21 செப்டம்பர் 2024 மஹா பரணி
மஹாபரணி நட்சத்திர நாளில் முன்னோர்களுக்கு திதி,, தர்ப்பணம் செய்து, யம தீபம் ஏற்றினால் யமதர்மன் மனம் மகிழ்ந்து நரகத்திற்குச் செல்லவேண்டிய, நம் முன்னோர்களின் வேதனையைக் குறைத்து, சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்பது ஐதீகம். மகாளய பட்சத்தின் போது வருகை தரும் பித்ருக்களுக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது யம தீபம் மட்டுமே.மகாளபட்சத்தில் வரும் மஹா பரணி அன்று யமதீபம் ஏற்றி யமதர்மராஜாவை வழிபட வேண்டும்.
நாட்டில் உள்ள மிக புண்ணிய தலங்களில் மிகமுக்கிய மானதாக கருதப்படுவது காசியும், கயாவும் தான் இங்கு சென்று இறந்தாலும் சரி, இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தாலும் சரி அவர்கள் உடனடியாக முக்தியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் அனைவராலும் காசிக்கோ அல்லது கயாவிற்கோ சென்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாது. ஆனால் அங்கு சென்று தர்ப்பணம் கொடுத்த பலனை தரக் கூடிய அற்புதமான நாள் தான் மகா பரணி,
மகாபரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் இறை நிலையாகிற முக்தியை பெறுவார்கள் என்பது ஐதீகம். மகாளய பட்சத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு சொல்லப்படும் மிக முக்கியமான, பித்ருக்களின் ஆசிகளை பெறுவதற்குரிய நாளாக கருதப்படுவது மகாபரணி நாளாகும்.
0
Leave a Reply