ஆப்பத்தின் நறுமணம் தெருவிற்கு வாசம் வரும்
முன் காலத்தில் அம்மா சுடும் ஆப்பத்தின் நறுமணம் தெருவிற்கு வாசம் வரும் இன்று ஆப்பத்தின் நறுமணம் குழந்தைகள் அறியாத அளவிற்கு மாறிவிட்டது.. காரணம் அப்போது தென்னை மரம் அல்லது பனை மரத்தின் கள் சேர்த்து செய்வார்கள்.இப்போது கிடைப்பதில்லை. அரிசியும் ருசியுடன் இருக்கும். அதனால் அப்போது உள்ள ஆப்பத்தின் சுவை இப்போது இல்லை. அதற்கு பதிலாக இப்போது ஆப்பத்தின் சுவையை ரொட்டி, கேக் செய்ய பயன்படுத்தும் ஈஸ்ட் கொடுக்கிறது. பச்சரிசி, புழுங்கல் அரிசி, வடித்த சாதம், தேங்காய் துருவலை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து கலந்து, அதனுடன் அரை ஸ்பூன் ஈஸ்ட் தண்ணீரில் சேர்த்து கரைத்து உப்பு சேர்த்து ஆப்ப மாவை தயார் செய்து, மறுநாள் காலை புளித்த பின் மாவின் வாசனை பிரமாதமாக இருக்கும். தேங்காய் பால், சென்னா மசாலா செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.
0
Leave a Reply