ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மலர் அல்லது இலை விசேஷமாகக் கருதப்பட்டு படைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அனுமனுக்கு வெற்றிலை, அம்மனுக்கு வேப்பிலை என வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதுபோல விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக அருகம்புல் கருதப்படுகிறது.முன்னொரு காலத்தில் அனலாசுரன் என்ற அசுரன் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவன் தனது உடலில் இருந்து நெருப்பைக் கக்கி, தேவர்கள், முனிவர்கள் மற்றும் மக்களைத் துன்புறுத்தி வந்தான். இதனால் கவலை அடைந்த தேவர்கள், விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர்.தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர், அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் ஏவிய அனைத்து ஆயுதங்களையும் அனலாசுரன் நெருப்பைப் பயன்படுத்தி சாம்பலாக்கினான். இதையடுத்து விநாயகர், அனலாசுரனை சிறிய உருவமாக மாற்றி விழுங்கிவிட்டார்.ஆனால் அனலாசுரனின் கடுமையான வெப்பத்தால் விநாயகரின் வயிறு எரிச்சலடைந்தது. இதனால் அவர் வேதனை அடைந்தார்.விநாயகரை குளிர்விக்க தேவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். வருண பகவான் மழையைப் பொழிந்தார். இந்திரன் சந்தனத்தைப் பூசினார். அன்னை பார்வதி, பாற்கடலை விநாயகர் பக்கம் திருப்பிவிட்டார். சிவபெருமான் குளிர்ச்சியான பாம்பை விநாயகரின் இடுப்பைச் சுற்றிக் கட்டினார். ஆனால் இவை அனைத்தும் பலனளிக்கவில்லை.இதையடுத்து தேவர்கள், காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். காஷ்யப முனிவர் 21 அருகம்புல் கற்றைகளை விநாயகரின் தலையில் வைத்தார். உடனே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்ததாக கூறப்படுகிறது.இதனால் மகிழ்ந்த விநாயகப் பெருமான், அருகம்புல்லைத் தனது வழிபாட்டில் சிறப்பிடம் பெறச் செய்ததாக ஐதீகம். அன்றுமுதல் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பிடித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
கல்லை உளியால் செதுக்கி உருவம் கொடுப்பது சிற்பி என்றால்.மாணவர்களை சொல்லால் செதுக்கி உருவாக்குவது சிறப்புமிக்க நமது நல்ஆசிரியர்களே, உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உண்டு.ஒன்று தாயின் கருவறை. இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை.தாயின் கருவறையில் ஒருவன் உயிரை பெறுகிறான் ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவை பெறுகிறான்.பெற்றப்பிள்ளையைவிட தன்னிடம் கற்றப்பிள்ளையின் உயர்வைப்பார்த்து மகிழ்வது ஆசரியர் இனம் மட்டுமே. செப்டம்பர் 5 மதிப்புமிக்க இந்நாளில் அவர்களை போற்றி வணங்குவோம்.
அதர்மம் அதிகரிக்கும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதாரம் எடுப்பதாக நம்பப்படுகிறது. துவாபர யுகத்தில் அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்தநாள் ஜன்மாஷ்டமியாக ஆண்டுதோறும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.2026ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி செப்டம்பர் 4ஆம் தேதி, வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், பஜனைகள் மற்றும் கீர்த்தனைகள் நடைபெறும். பூஜைக்கான சுப நேரம்.ஜன்மாஷ்டமி பூஜைக்கான முக்கிய நேரம் செப்டம்பர் 4 இரவு 11:57 மணி முதல் செப்டம்பர் 5 அதிகாலை 12:43 மணி வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நள்ளிரவில் லட்டு கோபாலருக்கு அபிஷேகம் செய்து, புதிய ஆடைகள் அணிவித்து, மலர்கள் மற்றும் துளசியால் அலங்கரித்து, வெண்ணெய், பழங்கள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாகப் படைப்பது வழக்கம். தஹி ஹண்டி.குழந்தை கிருஷ்ணர் வெண்ணெய் திருடியதை நினைவுகூரும் வகையில், குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் தஹி ஹண்டி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் மனித பிரமிட் அமைத்து உயரத்தில் கட்டப்பட்ட தயிர் அல்லது வெண்ணெய் பானையை உடைப்பது இதன் சிறப்பாகும்.சேவையும் தானமும்.ஜன்மாஷ்டமி என்பது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் நாள் மட்டுமல்ல; அன்பு, தர்மம், கருணை மற்றும் மனிதநேயத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க நினைவூட்டும் நாளாகவும் பார்க்கப்படுகிறது.இந்த புனித நாளில் தேவையுள்ளவர்களுக்கு உணவு வழங்குதல், தானம் செய்தல் மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற நற்பணிகளில் ஈடுபடலாம்.அன்பை வளர்ப்போம்… தர்மத்தை நிலைநாட்டுவோம்…ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
உலகளவில் தேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.இந்தியாவின் மொத்த தேங்காய் உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது.தேங்காயின் முக்கியத்துவம், அதன் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் தென்னை விவசாயத்தின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.தென்னை மரத்தின் காய், இலை, நார், ஓடு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன. மேலும், தென்னை விவசாயம் லட்சக்கணக்கான மக்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.தேங்காய் உணவாக மட்டுமின்றி, சமையல் எண்ணெய், மருத்துவப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.“தென்னை வளர்ப்போம்… வளம் பெருக்குவோம்!”
