25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


அழகுக் குறிப்பு

Nov 17, 2024

முகம் பொலிவாக அரிசி கழுவிய தண்ணீர்.

அரிசி கழுவிய தண்ணீரில் உளுந்தை ஊற  வைத்து தயிர் சேர்த்து அரைத்து, தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும் 20 நிமிடம் கழித்து முகத்தை மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கி முகம் பொலிவாக இருக்கும், கண்கள்குளிர்ச்சியாக இருக்கும்.

Nov 14, 2024

பொடுகு பிரச்சனைக்கு...

தேங்காய் பால் எடுத்த பின் தலையில் நன்றாகத் தேய்த்து. சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும். தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.துளசி, கறிவேப்பிலையை அரைத்துஎலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நோம் கழித்து குளித்தால் பொடுகு. பிரச்சனை நீங்கும்.புளித்த தயிரை தலையில் தேய்த்துக்கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

Nov 08, 2024

வெயிலினால் ஸ்கின் கருமை ஆவதை தடுக்க...

செம்பருத்தி பூ5, கசகசா ஒரு ஸ்பூன், ரோஜா இதழ் இரண்டு பூ அளவு, கசகசாவை பாலில் இரவு முழுவதும் ஊற  வைக்கவும் செம்பருத்தி, ரோஜா. இரண்டையும் ஊற வைத்த கசகசா பாலுடன் சேர்த்து அரைத்து முகம்,கை,கால் கழுத்து முழுவதும் அப்லை செய்து அரை  மணி நேரம் கழித்து குளித்தால், ஷைனிங் கொடுக்கும், ஸ்கின் சென்சிடிவ் ஆகாமல் இருக்கும் வெயிலினால் ஸ்கின் கருமை ஆவதை தடுக்கும்.

Nov 03, 2024

முன்னோர்கள் பயன்படுத்திய வேப்பிலை

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும்.இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

Nov 01, 2024

முக அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகள் மறைய

உளுந்து மாவு,உருளைக்கிழங்கு சாறு,தேன்  வீட்டில் உள்ள இந்த  3 பொருட்களை பயன்படுத்தி கரும்புள்ளியை நீக்கலாம்.முதலில், உருளைக்கிழங்கு சாற்றை உளுந்து மாவுடன் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.அதில் அரை சிறிதளவு தேன் கலந்து கொள்ளவும். இந்த மூன்றையும் நன்கு கலந்து பிரஷ் மூலம் முகத்தில் தடவவும்.இந்த பேஸ் பேக்கை முகத்தில் சுமார் 10 நிமிடங்கள் தடவவும்.இதற்குப் பிறகு, தண்ணீர் மற்றும் பருத்தி உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும். இதன் மூலம் உங்கள் முகத்தில் உடனடி பளபளப்பைக் காணலாம். உங்கள் சருமமும்ஆரோக்கியமாக இருக்கும்.

Oct 31, 2024

பாலுண்ணி மறைய

சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

Oct 30, 2024

தலை முடி அடர்த்தியாக வளர

 50 கிராம் மாதுளம் பழ தோலின் பொடியை, ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இதோடு, தலா, இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து, 'பேஸ்ட்' பக்குவத்திற்கு தயார் செய்யவும். இதை முடியில் தேய்ப்பதற்கு முதல் நாள் இரவு, தலையில் தேவையான அளவு எண்ணெய் வைத்து கொள்வது நல்லது.காலையில், தலைமுடி மற்றும் வேர் கால்களில் நன்றாக தேய்த்து, 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், சீகைக்காய் தேய்த்து தலைமுடியை அலசவு இந்த ஹேர் பேக்கை மாதத்தில் மூன்று மு செய்து வந்தால்,தலைமுடி அடர்த்தியாக வளரும்; பேன் மற்றும் பொடுகு தொல்லையும் மறையும்.

Oct 20, 2024

முகத்தில் கருப்பு தழும்புகள், கருவளையம் மறைய

 உருளைக்கிழங்கை சாறு எடுத்து முகத்தில் பூசி வர, சீக்கிரம் கரும்புள்ளிகள் பரு தழும்புகள் மறையும். கேரட் சீவும் கட்டையில் சிறியதாக பகுதியில் உருளைக்கிழங்கை சீவி உள்ளங்கையில் வைத்து அழுத்தி பிழிந்தால், நன்றாக சாறு வரும் .ஒரு கிண்ணத்தில் பிழிந்து எடுத்து எளிதில் பூசி கொள்ள கருவளையம் , கரும்புள்ளி மறையும்.

Oct 10, 2024

கேசப் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகள்...

பெண்களுக்கு அதிக முடி உதிர்வால் ஏற்படும் பொடுகு, இளநரை, முடி உதிர்தல், ஊட்டச்சத்தின்மை , வழுக்கைப் பிரச்னைக்குத் தீர்வாக, இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை மிதமாகச்சூடுபடுத்தி அதில் ஒரு  டீஸ்பூன் லவங்கப்பட்டை பவுடர், ஒரு டேபின்ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் ஆக்கி, தலையில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் கழித்து அலசலாம்

Oct 04, 2024

அன்னாசி பழத்தின் சாறு 

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு . வகிக்கின்றன.சிறிது ஜாதிக்காயுடன் அன்னாசிப்பழ சாறை கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் மின்னும். சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.சிலருக்கு முகத்தில் நீர் கோத்துவீங்கிப் போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு  அருமருந்து.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 24 25

AD's