25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நுண்கிருமிகளை வெளியேற்றும் செண்பக பூக்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நுண்கிருமிகளை வெளியேற்றும் செண்பக பூக்கள்

செண்பக மரத்தின் விதை, வேர், பட்டை எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.. முக்கியமாக, அல்கலாய்டுகள்,ஒலியிக் சினாயிக், பால்மிடிக் போன்ற பொருட்கள்தான்,  இந்த மரத்தின் ஸ்பெஷலாட்டியாக இருக்கின்றன.கண்ணில் நீர்வடிதல், கண்வலி, எரிச்சல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல், கிருமித்தொற்று, போன்ற கண்களை பாதிக்கும் அத்தனை பிரச்சனைக்கும் இந்த் பூக்கள் பயன்படுகின்றன. 

நுண்கிருமிகளை வெளியேற்றும் திறன், இந்த செண்பக பூக்களுக்கு உண்டு. செண்பக மரத்தின் பூக்களை பொருத்தவரை, கண்நோய் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.. இந்த பூக்களில், பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின் போன்றவையே கிருமிநாசினியாக பயன்பட தூண்டுகோலாகின்றன. எப்படி பயன்படுத்தலாம்: செண்பகப்பூக்களை, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து நீர்விட்டு அரைத்து, அந்த விழுதை கண் இமைகளின் மேலும், கீழும் பற்று போல போட வேண்டும். ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், கண் ஆரோக்கியம் காக்கப்படும்.. அல்லது, இந்த பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்த தண்ணீரில் கண்களை கழுவி வரலாம்..

இந்த பூக்களை தண்ணீரில் ஊறவைத்து எடுத்த பிறகு, சிறிது இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்து கலக்கியும் கண்களை கழுவி வரலாம். வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாகும் காய்ச்சலை விரட்ட இந்த பூக்கள் உதவுகின்றன. சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற உஷ்ண கோளாறுக்கும் இந்த பூக்கள்தான் உதவுகின்றன. உடலுள்ள பித்தத்தை நீக்கவும், இந்த பூக்கள்தான் பயன்படுகின்றன. நரம்பு தளர்ச்சி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், போன்ற குறைபாடுகளுக்கும் இந்த பூக்களே பயன்படுகின்றன.
பூக்களை கொண்டு கஷாயம் செய்யலாம் அல்லது நிழலில் உலர்த்தி, பவுடர் தயாரித்து, தேனுடன் கலந்தும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தாலோ அல்லது மன உளைச்சலால் நன்றாக தூக்கம் வரவில்லையானாலோ இந்த செண்பக பூக்களே கைகொடுக்கின்றன.


2 பூக்களை எடுத்து, சிறிது கசகசா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மையாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி பால் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன்பு குடித்தால், மேற்கண்ட கோளாறுகள் எல்லாமே தீரும்.. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும், இந்த செண்பகப் பூ கஷாயம் உதவுகிறது. செண்பக பூக்களை அரைத்து விழுதாக்கி, அதனை நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி எடுத்து வைத்து கொண்டால், உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் தேய்க்கலாம்.. வீக்கம், கைகால் எரிச்சல், மூட்டு வலி, முழங்கால்வலி, தலைவலி என அனைத்து வலிகளுக்குமே பூசினால், நிவாரணம் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News