தென்னிந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் வரலட்சுமி விரதம், மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதமாகும்.செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நாளாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம், ‘வரலட்சுமி விரதம்’ அல்லது ‘வரலட்சுமி நோன்பு’ என்றும் அழைக்கப்படுகிறது.ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.‘வரலட்சுமி’ என்றால் ‘வரங்களை அருளும் லட்சுமி’ என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் வேண்டிய வரங்களைபெறலாம்என்பதுநம்பிக்கை.மேலும்அஷ்டலட்சுமிகளானஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகியோரின் அருளையும் பெறலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழவும், குடும்பத்தில் செல்வ வளம் பெருகவும், மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறவும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.வரலட்சுமி விரத நாளில் மகாலட்சுமி தாயார் இல்லம் தேடி வருவதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.வரலட்சுமி விரதம் உருவானது குறித்து பல கதைகள் உள்ளன. அவற்றில் ஷியாமாவின் கதை முக்கியமானது. சௌராஷ்டிர மன்னன் பத்ரஷர்வாவின் மனைவி சந்திரிகா, துவாதசி நாளில் மகாலட்சுமியை அவமதித்ததால் தனது செல்வத்தையும் நாட்டையும் இழந்தாள். ஆனால் அவர்களின் மகள் ஷியாமா, மகாலட்சுமியிடம் இருந்து வரலட்சுமி விரத முறையை அறிந்து அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாள். பின்னர் தனது பெற்றோருக்கும் விரதத்தின் மகிமையை எடுத்துரைத்தாள். சந்திரிகாவும் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்ததால் இழந்த செல்வங்கள் அனைத்தும் மீண்டும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.மற்றொரு கதையில், மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி என்ற பக்தையான பெண்ணின் கனவில் மகாலட்சுமி தோன்றி வரலட்சுமி விரதத்தைப் பற்றி கூறினார். மகாலட்சுமியின் அறிவுரைப்படி சாருமதி விரதம் இருந்து வழிபட்டதால், அவளுக்கு செல்வ வளமும் குடும்ப நலமும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் வரலட்சுமி விரதம் செல்வம், நலம், குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கும் சிறப்புமிக்க விரதமாகப் போற்றப்படுகிறது.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘Surya Path Tiranga’ என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இந்தியத் தூதரகங்களில், சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசையாக தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.பிஜி தீவுகளில் தொடங்கி, வெவ்வேறு நாடுகளின் நேர மண்டலங்களுக்கு ஏற்ப இந்தக் கொடியேற்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று அமெரிக்கா வரை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை உலகம் முழுவதும் ஒரே தொடர்ச்சியான நிகழ்வாகக் கொண்டுசெல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.இன்று ஆகஸ்ட் 15நாட்டின் 80 வது சுதந்திர தினத்தைக்கொண்டாடுகிறோம்.இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது.பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி நேதாஜி, பகத்சிங் போன்ற பல தலைவர்கள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார்கள்.தென்னகத்தில் வேலு நாச்சியார். பாரதியார் வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பல தலைவர்களும் மிக முக்கியப் பங்காற்றி உள்ளார்கள்.சுதந்திரதினம் அன்று. செங்கோட்டையில் மாண்புமிகு பிரதமர் கொடியேற்றுவார்முப்படைகளின் அணிவகுப்பும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறும்.சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றி வணங்குவோம்.போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
.அம்மன் மற்றும் ஆண்டாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் இத்திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்குச் சாத்தி, நல்ல கணவன் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்,தேரோட்டம்.
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் செய்வதற்கு சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரால் தர்ப்பணம் செய்வது வழக்கம்.முன்னோர்களுக்கு பிடித்த உணவை காகத்திற்கு வைப்பது, கோயிலுக்குச் சென்று வழிபடுவது, பசுவுக்கு பழங்கள் மற்றும் அகத்திக்கீரை வழங்குவது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது போன்றவற்றையும் செய்யலாம். விரதம் இருப்பவர்கள் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவை உட்கொள்வதும், வாழை இலையில் சாப்பிடுவதும் வழக்கமாகக் கூறப்படுகிறது.பெற்றோர் அல்லது முன்னோர்களின் இறந்த தேதி, திதி தெரியாதவர்கள் அல்லது உரிய நாளில் திதி கொடுக்கத் தவறியவர்களும் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பு என நம்பப்படுகிறது.ஆடி அமாவாசை நேரம் துவக்கம் : ஆகஸ்ட் 12, 2026 (புதன்கிழமை) அதிகாலை 02:11 AM.ஆடி அமாவாசை நேரம் துவக்கம் : ஆகஸ்ட் 12, 2026 (புதன்கிழமை) அதிகாலை 02:11 AM.நிறைவு: ஆகஸ்ட் 13, 2026 ~ 12:16 AM.
முன்னாள் குடியரசுத் தலைவர், 'ஏவுகணை நாயகன்' டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று (ஜூலை 27). 2015-ஆம் ஆண்டு மேகாலயாவில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் காலமானார். எளிமை, அறிவியல் சாதனைகள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த ஊக்கத்தால், என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இனிப்பு சுவை மற்றும் ஊட்டச்சத்துகளால் உலகம் முழுவதும் விரும்பப்படும் பழமாகும். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மாம்பழம் பயிரிடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஆசியாவில் தோன்றிய மாம்பழம், பின்னர் உலகின் பல நாடுகளுக்கு பரவியது.இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மாம்பழம் ஒரு பழம் மட்டுமல்ல; கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் A, C மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல்நலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.மாம்பழத்தின் சிறப்பையும், அதன் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஜூலை 22-ம் தேதி தேசிய மாம்பழம் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாம்பழம் ஜூஸ், ஐஸ்கிரீம், கேக், ஜாம், ஊறுகாய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.