25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Dec 01, 2023

உடம்பில் உள்ள தேமல் மறைய

உணவில் அதிக அளவில் கசப்பு மற்றும் இனிப்பு வகைகளை தவிர்க்கவேண்டும்.வெந்தயம்,கருவேப்பிலை இரண்டும் சேர்த்து பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தேமல் மறையும்.கருஞ்சீரகத்தை பொடி செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர விரைவில் குணமாகும்.பாசிபருப்பு மாவுடன் வெட்டிவேர் கோரைக்கிழங்கு,வேப்பிலை சேர்த்து அரைத்து குளித்து வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்..அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள்,மருதோன்றி  போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும்.. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில்  கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறையும். எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும். எலுமிச்சை சாராய் தேமல்உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் பிறகு கழுவவேண்டும் மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

Nov 30, 2023

ஆலிவ் ஆயில்  மசாஜ்

ஆலிவ் எண்ணெயில் காணப்படும் இய்ற்கையான கொழுப்புகள் முகம் மற்றும் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக அமைகிறது. இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தில் இருக்கும் வடுக்கள் மற்றும் பருக்களின் தழும்புகள் மீது தவறாமல் மசாஜ் செய்வதன் மூலம் அழகான சருமத்தை பெறலாம்முகம் புத்துணர்ச்சிப் பெற முதலில் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்,பின், உப்பு அல்லது சர்க்கரையை நீரில் கலந்து ஸ்கரப் செய்யுங்கள். அதன்பின், வீட்டில் இருக்கும் கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூள் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். இதனை வாரம்2 அல்லது3 முறை செய்வதன் மூலம் உங்கள் சருமம் பொலிவடையும்தோல் பகுதிகள் வெள்ளையாக மாற பவுலில் கஸ்தூரி மஞ்சள் தூள்2 அல்லது3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில்3 அல்லது4 ட்ராப்ஸ்கள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்ததை தோல் பகுதியில் இரவு நேரத்தில் தடவி வரவேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்தால் தோலிற்கு நல்ல மாற்றம் தெரியும். தடவியதை காலையில் வாஷ் செய்து கொள்ளலாம்.சிலருக்கு எப்போதும் உதடு வறண்ட நிலையிலே இருக்கும். இதற்கு பவுலில்1/2 ஸ்பூன் சுகர் ஸ்க்ரப் அதனுடன்2 அல்லது3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து வறண்ட இடத்தில் தடவி வர வேண்டும். இந்த டிப்ஸை தொடர்ச்சியாக செய்யாமல் ஒரு நாள் விட்டு கூட செய்து வரலாம். வறண்ட பகுதி நல்ல மாற்றம் கிடைக்கும்.சிலருக்கு உடலில் வரி தழும்புகள்(stretchmarks) இருக்கும். இது போன்ற வரி தழும்பு மறைய பயோ ஆயில்(BioOil) மற்றும் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து தடவி வந்தால் கண்டிப்பாக அந்த தழும்பு கோடுகள் மறைந்துவிடும்.

Nov 29, 2023

முடி அடர்த்தியாக வளர ....

. மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. இவற்றின் தோலை சீவி, கூழாக்கி, அதை, உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை அடையலாம்.இவை, முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை வெளியேற்றுவதுடன், துளைகளை மூடுகிறது. இதனால், சருமம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவைப் பெறுகிறது .வளி மண்டல நிலையாலும், குறைந்த அளவு ஊட்டச்சத்துகளாலும் நமக்கு தலை முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு நல்ல தீர்வை தருகிறது. இதற்கு மரவள்ளிக் கிழங்கை கூழாக்கி, தலையில் பூசி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விட்டு அலசி வரவும். இதேபோல் வாரத்திற்கு, இரண்டு முறை செய்து வந்தால், முடி முன்பை விட அடர்த்தியாக வளரும்.மரவள்ளிக் கிழங்கு எண்ணெய்  இதனை ஆங்கிலத்தில் burdock root oil என்று அழைப்பர். இது அழகு சாதன கடைகளில் கிடைக்கும். இது முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் மிக முக்கியமான எண்ணையாகும்வாழைப்பழத்தில் தேவைப்படும் அதிக கனிமச் சத்துக்களும், விட்டமின்களும் இருப்பதால் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.பழுத்த வாழைப்பழம் - 1 மரவள்ளி கிழங்கு எண்ணெய் - 7 ஸ்பூன்,வாழைப்பழத்தை மசித்து அதனுடன் எண்ணெயை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் ஸ்கால்ப்பில் தடவி ஷவர் கேப்பினால் மூடிக் கொள்ளுங்கள்.அரை மணி நேரம் கழித்து தலைமுடியை ரசாயனம் அல்லாத ஷாம்புவினால் அலசுங்கள்.

