25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Feb 19, 2024

இதய ஆரோக்கியத்தை அதிகரித்து, சோர்வை நீக்கி ,செரிமானத்தை அதிகரிக்கிறது கோவக்காய்.

கோவக்காயில்பொட்டாசிய சத்து அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, இதய நோயை தடுக்கிறது.இரும்புச்சத்து உடல் இயங்குவதற்கு தேவையான ஒரு சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு சுறுசுறுப்பை வழங்குகிறது. சோர்வை நீக்குகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால்அனீமியா ஏற்படுகிறது. கோவக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடும்போது கிடைக்கும் இரும்புச்சத்து உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும் வைத்திருக்க உதவுகிறது. கோவக்காய் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. கடினமான மலத்தை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகிறது. மலச்சிக்கல், அல்சர் போன்ற வயிறு தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் கேவக்காய் சரிசெய்கிறது.

Feb 17, 2024

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள்-நெல்லிக்காய் – 1,கறிவேப்பிலை – ஒரு கொத்து,சீரகம் – அரை ஸ்பூன்உப்பு – தேவையான அளவு,தயிர் – ஒரு கப்செய்முறை-நெல்லிக்காய், கறிவேப்பிலை, சீரகம், தயிர்,உப்பு அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.நெல்லிக்காயில் வைட்டமின் சிசத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.

Feb 15, 2024

சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் செம்பருத்தி

செம்பருத்தியை பயன்படுத்தி சிறுநீர் பை, கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று பிரச்னைகளை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்செம்பருத்தி பூ, பனங்கற்கண்டு.  ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி பூவின் இதழ்களை போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, தொற்று குணமாகும்.கணையத்தில் உண்டாகும் கட்டிகள் கரையும். சிறுநீர் பையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.செம்பருத்தி இதயத்தை பலப்படுத்துகிறது. காயவைத்த செம்பருத்தி பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை பயன்படுத்தியும் தேனீர் தயாரிக்கலாம். செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிட்டுவர பல்வேறு நன்மைகள் உண்டாகும்.செம்பருத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புற்றுநோயை உருவாக்கும் நச்சுக்களை செம்பருத்தி வெளியேற்றும்.

Feb 14, 2024

ஆயுர்வேதத்தில் கோவக்காய் புற்றுநோய் செல்களுக்கு மருந்து! 

 கோவக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அதிகளவு பீட்டா கரோட்டின் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் டியூமர் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. இது புற்றுநோய் செல்கள் பல்கிப்பெருகுவதை நிறுத்த உதவுகிறது. உங்கள் உணவில் கோவக்காய் சேர்த்துக்கொள்ளும்போது, அது புற்றுநோய் வாய்ப்புக்களை தடுக்கிறது.கோவக்காய் நிறைய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பல்வேறு நோய்களையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸை கொல்கிறது. இது காய்ச்சல், ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, தொழுநோய் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது. இதற்கு சரியான உணவை எடுத்துக்கொண்டு அதில் கோவக்காயையும் சில வாரங்கள் சேர்த்துக்கொண்டு பலன்பெறுங்கள்.கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. கோவைக்காய் மற்றும் கீரையை சூப்பில் சேர்த்து சாப்பிடலாம். இது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

Feb 13, 2024

உடல் உழைப்பின்றி நாற்காலியில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் தவிர்க்க வேண் டிய உணவுகள்,

உடல் உழைப்பின்றி நாற்காலியில் அமர்ந்து பகல் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் உணவைக் குறைக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாததால் உண்ணும் உணவானது உடலில் கசடுகளாகத் தங்கி துன்பம் விளைவிக்கும். 1. தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.2. வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.3. பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.4. வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.5. மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு மீறி உண்டால் “வெண் மேகம்” போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.6. உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.7. உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.8. ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.9. மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.10. நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.11. காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக் குடிக்கலாம்.12. அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.13. பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.14. தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.15. கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.16. மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக்கூடாது

