25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


அழகுக் குறிப்பு

Oct 30, 2024

தலை முடி அடர்த்தியாக வளர

 50 கிராம் மாதுளம் பழ தோலின் பொடியை, ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இதோடு, தலா, இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து, 'பேஸ்ட்' பக்குவத்திற்கு தயார் செய்யவும். இதை முடியில் தேய்ப்பதற்கு முதல் நாள் இரவு, தலையில் தேவையான அளவு எண்ணெய் வைத்து கொள்வது நல்லது.காலையில், தலைமுடி மற்றும் வேர் கால்களில் நன்றாக தேய்த்து, 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், சீகைக்காய் தேய்த்து தலைமுடியை அலசவு இந்த ஹேர் பேக்கை மாதத்தில் மூன்று மு செய்து வந்தால்,தலைமுடி அடர்த்தியாக வளரும்; பேன் மற்றும் பொடுகு தொல்லையும் மறையும்.

Oct 20, 2024

முகத்தில் கருப்பு தழும்புகள், கருவளையம் மறைய

 உருளைக்கிழங்கை சாறு எடுத்து முகத்தில் பூசி வர, சீக்கிரம் கரும்புள்ளிகள் பரு தழும்புகள் மறையும். கேரட் சீவும் கட்டையில் சிறியதாக பகுதியில் உருளைக்கிழங்கை சீவி உள்ளங்கையில் வைத்து அழுத்தி பிழிந்தால், நன்றாக சாறு வரும் .ஒரு கிண்ணத்தில் பிழிந்து எடுத்து எளிதில் பூசி கொள்ள கருவளையம் , கரும்புள்ளி மறையும்.

Oct 10, 2024

கேசப் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகள்...

பெண்களுக்கு அதிக முடி உதிர்வால் ஏற்படும் பொடுகு, இளநரை, முடி உதிர்தல், ஊட்டச்சத்தின்மை , வழுக்கைப் பிரச்னைக்குத் தீர்வாக, இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை மிதமாகச்சூடுபடுத்தி அதில் ஒரு  டீஸ்பூன் லவங்கப்பட்டை பவுடர், ஒரு டேபின்ஸ்பூன் தேன் கலந்து பேஸ்ட் ஆக்கி, தலையில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் கழித்து அலசலாம்

Oct 04, 2024

அன்னாசி பழத்தின் சாறு 

அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு . வகிக்கின்றன.சிறிது ஜாதிக்காயுடன் அன்னாசிப்பழ சாறை கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். உங்கள் சருமம் மின்னும். சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.சிலருக்கு முகத்தில் நீர் கோத்துவீங்கிப் போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு  அருமருந்து.

Oct 02, 2024

முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய்

முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தலையில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை. சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். 

Sep 18, 2024

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க குங்குமப்பூ

கோடைகாலம் வந்துவிட்டால் அதிகப்படியான வெப்பம் சுட்டெரித்து,பெண்கள், ஆண்கள் என இரு பாலருக்கும் சரும பாதிப்பு  பிரச்சனைகள் ஏற்படும்.  .காலநிலை மாற்றத்தின் காரணமாக சரும பாதிப்பும் அடிக்கடி ஏற்படும். அந்தவகையில் வெயிற் காலத்தில் சருமத்தை  பாதுகாக்கதேன் மற்றும் தயிருடன் குங்குமப்பூ சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் மெதுவாக தடவி,15,20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.குங்குமப்பூவை இரவு முழுவதும் ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்து, முக டோனராகப் பயன்படுத்தலாம். இது முகத்தில் ஏற்படும் துளைகளை தடுக்கும்.குங்குமப்பூ கலந்த எண்ணெயை பாதாம் அல்லது தேங்காய் எண்ணெய் எடுத்து மெதுவாக சருமத்தில் மசாஜ் செய்யவும். இதனால் சருமத்தில் இரத்தம் ஓட்டம் சீராக இருக்கும்.

Sep 17, 2024

கழுத்தை சுற்றிலும் உள்ள கருமை நீங்க ….

சிலருக்கு முகத்தை காட்டிலும் கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். வெயில், நகை அலர்ஜி, உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு கழுத்தில் கருமை உண்டாகும்.இதற்கு சரியான பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். இயற்கை பொருட்கள் கொண்டு எப்படி கருமையை போக்கலாம் .பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.கற்றாழை ஜெல்லில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்கு கலந்து, கழுத்துப்பகுதியில் ஸ்க்ரப் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.கடலை மாவுடன், கால் டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்ந்து கெட்டியாக பேஸ்ட் போல கலந்து, கருமையான இடத்தில் நன்கு தடலி காய்ந்தவுடன் தேய்த்து கழுவவும்.பாசிப்பயிறு மாவு உடன் தயிரை கலந்து கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

Sep 05, 2024

மூக்கில் மேல் உள்ள பிளாக் ஹெட்ஸ் நீக்க

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்னை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இவை இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம்.அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கும், பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும்.நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு, ஆவி பிடித்தல்தான் சரியான ட்ரீட்மென்ட் .மாதம் ஒரு முறை தொடர்ந்து ஆவி பிடிப்பதன் மூலம் மூக்கின் மேல் உள்ள புள்ளிகள் நிரந்தரமாக மறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.மசித்த வாழைப்பழத்துடன், ஓட்ஸ், சில துளிகள் தேன் சேர்த்து, மூக்கில் தடவி, ஸ்க்ரப் மற்றும் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.2 தேக்கரண்டி பட்டை பொடி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஸ்க்ரப் செய்தால் அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை பிளாக் ஹெட்ஸை விரைவில் நீக்கும்.வாரம் ஒரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்யும்போது, மூக்கு பகுதியில் பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது.வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை கலவையை மூக்கின் மீது தடவி மேலிருந்து கீழாக மூக்கை ஒட்டி மசாஜ் செய்தால் சொரசொரப்பு இல்லாமல் பளிச்சென இருக்கும்.

Sep 04, 2024

இளநரை வராமல் இருக்க..

 நல்லெண்ணையை ஒரு கப் அளவு எடுத்து அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை போட்டு குறைவான தீயில் சில நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் ஆற வைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து வர நரைமுடி வராது. முடியின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கறிவேப்பிலையை பொடி செய்து தினமும் 2 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர கருகருப்பான ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தலை பெறலாம்.

Sep 01, 2024

உதடு வறட்சியைத் தடுக்க….

உதடுகள் மென்மையானவை என்பதால் அதனால் ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்வது அவசியம்.  உணவில் நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளவும்.நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.தேங்காய் எண்ணெயை தினமும் இருமுறை உதடுகளில் தடவி, சில நொடிகள் மசாஜ் செய்யவும். இது, வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை சேர்க்கிறது.கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் கழுவலாம்.இயற்கை மாய்ஸ்ச்சுரைசரான தேன், வறண்ட மற்றும் வெடித்த உதடுகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்றது. உதடுகளில் ஏற்படும் வெடிப்பு, புண்களை சீக்கிரம் குணப்படுத்தும்.வெள்ளரிக்காய் துண்டை, உதடுகளில் மெதுவாக ஓரிரு நிமிடங்கள் தேய்க்கவும். பத்து நிமிடங்கள் சாறு உதட்டிலிருக்கும் படி விட்டு பின்னர், கழுவவும்.தினமும் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்யலாம்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 26 27

AD's



More News