Nov 28, 2023

கைகளில் அதிகளவில் சுருக்கங்கள் இருந்தால்

வயதாகிக்கொண்டு இருந்தாலே அதிகளவில் கைகள் மற்றும் முகங்களில் சுருக்கங்கள் வர ஆரம்பித்து விடும்.. ஆனால் ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கியதைப் போன்று தோற்றமளிக்கும்.இது பல காரணங்களால் ஏற்படும். நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவையால்கூடஏற்படும்.சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது இல்லை. ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து சருமத்தில் உள்ள சுருக்கத்தை போக்கலாம். ஒரு கப்பில்3,4 ஸ்பூன் சர்க்கரையும்,2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.பின் நன்றாக கழுவிவிட்டு இந்த கலவையை தடவி5நிமிடம் மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர தோலில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.பாத்திரத்தில்1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.  இந்த கலவையில் 15- 20 நிமிடங்களுக்கு கைகளில் தடவி,1520 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4-5 முறை செய்துவர நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்து எடுத்துக்கொள்ளவும். பின் கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை செய்து வர நல்ல மாற்றத்தை தோலில் பார்க்கலாம்.  தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயை வைத்து கைகளில் மசாஜ் செய்யவும். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்ய நல்ல மாற்றத்தை பார்க்கலாம். வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்து கொள்ளவும். அதை கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கமானது குறைய ஆரம்பிக்கும்.  

Nov 27, 2023

பித்தவெடிப்பு  சரியாக...

பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும்.தோல் வறட்சியும், உடல் எடையும் தான் பித்தவெடிப்புக்கு முக்கிய காரணம் நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு ஏற்படும்- இதனால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்..வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் பாதத்தை கழுவி வந்தாலே, வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும் சுத்தம் செய்த பிறகு தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் முழுமையாக குணமாகும்.வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

Nov 25, 2023

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய....

தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும்.துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு குறையும்.பாதாம் எண்ணெய்யுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்மறையும். முகம் பிரகாசமாகும்.பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.எலுமிச்சை பழச்சாறு மற்றும் கடலெண்ணெய் சம அளவு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.பாலுடன் கோதுமை தவிடை கலந்து அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வந்தால் சில நாட்களில் கரும் புள்ளி காணாமல் போய்விடும்.வெள்ளரிச் சாறை முல்தானி மட்டியுடன் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இதே போல் செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தேய்த்து காய்ந்ததும் அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.சந்தனம் மற்றும் மஞ்சள் தூள்களை சம அளவு எடுத்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி பின்னர் தண்ணீரால் கழுவ வேண்டும்.உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

Nov 24, 2023

ஆயில் புல்லிங்

சுத்தமான நல்லெண்ணெய்10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்தவுடன் வெளியேற்றிவிட வேண்டும். தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும். ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல் கூச்சம் சரியாகும்.மற்றும்பற்கள்என்றும்உறுதியாகஇருக்கும்.செரிமான பிரச்சனைகள் சரியாகும், அமைதியான நீண்ட உறக்கம் கிடைக்கும். நல்ல மனநிலை உண்டாகும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஒற்றை தலைவலி சரியாகும். மேலும் சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் முறையை தொடர்ந்து பின்பற்றி வர பிரச்சனைகள் சரியாகும்.தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறை ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பலரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனையாக இருப்பது பார்வை கோளாறு. இந்த பார்வை கோளாறு சரியாக ஒரு சிறந்த முறை தான் ஆயில் புல்லிங். தினமும் ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.வயதானவர்களுக்கு பொதுவாக மூட்டுகளில் பிரச்சனை ஏற்படும், எனவே அவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளை குணப்படுத்தும்.

Nov 21, 2023

 தொப்பையை குறைக்க easy way

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும். வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தால் தொப்பை குறைய உதவும். எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்க தொப்பை குறையும். உணவுகளில் இஞ்சி சேர்ப்பது வயிற்று தொப்பை குறைய உதவியாக இருக்கும். தினம் காலை ஒரு டம்ப்ளர் க்ரீன் டி குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம். உணவில் அதிகமான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

Nov 20, 2023

உடல் எடையைக் குறைக்க வாழைத்தண்டு ஜூஸ்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க விரும்பினால் வாழைத்தண்டு ஜூஸை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கலோரிகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம் வாழைத்தண்டு உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். வாழைத்தண்டில் காணப்படும் சிறப்பு வகை நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

Nov 18, 2023

முகம் பளபளப்பாக கொத்தமல்லி சாறு

தினமும்இரவில் படுக்கும்முன் கொத்தமல்லிசாறும், எலுமிச்சைசாறும் கலந்துஉதடுகளில் தடவிக்கொள்ளவும். கருப்பானஉதடுகள் பளபளப்பாகும். மூக்கைச் சுற்றிகரும்புள்ளிகள் இருந்தால்அங்கும் இந்தகலவையை தடவிஅரை மணிநேரம் ஊறவைத்து குளிர்ந்தநீரில் முகம்கழுவலாம். தொடர்ந்துசெய்து வரநன்மைகள் இருக்கும். 

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 21 22

AD's



More News