Feb 12, 2024

சுகர் பேஷண்ட்ஸ்  உணவு முறை

சர்க்கரை நோயாளியின் ரத்த சர்க்கரை அளவு இரவில் குறைவாக இருக்கும். அதிகாலை3 முதல்4 மணி வரை குறைந்த அளவில் இருக்கும். இதனால் தூங்காவிட்டாலும் கூட, எதையும் சாப்பிடாவிட்டாலும் அவர்கள் ரத்த சர்க்கரை அளவு காலையில் அதிகரிக்கும். இதை நாம் டான் பினாமினா என்று அழைக்கிறோம். கார்டிசோல், அட்ரினலின், நார் அட்ரினலின் உள்ளிட்ட ஹார்மோன்கள் இந்த உயர்வுக்கு காரணமாக உள்ளது.இரவு நேரத்தில் எல்லா செயல்பாடுகளும் குறைவாக இருப்பதாலும், ஹார்மோன்கள் அதிகம் வேலை செய்யாமல் இருப்பதால் ரத்த சர்க்கரை குறைவாக உள்ளது.இருக்கும் எல்லா ஹார்மோன்களிலும், இன்சுலின்தான் ரத்த சர்க்கரையை குறைக்கிறது. இதனால்தான் காலை உணவிற்கு பிறகு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால்தான் நாம் சாப்பிடும் காலை உணவு நமது ரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் பார்த்துகொள்வது முக்கியம்.அதிக நார்சத்து உள்ள உணவுகள், மற்றும் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட உணவுகள். முழுதானிய வகைகளில் எடுத்துகொள்ளும் பிரட் மற்றும் சீரியல்களை நாம் சாப்பிடலாம். தாவரம் அல்லது விலங்குகளின் புரத சத்தை நாம் எடுத்துகொண்டால் அடிக்கடி பசிக்காது.ஒரு முழு முட்டையை நாம் காலை உணவாக எடுத்துகொள்ள முடியும். ஆனால் ஒரு முட்டையின் மஞ்சள் கரு300 மில்லி கிராம் கொலஸ்டாலை கொண்டது. இந்நிலையில் நாம் முட்டையின் வெள்ளை கருவை வைத்து ஆம்லேட் செய்தால்,3 முதல்4 வரை முட்டைகளை பயன்படுத்தலாம். சுத்தமாக கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து இல்லாத புரத சத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும்.குறிப்பாக பீன்ஸ், நட்ஸ், மீன்கள். ஒரு கப் பாலில், அதில் பூசணி விதைகள், சியா விதைகள், பிளக்ஸ் விதைகளை சேர்த்து குடிக்கலாம். பழங்களில் குறைந்த கிளைசிமிக் கொண்ட பழங்களான ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றை பழங்களாக எடுத்துகொள்ளவும். ஜூஸ் வடிவில் எடுத்துகொள்ள வேண்டாம்.காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, போகா எடுத்துகொள்ளலாம். ஆனால் அதன் அளவு குறைவாக இருக்க வேண்டும். முளைகட்டிய பயிர்களுடன் இதை நாம் சாப்பிட வேண்டும். காலையில் எடுத்துகொள்ளும் காப்பியில் நாம் அதிகம் பால் சேர்க்காமல் இருக்க வேண்டும்.இந்தியர்கள் உணவு முறையில் அதிகபடியாக கார்போஹைட்ரேட்தான் உள்ளது. இந்த கார்போஹைட்ரேட்ஸ் உங்கள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.

Feb 07, 2024

புற்றுநோயை தடுக்கும் பிளம்ஸ் பழம்

மலைகளில் விளையும் பிளம்ஸ் பழம், “கொத்துப்பேரி” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் சாப்பிட புளிப்பாக இருப்பதால் பலர் விரும்புவதில்லை. ஆனால் அதிக சத்து மிக்கது, இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் 'சி' தான், இதன் புளிப்பு சுவைக்கு காரணம். இனிப்பு, புளிப்பு மற்றும் லேசான கசப்பு சுவை கொண்ட இப்பழத்தில், பல்வேறு வகையான பாலிபினால்கள் மற்றம் ஆக்சிஜனேற்றங்கள் இருப்பதால், கோடை மற்றும் மழை காலத்திலும் உண்ண உகந்தது.புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணம், பிளம்சில் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயால் இறக்கும் பெண்களில், 18 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வில் கண்டறிந்துள்ளது. பிளம்ஸ் பழத்தில் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதால், அமெரிக்காவின், 'அக்ரிலைப்' ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.புற்றுநோய் சிகிச்சையின் போது, புற்றுநோய் செல்களுடன் உடலில் உள்ள மற்ற செல்களும், அழிக்கப்பட்டு விடுவதால், நோயாளிகளின் உடல் சோர்ந்து போகிறது. ஆனால், பிளம்ஸ் பழத்தில் உள்ள பிளோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருளான, குளோரோ ஜெனிக் மற்றும் நியோகுளோரோஜெனிக் அமிலங்கள், உடலில் எந்த விதமான பாதிப்பு இல்லாமல் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிப்பதாக கூறுகின்றனர்.இந்த ரசாயனங்கள் மற்ற சில பழங்களில் இருந்தாலும், பிளம்ஸ் பழத்தில் மிகுதியாக இருப்பதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளம்ஸ் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட், நம் உடலில் செல் திசுக்கள் வேகமாக அழிவதை தடுக்கம். இதனால் முதுமையை தள்ளிப் போட உதவுகிறது. இந்த காரணத்தால், இதை பெண்களின் பழம் என்கின்றனர்.ரத்தத்தை சுத்திகரித்து, நம் உடலை ஆராக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ரத்த சோகையை தடுக்கிறது. எனவே, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் பெண்கள், பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம்.டைப் 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. பிளம்சில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. பொட்டாசியத்தின் வளமான மூலமாக திகழ்கிறது. பிளம்ஸ், பொட்டாசியம் தான் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இது, ரத்த அழுத்தத்தின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க உதவுகிறது.பிளம்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள், சரும தோற்றத்தை காத்து, புத்துணர்ச்சி பெற வைக்கிறது. இளமையான சரும் அழகை பெற பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வாருங்கள். 

