில் நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வரும்17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்ப அதிர்ச்சியாக இன்றே இது குறித்து அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் இது குறித்து வெளியான வீடியோவில்  இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று மாலை ஒரு செம்ம விருந்து காத்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீஸ் ஆக உள்ளது .

Feb 21, 2024

நடிகர் ராம் சரண் மகள் கிளின் காராவை பார்த்துக் கொள்பவருக்கு  மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம்

தெலுங்கு திரையுலகில் மெகா குடும்பம் சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துவிட்டார் ராம் சரண் .ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக வலம் வரும் இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் 2012ம் ஆண்டு உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணம் ஆகி 11 ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு கிளின் காரா என பெயரிட்டுள்ளனர்.ராம் சரண் மற்றும் உபாசனா அவரவர் தொழிலில் பிஸியாக இருப்பதால் சாவித்ரி என்ற பெண்ணை குழநதையை பராமரிக்க நியமித்துள்ளனர்பாலிவுட் நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தையைபராமரித்த இவர் தற்போது ராம் சரண் குழந்தையை பார்த்து வருகிறார்.அதற்காக இவருக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்களாம். 

Feb 21, 2024

ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படம்

வித்தியாசமானகதைக்களம் கொண்டபடங்களை தேர்ந்தெடுத்துநடிக்கும் ஜெயம்ரவி. இவர்நடிப்பில் கடந்த 16ஆம் தேதிவெளிவந்த திரைப்படம்சைரன். இப்படத்தைஅறிமுக இயக்குனரானஆண்டனி பாக்யராஜ்இயக்கியிருந்தார்.இப்படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் சைரன்திரைப்படம் உலகளவில்இரண்டு நாட்களில்ரூ. 6 கோடிக்கும்மேல் வசூல்செய்துள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இறைவன் படம் படுதோல்வியடைந்த நிலையில், சைரன் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படமும் அவருக்கு சரியான வெற்றியை தேடி தரவில்லை என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Feb 21, 2024

'பரோட்டா' சூரிடூ “சூரி என்று வளர்ந்து நிற்கிறார்

'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில்'பரோட்டா' காட்சியில் பிரபலமானதால்'பரோட்டா' சூரி என்று அழைக்கப்பட்டு பிரபலமானார் சூரி. தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து'விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்தார்.'பரோட்டா' சூரி இப்போது'பட விழாக்களின்' சூரி என்று வளர்ந்து நிற்கிறார்.கடந்த மாதக் கடைசியில் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்த'விடுதலை, ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. அதற்காக அப்படக் குழுவினருடன் அந்தத் திரைப்பட விழாவில் சூரி கலந்து கொண்டார்.அடுத்து ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும்74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சூரிந டித்துள்ள'கொட்டுக்காளி' படம் திரையிடப்பட்டுள்ளது. பிப்ரவரி15முதல்25வரை இத்திரைப்பட விழா நடைபெறுகிறது. பிப்ரவரி16ம் தேதி இப்படம் அங்கு திரையிடப்பட்டது. அடுத்து பிப்ரவரி18,19,20,25 ஆகிய நாட்களிலும் திரையிடப்பட உள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனையாகிவிட்டன.இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து சூரி,“உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும், தம்பி சிவகார்த்திகேயனுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

1 2 ... 67 68 69 70 71 72 73 ... 79 80

AD's



More News