25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இன்றைய தினம்

Jan 23, 2024

CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MAT. HR. SEC. SCHOOL Silver Jubilee Celebration

CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MAT. HR. SEC. SCHOOL(Wholly owned by the P.A.C.Ramasamy Raja Education Charity Trust) RAJAPALAYAMSolicit Your Gracious Presence at our Silver Jubilee Celebration On Wednesday, the 24  (th) January 2024 at 5.30 p.m. at the school Premises, Lingammal Ramaraju Salai, Rajapalayam.

Jan 23, 2024

தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

 ஆண் குழந்தைகள் நம்மிடம் அன்பாக இருப்பார்கள் .ஆனால் பெண் குழந்தைகள் நமக்கு இன்னொரு அம்மாவாக இருப்பார்கள்.

Jan 21, 2024

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.

உலகம் போற்றும் அயோத்தி ராமர் 500 வருடம் போராட்டத்திற்குப் பின் அயோத்தி இராமர் கோவிலில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு 22.01.2024 இல் ராமர் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இத்தருணத்தில் நாம் இக்கோவில் வருவதற்காகப் போராடிய பல உயிர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உலகம் முழுவதும் உள்ள அனைத்து மதத்தினரும் வியந்து பார்க்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தி நவீன ஆன்மிக தலமாக மாறியுள்ளது. ராமர் கோயிலை தரிசிக்க தினமும் 3 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கின்றனர். அயோத்தியை விரிவுபடுத்த ரூ 85 ஆயிரம் கோடியில் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம் வாட்டர் மெட்ரோ உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 2031-ல் பணிகள் நிறைவடையும்.ராமர் கோயில் மூன்று தளம் கொண்டது, நடன மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் உட்பட ஐந்து மண்டபங்கள் உள்ளன. ராமர் கோயில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை தாங்கும். இந்தியாவின் பழங்கால நகரம் அயோத்தி. இதன் மற்றொரு பெயர் சாகேத். இது கோசல நாட்டின் தலைநகராக இருந்தது.அயோத்தியில் சரயு நதி பாய்கிறது இங்குள்ள சம்தா எரி 60 ஹெக்டேர் பரப்பு கொண்டது இதை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தரும் வி.வி.ஐ.பி. விருந்தினர்களை வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் செல்ல 12 மின்சாரக் கார் வசதி செய்யப்பட்டுள்ளன.கும்பாபிஷேகம் முடிந்த பின் அயோத்திக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கிய பின்னர் மின்சாரக் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 10 கிலோ மீட்டருக்கு ரூ.250-ம், 20 கிலோ மீட்டருக்கு ரூ.400-ம் 12 மணி நேரத்துக்க ரூ.3,000, கட்டணமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.அயோத்தி ரயில் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீராமர் கோயிலுக்கும், அயோத்தியின் பிற சுற்றுலா இடங்களுக்கும் இக்கார்களை பயன்படுத்தலாம். அலைபேசி, செயலி வாயிலாக இந்த மின்சாரக் கார்களை புக்கிங் செய்யலாம். அயோத்தியில் 100 மின்சார பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தி நகரின் குறுக்கே ஓடும் சரயு நதியில் சூரிய சக்தியில் இயங்கும் படகு, படகு இல்லம், வாட்டர் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

Jan 21, 2024

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி22 - ல்  நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அரசியல் தலைவர்கள், சினிமா விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட 7000 பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.திறப்புவிழா அன்று 33 சிசேரியன்ராமர் கோயிலின் கும்பாபிஷேக தினத்தில் சிசேரியன்மூலம் குழந்தையை பெற்றெடுக்க 33 தாய்மார்கள் பதிவு செய்துள்ளனர். உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் அரசு மருத்துவமனை தகவல். திருப்பதியில் இருந்து ஒரு லட்சம் லட்டுகள்கும்பாபிஷேகத்தன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க திருப்பதி தேவஸ்தான கோயிலில் இருந்து ஒரு லட்சம் ஸ்ரீவாரி லட்டுகள் அயோத்திக்கு அனுப்பப்படுகிறது. ஒரு லட்டுவின் எடை 25 கிராம்.14000 கோயிலில் நேரலை  ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதிலும் உள்ள 14 ஆயிரம் கோயில்களில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது மேலும் சுமார் 1.05 கைதிகள் காணவும் சிறைச்சாலையில் ஏற்பாடு.1001 பேருக்கு 'ஸ்ரீராம்' டாட்டுநாக்பூரைச் சேர்ந்த டாட்டு கலைஞர் ஒருவர் ராமர் கோயில் திறப்புவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு 'ஸ்ரீ ராம்' என்ற டாட்டுவை கையில் போட்டுவருகிறார். 1001 பக்தர்களுக்கு இலவசமாக போட திட்டமிட்டுள்ளார்.  2,400 கிலோ எடையில் ராட்சத மணிஉத்தரப்பிரதேசத்தின் சல்சர் என்ற இடத்தில் எட்டு உலோகங்களைக் கொண்டு 2,400 கிலோ எடையில் ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒலித்தால் 2 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்கும்.பார்வையற்ற இஸ்லாமியருக்கு அழைப்புராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பார்வையற்றவரான அக்பர்தாஜ் என்பவருக்கு சிறப்பு அழைப்பு சிறுவயதில் இருந்து ராமர் மீது பக்திக் கவிதைகள் எழுதி வருகிறார்.5 அடியில் மணிவிளக்கு ராமர் கோயில் திறப்பு விழாவின் போது வாரணாசிவாசிகள் விளக்கேற்றும் வகையில் 5 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட மண் விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. விளக்கேற்ற 101 கிலோ நெய் பயன்படுத்தப்படவுள்ளது.7000 கிலோ அல்வாநாக்பூரைச் சேர்ந்த விஷ்ணு என்ற சமையல் கலைஞர் 7000 கிலோ எடையில் அல்வா செய்ய இருக்கிறார். இதற்காக 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவும் 10 அடிநீளமும் கொண்ட கடாய் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 1400 கிலோ எடை கொண்ட கடாயை தூக்க க்ரேன் பயன்படுத்தப்பட்டது.புடவையில் ராமர் கோயில்அயோத்தி கோயிலின் படங்கள் அச்சிடப்பட்ட புடவை சூரத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் பிரத்யேகமாக தயாரித்துள்ளார். இந்தப் புடவை கோயில் திறப்புவிழாவின் போது சீதா தாயாருக்கு வழங்கப்படுகிறது.8 நாடுகளின் நேரத்தைக் காட்டும் கடிகாரம்.லக்னோவைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஒருவர், ராமர் கோயிலில் வைப்பதற்காக கடிகாரத்தை வடிவமைத்துள்ளார். இந்த கடிகாரம் இந்தியா, ஐப்பான், ரஷ்யா, யுஏஇ, சீனா, சிங்கப்பூர், மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நேரத்தைக் காட்டும். 