Feb 06, 2024

வெற்றிலை நல்ல மருத்துவ மூலிகை

திருமண விசேஷங்கள் தொடங்கி அனைத்து விசேஷங்களில் விருந்துகளில் வெற்றிலை முதன்மை ஒன்றாக பார்க்கப்படுகிறது. . சாதாரண வெற்றிலை, கற்பூர வெற்றிலை, கம்மாறு வெற்றிலை என வெற்றிலையில் மூன்று வகைகள் உள்ளன.. இது நல்ல மருத்துவ மூலிகை .குழந்தை பெற்ற சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் இருப்பவர்களுக்கு தேவையான பால் சுரக்க, வெற்றிலையை எடுத்து, அனலில், நெருப்பில் வாட்டி மார்பகங்களின் மேல் வைத்துக் கட்டி கொண்டால் தாய்ப்பால் சுரக்கும். கிராமங்களில் இன்றும் இம்முறையை தான் கடைப் பிடித்து வருகிறார்கள்.மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கிச் சாறு எடுத்து சாற்றில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு, நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்து போகும்..வெற்றிலையில் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கும். வெற்றிலைச் சாற்றில் உள்ள பினாலிக் கலவைகள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறனைக் கொண்டு இருக்கிறது.  நீரிழிவு நோய்க்கு வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள் உண்டு. வெற்றிலை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.ஆறாத கட்டிகளையும் வெற்றிலை குணமாக்கும். 4 முதல் ஐந்து வெற்றிலையை நெருப்பில் காட்டினால் வதங்கிவிடும். அது, கூடவே கொஞ்சம் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, கட்டிகள் மேல் வைத்து கட்டிவிடவும். இப்படி செய்வதால் கட்டிகள் உடைந்து குணமாகும்.கம்மார் வெற்றிலை இரண்டெடுத்து நன்றாகக் கழுவிவிட்டு, அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் வைத்து வாயில் போட்டு நன்கு மென்று விழுங்குங்கள். சிறிது நேரம் கழித்து வெந்நீர் குடியுங்கள். அஜீரணம் அகன்று, நன்கு ஜீரணமாகும்.மயக்கத்தை தெளிவிக்கும்.காதுவலிகளை போக்கும்.குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசத்தை நலமாக்கும்.தொடர் இருமலால் ஏற்படும் மூச்சிரைப்பை போக்கும்.தேளின் விஷத்தை நீக்கும்.

Feb 03, 2024

மருத்துவக் குணங்கள் நிறைந்த நெல்லிக்காய்

நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என இருவகைகள் உண்டு. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் அதிகமாக வளர்கிறது.தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வட நாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும். பல மருத்துவக் குணங்கள் இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப்புகழ்கிறார்கள். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள்.தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய் செய்யவும், சிறியதை ஆயுர்வேத மருந்துகள், லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால், அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்றுநோய்கள் அண்டாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய்சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல் பழப்பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்கு வியாதி குணமாகிவிடும். நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும்.கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக் காய்க்கு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும். தரமான தலை சாயங்களில் நெல்லி விதையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவார்கள். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்காயில்8.75 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில்20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளை விட3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிவற்றல், பச்சைபயறு வகைக்கு20 கிராம் எடுத்து1 லிட்டர் நீர்விட்டு200 மி.லி.ராக காய்ச்சி வடித்து,100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு நீங்கும்.

