25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


அழகுக் குறிப்பு

Nov 26, 2024

முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற,.....

முகம் நல்ல வெள்ளையாக நல்ல கலராக மாற, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் கருமைகள் மறைந்து முகம் நல்ல கலராக ஈஸியான புது டிப்ஸ் முகம் நல்ல கலராக நல்ல வெள்ளையாக நல்ல பளப்பளப்பாக மாற இதை மட்டும் செய்தால் போதும் அதற்கு அரிசி மாவு ஒரு ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன், ஒரு எலுமிச்சை சாறு ஆகிய இதையெல்லாம் ஒன்று கலந்து முகத்தில் தடவி ஒருமணி நேரம் கழித்து முகத்தை கழுவி வந்தால் முகம் பளபளப்பாகவும் நல்ல கலராகவும் நல்ல வெள்ளையாகவும் இருக்கும் இப்படி தினமும் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Nov 21, 2024

முகத்திலுள்ள முடி உதிர....

மஞ்சள், தேன், ஆரஞ்சு பழச்சாறு மூன்றும் கலந்து, முகத்தில் முடி உள்ள இடத்தில் அப்ளைசெய்து.15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.தினமும் செய்து வர முகத்திலுள்ள முடி உதிர்ந்து விடும்.

Nov 17, 2024

முகம் பொலிவாக அரிசி கழுவிய தண்ணீர்.

அரிசி கழுவிய தண்ணீரில் உளுந்தை ஊற  வைத்து தயிர் சேர்த்து அரைத்து, தர்பூசணி சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும் 20 நிமிடம் கழித்து முகத்தை மெதுவாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கி முகம் பொலிவாக இருக்கும், கண்கள்குளிர்ச்சியாக இருக்கும்.

Nov 14, 2024

பொடுகு பிரச்சனைக்கு...

தேங்காய் பால் எடுத்த பின் தலையில் நன்றாகத் தேய்த்து. சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும். தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.துளசி, கறிவேப்பிலையை அரைத்துஎலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நோம் கழித்து குளித்தால் பொடுகு. பிரச்சனை நீங்கும்.புளித்த தயிரை தலையில் தேய்த்துக்கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.

Nov 08, 2024

வெயிலினால் ஸ்கின் கருமை ஆவதை தடுக்க...

செம்பருத்தி பூ5, கசகசா ஒரு ஸ்பூன், ரோஜா இதழ் இரண்டு பூ அளவு, கசகசாவை பாலில் இரவு முழுவதும் ஊற  வைக்கவும் செம்பருத்தி, ரோஜா. இரண்டையும் ஊற வைத்த கசகசா பாலுடன் சேர்த்து அரைத்து முகம்,கை,கால் கழுத்து முழுவதும் அப்லை செய்து அரை  மணி நேரம் கழித்து குளித்தால், ஷைனிங் கொடுக்கும், ஸ்கின் சென்சிடிவ் ஆகாமல் இருக்கும் வெயிலினால் ஸ்கின் கருமை ஆவதை தடுக்கும்.

Nov 03, 2024

முன்னோர்கள் பயன்படுத்திய வேப்பிலை

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும்.இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

Nov 01, 2024

முக அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகள் மறைய

உளுந்து மாவு,உருளைக்கிழங்கு சாறு,தேன்  வீட்டில் உள்ள இந்த  3 பொருட்களை பயன்படுத்தி கரும்புள்ளியை நீக்கலாம்.முதலில், உருளைக்கிழங்கு சாற்றை உளுந்து மாவுடன் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.அதில் அரை சிறிதளவு தேன் கலந்து கொள்ளவும். இந்த மூன்றையும் நன்கு கலந்து பிரஷ் மூலம் முகத்தில் தடவவும்.இந்த பேஸ் பேக்கை முகத்தில் சுமார் 10 நிமிடங்கள் தடவவும்.இதற்குப் பிறகு, தண்ணீர் மற்றும் பருத்தி உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும். இதன் மூலம் உங்கள் முகத்தில் உடனடி பளபளப்பைக் காணலாம். உங்கள் சருமமும்ஆரோக்கியமாக இருக்கும்.

Oct 31, 2024

பாலுண்ணி மறைய

சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகு போலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

Oct 30, 2024

தலை முடி அடர்த்தியாக வளர

 50 கிராம் மாதுளம் பழ தோலின் பொடியை, ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இதோடு, தலா, இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து, 'பேஸ்ட்' பக்குவத்திற்கு தயார் செய்யவும். இதை முடியில் தேய்ப்பதற்கு முதல் நாள் இரவு, தலையில் தேவையான அளவு எண்ணெய் வைத்து கொள்வது நல்லது.காலையில், தலைமுடி மற்றும் வேர் கால்களில் நன்றாக தேய்த்து, 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், சீகைக்காய் தேய்த்து தலைமுடியை அலசவு இந்த ஹேர் பேக்கை மாதத்தில் மூன்று மு செய்து வந்தால்,தலைமுடி அடர்த்தியாக வளரும்; பேன் மற்றும் பொடுகு தொல்லையும் மறையும்.

Oct 20, 2024

முகத்தில் கருப்பு தழும்புகள், கருவளையம் மறைய

 உருளைக்கிழங்கை சாறு எடுத்து முகத்தில் பூசி வர, சீக்கிரம் கரும்புள்ளிகள் பரு தழும்புகள் மறையும். கேரட் சீவும் கட்டையில் சிறியதாக பகுதியில் உருளைக்கிழங்கை சீவி உள்ளங்கையில் வைத்து அழுத்தி பிழிந்தால், நன்றாக சாறு வரும் .ஒரு கிண்ணத்தில் பிழிந்து எடுத்து எளிதில் பூசி கொள்ள கருவளையம் , கரும்புள்ளி மறையும்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 27 28

AD's



More News