ஒரு படம் வெளிவருவதற்கு முன்பேபடத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி விட படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது.. அந்த வகையில் படம் வெற்றி பெறுகிறதோ, இல்லையோ பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து விடுகிறது.மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. ரவுடி பேபி பாடல் தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் கலக்கலான நடனத்தில்,ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்த பாடல் யூடியூபில்1.3 பில்லியன் பார்வையாளர்களை கடந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.இப்போது வரை இந்த பாடலின் சாதனையை வேறு எந்த பாடலும் முறியடிக்கவில்லை
கார்த்திக்கின் விருமன் படம் ஒரு குடும்பக் கதையாக இருப்பதால்.பெண்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. கார்த்திக், இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் நடிப்பு அற்புதம். இக் கதையின் சிறப்பு என்ன வென்றால் இதன் முடிவு மறக்கும்,, மன்னிக்கும் குணத்தைக் காட்டுகிறது. பிரகாஷ்ராஜ் வில்லன், கார்த்திக்கின் தந்தையாக வரும், அவரை,“ அப்பா உங்களை ரெம்ப பிடிக்கும். பிடிச்சவங்க தப்பு பண்ணாத்தான் ரெம்ப கோவம் வரும்'”என்ற வார்த்தையில் கார்த்திக்கின் நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம். ஸ்டண்ட் சீன் நிறைய இருப்பினும் சூரியின் நசைச்சுவை நன்றாகவே இருக்கிறது. அப்புறம் என்ன? வசூலை அள்ளுகின்றது, இப்படம்.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படம் உருவாகியுள்ளது விருமன் படத்தை சூர்யா தயாரித்து வழங்கியுள்ளார்.விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி நடித்துள்ளார் .மேலும் ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ் ராஜ், சூரி, ஆர். கே. சுரேஷ், கருணாஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விருமன் படம் 3 நாட்களில் மொத்தம் ரூ.25 கோடி வரை தமிழகத்தில் வசூலித்துள்ளது.
இந்திய படமாக வரும் செப்டம்பர் 30ஆம் தேதி மணிரத்தினத்தின்பொன்னியின் செல்வன் திரை பணி நிறைவடைந்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இசைப் பணிகள் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைக் கலவை முடித்து விட்டதாக தற்போது கிரேக் டவுன்லி தெரிவித்துள்ளார். படத்தின் அடுத்த பாடல் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான லெஜண்ட் சரவணன் , நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தனது நிறுவனம் தொடர்பான விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணன் அடுத்ததாக தி லெஜண்ட் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வரும் 28ந் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்கி உள்ளார். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் பழம் பெரும் நடிகை சச்சு, விவேக், பிரபு, யோகிபாபு, நாசர், மயில்சாமி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்தது.லெஜண்ட், சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என கனவு. அந்த கனவை அடைய நிறைய உழைக்க வேண்டி இருந்தது. வியாபாரத்தில் கடுமையாக உழைத்து ஓர் இடத்தை பிடித்து அதற்கான கனவை நோக்கி நடந்தேன். தற்போது தான் அதற்கான நேரம் கிடைத்துள்ளது என்று அழகாக பதிலளித்துள்ளார் தி லெஜண்ட்.இத்திரைப்படம் ஜூலை 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில், பான் இந்திய திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாக உள்ளதால், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியில் மாறி மாறி பேசி அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை திகைப்பில் ஆழ்த்தி,ஒரு பத்திரிக்கையாளர், “இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீர்கள்”?என்று கேட்டார்.அதற்கு சிரித்தபடி பதில் அளித்த லெஜண்ட் சரவணன், என்னைவிட வயதில் மூத்தவர்கள் இந்தியில் அமிதாப் பச்சன்,ரஜினி,கமல், சரத்குமார் அனைவரும் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்வி கேட்பீர்களா? என பதில் அளித்தார்.அப்போது ஒரு பத்திரிக்கையாளர், இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீர்கள் என கேட்டார். இதற்கு சிரித்தபடி பதில் அளித்த லெஜண்ட் சரவணன், இந்தியில் அமிதாப் பச்சன் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதே போல ரஜினி,கமல், சரத்குமார் என அனைவரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள் அவர்கள் அனைவரும் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்வி கேட்பீர்களா? என டக்னு பதில் அளித்தார்.
