87 வது பிறந்த தினத்தில் சாலமன் பாப்பையாப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம் கலைமாமணி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள சாலமன் பாப்பையா ,, 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பாகும் பண்டிகை நாள் பட்டிமன்றங்களின் தலைவனாக விளங்குகிறார்.பெண் கல்வி, மருத்துவம், ஊழல்' உள்ளிட்ட சமூக தலைப்புகளுக்கு பட்டிமன்றங்களை மாற்றி ,பேச்சில், பெண்களுக்கும் சம வாய்ப்பளித்தார். மூன்று தலைமுறை பேச்சாளர் களை வளர்த்துள்ள இவர், 'திருக்குறள், புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி' உள்ளிட்ட இலக்கி யங்களுக்கு, எளிமையாக உரை எழுதியுள்ளார்.சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில், பி.ஏ., பொருளாதாரமும், தியாகராஜர் கல்லுாரியில், எம்.ஏ., தமிழும் படித்தார்.கல்லுாரியில் ஆசிரியர் பணியை துவங்கி, பேராசிரியர். தமிழ்த் துறைத் தலைவராக உயர்ந்தார். ஆரம்பத்தில் 1963ல், குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து, 'பெரிய புராணம், சிலப்பதிகாரம், மணிமேகலை' உள்ளிட்ட சமய இலக்கிய பட்டிமன்றங்களில் பங்கேற்றார்.சாலமன் பாப்பையா பட்டிமன்றம் என்றால் தமிழ் ஆர்வலர்களுக்கு அலாதி பிரியம் தான்.
மகா சிவராத்திரி (Maha Shivaratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.நித்திய சிவராத்திரி,மாத சிவராத்திரி,பட்ச சிவராத்திரி,யோக சிவராத்திரி,மகா சிவராத்திரி.ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து ,சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து,நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக, ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
தமிழ் கவிதைகளில் இருந்த கருத்துகளை ரசனையுடன் எடுத்துக் கூறியதால் ரசிகமணி டி.கே.சி.' என்று அழைக்கப்பட் டார். 1926ல் சென்னை மாகாண சட்டசபையில் மேலவை உறுப்பினரானார்.தொடர்ந்து,ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனராக பொறுப்பேற்றார். கம்பராமாயண இடைச்செருகலை நீக்கி பதிப்பித்தார். மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களின் அவசியத்தைக் கூறி ராஜா அண்ணாமலை செட்டியாரை சென்னையில் தமிழ் இசை மன்றம் துவங்க ஏற்பாடு செய்தார். FEB 16 , 1954ல் தன் 71வது வயதில் இதே நாளில் காலமானார்.