காசியை மையமாக கொண்ட கதையாக உருவாகவுள்ள இப்ப டத்திற்கு 'வாரணாசி' என்ற பெயரை தேர்வு செய்து இயக்குனர் ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படத் தில் நடிகர் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். நவம்பரில் அறிவிப்பு வெளியாகிறது. இப் படத்திற்காக 50 கோடி செலவில் காசி நகர செட் ஒன்றையும் உருவாக்கி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக தமிழில் வெளியான தலைவன் தலைவி படத்திற்கு பின் எந்த படமும் வெற்றி பெறவில்லை. இந்த தீபாவளிக்கு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகாத நிலையில் 'பைசன், டியூட், டீசல், கம்பி கட்ன கதை' உள் ளிட்ட 6 படங்கள் அக்., 17ல் ரிலீஸாகின்றன. இந்த படங்களாவது வெற்றியை தருமா ?
ஒரு படத்தில் ஹீரோவாக டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், அறிமுகமாகிறார்.நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரித்துள்ள ,இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக, 35 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படம் நவீன கால இளைஞர்களை கவரும் காதல் கதையாக உருவா கியுள்ளது. இணை இயக்குனராக . 'லவ்வர், டூரிஸ்ட் பேமிலி' படங்களில் இருந்த மதன் இயக்கியுள்ளார்.
தேஜா சஜ்ஜா நடிப்பில் கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் கடந்தவாரம் வெளிவந்த தெலுங்குப் படமான 'மிராய்' ரூ.100 கோடி வசூலைகடந்துள்ளது. இதற்கான வெற்றி கொண்டாட்டம் விஜயவாடாவில் நடந்தது. தயாரிப்பாளர் தேஜா, கார்த்திக் ஆகியோருக்கு அவர்கள் விரும்பிய கார் பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.
'விருஷபா' மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் நந்தா கிஷோர் இயக்கி உள்ளார். தற்போது வெளியிட்டுள்ள டீசரில் ,'பாகு பலி' போன்று சரித்திர பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. பிரமாண்ட அரண்மனை செட்டுகள் மன்னர் வேடத்தில் மோகன்லால் சண்டையிடும் காட்சிகள், போன்றவை டீசரில் இடம் பெற்றுள்ளன. தீபாவளிக்கு தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி உள்ள இப்படம் ரிலீஸாகிறது.
நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் ,அந்த காலக்கட்டத்தில் நான் ஓவியம் வரைவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஆன தொகையை விட,2 மடங்கு இப்போது சூர்யா, ஜோதிகா ஒருவேளை சாப்பாட்டுக்கு செலவு செய்கிறார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.சிவக்குமார் சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் வாடகை ரூ15. அங்கிருந்து தான்7 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைவதற்கு ஆன செலவு மொத்தம் ரூ7500. ஆனால் இப்போது சூர்யா கார்த்தி குடும்பம் மதியம் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் ரூ.15000 வருகிறது. பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒருவேளை சாப்பாடு இவ்வளவு செலவு ஆகிறது. ஆனால் நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை7 ஆண்டுகள் தெருத்தெருவாக போய் ஓவியம் வரைய7 ஆண்டுகள் ஆன செலவு ரூ7500 என்று சிவக்குமார் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை. மற்றொன்று பான் இந்தியா எதிர்பார்ப்புடன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1. இந்த இரண்டு படங்களின் வசூல் வேட்டையில், 'காந்தாரா சாப்டர்1!' பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தி, முதல் நாளிலேயே ரூ.89 கோடி க்கும் அதிகமாக வசூலித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2ம் பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' படத்தை இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. கடந்த வாரம் ரிலீசான இப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. "முதல் பாக வெற்றியால் எதிர்பார்ப்பு அதிகரித்து, இப்படத்தில் முழு கவனம் செலுத்த முடியாது, என்பதால் 3 ஆண்டுகள் முழுமையாக அர்ப்பணித்து இந்த சாப்டர் 1 படத்திற்காக பணியாற்றினேன்" என்றார் ரிஷப் ஷெட்டி. ‘காந்தாரா சாப்டர் 1' நேற்றுமுன்தினம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் முதல்நாளில் ரூ.89 கோடி வசூலித் துள்ளது. தொடர் விடுமுறையால் இந்த வாரத்திற் குள் 300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. காந்தாரா முதல்பாகம் 400 கோடி வசூலித்த நிலையில் அதைவிட இப்படம் நிச்சயம் கூடுதலாக வசூலிக்கும்.
'காந்தாரா சாப்டர் 1', ரிஷப் ஷெட் டியின் கன்னட படம், லோகாசாப்டர் 1 கல்யாணி பிரியதர்தஷனின் மலையாள படம், 'ஓஜி'சந்திரா, பவன் கல்யாணின் தெலுங்கு படம் ஆகியவை ரூ.300 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்துள்ளன. காந்தாரா 4 நாட்களிலும், லோகா 40 நாட்களிலும், ஒஜி 10 நாட்களிலும் இந்த சாதனையை படைத்தன.
படங்களின் வெளியீடு இந்தாண்டு 200ஐ கடந்து விட்டது. வெற்றி 10 சதவீதம் வெற்றி. ஆனாலும் படங்கள் வெளியீடு குறையவில்லை.இந்தவாரம்அக்.,9ல்'அக்னிபத்து' படமும், அக்.,10ல்"அனல்மழை, இறுதிமுயற்சி, மருதம், நெடுமி, ரவாளி, தந்த்ரா, உயிர் மூச்சு, வில்" ஆகிய படங்களும், ஓடிடி யில் நேரடியாக 'ராம்போ' படம் என மொத்தம் 10 படங்கள் வெளியாகின்றன.