கமல்ஹாசன் திரையுலகத்தில் அறிமுகமாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் அவருடைய படங்கள் இந்த அளவில் வசூல் சாதனை பெற்றதில்லை. ., 'விக்ரம்' படம் மற்ற நடிகர்கள் புரியாத சாதனயைப் படைத்துவிட்டது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது. 2022 ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக , தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் மிக அதிகமான லாபத்தை தமிழகத்தில் கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.ஓடிடி தளத்தில் இப்படம் ஜுலை 8ம் தேதி வெளியாகி அதிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஓடிடியில் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன பிறகும் இன்னமும் தமிழகத்தில் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருப்பது பெரிய ஆச்சரியம். அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் ஒன்றாக 'விக்ரம்' படம் உருவாகக் காரணமானவர் கமல்ஹாசன். அவரே தயாரித்து, தான் மட்டும் நாயகனாக நடிக்காமல் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோருக்கும் படத்தில் இடமளித்து வெற்றி பெற்றவர்.
இந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வருடம் தோறும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை டெல்லியில் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்து வருகிறது.,சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 விருதுகளை தட்டி சென்றுள்ளது. அதன்படி, சிறந்த படம் – சூரரைப்போற்று, சிறந்த நடிகர்- சூர்யா, சிறந்த நடிகை – அபர்ணா பால முரளி, சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா,மற்றும் ஷாலினி உஷா நாயர் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யா தான் தனது 2 டி நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இதை போல, சிறந்த வசனம் – இயக்குநர் மடோனா அஸ்வின், மற்றும் சிறந்த அறிமுக இயக்குனர் என்பதற்கான இரண்டு விருதையும் தட்டி சென்றுள்ளது. ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்ப்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ள முதல் பாகம் Teaser PS 1 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் படம் இயக்குனர் மணிரத்தினத்தால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது..எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் சுமார் 500 கோடி செலவில் எடுக்கப்பட்டது. முன்னணி நடிகர், நடிகைகளான, சரத்குமார், பார்த்திபன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பலரும் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் யூடூபில் வெளியிடப்பட்டுள்ளது. PS1 டீசரானது தென்னிந்தியாவில் சோழ பேரரசின் அதிகாரத்தையும், முக்கியத்துவத்தையும் ,ஒவ்வொரு காட்சியும் பிரமிக்கும் வகையில் மிரட்டுகிறது.விக்ரம் மற்றும் ஜெயம் ரவி போரில் இருப்பதை போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. இது சோழ சாம்ராஜ்யத்தின் பிரம்மாண்ட போரை பறைசாற்றுகிறது. நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு வரும் ஐஸ்வர்யாராய் மற்றும் குந்தவையாக நடிக்கும் திரிஷா நேர் எதிராக சந்திக்கும் வகையில் டீசரில் காட்டியுள்ளனர்.RELEASE DATE 30 /09 /2022
நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரும் கவுரவம்..OSCAR விருது ஆஸ்கார் விருது வழங்கும் 'தி அகாதெமி' அமைப்பு, அதன் உறுப்பினராக மாற நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம் ,அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் 95ஆவது ஆஸ்கார் விருதில் வாக்கு செலுத்தும் உரிமையை அவர் பெற்றுள்ளார். 'ஜெய் பீம்' 'சூரரை போற்று' ஆகிய படங்களின் மூலம் ஆஸ்கார் விருதுக்கான கதவுகளை தட்டிய சூர்யாவுக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. இதன் மூலம் 'தி அகாதெமி' அமைப்பின் உறுப்பினரான முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.