முன்னாள் குடியரசுத் தலைவர், 'ஏவுகணை நாயகன்' டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று (ஜூலை 27). 2015-ஆம் ஆண்டு மேகாலயாவில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் காலமானார். எளிமை, அறிவியல் சாதனைகள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த ஊக்கத்தால், என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இனிப்பு சுவை மற்றும் ஊட்டச்சத்துகளால் உலகம் முழுவதும் விரும்பப்படும் பழமாகும். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மாம்பழம் பயிரிடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஆசியாவில் தோன்றிய மாம்பழம், பின்னர் உலகின் பல நாடுகளுக்கு பரவியது.இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மாம்பழம் ஒரு பழம் மட்டுமல்ல; கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் A, C மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல்நலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.மாம்பழத்தின் சிறப்பையும், அதன் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஜூலை 22-ம் தேதி தேசிய மாம்பழம் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாம்பழம் ஜூஸ், ஐஸ்கிரீம், கேக், ஜாம், ஊறுகாய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
2026-ம் ஆண்டுக்கான ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் ஜூலை 17, ஜூலை 24, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 14 ஆகிய தேதிகளில் அமைகின்றன. ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுவதால், இந்த நாட்களில் பக்தர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் விரதங்களை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பார்..அல்லாஹ்வில் நம்பிக்கை வைத்தால் கவலை வேண்டாம்.இனிய மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்..
பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் நிலையை மாற்றி, அனைவருக்கும் கல்வி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய 2002 முதல் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வறுமை, குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் விழிப்புணர்வின்மையே குழந்தைகள் வேலைக்குச் செல்ல முக்கிய காரணங்களாகும். கடைகள் அல்லது தொழிற்சாலைகளில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் 1098 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.குழந்தைகளின் கைகளில் இருக்க வேண்டியது புத்தகமே தவிர வேலைக்கருவிகள் அல்ல. குழந்தைத் தொழிலாளர் இல்லாத உலகைப் படைப்போம்!
'விளையாட்டைப் பாதுகாப்போம், குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்போம்' என்ற மையக்கருத்துடன் இன்று உலக விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. விளையாட்டின் மூலம் கற்பனைத் திறன், தலைமைப் பண்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளர்வதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. உலகின் 71% குழந்தைகள் விளையாட்டு தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறியுள்ளனர்.
: பூமியையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையால் 1973 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.: காடுகள் அழிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவற்றால் பூமி வெப்பமயமாகி வருகிறது. இதைத் தடுக்க, ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும்.நாம் செய்ய வேண்டிய எளிய மாற்றங்கள்:பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்துவது.தேவையில்லாத போது மின்விசிறி, விளக்குகளை அணைத்து மின்சாரத்தைச் சேமிப்பது.குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவது மற்றும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பது."மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், பூமியைக் காப்போம்!" என்ற உறுதியோடு, வருங்காலத் தூண்களான குழந்தைகள் நினைத்தால் பசுமையான உலகை உருவாக்க முடியும்.
பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாளான பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட அனைத்து இஸ்லாம் மக்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்|பக்ரீத் தினத்தில் உங்களின் முகத்தில் சிரிப்பும் உள்ளத்தில் அமைதியும் நிலைத்திரட்டும்.
ஐ.நா., சார்பில் மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி, தேனீக்கள் இல்லையெனில் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி பாதிக்கப்படும். தேன் முக்கிய உணவு. மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. உழைப்பை தேனீக்களிடம் இருந்து சுறுசுறுப்பு, கற்றுக்கொள்ளலாம். இவை பல வழிகளில் மனிதர்களுக்கு உதவுகிறது. தேனீக்கள் வளர்ப்பு, விவசாயத்துக்கும் உதவுகிறது. 'மக்கள், பிரபஞ்சத்துக்காக தேனீக்கள் ஒன்றிணைதல்; இந்த கூட்டு நம் அனைவரையும் பாதுகாக்கிறது' என்பது இந்தாண்டு கருத்து.
விளையாட்டு போட்டிகளில் முக்கியமானது தடகளம். மே 7ல் உலக தடகளதினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தடகள கூட்டமைப்பு 1996ல் இத்தினத்தைஉருவாக்கியது. இது ஓடுதல், நடைபயிற்சி, குதிப்பது, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்உட்படபல்வேறுபிரிவுகளை உள்ளடக்கியது.பள்ளி,கல்லுாரிகளில்தடகளவிளையாட்டுபோட்டிகளில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக, இளைஞர்கள் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.