'வாரணாசி' படத்தில் ராஜமவுலி இயக்க, நடிக்கிறார் மகேஷ்பாபு. அவர் அளித்த பேட் டியில், “2006 ரிலீசான 'போக்கிரி' படம் வெற்றி பெற்று என்னை ஸ்டார் ஆக்கி,. எனக்கு வேறு வித மான பெரிய அனுபவத்தை கொடுக்கிறது" ,ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது.
அந்த காலக்கட்டத்தில் நான் ஓவியம் வரைவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஆன தொகையை விட2 மடங்கு இப்போது சூர்யா ஜோதிகா ஒருவேளை சாப்பாட்டுக்கு செலவு செய்கிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.நான் சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் வாடகை ரூ15. அங்கிருந்து தான்7 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைவதற்கு ஆன செலவு மொத்தம் ரூ7500. ஆனால் இப்போது சூர்யா கார்த்தி குடும்பம் மதியம் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் ரூ.15000 வருகிறது. பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒருவேளை சாப்பாடு இவ்வளவு செலவு ஆகிறது. ஆனால் நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை7 ஆண்டுகள் தெருத்தெருவாக போய் ஓவியம் வரைய7 ஆண்டுகள் ஆன செலவு ரூ7500 என்று சிவக்குமார் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ரம்யா நம்பீசன் தி கோட்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு மீண்டும் ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் சுமார் 180 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. கோட் படத்தைப் போலவே தந்தை மகன் என சிவகார்த்திகேயன் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்க இருக்கிறார். பிரபல ஹாலிவுட் நிறுவனமான லோலா வி.எஃப்.எக்ஸ் இந்த படத்திற்கான வி .எஃப்.எக்ஸ். பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.
சிவக்குமார் முருகேசன் இயக்குனராக “தாய் கிழவி' படம் மூலம் அறிமுகமாகி. முதல் படம் என்றாலும் திறமையாக கையாளப்பட்டதாக பாராட்டப்படுகிறது. 'பவுனுத்தாயி' கதாபாத்திரம், ராதிகா சரத்குமார் நடித்தது ' அதிக கவனம் பெற்றுள்ளது. பெண்களின் சமத்துவம், குடும்பத்தில் பெண்களின் இடம் போன்ற சமூக கருத்துகளை பேசும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புபெற்றுள்ளது. ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.25.30 கோடி வசூல் செய்துள்ளது.
சுரேஷ் சங்கையா 'ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை, ஆகிய படங்களை இயக்கிகவனம்பெற்றவர். யோகிபாபு 2024ல் மறைந்த இவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகிறது. படத்திற்கு "கெணத்த காணோம்" என பெயரிட்டுள்ளனர்
இயக்குனராக வந்த சமுத்திரக்கனி தொடர்ந்து, நடித்து வந்த இவர் மீண்டும், ஒரு சிறிய பட்ஜெட் படமொன்றை இயக்குகிறார் . கடைசியாக தமிழில் 2021ல் 'வினோதய சித்தம்' படத்தை இயக்கி வரவேற்பை பெற்றது. அதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தலைப்பு, மற்ற நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகிறது.
தமிழ் குறும்படம் தேசிய விருது பெற்ற 'லிட்டில் விங்ஸ்'. நவீன் இயக்க, மணிமேகலை, காளிதாஸ் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது யுடியூப் தளத்தில் இந்த குறும் படத்தை 27 பிப்ரவரி மாலை 5:00 மணியளவில் வெளியிட்டது. நவீன் கூறுகையில், ஒரு சேவலை சாப்பிட ஆசைப்படும்"கதை யின் நாயகன் .அவரது ஆசை நிறைவேறியதா என்பது கதை" என்றார்.
மகேஷ்பாபு, பிரியங்காசோப்ரா, பிருத்விராஜ்நடிப்பில்,ராஜமவுலி இயக்கத்தில்,உருவாகிவரும்தெலுங்குப்படம் 'வாரணாசி'. முதற்கட்ட படப் பிடிப்பு ஐதராபாத், ஒரிசாவிலும் அடுத் தக்கட்ட படப் பிடிப்பு கென்யா நாட்டிலும் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பனி படர்ந்த ஜார்ஜியா நாட்டில் நடக்கிறது.இதற்காக மகேஷ்பாபு உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
ஹிந்தியில் ஆதித்யாதார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர் படம். இதன் 2ம் பாகம் மார்ச் ல் ரிலீசாகிறது. இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 40 நிமிடங்கள் என்கின்றனர். அதேநாளில் ரிலீசாகும் யஷ் நடித்துள்ள, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் 'டாக்சிக்' படமும் 3 மணிநேரம் 25 நிமிடங் கள் ஓடுமாம். இந்த இரண்டு படங்களும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தியா முழுதும் ரிலீசாகிறது.
இந்த வாரம் மார்ச்-6ல் "99/66, காதல் ரீசெட் ரிபீட், முஸ்தபா முஸ்தபா, மூரி, ஓ பட்டர்பிளை, செல்லமடா நீ எனக்கு, வடம், வசூல் மன்னன், யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்” ஆகிய 9 படங்கள் ரிலீஸாகின்றன. சிபி, நிவேதிதா சதீஷ்,நாசர், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ளபடம்' ஓ பட்டர்பிளை'. மாறுபட்ட திரில்லருடன் ஒரு பெண் 2 ஆண்களுக்கு இருக்கக் கூடிய உறவு சிக்கல்களைபடம் விவரிக்கிறது. ஒரு மலை வாழ் பகுதிக்கு செல்லும் 3 பேரை சுற்றி நகரும் கதை. படம் ரிலீஸிற்கு தயாராகி, மார்ச் 6ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்