Jan 15, 2024

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம். ? மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

Jan 15, 2024

மாட்டுப் பொங்கல் 

 பொங்கல்நாளின் மறுநாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகைமாட்டுப் பொங்கல் ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய, உழவர் நண்பர்களாக விளங்கும் மாடு, காளைகளை  நன்றி தெரிவிப்பதற்காகவும் . மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டிசுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். சந்தனம், குங்குமம் வைத்து, மலர் மாலை அணிவித்து,  புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்து, விவசாயிகள் அதனை கடவுளாக வழிபடுவர்உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய்பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். தமிழர்களால் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும்ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன . 

Jan 14, 2024

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். HAPPY PONGAL

 பொங்கல் பண்டிகையின் நாயகராக உள்ளது சூரியன்.சூரியன், சந்திரனை கண் கண்ட தெய்வங்களாக பார்த்தனர். சூரியனுக்கு தைப்பொங்கல், சந்திரனுக்கு, சித்ரா பவுர்ணமி என விழாக்களை உருவாக்கினர்.சப்த ரிஷிகளில் ஒருவரான மரீசி முனிவரின் மகன் காஷ்யபர். இவரது மனைவி பெயர் அதிதி. இவர்களின் பிள்ளையே சூரியன். சூரியனுக்கு, சுவர்ச்சலா, சாயாதேவி, சமுங்கை, பிரபை என்ற மனைவியர் உண்டு,தமிழகத்தில் தை முதல் தேதி பொங்கலிட்டு சூரியனுக்கு படைக்கின்றனர். தை மாதத்தில், கரும்பு, மஞ்சள்,கிழங்கு வகைகள் தாராளமாகக் கிடைக்கும். தமிழகத்தில், மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தங்கும் பொங்கல் தளராத மனதுடன், கரும்பின் சுவை போல் உங்கள்வாழ்க்கை என்றென்றும், தித்திக்கட்டும்.

Jan 12, 2024

ARUMUGHAM PALANIGURU ARTS AND SCIENCE COLLEGE FOR WOMEN - 1st GRADUATION DAY

1st GRADUATION DAY,      TODAY Saturday 13 ^ (th) January 2024 at 10.30 am. in the College Auditorium.

Jan 11, 2024

அயலான்  இன்று12ம் தேதி ரிலீஸ்

 சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் 12ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் 5 ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட அயலான் பல தடைகள் காரணமாக ட்ராப் ஆகும் நிலைக்குச் சென்றது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அயலான் படத்தை விட்டுவிடாமல் சிவகார்த்திகேயனும் ரவிக்குமாரும் பார்த்துக்கொண்டனர். அதற்கு பலனாக அயலான் 12ம் தேதி ரிலீஸாகிறது.பொங்கல் ரேஸில் களமிறங்கும் அயலானுக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ரிலீஸாகிறது. இதனால் தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையேயான போட்டியாக இது பார்க்கப்படுகிறது. அயலான் ட்ரெய்லரை தொடர்ந்து கேப்டன் மில்லர் ட்ரெய்லரும் மறு நாளே வெளியானது. ஆனால், கேப்டன் மில்லருக்கு சென்சாரில் UA சர்டிபிகேட் கிடைத்துள்ளது. அதேநேரம் அயலான் படத்துக்கு U சான்றிதழ் கிடைத்துள்ளதால் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே அயலான் படத்தின் ரிலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இந்த தொகையை ஏற்றுக்கொண்ட கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் 3 கோடி ரூபாயை மட்டுமே திருப்பி செலுத்தியது. மீதித் தொகையை திருப்பிக் கொடுக்காததால் அயலான் ரிலீஸுக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்திருந்தது.இந்நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றோடு முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு  பணம் செட்டில் செய்யப்படவிருப்பதால் அயலான் ரிலீஸில் பிரச்சினை இல்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து படத்தை ப்ரொமோஷன் செய்வதற்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றை திரையிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். இதில் உதயநிதியும் கலந்துகொண்டு அயலான் படத்தை பார்க்கவுள்ளாராம்.அவருடன் மேலும் பல சினிமா நட்சத்திரங்கள் அயலான் படத்தை பார்க்கவுள்ளனர். அவர்களது பாசிட்டிவான விமர்சனங்களை அயலான் படத்தின் ப்ரொமோஷனில் பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் இந்த பொங்கல் ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் இரண்டில் எது வெற்றி பெறும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

Dec 31, 2023

HAPPY NEW YEAR 2024

புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல நம் கனவுகளை நிறைவேற்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

1 2 ... 7 8 9 10 11 12 13 14 15 16

AD's



More News