Feb 02, 2024

80 வயதிலும் 20 வயதுபோல் இருக்க இஞ்சி பால் (Ginger Milk )

இஞ்சி பால் -தேவையான பொருட்கள்பால் – ஒரு டம்ளர் (காய்ச்சியது அல்லது காய்ச்சாதது எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)சோம்பு – ஒரு ஸ்பூன்பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்இஞ்சி – ஒரு துண்டுசெய்முறைஒரு பாத்திரத்தில் ஒரு கப் காய்ச்சிய பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலர் பால் பிடிக்காது என்று கூறுவார்கள். ஆனால் நாம் அன்றாட வாழ்வில் பால் சேர்த்துக்கொள்வதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான கால்சியத்தை இந்த பால் வழங்குகிறது. பசும்பால் கிடைத்தால் நல்லது. பால் பிடிக்காவிட்டால் பால் சம்மந்தப்பட்ட உணவை தினமும் சேர்த்துக்கொள்வது நல்லது.இதைக் குடிப்பதால் கை-கால் வலி, முதுகு வலி, ரத்தபற்றாக்குறை, உடல்பலவீனம், உடல சோர்வு, உடல் பருமன் எதுவுமின்றி 80 வயதிலும் 20 வயதுபோல் ஆரோக்கியத்துடன்சுறுசுறுப்புடனும் வாழலாம். அஜீரண கோளாறு, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், கால்சியம்குறைபாடு ஆகியவற்றையும் சரிசெய்யும்பாலை அடுப்பில் வைத்து அதில் சோம்பையும் சேர்க்க வேண்டும்.சோம்பு வெறும் வாசனை பொருள் மட்டுமல்ல, அது வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், அஜீரணகோளாறு ஆகிய பிரச்னைகளையும் தீர்க்கிறது.குளிர்காலத்தில்ஏற்படும் சளித்தொல்லை மற்றும் சுவாசகோளாறுகள் ஏற்படும் அல்லது ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் அவதிப்படுவார்கள். அவர்கள் அதிகம் சோம்பு எடுத்துக்கொள்வது நல்லது. அவர்களுக்கு அந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.குழந்தைபெற்றதாய்மார்கள் அதிகளவில்சோம்பு எடுத்துக்கொள்ளும்போது, அவர்களுக்கு தாய்ப்பால்சுரக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்குஇது அருமருந்தாகவும்உள்ளது.சோம்பில் அதிகளவில் வைட்டமின் சிசத்து நிறைந்துள்ளது. அது உடலில் உள்ள ரத்தச்சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்கிறது.உடலில் உள்ள நீர்கோர்க்கும் குறிப்பாக திசுக்களில் நீர் கோர்க்கும்போது அவர்களுக்கு உடலில் சோர்வு மற்றும் வலி, அசதி ஆகியவை ஏற்படும். அவர்கள் சோம்பு எடுத்துக்கொள்ளும்போது அவை நீங்கும்.கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி அதை சுத்தம் செய்ய உதவுகிறது. நமது நரம்புகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. ஏனெனில் இதில் நிறைய கால்சியம் மற்றும் மெக்னீசிய சத்துக்கள் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது வழங்குகிறது.பின்னர்சுத்தம் செய்தஇஞ்சி ஒருதுண்டு சேர்க்கவேண்டும். அஜீரணகோளறை சரிசெய்யும். உடலில் இருக்கக்கூடியநச்சுக்களை வெளியேற்றும். ரத்தத்தை சுத்திகரிக்கும். வாயுத்தொல்லையை சரிசெய்யும். இஞ்சியை எப்போதும் தோல் நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.இதைநன்றாக 5 நிமிடம்கொதிக்கவிட்டு, வடிகட்டிஎடுத்துக்கொள்ள வேண்டும். அதன் சாறுபாலில் இறங்கவேண்டும்.இதில் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு எனஎதுவேண்டுமானாலும் சேர்த்து பருகலாம். பால்ஆறியபின் சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால்பால் திரிந்துவிடும்.இந்தப்பாலை இரவில் அருந்தும்போது, இஞ்சிக்கு பதில் சுக்குப்பொடி சேர்த்து பருகவேண்டும். காய்ந்த இஞ்சிதான் சுக்குப்பொடி. காலையில் பருகும்போது இஞ்சி சேர்த்துக்கொள்ளலாம்.இதைவாரத்து இரண்டுமுறை எடுத்துக்கொண்டாலேபோதும் உங்கள்உடலுக்கு தேவையானஅனைத்து ஊட்டச்சத்துக்களும்கிடைக்கும்.உடலில் வாயுத்தொல்லை இருக்காது. நரம்பு மண்டலம் வலுப்பெறும். வயிறு உப்புசம் இருக்காது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும். வயிறை நன்றாக சுத்தம் செய்யும். உடலை ஆரோக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் வைத்துக்கொள்ள உதவும். எலும்புகளுக்கு நல்ல உறுதியைக்கொடுக்கும். 

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News